Sivapuranam - Thiruvasagam | சிவபுராணம் | Vadhavooradigal |

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2020
  • சிவபுராணம் - திருவாசகம் | Sivapuranam - Thiruvasagam | வாதவூரடிகள் | Bakthi TV | #SIvapuranam
    Sivapuranam -Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Sivan Sung by Thiruvasagapiththar SIva Thiru.Vadhavooradigal
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
  • Hudba

Komentáře • 4,4K

  • @bharathk4667
    @bharathk4667 Před měsícem +55

    நம் முன்னோர்கள் நமக்கு கோயில் கட்டி குளம் ஆறு ஏரி அமைத்து இறைவனை பாட பாடல் புராணம் எழுதி வைத்து சென்றார்கள்.நாம் அதை பின்பற்றினாலே போதும் அழிக்காமல்..வாழ்க தமிழ்..சிவபுராணம்..தந்த மாணிக்கவாசகர்..

  • @prasanthsp1197
    @prasanthsp1197 Před 7 měsíci +189

    ௭ந்த பிறவியில் ௭ன்ன புண்ணியம் செய்தேனோ❤ இன்று ௭ன் அப்பன் மீது இத்தனை நேசம் கொண்டுள்ளேன். ஐயனே உன் பார்வை ௭ன்மேல் விழ ௭ன்ன புண்ணியம் செய்தேனோ ❤ஓம் நமசிவாய 🙏

  • @parthibana1132
    @parthibana1132 Před 3 dny +1

    ஓம் நமசிவாய தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @nagarajannagarajan7369
    @nagarajannagarajan7369 Před měsícem +21

    மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் எழுதிய பாடல் திருவாசகம் என்னும் தேன்
    ஓம் நமசிவாய சிவாய நம

  • @sayeeanjaneyasevatrust660

    ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    ஓம் நமசிவாய

  • @karthiretha4040
    @karthiretha4040 Před měsícem +17

    என் இறைவன் ஈசனை நினைக்கும் போது... முக்தி_யை உணர முடிகிறது !!
    நமசிவாய வாழ்க🙏

  • @RajkumarnRajkumarn-kf4tt

    எனக்கு மிகவும் பிடித்த தெய்வப் பாடல் தெனமும் இரண்டு முறை இதை கேட்பேன்

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et Před 2 měsíci +18

    எம் ஐயனை வணக்க இந்த பிறவியில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ ,,,ஓம் நம சிவாய

  • @sivaramakrishnansrk5835
    @sivaramakrishnansrk5835 Před rokem +138

    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே🙏

  • @banu8072
    @banu8072 Před rokem +309

    எத்தனை கோடி பணம் இருந்தாலும் சிவபுராணத்துக்கு ஈடுஇணை இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @jayaraja2007
    @jayaraja2007 Před 13 hodinami +1

    திருச்சிற்றம்பலம்

  • @BalaG-gu7fo
    @BalaG-gu7fo Před 5 dny +5

    நான்.எனது பள்ளியில் 5ஆம் வகுப்புபடிக்கும்போது படிப்பேன் உங்கலுக்கு பிடிக்குமா? அப்படி என்றல் ஒரு👍👍பன்னுங்கள் நன்பா😊

  • @kuttyshivanofficialksoavi

    திருச்சிற்றம்பலம். சிவபெருமானை மகிழ்ச்சி படுத்தும் பாடலை பாடுகிறேன் இதை இசை போட்டு பாடுங்க. திருநெறி பாடல். சிவமென்று கூறடா சிந்தனை மகளும் சிவமென்று கூறடா ஆனந்தம் பொழியும் சிவவென்று கூறடா சிவமயமாகும் சுகம் என்று கூறடா சிவமாய் மாறும் ும் சிவமென்று கூறடா ஜோதியாய் மாறும் சிவம் என்று கூறடா சிவனை அடைவோம் சிவம் என்று கூறடா நெறிவாழ்வு கிடைக்கும் சிவம் என்று கூறடா எங்கும் சந்தோஷம் சிவம் என்று சொல்லடா சிவம் வந்து போகும் சிவம் என்று கூறடா அண்ணாமலை மா வரும் சிவவென்று கூறடா குருவாய் மாறும் சிவமென்று கூறடா சிவமாய் நிற ்கும் சிவமென்று கூறடா தீராத நோய் தீரும் சிவம் என்று கூறடா ஆறாத புண்ணாக ஆறு மூவி சிவம் என்று கூறடா ஆனந்த மழை பொழியும் என்று கூறடா இசையும் மாலும் சிவம் என்று கூறடா சிவகிரி அடைந்து சிவமென்று கூறடா பிறப்பையறுக்க வேண்டும் சிவம் என்று கூறினால் சிவலோக பயணம் சிவம் என்று கூறினால் அன்பினால் நடக்கும் சிவம் என்று கூறினால் இன்னிசை பாடும் சிவமென்று கூறினால் ஆகவும் நிற்கும் சிவா என்று கூறினால் ஆன்மீகம் தோன்றும் சிவமென்று கூறினால் தொல்லைகள் தீரும் சிவமென்று கூறினால் எங்கும் நிறைந்திருக்கும் சிவமென்று கூறினால் அங்கம் அடங்கும் சிவம் என்று கூறினார் ஆனந்தம் பெருக கும் சிவம் என்று கூறினால் திருவருள் தோன்றும் சிவமென்று கூறினால் திருமுறை தோன்றும் சிவன் என்று கூறினால் திருவாசகம் தோன்றும் சிவன் என்று கூறினாய் தெரு நெறிகள் தோன்றும் நிலங்கள் அதிரும் சிவவென்று கூறினார் நீர் நிலை மாறும் சிவவென்று கூறினால் ஆனந்தமாய் மாற ும் சிவமென்று கூறினால் நல்ல நிலை பெறுவோம் சிவமென்று கூறினால் ஆரனாக மாறும் சிவமென்று கூறினால் சிவமே அணிந்து ஓம் சிவம் என்று கூறினால் பிரச்சனை தீரும் சிவம் என்று கூறினால் அர்ச்சனையேறும் சிவன் என்று கூறினால் சிந்தனை மகளும் சிவமென்று கூறினால் பிறப்பறுக்கும் நாயகன் சிவமொன்று கூறினால் எங்கும் நிலைக்கும் சிவமென்று கூறினால் பிறப்பை அறுத்து ஆட்கொண்டு என்னை உன்னுடன் கலக்கச் செய்து உன்னுடைய பிள்ளையாய் மாற்றி என்னை ஆட்கொள்வாய் சிவபெருமானே போ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @nisyahhh994
    @nisyahhh994 Před 2 lety +47

    Thiruchitrambalam!!!
    Thollai irum piravi, soozhum thalai neeki
    Allal aruthu aanandham aakiya nae
    Ellai maruva neri alikkum, vaadhavoar engon
    Tiruvasagam enum thean, tiruvasagam enum thean……
    Nalam tharum sivapuranam naalum padidu manamae
    Sivan varuvan arul tharuvan vaazhvil anudinamae...
    Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
    Imai podum yennenjil neengaadhan thal vazhga.
    Kokazhi aanda guru manithan thaal vaazhga,
    Agamam aagi nindru annippan vaazhga,
    Yekan anegan iraivan adi Vaazhga(1-5)
    Vegam keduthu aanda vendhan adi velga,
    Pirapparukkum pinjakan than pey kazhalgal velga,
    Puratharkkum cheyon than poomkazhalgal velga,
    Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
    Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.(6-10)
    Eesan adi Potri, Yenthai adi Potri,
    Nesanadi Potri, Sivan Sevadi Potri,
    Neyathey nindra nimalan adi Potri,
    Maya pirappu arukkum mannan adi Potri,
    Cheeraar perum thurai nama devan adi Potri(11-15)
    Aaratha inbam arulum malai Potri,
    Sivan avan yen sinthayul ninra athanaal,
    Avan arulaale avan thal vanagi,
    Chinthai magizha Sivapuranam thannai,
    Munthai vinai muzhuthum oya uraippan yaan.(16-20)
    Kannuthalaan than karunai kan kaatta vandeythi,
    Yennutharkettaa yezhilaar kazhal irainji,
    Vin nirainthum, man nirainthum mikkai vilangoliyaai,
    Yenn iranthu yellai illathaane nin perum cheer,
    Pollaa vinayen pugazhum maru ondru ariyen.(21-25)
    Pullagi, poodai puzhuvai maramaki,
    Pal virugamagi pravaiyai, paambaagi,
    Kallai, manitharaai peyai, ganangalaai,
    Val asuraragi, munivaraai, devaraai,
    Chellaadhu nindra, ith thavara sangamathul,
    Yella pirappum piranthu, ilaithen, yem perumaan.(26-31)
    Meyye Un ponnadikal kandu indru veedu uttren,
    Uyya yen ullathul ongaramai nindra,
    Meyya, vimala, vidaipaaka, vedangal,
    ayya yena vongi aazhndu agandra nunniyane (32-35)
    Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
    Poi aayina yellam poi akala vandharuli,
    Mei jnanam aagi milirgindra mei chudare,
    Yejnanam illathen inba perumale,
    Agjnam thannai agalvikkum nal arrive. (36-40)
    AAkkam alavu iruthi illaai, anaithulagum,
    AAkkuvaai, kaapaai, azhippai, arul tharuvaai,
    Pokkuvaai, yennai puguvippaai nin thozhumpin,
    Naatrathin yeriyai cheyai, naniyaane,
    Mattram manam kazhiya nindra maraiyone . (41-45)
    Karantha paal kannalodu nei kalanthar pola
    Chiranthu adiyar chinthanaiyul thean oori nindru,
    Pirantha pirappu arukkm yengal peruman,
    Nirangal oar aiynthu udayai, vinnorgal yetha,
    Marainthu irunthai yem peruman,valvinai yen thannai,
    Marainthida moodiya maaya irulai,
    Arambhavam yenum arum kayitraal katti,
    Puram thol porthu, yengum puzhu azhukku moodi,
    Malam chorum onpathu vayil kudilai,
    Malanga pulan aiynthum vanchanayai cheyya(46-55)
    Vilangu manathal, Vimalaa unakku,
    Kalantha anbaagi, kasinthu ul urugum,
    Nalam than ilatha siriyerkku nalgi,
    Nilam than mel vanthu aruli, neel kazhalkal kaatti,
    Nayir kidayai kidantha adiyerkku,
    Thayir chirantha dhayavana thatthuvane (56-61)
    Masattra jyothi malarntha malar chudare,
    Desane, theanar amudhe, Shivapurane,
    Pasamaam pattru aruthu paarikkum aariyane,
    Nesa arul purinthu nenjil vanjam keda,
    Peraathu nindra perum karunai peraare.(62-66)
    AAraa amudhe, alavilaa pemmane,
    Oraathaar ullathu olikkum oliyaane,
    Neerai urukki yen aaruyirai nindraane,
    Inbamum thunbamum illanae, ullanae. (67-70)
    Anbarukku anbane, Yavayumai, allaiyumai,
    Chothiyane thunnirulae, thondra perumayane,
    Aadhiyane antham naduvagi allane,
    Eerthu yennai aat konda yenthai perumane,
    Koortha mey jnanathaal kondu unarvar tham karuthin,
    Nokkariya nokke, nunukku ariya nun unarve.(71-76)
    Pokkum varavum punarvum illa punniyane,
    Kakkum yen kavalane, kanbariya peroliye,
    Aatru inba vellame, Atha mikkai nindra,
    Thottra chuddar oliyai chollatha nun unarvai. (77-80)
    Maattramaam vaiyakathin, vevverae vandhu arivaam,
    Thettrane, thetra thelivae, yen chindhanai ul,
    Oottraana unnar amudhe, udayaane,
    Vetru vikara vidakku udambin ut kidappa,
    Aattrean yem ayya arane oh yendru.
    Potri pugazhndharaindhu poi kettu mei aanaar (81-86)
    Meet ingu vandhu vinai piravi Chaaraame,
    Kalla pula kkurambai kattu azhikka vallane,
    Nal irulil nattram payindru aadum nadhane,
    Thillai ul koothane, then pandi naattane.(87-90)
    Allal piravi aruppaane oh endru,
    sollarkku ariyanai solli thiruvadi keezh,
    solliya paatin porul unarnthu solluvaar,
    Selvar shiva purathin ullaar, Sivan adi keezh,
    Pallorum yetha panithu….
    Tiruchittrambalam!!!!!!!!

  • @jilranjithjilranjith2233
    @jilranjithjilranjith2233 Před rokem +925

    நான் படித்த பள்ளியில் பாட்டு போட்டியில் இந்த பாடலை பாடி முதல் பரிசு பெற்றேன் 🙏🙏

  • @gowrigowriramamoorthi1703

    இப்போ வெ செத்துட்டாலும் பரவலா அப்பா என் புள்ள அனாதையா நிக்குமே😢😢கலங்கி நிக்கிறேன் அப்பா 😭😭😭😭

  • @nithyadevi8444
    @nithyadevi8444 Před 2 lety +281

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்..😌🥳🥳
    ஓம் சிவாய நம🙏🙏

  • @alaguqueen7917
    @alaguqueen7917 Před rokem +194

    எனது பள்ளி பருவத்தில் வெள்ளி கிழமை அன்று காலையில் சிவபுராணம் படிப்பது வழக்கம் இன்று ஞாபகம் வருகிறது 🙏🙏🙏

  • @firstfitzonegym603
    @firstfitzonegym603 Před 7 měsíci +26

    எமது ஜிம்மில் எமது வீட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் தினம் ஒலிக்கும் குரல் சிவசிவ நமசிவாய வாழ்க❤😊

  • @shakilashakila2185
    @shakilashakila2185 Před 2 měsíci +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +200

    எங்கள் வீட்டு பூஜை அறையில் காலை மாலை இந்த சிவ புராணம் பாடல் தினமும் ஒலிக்க கேட்கிறோம்.ஓம் நமசிவாய .🙏🙏🙏

  • @bharathk4667
    @bharathk4667 Před 8 měsíci +13

    மாணிக்கவாசக பெருமானார் அருளிய திருவாசகம் நமக்கெல்லாம் கிடைத்த அரிய பொக்கிஷம்.காந்த குரலில் கேட்பதும் நமக்கு கிடைத்த வரம்.சிவாயநம...

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Před 3 lety +313

    உள்ளம் நிறைந்தவனே
    உயிரில் உறைந்தவனே
    உயர்வெலாம் அருள்பவனே
    அழகில் சிறந்தவனே
    அப்பனே ஈசனே
    உன் திருவடி சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான வணக்கங்கள

  • @kalakaru2120
    @kalakaru2120 Před 3 lety +185

    தினசரி காலை இந்த பாடலை கேட்டு தான் என் வேலைகள் தொடரும்.... ஓம் நமசிவாய

  • @Sudha55555
    @Sudha55555 Před 5 měsíci +19

    சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
    சிவ சிவ என்றிட தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவ சிவ எண்ணச் சிவகதி தாமே...
    ஓம் நமச்சிவாய

  • @chitra5662
    @chitra5662 Před 2 měsíci +13

    அப்பா அம்மா எல்லாம் நீங்கள் தான் அய்யா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவாய நம 🙏🙏

  • @SriVallilingam
    @SriVallilingam Před 3 lety +431

    சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை..
    அவனோடு ஒப்பார் யாவரும் இல்லை...🙏😭🔱🕉️

  • @mathi.m2587
    @mathi.m2587 Před 3 lety +489

    தினமும் காலையில் இப்பாடலை கேட்ட பிறகுதான் என்னுடைய பணியை தொடங்குவேன்.
    ஓம் நமசிவாய. 🙏🙏🙏

  • @ramanfamily42
    @ramanfamily42 Před 6 měsíci +12

    இதை கேட்கும்போது மனது மிகவும் அமைதி யாக இருக்கிறத.

  • @baraniparamakudi
    @baraniparamakudi Před 3 měsíci +23

    முதலும் , முடிவும் இல்லாதவர் எம் சிவபெருமான்.அவரை கும்பிடுவதற்கே அவருடைய அனுமதி வேண்டும்...🙏

  • @wisdom1000
    @wisdom1000 Před 4 lety +110

    அப்பன் சிவனே என்று உணர்ந்தால் நீயும் நானும் ஒன்றேன்றே உணர்வாய்!

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn Před 3 lety +60

    எல்லாம் நீயே சிவபெருமானே
    ஓம் நமசிவாய 🌺🌷🌹🌷🌹🌼🌹🔥🔥🔥🔥🔥

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Před měsícem +3

    மார்ச்2024. மகா சிவராத்திரி நிகழ்ச்சி ஐயா திவாகர் அவர்கள் அருளிய சொற்பொழிவு தயவு செய்து மறக்காமல் பதிவிடவும் மிக்க நன்றி ❤ஓம் நமச்சிவாய

  • @ganesanprvn8706
    @ganesanprvn8706 Před 3 měsíci +9

    சிவன் அவன் என் சிந்தனை யுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏

  • @shanmugamsoni6445
    @shanmugamsoni6445 Před rokem +30

    எனக்கு புடிச்ச ஒரு தெய்வம் 🙏🙏🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் உன்னை வணங்கி மகிழ்கிறேன் அப்பனே எனக்கு நீ ஒருவனே துணை ஈசனே என்றும் என்ன நீ மறவாதே அப்பா

  • @Rajali-007
    @Rajali-007 Před 3 lety +143

    வரிகளுக்கு ஏற்றவாறான, சரியான ஏற்ற,இறக்கம் கொண்டு பாடப்பட்டதும்,சிறப்பான உச்சரிப்பும்,பாராட்டத்தக்கது.

  • @ramamurthyvenkataraman7199

    பக்தி ஸ்ரத்தையாக துதித்துள்ளார், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாதவூரடிகளுக்கு ஈஸ்வரனின் பரிபூரண கடாக்ஷம் இருக்கிறது. அவர் அம்மா அடிகளுக்கு விபூதி இட்டு விடுவது வெகு அழகு

  • @kannanarumugam107
    @kannanarumugam107 Před 2 měsíci +4

    🙏🙏🙏🔯🔯🔯நமசிவாய வாழ்க🔯🔯🔯🙏🙏🙏

  • @subasundaram1
    @subasundaram1 Před 3 lety +1928

    நான் படித்த பள்ளியில் கடவுள் வாழ்த்தாக சிவபுராணம் பாடுவோம் .அப்போது இருந்து இன்னும் காலையிலும் மாலையிலும் பூஜையில் பாடுகிறேன்.

    • @manirove
      @manirove Před 3 lety +38

      Aiyaa Enna La Vuckarika mudilanga

    • @maduraitn59r97
      @maduraitn59r97 Před 3 lety +34

      Entha school Anna

    • @ayyadurai1902
      @ayyadurai1902 Před 3 lety +21

      super ayyadurai

    • @sivaramanakumari7748
      @sivaramanakumari7748 Před 3 lety +18

      வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 3 lety +76

      YES இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும்

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Před 5 měsíci +7

    ஓம் அருணாசலசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @vasantha1958
    @vasantha1958 Před 5 měsíci +10

    Namashivaya My day starts and ends with this. திருவாதவூர் அடிகளுக்கு என் மனம் கூறும் பல கோடி நன்றிகள்

  • @parthasarathya10
    @parthasarathya10 Před 3 lety +15

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @hemnathk866
    @hemnathk866 Před 3 lety +53

    சிவன் என் தந்தை

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Před rokem +5

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அடியேன் அனுதினமும் கேட்கும் பாடல்.அருமை.அருமை.🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🌹🙏🙏🙏🙏🙏

  • @kannagigk8027
    @kannagigk8027 Před 2 dny

    வணக்கம் வாழ்க வளமுடன்
    சிவபுராணம் கேட்கும் பொழுது மனதிற்கு நிம்மதி கிடைக்கின்றது
    உங்கள் பாடல் சிறப்பு
    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @chinnaiyank1076
    @chinnaiyank1076 Před 2 lety +27

    மன அமைதிக்கு அனைவரும் தினமும் இறைவன் திருவடி நினைந்து பாடவேண்டும்... M

  • @ramyaraam5762
    @ramyaraam5762 Před rokem +182

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
    மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
    கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
    எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
    விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
    எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
    ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
    மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
    கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
    புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
    மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
    விலங்கு மனத்தால், விமலா உனக்கு
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @Maverick_Ind
    @Maverick_Ind Před rokem +10

    ஓம் நம சிவாய 🙏. திருச்சிற்றம்பலம்.
    நம் எல்லா சிவ சொந்தங்களுக்கும் நன்றி.
    பிரம்ம முகூர்த்தத்தில் சிவபுராணம் பாராயணம் செய்தல் மிகவும் சிறந்தது. நம் எல்லா பிரார்த்தனைகள் நிறைவேற்றி தருவார் நம் சிவபெருமான்.
    திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @user-ks3fn9ud3k
    @user-ks3fn9ud3k Před 5 dny +1

    Appane emperumane entha ulakathu uyirkalai ellam karma vinaikalil erunthu viduvithu kappathungal

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Před 4 lety +118

    ஊன் உருக மனம் உரைந்து உயிர் உருகி ஈசன் அடி சரணடைகிறேன் 🙏🙏❤

  • @swaminathanciviler3608
    @swaminathanciviler3608 Před 3 lety +85

    🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤️
    ❤️அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 4 dny

    நமசிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!! திருச்சிற்றம்பலம்.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VanithaShanmugam-od8si
    @VanithaShanmugam-od8si Před 6 dny +1

    இந்த குரலை கேக்கும் போது மனம் அமைதி அடைகிறது பாடியவர் பெயர் தெரிந்து கொள்ள விருப்பம்

  • @Birundha540
    @Birundha540 Před 2 měsíci +4

    Your pronunciation is super Sir with bhakthi voice..

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Před rokem +35

    ஆகச் சிறந்த இறைவன் துதி இந்த பாடல் மட்டுமே...இதை அனைவரும் மனனம் செய்வது மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும்.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před měsícem +3

    ஐயா மாணிக்கவசா நின் திருப்பாதம் போற்றி.

  • @mano_772
    @mano_772 Před měsícem +3

    ஓம் நமச்சிவாய அய்யனே துணை 🙏🏼🙏🏼🙏🏼

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Před 3 lety +63

    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ தோடுடைய செவியின் ஓர்
    விடையை ஏறி துவின் மது சூடி காடுடைய சுடலை பொடி பூசி உள்ளம்
    கவர் கள்வன் ஏடுடை ய மலரான் உனை
    நான் ஏற்ற பணிந்து பிடுடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றோ
    ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ 🙏🙏

  • @subbiahsambantham9168
    @subbiahsambantham9168 Před 4 lety +60

    எம்பெருமானே...உன்னை தானே...தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே.. கயிலை வாசனே ..கயிலை வாசனே ....திருவடி போற்றி போற்றி

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Před rokem +2

    Thiruchirambalam Panchanatham Om Namashivaya

  • @IndianYoutuberMamta
    @IndianYoutuberMamta Před 11 dny

    Bless akash mom and akash with good health and wealth and prosperity and happiness please 🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +106

    சூப்பர் வரிகளுடன் கொடுத்தவருக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாயநம

  • @TheAashiaana
    @TheAashiaana Před 3 lety +223

    My day is not complete without listening to.this rendition
    Thiruchitrambalam🙏🙏🙏

  • @MohanK-rq5gm
    @MohanK-rq5gm Před měsícem +4

    ❤ ஓம் நமச்சிவாயா❤

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 3 lety +53

    குரலில் உருக்கம் சொற்களில் தெளிவு
    அருமை அருமை
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாய

  • @sugumar2891
    @sugumar2891 Před 2 lety +13

    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தைபெருமானே❤❤🙏

  • @priyapavithra58
    @priyapavithra58 Před měsícem +2

    Shivaya nama 🙏🏻🙏🏻🙏🏻

  • @yogarajan4489
    @yogarajan4489 Před 3 lety +8

    நான் படித்த பள்ளியில்
    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை பள்ளிக்கூடத்தில் திருவாசகம் பாடி தேவாரம் பாடித்தான் பள்ளிக்கூட பாடங்கள் ஆரம்பமாகும். கொழும்பு விவேகானந்த மகா வித்தியாளயத்தில் .நன்றி அய்யா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-si2md7jr7j
    @user-si2md7jr7j Před 3 lety +60

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய
    சவ்வும் நமசிவாய நம

  • @shivaraj2995
    @shivaraj2995 Před 21 hodinou

    Om namashivaya potri potri

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 Před měsícem +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před rokem +7

    எல்லாம் செயல்கூடும் என்ஆனை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ஓம்நமசிவாயா

  • @dhanammalarkkan1
    @dhanammalarkkan1 Před 3 lety +105

    அருமை யான குரல் வளத்துடன் உணர்வு பூர்வமாக தெளிவான உச்சரிப்பு டன். சிறப்பாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @karthik-zg2hk
    @karthik-zg2hk Před měsícem +1

    ஓம்நமசிவாய‌ஓம்நமசிவாய

  • @lakshmikumaresan2259
    @lakshmikumaresan2259 Před 2 lety +10

    நெஞ்சை உருக்கும் திருவாசகம்
    கேட்க கேட்க பக்திப் பரவசமாய்
    இருக்கிறது
    தென்னாடுடைய சிவனை போற்றி.
    எந்நாட்டவர்க்கும் இறைவா
    போற்றி

  • @samSam-jm2jv
    @samSam-jm2jv Před 2 lety +58

    My 4month old baby calms down after listening to this song ❤️

  • @galaxyservices9398
    @galaxyservices9398 Před měsícem +1

    ஓம் சிவாய நமக

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 Před rokem +3

    மனதில் நிம்மதி தரும்

  • @ponnuswamy73
    @ponnuswamy73 Před 3 lety +5

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாடவற்கும் இறைவா போற்றி!....
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.

  • @Raguram...
    @Raguram... Před 3 lety +42

    ரொம்ப நன்றி.. பண்ணோடு பாடத் தெரியாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் 🔱🙏☀️

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 3 lety +1

      சிவாயநம

    • @Raguram...
      @Raguram... Před 3 lety

      மன்னிக்கவும்... சில சந்தேகங்கள்...
      🌟 நின்தொழும்பின் or நின்தொழும்பில்? எனது புத்தகத்தில் தொழும்பின் என்று இருக்கிறது. இது பாட பேதமா?
      🌟 'ஓராதார் உள்ளத் ஒளிக்கும்' என்று வரும் இடத்தில் உச்சரிப்பில் 'உள்ளத்துள்' என ஒரு பதம் சேர்ந்துள்ளது.

  • @karpagamsaravanavel8374
    @karpagamsaravanavel8374 Před rokem +1

    எங்கள் பேத்தி ஒரு வயது தான் ஆகிறது காலை மாலை இரண்டு வேளைகளும் சிவ புராணத்தை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறது

  • @Zigzag20067
    @Zigzag20067 Před 2 měsíci

    💯/💯 உண்மை... நாங்கள் முழுமையாக நம்முருகப்பெருமானை நம்பினோம்.. எங்களுக்கும் ஒரு அழகான வீடு அமைந்து அதில் குடிபுகுந்து வாழ்கின்றோம்... அனைத்தும் முருகனின் அருள்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ..!!!💥🙏🏻

  • @Charu_Loves
    @Charu_Loves Před 2 lety +8

    தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கேட்போம்

  • @prabhakaranspeaks6913
    @prabhakaranspeaks6913 Před 2 lety +5

    ஓம் நமசிவாய.. தெய்வீக குரலில் திருவாசக தேனை பருகிய உணர்வு.

  • @birundhanesamani2991
    @birundhanesamani2991 Před měsícem +1

    Om namashivaya potri potri 🙏🙏🙏🙏🙏

  • @mukundhraghavan3078
    @mukundhraghavan3078 Před 2 měsíci +2

    We pray God to shower His blessings on all of us.

  • @rasaveluchinnayan3181
    @rasaveluchinnayan3181 Před 2 lety +18

    அடியும் அவனே முடியும் அவனே...
    அப்பன் இருக்கையில் ஏது பயம்....

  • @rajganesh5345
    @rajganesh5345 Před 2 lety +390

    இப்பாடாலை யாரெல்லாம் தினமும் கேட்கிறார்களோ மறுபிறப்பு கிடையாது ஓம் நம சிவாய🙏🙏🙏🙏

  • @karthikpalaniandy1995
    @karthikpalaniandy1995 Před 2 měsíci +2

    ஈசன் திருவடி போற்றி ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏

  • @toshithkrishnak2321
    @toshithkrishnak2321 Před 2 měsíci +1

    நமசிவாயா

  • @chithiravarman2763
    @chithiravarman2763 Před rokem +6

    Om namashivaya nama 🙏🙏🙏🙏🙏🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏🙏🙏🙏🙏♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Před 4 lety +18

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @azhaganajantha1250
    @azhaganajantha1250 Před 2 měsíci +1

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @solaiswari6524
    @solaiswari6524 Před měsícem +1

    அவன் அருளால் அவன் தாழ் வணங்கி

  • @prabuchinna4767
    @prabuchinna4767 Před 3 lety +47

    🍀🍀🍀 சிவாய நம....
    சிறப்பான செயல்....
    திருச்சிற்றம்பலம்🍀
    தில்லையம்பலம்...🍀🍀🍀

  • @Anu-sj7si
    @Anu-sj7si Před 3 lety +148

    This is my daily prayer song .I used to tell this sivapuranam daily....

  • @priyapavithra58
    @priyapavithra58 Před měsícem +1

    Shivaya nama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @santhilakshman3879
    @santhilakshman3879 Před měsícem +1

    Om Namah shivaya

  • @salaigubendraraja
    @salaigubendraraja Před 3 lety +21

    சிவபுராணம் எப்படி பாட வேண்டுமோ அதே ராகத்தில் பாடி இசையமைத்து எங்களை போன்ற எளியவர்கள் மனதை நெகிழ வைத்து உருக வைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @santhimariappan5377
    @santhimariappan5377 Před 3 lety +6

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏