திருப்புகழ் 110 அவனிதனிலே (பழநி) - CLICK ♡ THANKS
Vložit
- čas přidán 3. 03. 2018
- மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
நன்றி - இங்கர்சால்
.
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து, இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து, பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து, துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க, வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த, கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த, பெருமாளே.
எவர் பாடினும்
இவர் பாடுவதில் தோன்றுவன, உருக்கம்,
காந்த ஈர்ப்பு,
செவிநிறைக்கும் குளிர்குரல் ......
ஐயா நீடூழி வாழ்க!
திருப்புகழ் முழுதும் பாடி அருள்க!!!!
Of course 👍♥️♥️♥️♥️♥️
Sir you're really great
Vera leval voice 🥰🥰🥰
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Ul
Yes urs absalom right
உண்மை யார் இவர்
அற்புதமான பாடல்.
அருகிணகிரிநாதரை நேரடியாக பார்ககவில்லை. அய்யா திரு சம்பந்த குருக்களின் குரல் மூலமாக அருணகிரிநாதரை நேரில் தரிசனம் செய்த உணர்வை ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அய்யா. பல்லாண்டுகாலம் வாழ்ந்து பக்தி மழை பொழிவீர்கள் அய்யா 🙏🙏🙏
😊caka caka inemy mugan songs .singer also very powerfull ma manithar always this songs my heart touch .thanks
அவனி தனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து, இளை ஞோனாய்
அரு மழலையே மிகுந்து குதலை மொழயே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து, பதினாறாய்
சிவ கலைகளா கமங்கள் மிகவு மறை யோதும ன்பர்
திருவடிகளே நினைந்து, துதியாமல்
தெரிவையர்களா சை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
மனமகிழவேய ணைந்து ஒருபுறம தாக வந்த மலைமகள் குமார துங்க, வடிவேலா
பவனி வரவே யுகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படியதிர வே நடந்த, கழல் வீரா
பரமபதமே செறிந்த முருகனென வேயுகந்து
பழநி மலை மேல மர்ந்த, பெருமாளே.
பதிவு அருமை
Nice
Meaning of thissong
@@rajendrangovindaraj7830 Google parkavum
செம்ம
சம்பந்தம் குருக்கள் மட்டும் இந்த திருவமுது திருப்புகழை பாடுவதைனை கேட்காமல் இருந்து இருந்தால் ,திருப்புகழின் அருமையை அறியாத பாவியாய் இருந்து இருப்பேன்.!
ௐ முருகா ௐமுருகா ௐமுருகா
சரியான கருத்து நன்றி
Me too
அதிகாலையில் 05:00 மணிக்கு இந்த பாடலை வீட்டில் கேட்டால் நல்லா இருக்கும் திருப்புகழ் பாடிய அவருக்கு நன்றிகள் பல
சம்பந்தம் குருக்கள் அவர்கள்
ஐய்யா தாங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா
நான் கடந்த இரண்டு வாரங்களாக ஐந்து மணிக்கு இப்பாடலை அனுதினமும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது நன்றிகள் பல இப்பாடல் பாடிய ஐயாவிற்கு இப்பாடலை அருளிய அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு கோடான கோடி நன்றிகள் பல நன்றிகள் பல
இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ...
அற்புதம் ..தங்களின் குரல், பாவம், உணர்ந்து பாடும் தன்மை - அனைத்தும் ..
தங்களின் இந்த இறைப்பணி, தொய்வின்றி தொடர நல்வாழ்த்துக்கள் ...ஐயா..!
Thank you very nice
0u
I.
Very nice
Everybody sings thirupugazh but this குரல் is unique 🌹🙏
😍😍😍 Sathiyamaga
பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் நாவில்
அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.
நன்றி
@@sambandamgurukkal8174 மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் பாடல் சம்பந்தம் அய்யாவின் இனிமையான குரலில்
உண்மை
Excellantsong
மனதை உருகுகிறது
Enakum apti tha irku
எத்தனை முறை கேட்டாலும் முருகன் துதுதியால் கவலைகள் மறைந்தன
கலியுக தெய்வம் கந்த பெருமான் திருப்புகழ் பாடிய அய்யாவின் குரல் மிக அருமை👌👌👌
தமிழின் தலைவா போற்றி!தமிழர்களின் இறைவா போற்றி!குறிஞ்சி நிலத்தலைவா போற்றி!செந்தமிழ் செயோனே போற்றி!
முப்பாட்டன் முருகனே போற்றி!போற்றி!!🙏🙏🙏🙏
தமிழ் மொழிக்கு உயிர் உண்டு என்று நான் இப்பாடல் மூலம் உணர்கிறேன்...
பக்தி தமிழ் தான் காரணம்
முருகனுக்கு அருமையான பாடல் வரிகள் பாடியவரும் சிறப்பாக பாடியுள்ளார் அவருக்கும் இந்தப் பாட்டை இயற்றியவருக்கு முருகன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏💕💕💕💕💕 ஓம் முருகனின் பாதங்களே போற்றி போற்றி போற்றி ஓம்💕
திருப்புகழை பாடினால் திக்குவாய் பிரச்சினை தீரும்....
பேச்சாற்றல் பெருகும்....
தேன் தமிழ் வாழ்க, செழிக்க வையகம் முழுவதும்.....
தகவலுக்கு நன்றி, அன்பரே. அன்புடன்.
Appadiya enakkum pesum pothu thikkum 😔😔😔😔
இன்னும் நிறைய முருகன் பாடல் பாட வேண்டும்
மனது நிம்மதி அடையும்இத்தபாடல்களால்
முருகா உன் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏
தெய்விக குரல்... முருகா......
Deivamagum முஹம்
நானும் சங்கீதம் கற்று இறைவனை வழிபட வேண்டும் என தூண்டும் பாடலின் இனிமை, இசை, பாடியவரின் குரல் நன்று நன்று.
திருச்சிற்றமபலம்
பாடலை கேட்காத நாளே இல்லை. என்னே என்று இயம்புவது. வியப்பிலும் வியப்பு. அருமை. தெய்வீக குரல் அய்யா! இனிமையான மெட்டு. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
வாழ்க பல்லாண்டு.....
திருச்சிற்றம்பலம்.
எனக்கு இந்த பாட்டு கூட சேர்ந்து பாடும்போது மனசுல ஒரு இனம் புரியாத பெரிய ஆனந்தம்... 🙏🙏🙏💐
கேட்கவே மிக இனிமையாக உள்ளது
ஆஹா அற்புதம் எத்தனை நாட்கள் நீங்கள் துதித்த திருப்புகழை கேட்காமல் வாழ்ந்தேனே இல்லை இல்லை வதை பட்டுக் கொண்டிருந் தேனே எம்பெருமான் முருகப் பெருமானின் திருவருள் இல்லையெனில் இப்படி ஒரு குரல் வளத்துடன் லயத்து பாட முடியாது அதுவும் தமிழில் கொஞ்சி விளையாடும் உமது குரலோடு முருகன் வாழ்கிறார் உணர்ந்தேன் சுவைத்தேன் மலைத்தேன்
அவனிநிறை திருமுருகன் கனியழகு சொலும் திருப்புகழை எம் மனம் மகிழப் பாடியதற்கு நன்றி ஐயா... நன்றி...
அற்புதமான பாடல் கேட்க காதிற்கு இனிமையாக இருந்தது முருகன் உருவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது நல்லது நல்லது நல்லது
கன்ணீர் வருகின்ரன இந்த பாடலை கேடட்டால் அந்தலவுக்கு மனதை உருக்கும் பாடல் இது
அவனிதனிலே பிறந்து ... இந்த பூமியிலே பிறந்து
மதலை எனவே தவழ்ந்து ... குழந்தை எனத் தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ... அழகு பெறும் வகையில் நடை பழகி
இளைஞோனாய் ... இளைஞனாய்
அருமழலையே மிகுந்து ... அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர
குதலை மொழியே புகன்று ... குதலை மொழிகளே பேசி
அதிவிதம் அதாய் வளர்ந்து ... அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
வளர்ந்து
பதினாறாய் ... வயதும் பதினாறு ஆகி,
சிவகலைகள் ஆகமங்கள் ... சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,
மிகவுமறை ஓதும் அன்பர் ... மிக்க வேதங்களை ஓதும்
அன்பர்களுடைய
திருவடிகளே நினைந்து துதியாமல் ... திருவடிகளையே நினைந்து
துதிக்காமல்,
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி ... மாதர்களின் மீது ஆசை மிகுந்து
வெகுகவலை யாய்உழன்று ... அதன் காரணமாக மிக்க கவலையுடன்
அலைந்து
திரியும் அடியேனை ... திரிகின்ற அடியேனை,
உன்றன் அடிசேராய் ... உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?
மவுன உபதேச சம்பு ... சும்மா இரு என்ற மெளன உபதேசம்
செய்த சம்பு,
மதியறுகு வேணி தும்பை ... பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
தும்பைப்பூ
மணிமுடியின் மீதணிந்த மகதேவர் ... தன் மணி முடியின்
மேலணிந்த மகாதேவர்,
மனமகிழவே அணைந்து ... மனமகிழும்படி அவரை
அணைத்துக்கொண்டு
ஒருபுறமதாகவந்த ... அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த
மலைமகள் குமார ... பார்வதியின் குமாரனே
துங்க வடிவேலா ... பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
உடையவனே
பவனி வரவே உகந்து ... இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு
மயிலின் மிசையே திகழ்ந்து ... மயிலின் மேல் ஏறி விளங்கி
படி அதிரவே நடந்த ... பூமி அதிரவே வலம் வந்த
கழல்வீரா ... வீரக் கழல் அணிந்த வீரனே
பரம பதமே செறிந்த ... மோட்ச வீட்டில் பொருந்தி நின்று
முருகன் எனவே உகந்து ... முருகன் என விளங்கி
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே. ... பழனிமலையில்
வீற்ற பெருமாளே.
prabha karan
இந்த திருப்புகழ் யார் இயற்றினது அருணகிரிநாதரா
இதன் கடைசிவரிகள் எல்லாம் தவறாக உள்ளது
தயவு செய்து விளக்கம்தரவும் நன்றி
00
தங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி
அருமையான விளக்கம்
sirappu .mangalam undagatum
தினமும் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி மிகுந்த திருப்புகழ் ஓம் சரவணபவா
இந்த பாட்டை கேட்டு கொண்டு பழனி மேல் செல்வது போல் சுகம் எதுவும் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏
சம்பந்தர் அய்யா குரல் வளம் , உள்ளத்தை உருக்கும்..
அற்புதமான சாரீரம்.
அவரை வணங்கி மகிழ்கிறேன்
ஆம் அய்யா
இன்று மட்டும் பத்துமுறைக்கு மேல் கேட்டுவிட்டேன் , இன்னமும் கேட்கதூண்டும் குரல் , அழகிய தமிழ் வரிகள் , முருகா
பாடியவர் குரல் அழகோ அழகு 🌹🙏
அண்ணன் இங்கர்சால் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்
நடக்கும்
நம்பினோர் கைவிடர்
கந்தா போற்றி கடம்பா போற்றி
கதிர்வேலா போற்றி
கார்த்திகேயா போற்றி
எம்பெருமானே போற்றி
முருகப்பெருமானே போற்றி
போற்றி போற்றி
சக பாடல்களில் இது சாகா வரம்பெற்ற பாடல் ; பாடியோரும், துணை நின்றோரும் தோரணமலை முருகன் அருளால் வாழ்க .... நீடுழி வாழ்கவே🙏🌹
பெருமதிப்புக்குரிய திரு சம்பந்தன் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாடல் இசை அருமையிலும் அருமை. புகழோடு வாழ்க பல்லாண்டு. ஓம் சரவணபவ ஓம்
கருணைக் கடல்
கந்த வேல் பழநி மலை
பஞ்சாமிர்தமாக இனிக்கிறார்.
பஞ்சாமிர்தம் உண்ண
அளவுண்டு.ஆனால்
பழநி பதிகம் தெவிட்டாத குரல் அமுதம்.வாழ்க வளமுடன்.ஜெய் ஸாய் ராம்.
மிக அருமை தமிழ்மொழியின் பெருமை முருகா அருணகிரிநாதரின் திருபுகழ் வாழ்க வாழ்க என்றும் பல்லாண்டு தமிழ்மொழி நீடூடி வாழ்க🙏👍
அருணகிரிநாதர் பெருமான் குரல் ஆகவே பாவிக்கிறேன் நன்றி அப்பனே வாழ்த்துக்கள்
அருமையாகப் பாடுகின்றார் வணக்கம் 🙏 பரமபதமாய செந்தில் முருகனெனவே யுகந்து பழனிமலை மேலமர்ந்த பெருமானே🙏என்று பாடுகின்றார் ஐயா .
நன்றி
இந்த பாடல் கேட்டு நான் ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை 😭😭😭😭😭
திரு. சம்பந்தம் குருக்களின் இனிய குரல், பின்னணி இசை.... மிருதங்கம், கஞ்சிரா , 🎻 வயலின் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற இந்த பதிவுகளை கேட்கும் போது மெய்மறந்து முருகனை மனதால் நினைத்து கொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.என்னைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.தங்களின் தமிழ் தொண்டு , வாரியார் சுவாமிகள் போன்று வளர ,குரு அருளும், திருவருளும் துணை நிற்கும். வாழ்க வளமுடன் 🙏
❤️❤️❤️ திருப்புகழை பாட பாட வாய் மணக்கும். 😘🥰😍
அருமையான தமிழை வரிகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்
தினம் ஒரு திருப்புகழ் பாடல் கேட்டு என் வேலையே தொடங்குவேன் , அருணகிரி நாதர் குருவே சரணம்
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகன் அரோகரா 🙏 மனதில் இருக்கும் கவலையை மறந்து என் அப்பன் முருகன் இருக்கிறார் என்று நம்புகிறேன் இப்பாடல் தினமும் கேட்கிறேன் 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏🤲🥰😭💚
உங்களின் குரல் வளம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா. மற்ற அனைத்து பாடல்களும் உங்கள் குரலில் பாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்பாடல்களை youtube ல் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. முருகன் அருள் புரியட்டும். 🙏🙏🙏🙏
மிக அருமையான குரல். ஓம் முருகா சரணம்.
நன்றி அய்யா. இது போல திருப்புகழின் மற்ற பாடல்களும் கேட்க விரும்புகிறேன்.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் திருப்புகழ் தமிழ்ப்பாடல் மிக மிக அருமை நன்றி மகிழ்ச்சி 😃
உங்கள் குரல் இனிமைக்கு தலை வணங்குகிறேன் ஐயா இனிமை இனிமை.
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை... அருமை.....நன்றி...
Excellent 👍👍👍
மெய் மறந்து கேட்ட திருப்புகழ்♥️♥️♥️♥️
Vera leval 🥰🥰🥰
திருப்புகழைப் பாடப வாய் மனக்கும் ...கேட்க கேட்க மனம் மயங்கும்
தின்தோறும் காலையில் நான் கேட்க்கும் முதல் பாடல் கோடானகோடி நன்றி ஐய்யா
பாடிய அயா அவர்களுக்கு
வணக்கம் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா.
தங்கள் உச்சரிப்பு திருப்புகழைக் கேட்டுக்கொண்டேஇருக்கத்தூண்டுகிறது..இன்னும் பல பாடல்களுக்கு விளக்கம் கேட்க அவா மிகுகிறது.. வாய்ப்பு கிடைக்க இறையருள் உதவட்டும்
*Lyrics and Translation - Thiruppugazh*
Song 110 - avanidhanilE (pazhani)
avanithanilE piRandhu madhalai enavE thavazhndhu
azhagu peRavE nadandhu ...... iLainyOnAy
aru mazhalaiyE migundhu kudhalai mozhiyE pugandru
athi vidhamadhAy vaLarndhu ...... padhinARAy
siva kalaigaL AgamangaL migavum maRai Odhum anbar
thiruvadigaLE ninaindhu ...... thudhiyAmal
therivaiyarkaL Asai minji vegu kavalaiyAy uzhandru
thiriyum adiyEnai undRan ...... adisErAy
mavuna upadhEsa sambu madhiy aRugu vENi thumbai
maNi mudiyin meedhu aNindha ...... magadhEvar
manamagizhavEy aNaindhu orupuRamadhAga vandha
malaimagaL kumAra thunga ...... vadivElA
bavani varavE yugandhu mayilin misaiyE thigazhndhu
padi yadhiravE nadandha ...... kazhal veerA
paramapadhamE seRindha murugan enavEy ugandhu
pazhani malai mEl amarndha ...... perumALE.
......... Meaning .........
avanithanilE piRandhu:
[Having taken birth in this world,]
madhalai enavE thavazhndhu:
[crawling as a kid,]
azhagu peRavE nadandhu:
[having walked about in a beautiful way,]
iLainyOnAy:
[I became a youth;]
arumazhalaiyE migundhu:
[babbling all childish pranks,]
kudhalai mozhiyE pugandru:
[uttering sweet-nothings,]
athividham adhAy vaLarndhu:
[I grew up in so many ways]
padhinARAy:
[and reached the age of 16.]
sivakalaigaL AgamangaL:
[SivA's scriptures - SivA AgamAs (rules of worship)]
migavumaRai Odhum anbar:
[and a lot of VEdic scriptures - Your devotees chant these;]
thiruvadigaLE ninaindhu thudhiyAmal:
[I never praised their holy feet nor prostrated before them.]
therivaiyarkaL Asai minji:
[I was overwhelmed by lust for women;]
vegukavalai yAy uzhandru:
[I was grief-stricken]
thiriyum adiyEnai:
[and rambled here and there, the lowly me.]
undran adisErAy:
[Will You lift me unto Your holy feet?]
mavuna upadhEsa sambu:
[Samba SivA, who preached 'silence' (as Dakshinamurthy), with]
madhiyaRugu vENi thumbai:
[moon, aRugam (cynodon) grass, Ganga river and thumbai (leucas) flower,]
maNimudiyin meedh aNindha magadhEvar:
[adorning His Great matted hair, that Mahadeva,]
manamagizhavE aNaindhu:
[was embraced joyfully]
orupuRama dhAga vandha:
[and His left side was concorporated]
malaimagaL:
[The Daughter of the Mountain (PArvathi); (as ArdhanAri)]
kumAra:
[You are her Son, and]
thunga vadivElA:
[You possess the pure and sharp Spear!]
bavani varavE ugandhu:
[Desirous of circumambulating the entire earth,]
mayilin misaiyE thigazhndhu:
[You mounted the Peacock]
padi adhiravE nadandha:
[and as You went around, the whole earth trembled!]
kazhal veerA:
[Oh warrior, You are the brave one, with the anklet!]
parama padhamE seRindha:
[You are fully present at the Heavenly Abode (MOkshA)]
murugan enavE ugandhu:
[and are known as Murugan; and You chose]
pazhanimalai mEl amarndha:
[the Mount of Pazhani as Your abode,]
perumALE.:
[Oh, Great One!]
Thiruchitrambalam. Nandri. Sincere efforts taken to provide the divine meaning. Valgah Valamudan
Thank you for your beautiful translations.
அவனிதனிலே பிறந்து -
அருமையான திருப்புகழ் பாடல்.
முருகப் பெருமான் திருவடியே போற்றி, போற்றி, போற்றி.
மனதை உருக்கும் தெய்வீக குரல்
தெய்வீகக்குரல், முருகன் பக்தி மணம் கமழ்கிறது
தங்களின் குரல் அற்புதம். நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது அற்புதமான பாடல்
This song mesmarised my mind and soul. Thanks to the singer
Yes
Yes ❤️
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏♥️♥️♥️
குதலை மொழி என்றால் முதல் மொழி என்று பொருள். அதாவது உலகின் முதல் மொழியான தமிழை பேசியவன் நம் வேலன்!
🔥 ❤️
ஆ...அற்புதம். நன்றி.
👍👍👍👍👍
அருமையான தகவல்👌நன்றி
குதலை மொழி என்பது மழலை மொழி பேசும் என்று பொருள்
🙏🙏
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா.....
செந்தமிழ் காதில் தேனாய் இனிக்கிறது வாழ்க தழிழ், இந்து மதம் வளர உரமாய் அமைந்த திரு புகழ், முருகா சரணம்.🙏🙏🙏
உற்சாகமும் ஊக்கமும் நிறைந்த இளமை ததும்பும் இன்பமான பாடல். இருவரும் அருமையாக இனிமை குறையாமல் பாடி மகிழ்ச்சி அடைய செய்துள்ளீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள்.
திரு சம்பந்தம் குருக்கள் அய்யா👍👍👍
அருமை ஐயா வணக்கம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரு மொழி!
ஆகச் சிறந்த குரல்!
இனியதொரு ராகம்!
ஈர்த்தததன் தாளம்!
உயிர்ப்பூட்டும் வரிகள்!
ஊசலாட்டும் நெறிகள்!
என்னதென
ஒப்பனை செய்வேன்!
ஏழேழு நாட்களும் கற்பனை செய்தேன்!
ஐம்புலன்களும்..
ஒன்றையொன்று மறந்து,
ஓதுமேயானால்!
ஔடதமான
அ "ஃ" தே
என் அப்பனின் திருப்புகழ்!!!!
Muruga unaku kodanu Kodi nandrikal Muruga nan conceive agi iruken Muruga 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
அருமையான குரல்
உங்களுக்கு முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்
why
சக்திகணதிதுணை தம்பி ஆறுமுகன் போற்றி வேலே போற்றி மயிலே போற்றி பாம்பே போற்றி
விசாகப்பெருமானே போற்றி ஞானபண்டிதா போற்றி வள்ளிமணவாளன் போற்றி 🌹🌹🌹
திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
உள்ளம் உருகி நெஞ்சம் உருகி அற்புதமான ஒரு பாடல் இந்தப் பாடல் ஆனந்தக் கண்ணீர் அரோகரா
மின்வலையின் வரப்பிரசாதம்.
> சேவலனே நலம்காவலனே
> செந்தில் வேலவனே தலைப்பாவலனே
> பாடுவோர் நாவினில் சரஸ்வதி ரூபத்தில்
> தோன்றி நல்வார்த்தைகள் சொல்பவனே
என்ற யுகம்யுகமாய் திகழும் உண்மைக்கு திரு சம்பந்தம் குருக்கள் ஒரு ஆதாரம்.
மனமார்ந்த நன்றி.
ஓம் முருகா.
அருமை!
பாராட்டின் உச்சம்!
அருணகிரி நாதரின் கருணையால் கிடைத்த இத்திருப்புகழ் அற்புதம். பாடியவரின் குரலும் அழகு.
Q
@@bhagyarajgt756 0uk0
Palani dhandapaniye I want to worship pray you panguni uthiram nkpatti Palani bhupathiraju
What a beautiful voice. Ganeer kural. I am blessed.
P
நீங்கள் பாடிய இந்த பாடலை கேட்கும் போது முருகனை நினைத்து மனம் உருகிறது, தெய்வீக குரல் ஐயா உங்களுக்கு
அய்யாவின் குறள் வலம் இறைவனின் பேரருள் என்றென்றும் ஒலிரட்டும் தேனினும் இனிய திருபுகழ் இசை கானம்.ஓம் சரவண பவ .
அருணகிரிநாதரின் அற்புதம் ❤
தமிழ் கடவுள் முருக 🙏பெருமானே 🌹போற்றி.. 🙏சரணம்..
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
பார்கவும் கேக்வும் ஒர் யயிரு காது போதாது மெய் மறந்து முருகன் அடிசேர உதவும்பாடல் பாடியவக்கு நன்றி
நன்றி ஐயா.கேட்க மிகவும் இனிமையாக உள்ளது
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
கடையேனையும் கரை
சேர்க்கும் கருணைக்
கடல் பழநி கந்த வேள்
இசையமுதம் பருகாத நாளெல்லாம் பிறவா நாளே.என்னையும் விரைவில் கரை சேர்க்க
வேண்டி தினமும் இந்த
இன்னிசைக்கேட்டு
மகிழ்ந்து வருகிறேன்.
ஓம் சரவணபவ!
ஓம் நம சிவாய!!
ஜெய் ஸாய்ராம்!!!
அற்புதமான தெளிவான குரல், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
திருப்புகழுக்கு உருகாதவர் என கூற கேட்டுள்ளோம் மீண்டும் மீண்டும் கேட்க மனம் அமைதி பெறுவதை உணர்ந்தேன் ஆறாவது அறிவின் துணைக் கொண்டு
@Indra : Thiruvasagathiru urukar Oruvasakathirkum urugar! :), Never mind ..applies to both :) :) Its all Divine!
என் மகனுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா
சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன் போற்றி கந்தாபோற்றி கடம்பா போற்றி வேலா போற்றி
ஆறுபடைகுமரனுக்கு அரகரோகரா விசாகப்பெருமானு க்கு அரகரோகராவெற்றிவடிவேலனுக்கு
அரகரோகரா. சிவசுப்புரமணியனுக்கு அரகரோகரா 😡😡😡🐤🐤🐤😊😊😊☹️☹️☹️
Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
Truly a great song and sung so soulfully with great devotion by the singer 🙏. I was introduced to Thiruppugazh songs by my Father and I consider it a Blessing. This song is my Father's favorite among them. I played this song at my beloved Father's funeral 🙏 last year and continue to hear this song today. Cannot control tears...the words of the song are gems.
அருமை இனிமை........👌👍🙏🙏🙏🙏🙏👏
இம்மாதிரி திருப்புகழின் முக்கிய பாடல்களைப் பதிவிட்டால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் கேட்டுக் கற்றுக் கொள்வர் ...எனவே இதுவே சரியான தோற்றம்
உண்மை
ஆண்டாண்டு காலமாக அழகன் முருகனுக்கு அற்புதமான தெய்வீக வடிவமுள்ளது! அதை விடுத்து சைமன் என்ற கிறீஸ்தவ தறுதலை தோட்டக்காட்டான் மாதிரி காட்டிய படத்தை பாவிப்பது தெய்வ நிந்தனை மட்டுமல்ல மதவெறியின் உச்சம்! உடனே மாற்று!
இந்த பாடல் இன்று காலை FM ரேடியோவில் ஒலிபரப்பாகியது,
Want to hear all Thirupuranthageswarar songs in the same voice... I couldn't find... nice to hear and sing along with the song...
நானும் அதை தான் தேடுகிறேன்
கிடைக்கவில்லை!
அருமை ஐயா. நன்றி.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
அவனிதனிலே திரு புகழை தினமும் கேட்டேன் என்னோட கணவர் குடித்து விட்டு வேலைக்கு சொல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட படுதினார் இப்போது மீண்டும் வண்டிக்கு போய்விட்டார் தினசரி இந்த திரு புகழை முருகனிடம் வேண்டி மனமுருகி கேட்கிறேன்
இப்போது குடிக்காமல் இருக்கிறாரா
தினசரி குடித்து விட்டு இரண்டு வருடமாக வேலைக்கு செல்லாமல் இருந்தார் இப்போது வேலைக்கு போவதால் குடிப்பது இல்லை நினைத்து பார்க்க முடியாத மாற்றம் அனைத்தும் என் அப்பன் முருக பெருமானுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்🙏