Namasivaya Pathigam I நமசிவாய வாழ்கI காதலாகி கசிந்து I மற்றுப்பற்றென I துஞ்சலும் I சொற்றுணை

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2020
  • Sung by Thirumayilai Sargurunatha Othuvar நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
    ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
    ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனா ரமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
    ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
    அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
  • Hudba

Komentáře • 448

  • @chandaranchandaran4011
    @chandaranchandaran4011 Před rokem +20

    உங்களுடைய குரல் அருமை உங்கள் பாடல் என்னை என் ஐயன் ஈசனிடம் அழைத்துச் சென்று விடுகிறது

  • @subramonianganesan1541
    @subramonianganesan1541 Před 10 měsíci +28

    உண்மையிலேயே மனதை உருக்கும் அருமையான குரல். சிவன் அருகில் சென்று வந்ததை போல் இருந்தது

  • @chellappans3992
    @chellappans3992 Před rokem +14

    சட்டென என் கவனத்தை ஈர்த்த சிவனடியார் பாடல் இது தான் . எனவே உடனே download பண்ணி விட்டேன்

  • @angulakshmir2969
    @angulakshmir2969 Před rokem +26

    நான் இந்துவாக பிறந்து நல்ல குடும்ப த்தில்பிறந்துகண்இருந்தும்குருடாகி இருந்துவிட்டேனே ஓம்நமசிவாயா

  • @durairajsubramaniyam1981
    @durairajsubramaniyam1981 Před 2 lety +43

    திருச்சிற்றம்பலம். ஓதுவார் குரல்வளம் அருமையாக உள்ளது. சிவாய நமக தில்லை நடராஜர் அருள்கிடைக்க வேண்டும்.

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Před rokem +17

    ஓம் நமச்சிவாய அருமையான குரல் வளம் தங்களுக்கு தங்களின் இறை பணி தொடரட்டும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před měsícem +4

    மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
    பாத மேமனம் பாவித்தேன்
    பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
    வாத தன்மைவந் தெய்தினேன்
    கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
    நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 1 இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
    திட்ட நாள்மறந் திட்டநாள்
    கெட்ட நாளிவை என்ற லாற்கரு
    தேன்கி ளர்புனற் காவிரி
    வட்ட வாசிகை கொண்ட டிதொழு
    தேத்து பாண்டிக் கொடுமுடி
    நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 2 ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
    போகும் நாளுயர் பாடைமேல்
    காவு நாளிவை என்ற லாற்கரு
    தேன்கி ளர்புனற் காவிரிப்
    பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
    சோதி பாண்டிக் கொடுமுடி
    நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 3 எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
    தம்பி ரானென்பொன் மாமணி
    கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
    காவி ரியதன் வாய்க்கரை
    நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
    வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 4 அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
    யேனும் நான்மிக அஞ்சினேன்
    அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
    நல்கி னாய்க்கழி கின்றதென்
    பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
    தாடு பாண்டிக் கொடுமுடி
    நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 5 ஏடு வானிளந் திங்கள் சூடினை
    என்பின் கொல்புலித் தோலின்மேல்
    ஆடு பாம்பத ரைக்க சைத்த
    அழக னேயந்தண் காவிரிப்
    பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
    சோதி பாண்டிக் கொடுமுடி
    சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 6 விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
    தேன்வி னைகளும் விண்டனன்
    நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
    நின்ற காவிரிக் கோட்டிடைக்
    குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
    தாடு பாண்டிக் கொடுமுடி
    விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 7 செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
    தீயெ ழச்சிலை கோலினாய்
    வம்பு லாங்குழ லாளைப் பாகம
    மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
    கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
    லாடு பாண்டிக் கொடுமுடி
    நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 8 சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
    தம்பிரா னென்பொன்மா மணியென்று
    பேரெ ணாயிர கோடி தேவர்
    பிதற்றி நின்று பிரிகிலார்
    நார ணன்பிர மன்றொ ழுங்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
    கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 9 கோணி யபிறை சூடியைக் கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
    பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
    பித்த னைப்பிறப் பில்லியைப்
    பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
    தார னைப்படப் பாம்பரை
    நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
    சொல்லு வார்க்கில்லை துன்பமே.

  • @user-ou8yx9uc2p
    @user-ou8yx9uc2p Před 4 měsíci +6

    ஓம் நமசிவாய. மயக்கும் குரல் மனம் சிவன் உள்ளே சென்றுவிட்டது. நன்றி

  • @d.balajidamodaran4655
    @d.balajidamodaran4655 Před 5 měsíci +11

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @rajA-hc2rs
    @rajA-hc2rs Před 11 měsíci +17

    ஓம் நமசிவாய
    நன்றி கோடி கோடி ஐயா
    இனிமையான பதிவு.
    தவமும் தவம் உடையார்க்கே ஆகும்.
    சிவ நா.மதி

    • @balachandar694
      @balachandar694 Před 9 měsíci

      இந்த நமச்சிவாய பதிகத்தை செவிமடுப்பதற்கே நாம் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த அருமையான ஈடில்லா பதிகங்களை கேட்டு ரசித்து ருசித்தாலே போதும் எல்லாம் வல்ல அந்த நமசிவாயன் நம் மனதிலே அமர்ந்து திருவருள் புரிவான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திருச்சிற்றம்பலம்.

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před měsícem +1

    காத லாகிக்
    கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை
    நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும்
    மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம்
    நமச்சி வாயவே. 1
    நம்பு வாரவர்
    நாவி னவிற்றினால்
    வம்பு நாண்மலர்
    வார்மது வொப்பது
    செம்பொ னார்தில
    கம்முல குக்கெலாம்
    நம்பன் நாமம்
    நமச்சி வாயவே. 2
    நெக்கு ளார்வ
    மிகப்பெரு கிந்நினைந்
    தக்கு மாலைகொ
    டங்கையில் எண்ணுவார்
    தக்க வானவ
    ராத்தகு விப்பது
    நக்கன் நாமம்
    நமச்சி வாயவே. 3
    இயமன் தூதரும்
    அஞ்சுவர் இன்சொலால்
    நயம்வந் தோதவல்
    லார்தமை நண்ணினால்
    நியமந் தான்நினை
    வார்க்கினி யான்நெற்றி
    நயனன் நாமம்
    நமச்சி வாயவே. 4
    கொல்வா ரேனுங்
    குணம்பல நன்மைகள்
    இல்லா ரேனும்
    இயம்புவ ராயிடின்
    எல்லாத் தீங்கையும்
    நீங்குவ ரென்பரால்
    நல்லார் நாமம்
    நமச்சி வாயவே. 5
    மந்த ரம்மன
    பாவங்கள் மேவிய
    பந்த னையவர்
    தாமும் பகர்வரேல்
    சிந்தும் வல்வினை
    செல்வமும் மல்குமால்
    நந்தி நாமம்
    நமச்சி வாயவே. 6
    நரக மேழ்புக
    நாடின ராயினும்
    உரைசெய் வாயினர்
    ஆயின் உருத்திரர்
    விரவி யேபுகு
    வித்திடு மென்பரால்
    வரதன் நாமம்
    நமச்சி வாயவே. 7
    இலங்கை மன்னன்
    எடுத்த அடுக்கல்மேல்
    தலங்கொள் கால்விரல்
    சங்கரன் ஊன்றலும்
    மலங்கி வாய்மொழி
    செய்தவன் உய்வகை
    நலங்கொள் நாமம்
    நமச்சி வாயவே. 8
    போதன் போதன
    கண்ணனும் அண்ணல்தன்
    பாதந் தான்முடி
    நேடிய பண்பராய்
    யாதுங் காண்பரி
    தாகி அலந்தவர்
    ஓதும் நாமம்
    நமச்சி வாயவே. 9
    கஞ்சி மண்டையர்
    கையிலுண் கையர்கள்
    வெஞ்சொல் மிண்டர்
    விரவில ரென்பரால்
    விஞ்சை அண்டர்கள்
    வேண்ட அமுதுசெய்
    நஞ்சுண் கண்டன்
    நமச்சி வாயவே. 10
    நந்தி நாமம்
    நமச்சிவா யவெனுஞ்
    சந்தை யாற்றமிழ்
    ஞானசம் பந்தன்சொல்
    சிந்தை யால்மகிழ்ந்
    தேத்தவல் லாரெலாம்
    பந்த பாசம்
    அறுக்கவல் லார்களே. 11

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před měsícem +1

    துஞ்சலுந் துஞ்சலி
    லாத போழ்தினும்
    நெஞ்சக நைந்து
    நினைமின் நாடொறும்
    வஞ்சகம் அற்றடி
    வாழ்த்த வந்தகூற்
    றஞ்சவு தைத்தன
    அஞ்செ ழுத்துமே. 1
    மந்திர நான்மறை
    யாகி வானவர்
    சிந்தையுள் நின்றவர்
    தம்மை யாள்வன
    செந்தழல் ஓம்பிய
    செம்மை வேதியர்க்
    கந்தியுள் மந்திரம்
    அஞ்செ ழுத்துமே. 2
    ஊனிலு யிர்ப்பை
    ஒடுக்கி ஒண்சுடர்
    ஞானவி ளக்கினை
    யேற்றி நன்புலத்
    தேனைவ ழிதிறந்
    தேத்து வார்க்கிடர்
    ஆனகெ டுப்பன
    அஞ்செ ழுத்துமே 3
    நல்லவர் தீயரெ
    னாது நச்சினர்
    செல்லல் கெடச்சிவ
    முத்தி காட்டுவ
    கொல்லந மன்தமர்
    கொண்டு போமிடத்
    தல்லல்கெ டுப்பன
    அஞ்செ ழுத்துமே. 4
    கொங்கலர் வன்மதன்
    வாளி யைந்தகத்
    தங்குள பூதமும்
    அஞ்ச வைம்பொழில்
    தங்கர வின்படம்
    அஞ்சுந் தம்முடை
    அங்கையில் ஐவிரல்
    அஞ்செ ழுத்துமே. 5
    தும்மல் இருமல்
    தொடர்ந்த போழ்தினும்
    வெம்மை நரகம்
    விளைந்த போழ்தினும்
    இம்மை வினையடர்த்
    தெய்தும் போழ்தினும்
    அம்மையி னுந்துணை
    அஞ்செ ழுத்துமே. 6
    வீடு பிறப்பை
    யறுத்து மெச்சினர்
    பீடை கெடுப்பன
    பின்னை நாடொறும்
    மாடு கொடுப்பன
    மன்னு மாநடம்
    ஆடி யுகப்பன
    அஞ்செ ழுத்துமே. 7
    வண்டம ரோதி
    மடந்தை பேணின
    பண்டையி ராவணன்
    பாடி யுய்ந்தன
    தொண்டர்கள் கொண்டு
    துதித்த பின்னவர்க்
    கண்டம் அளிப்பன
    அஞ்செ ழுத்துமே. 8
    கார்வணன் நான்முகன்
    காணு தற்கொணாச்
    சீர்வணச் சேவடி
    செவ்வி நாடொறும்
    பேர்வணம் பேசிப்
    பிதற்றும் பித்தர்கட்
    கார்வண மாவன
    அஞ்செ ழுத்துமே. 9
    புத்தர் சமண்கழுக்
    கையர் பொய்கொளாச்
    சித்தத் தவர்கள்
    தெளிந்து தேறின
    வித்தக நீறணி
    வார்வி னைப்பகைக்
    கத்திர மாவன
    அஞ்செ ழுத்துமே. 10
    நற்றமிழ் ஞானசம்
    பந்தன் நான்மறை
    கற்றவன் காழியர்
    மன்னன் உன்னிய
    அற்றமில் மாலையீ
    ரைந்தும் அஞ்செழுத்
    துற்றன வல்லவர்
    உம்ப ராவரே. 11

  • @vivegamharish.d7934
    @vivegamharish.d7934 Před rokem +11

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Před 11 měsíci +10

    நன்னெறியாவது நமச்சிவாயவே ஓம் நமச்சிவாய

  • @mohans9383
    @mohans9383 Před rokem +6

    திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🙏🙏🙏🙏malarati🙏🙏🌹போற்றி. Sadguru🙏நாதன் 🌹🌹🌹iyyapani🙏தொடரட்டும். 🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Před rokem +10

    ஓம் நமசிவாய சிவாய நம

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Před měsícem +1


    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
    எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Před měsícem

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் ❤ ஓம் நமசிவாய சிவாய நமக ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி ❤

  • @sengottuvelu9916
    @sengottuvelu9916 Před 2 lety +10

    நன்று. வார்த்தைகள் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நல்ல குரல் வளம். பதிகத்தை கேட்டு சிவனே என்று இருந்தாலே இறையருள் கிட்டும்.

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 6 měsíci +8

    சிவபுராணம் கேட்டு மகிழ்ந்தேன்

  • @SannasiSithar
    @SannasiSithar Před 4 měsíci +2

    ❤ I love my india my hindu only ❤ birth of live and death me hindu soul ❤❤❤

  • @vennilavennila537
    @vennilavennila537 Před 8 měsíci +4

    ஓம் நமசிவாய பாப்பா போற்றி 🪔🙏🔱🕉️🌹🍎🌷🌼💐🔔🛕🌟👏👍👌🎉🕌😍🏠🌚🥵🕺😣🌜💃👋🌛😩😞😪🇾🇪

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před rokem +19

    தேனினும் இனிய குரலில் தாங்கள் மனம் உருகிப் பாடியதோடு அல்லாமல் எங்கள் மனமும் உருகும் படியாகப்பாடி எங்கள் மனதை இறைவனோடு லயிக்கும் படி செய்துவிட்டீர்கள். இறைவனுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

  • @SelvaSornam
    @SelvaSornam Před 2 lety +27

    வார்த்தைக்கு வார்த்தை நடராஜர் நடனமிடுவது போல் உள்ளதது, ஐயா அவர்களின் குரல்.....நன்றி!

  • @gopalankuttyezhuthachan8953

    Ohm Nama shivaya, ohm Nama shivaya, ohm Nama shivaya, ohm Nama Shivaya Ohm Nama Shivaya saranam, saranam, saranam,saranam, saranam 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 Před 2 lety +10

    நாதன் நாமம் நமசிவாயவே ! நன்றி வாழ்த்துக்கள🙏

  • @om8387
    @om8387 Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய நாதன் ஒருவனே நமக்கென்றும் துணையே அவன் பாதகமலமே பற்றிப்பிடிப்போமே ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக

  • @ramasubramaniangurumurthy3273

    என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இப்பிறப்பில். ‌ஓம்‌ நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம் மிக மிக அருமையான இனிய குரல் அய்யா

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran Před rokem +40

    சென்ற பிறவியில் நான் செய்த புண்ணியம் சிவனை‌வழிபடுவதற்கு

  • @ramasubramaniangurumurthy3273

    நமச்சிவாய பதிகம் மிக மிக அருமையான இனியது அய்யா. தங்கள் இசைப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ramachandranrajagopalan7709

    தேனினும் இனிய பதிகங்கள் தெய்வீக குரல் சிவனடி சேர்க்கிறது எப்படி இசையோடு பாடுவது என்று சிந்தித்தேன் ஆனால் சிவனருளால் கூடவே பாடினேன். இன்னிசையாலும் இறையருளாலும் இப்பொழுது நன்றாகவே பாடமுடிகிறது ஓதுவார் திரு சற்குருநாதருடைய இனிய குரல்வளம் சக்தி வாய்ந்தது. நன்றி பல சிவனடி போற்றி போற்றி

  • @GOWTHAMGOWTHAMAN007-db9bx

    சிவாயநம 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +28

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺திருவாலவாய்🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 9 měsíci +6

    என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் அப்பா சிவனிடம் வேண்டுகிறேன் அப்பா சிவன்🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

    • @skkaruppuchamyskl3273
      @skkaruppuchamyskl3273 Před měsícem

      சிவாயநம
      1. ஆலம் தான் உகந்து அமுது செய்தானோ.....
      2. மீளாஅடிமை உமக்கே ஆளாய்.....
      என்ற பதிகங்களை நாள் தோறும் உறைப்புடன் ஓதி/ படித்துவரும்.

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan5420 Před 2 lety +11

    Enna punniyam seidhomo iraivaa idhu kurala illai malaithenaa 🙏🙏🙏🙏🙏🌹⚘🌷🌻🌺om Namasivaya 🕉♥

  • @kamalakkannans2952
    @kamalakkannans2952 Před 2 lety +20

    கேட்க மிகவும் அருமையான பாடல்கள். இனிமையான தொனி.🙏திருச்சிற்றம்பலம்.

    • @radhakavi6724
      @radhakavi6724 Před rokem +1

      Sweet voice.divine song. Ohm Namasivaya namaha 🙏🙏

  • @nil487
    @nil487 Před měsícem

    Morning sivan songs
    Mana amaithikku vazhi vaguthathathu.
    Avan andri oar anuvum asaiyaathu.
    Nandri displaying. namaste

  • @chellappans3992
    @chellappans3992 Před rokem +10

    இதை கேட்க கேட்க மனம் அமைதி அடைவது தின்னம்

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Před 2 lety +40

    சிவராத்திரி நன்னாளில் இந்த பதிகங்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. மிகவும் அருமையான குரல். ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @vallamvallam5268
    @vallamvallam5268 Před 6 měsíci +1

    நான் இந்துவாய் பிறந்ததை விட மனிதனாய் பிறவியுற்றதே பெருமை என்பேன்

  • @phandu7288
    @phandu7288 Před 5 měsíci +3

    சிவாய திரு சிற்றம்பலம் 🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 2 lety +14

    மனமே வாழ்வு சிறக்கும் வாழ்வு வாழ மனமே நேர்மையான வழியில் செல்ல நமசிவாய நாமம் ஒன்றே சிறப்பான பதிவு நன்றி ஐயா திரு ச்சிற்றம்பலம் சிவ சிவா

  • @vathsalabhavithra8479
    @vathsalabhavithra8479 Před měsícem

    இனி ஒரு பிறவி வேண்டாம் பிறந்தாலும் சிவனை மறவாத நிலை வேண்டும்

  • @Anbudan_Salem_JAYARAJ
    @Anbudan_Salem_JAYARAJ Před 2 lety +23

    அற்புதமான குரல்வளம் நன்றி 👌🙏 ஓம் நமசிவாய

  • @vasudevangopal2448
    @vasudevangopal2448 Před 2 lety +2

    எத்தனை பிறவி எடுத்தாலும் sivabakthanave பிறக்க வேண்டும்

    • @snarendran8300
      @snarendran8300 Před 2 lety

      நண்பரே! மனிதனுக்கு ஒரே பிறவி தான் என்பதை "இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே" என்று சிவவாக்கியச் சித்தர் ஆணித்தரமாக பாடுகிறார்.
      "அரிது அரிது மானிடரா
      ய்ப் பிறத்தல் அரிது"
      என்று பாடுகிறார் ஔவையார்.
      மனிதனாகப் பிறப்பதே அரிது அல்லவா?
      அப்படி அரிதாகக் கிடைத்த மானிடப் பிறவியில் செய்ய வேண்டிய அருங்கடமை இருக்குமல்லவா?
      அது என்ன?

  • @kris2161
    @kris2161 Před 2 lety +5

    கோ.முருகன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shivashangkareeshangkaree4064
    @shivashangkareeshangkaree4064 Před 11 měsíci +7

    ஓம் நமச்சிவாய

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před rokem +26

    தெய்வீக குரலையா உங்களுக்கு, கல்லையும் கரைய வைக்கும் ஆற்றலை தந்தீர் ,மனம் உருகிவிட்டது.ஓம் நமச்சிவாயவே.

    • @thangeseswar5927
      @thangeseswar5927 Před rokem

      Te😮😮

    • @manjulas432
      @manjulas432 Před rokem +1

      ஓம் சிவாயநம ஓம் நமச்சிவாய சிவா ய ம ஓம்

    • @g.nagarajanrajan6144
      @g.nagarajanrajan6144 Před rokem +1

      🎉

    • @ganeshanrajarathnam3864
      @ganeshanrajarathnam3864 Před 11 měsíci

      7 vadhu paarru Thirunaavukkarasar
      Aruliy DEVARAM
      MANDHIRAM AVADH
      NEERU THANDHIRAM
      AVADHU NEERU
      THANDHIRAM
      AVADHU NEERI
      .........ENGIRA PATTU PL

  • @user-qb1kd8wo5s
    @user-qb1kd8wo5s Před 7 dny

    Super உங்கள் குரல் வாழ்கவளமுடன்

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Před rokem +11

    அற்புதக்குரல்வளம். அமைதிதவழ்கின்ற ஆலயத்தில் ஆன்மீகஅதிர்வுகளை அனைவருக்கும் அலைபாயச்செய்யும்குரல்!

  • @kankiritharan3418
    @kankiritharan3418 Před rokem +11

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே 🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 3 měsíci +1

    Thiruvasagapperumale Potti Potti ❤❤❤
    Thiruvasagapperumale Potti Potti ❤❤❤
    Thiruvasagapperumale Potti Potti ❤❤❤

  • @kamalakumar9799
    @kamalakumar9799 Před rokem +2

    சிவாய நம சிவாய என்னப்பன் சிவனுக்கே போற்றி

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 2 lety +8

    ஓம் நமசிவாய போற்றி போற்றி நாதன் தாழ் போற்றி ஓம் நமசிவாய வே

  • @kanagasabapathykanagasabai7313

    ஓம் நமசிவாய நமசிவாய 🙏🙏🙏

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 2 lety +6

    👣🌺🌺🌺🙏🙏🙏 நமஸ்காரம் நன்றி ஐயா மிகவும் அருமை அருமை 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏

  • @user-qb1kd8wo5s
    @user-qb1kd8wo5s Před měsícem

    வாழ்கவளமுடன் God bless all Thanks for this Thiruvasagam

  • @gadikachalamgadikachalam2712

    சிவன் பார்வதி அம்மாள் பாடல்கள் அருமையாகமனம்இனிமைஉள்ளது

  • @manirajah811
    @manirajah811 Před 2 lety +8

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்👍🙏🏽

  • @sachchithananthamsubramani5812

    ஓம் நமசிவாய போற்றி

  • @dshankar294
    @dshankar294 Před 2 lety +5

    கேட்க மிகவும் அருமையான பாடல்கள். இனிமையான தொனி

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 Před 2 lety +2

      தெளிவான கணீரென்ற உச்சரிப்பு நல்லிசைப்பயிற்சி.முற்பிறவி பயன்.
      வாழ்ங வளமுடன்

  • @rajendrans1217
    @rajendrans1217 Před 5 měsíci

    இன்னிசைகேட்டுஇன்புறசெவித்திறன்அருளும்சிவனேபோற்றி போற்றி.

  • @devimohan3883
    @devimohan3883 Před 2 lety +6

    குரல் வளம் மிக அருமையாக உள்ள து. மிக தெளிவாக பாடியுள்ளார் பின்னனி இசை சற்றுகுறைவாக இருந்தால் தேவாரம் பயில்பவர்களுக்கு மிக தெளிவாக இருக்கும் இது எங்களைப் போன்று பயில்பவர்களின் கருத்து 🙏🙏🙏

  • @ShaishanmukaSri
    @ShaishanmukaSri Před 4 měsíci +1

    Om Siva Sivayaa Namaha thiruchitambala Nathan tiruvadigal potri🙏🙏🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 2 lety +1

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @baliahpappathi316
    @baliahpappathi316 Před 22 dny

    Iam very glad my soul be happy with the grace of gurudev .jai gurudev

  • @thirunavukarasus1516
    @thirunavukarasus1516 Před 5 měsíci

    Ohm nameshivaya porti porti porti

  • @cpet396
    @cpet396 Před 3 lety +19

    சிவாயநம. .சிவாயநம. .சிவாயநம. .🙏திருச்சிற்றம்பலம். . .

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Před rokem +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Před rokem +3

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🌿 🌿 🌿 🌿 🌾🌾🌾🌾🌾🤲🤲🤲🤲🤲🤲காபலி போற்றி

  • @abimaki3692
    @abimaki3692 Před rokem +5

    ஓம் நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kapilesh.pkapil839
    @kapilesh.pkapil839 Před 6 měsíci +3

    ஓம் நமசிவாய

  • @jayanthiperumal8185
    @jayanthiperumal8185 Před 5 měsíci

    OM NAMA SHIVAYA POTRI

  • @user-qr2qs4vp7k
    @user-qr2qs4vp7k Před 4 měsíci +1

    Arumayana padhigam,Aromayana kuralvalam,Om Namashivaya,Mylai Kapaleeswarar Potri.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +2

    🙏🔥🏵️🐦🦚🐿️🐓🦌சிவ சிவ🌹🦜🦣🐄🐒🐅🫒🙏🌹🌸

  • @chidambaramnarayanasamy9591
    @chidambaramnarayanasamy9591 Před 3 měsíci

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshn.k.g9712
    @ganeshn.k.g9712 Před rokem +10

    அருமை ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před 2 lety +2

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின் பாதம்போற்றிபோற்றி செங்கமலதிருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேநின்பாதம்போற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌸🏵💮☘️🥀💐🍀🌷🌼🍌🍌🍇🍋🍒🍐🍉🍍🍊🍎🍓🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @murgeshan3161
    @murgeshan3161 Před 2 lety +4

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ திருச்சிற்றம்பலம்

  • @muthumuthu1-jh1nk
    @muthumuthu1-jh1nk Před rokem +4

    Om namachivaya🙏🙏🙏

  • @user-mc2ql1gp1k
    @user-mc2ql1gp1k Před 6 měsíci

    சிவாயநம

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 Před 2 lety +17

    அற்புதமாக இசைத்துள்ளீர்கள். மிக்க மிக்க நன்றி.

  • @jayaram6716
    @jayaram6716 Před 2 měsíci

    Super. Kural valam nimathiyga. Irundadu

  • @kamalakumar9799
    @kamalakumar9799 Před rokem +1

    திருச்சிற்றம்பலம் சிவனே போற்றி போற்றி

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Před 4 měsíci

    Om namachivaya

  • @purushothamang3894
    @purushothamang3894 Před rokem +6

    வாழ்கவளமுடன்.பாடியவர் குரல் மிக அருமை

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 Před 2 lety +8

    🙏திருச்சிற்றம்பலம். .

  • @balasubramani1855
    @balasubramani1855 Před 3 měsíci

    Om Nama Sivaya

  • @shenbagavallit305
    @shenbagavallit305 Před 5 měsíci

    Omnamasivaya

  • @purushothamang3894
    @purushothamang3894 Před 3 měsíci

    அருமையான குரல் வாழ்கவளமுடன்

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 Před 6 měsíci +3

    🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய 💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @user-ho2lq5po1b
    @user-ho2lq5po1b Před 5 měsíci

    Om namasivaya🙏🙏🙏🙏🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 2 měsíci

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி போற்றி.

  • @JAISEELANERAIMAINDAN
    @JAISEELANERAIMAINDAN Před 2 lety +11

    பாராட்ட வார்த்தை இல்லை, ஓம் நமசிவய

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathidevijeyachandhira124

    Arumai Touch my heart

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 5 měsíci

    Omnamasivayam.valha. valhavalamutan ❤

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 Před 2 lety +21

    அற்புதமான குரல் வளம். அருமையாக பாடியுள்ளார்.

  • @RamMurthiKrishnamurthi
    @RamMurthiKrishnamurthi Před 2 měsíci

    🙏🏻Om Namashivaya🙏🏻

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 Před 2 lety +13

    உள்ளம்உருகும் சிவபுராணம்