நடராஜப் பத்து - Natarajar Pathu - JukeBox | Sivan Songs | Sivapuranam D V Ramnani | Vijay Musicals
Vložit
- čas přidán 26. 07. 2024
- நடராஜர் பத்து - Natarajar Pathu - JukeBox | Music & Singer : Sivapuranam D V Ramani | Composer : Sirumanavoor Munuswamy | Vijay Musicals
Nataraja Pathu | நடராஜப் பத்து | Education Purpose
Nataraja pathu is a request of people to lord shiva to Give them what they need. Hear to this song and get benefited dear viewers. Aaruthra Tharisanam, Aarudra Darisanam, Margazhi Thiruvathirai
#paramporulesivasiva#natarajarsongs
SONGS :
01) 00:00 Mannaathi Boothamodu
02) 04:07 Maanada Mazhuvaada
03) 07:13 Kadalendra Puvimeedhil
04) 12:25 Vambu Sooniyamalla
05) 15:44 Nondhu Vandhen Endru
06) 22:23 Vazhi Kandu Unnadiyai
07) 25:17 Annai Thandhai
08) 32:02 Kaamun Marameethu
09) 38:20 Thaayaar Irundhenna
10) 44:47 Innamum sollavo
11) 50:42 Sani Raghu Kedhu Pudhan
சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது. சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம். சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது. மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே"என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது. ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார்.
இதனை ஒவ்வொரு திருவாதிரை திருநாளிலும் சிவத்தலத்திலுள்ள நடராஜர் சந்நிதியில் பாடி பாராயணம் செய்து வர நடராஜர் அருளால் 16 பேறுகளும் பெற்று முக்தியடைவர். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு. - Hudba
எத்தனை பிறவி எடுத்தாலும் இந்துவாக, தமிழனாக பிறந்து
இப்பாடலைக் கேட்கும் பாக்கியத்தை தந்தருள் சிவனே! ஓம் நமச்சிவாய வாழ்க
M
L
P
@@banukrish3924
P
@@banukrish3924 pp
@@banukrish3924
Pp
Lyrics 3/3
அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ
அறிவிலாததற்கழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக்கழுவனோ
முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ
என் மூட உறவுக்கழுவனோ
முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்தி வருமென்றுணர்வனோ
தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
தவமென்ன எனுறழுவனோ
தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ
தரித்திர தசைக்கழுவனோ
இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ
எல்லாமுரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ
கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ
கிளைவழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ
தந்தபொருளிலை யென்றனோ
தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ
தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ
வாணவரைப் பழித்திட்டனோ
வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ
ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ
எல்லாமும் பொறுத்தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
தாரணியையாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய இருந்தென்ன
சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
ஒன்றை கண்டு தடுக்க
உதவுமோ இதுவெல்லாம் சந்தையுறவு என்று தான்
உந்தனிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
கண்பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே….
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ
இரும்போ பெரும்பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ
இது உனக்கழகு தானோ
என்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ
இதுவோ உன்செய்கை தானோ
இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனே நான்
உனையடுத்துங் கெடுவனோ
ஓஹோவிது உன்குற்றம் என்குற்றம் என்றும் இல்லை
உற்றுபார் மாபெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்
இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
சனி, ரகு, கேது, புதன், சுக்ரன், செவ்வாய்,
குரு, சந்திரன் சூர்யன் இவரை,
சற்று எனகுள்ளக்கி, ராசி பனிரண்டையும்,
சமமாய் நிறுத்தியுடனே,
பணியோத நக்ஷத்ரங்கள் இருபத்தி எழும்
பக்குவ படுத்தி பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டி பலரையும் அதட்டி என் முன்,
கனி போலவே பேசி கேடு நினைவு
நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி,
கத நின் தொண்டராம் தொண்டர்க்கு
தொண்டர்கள் தொழுத நாகி,
இனியவள மருவு சிறு வனவை முனி
சாமி எனை ஆள்வதினி யுன் கடன் காண்.
9
ஐயா.. இந்த லோகத்தில்.. எத்தனை ஸ்லோகங்கள் இருந்தாலும்.. எனக்கு. மிகவும் பிடித்த பாடல்.. நன்றி ஐயா நன்றி. ஐயா. மறுபிறவி ஒன்று இருந்தால்.. நம் ஈசனை தொடக்கூடிய பாக்கியம் கிடைக்க வேண்டும்.. என்னிடம் பணம் இல்லை சொத்து சுகம் எதுவும் இல்லை... எல்லாம் இருந்து நான் ஒரு அனாதை கட்டையே... தயவுசெய்து எனக்காக வேண்டி கொள்ளுங்கள். மிக்க நன்றிங்க அய்யா..
எண்ணம் நிம்மதி கிடைக்கும் இப்பாடல்
Lyrics 2/3
பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல
அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
அறியமோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்
கூறிடும் வயித்தியமுமல்ல
என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏது புகல வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ!
நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ!
சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ!
தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ!
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ
இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்தபோதிலும்
மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்
பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லுவார்கள்
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலன் எனைக் காக்கொணாதோ
எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்..
மதிப்பிற்குறிய ரமணி
அய்யா உங்கள் குரல்
தெய்வீக குரல்.
அருமை அருமை.
God bless you and your family appa
திருச்சிற்றம்பலம்
Unmai ungalukku aishunooru
@@gnanavel4537)
👣🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐❤️🙏🙏🙏🙏 மிகவும் அருமை நன்றி ஐயா ❤️ அருமை🙏❤️
இன்று தவறாமல் கேளுங்கள் சிவபுண்ணியம்
திங்கள் கிழமையில் வருவது மஹா பிரதோஷம்
24.05.2021 .
Aushmanbava vazhgavalamudan nooruvayathu
என் மனம் கவலை தீர்ககுடிய பாடல் இது ஐயா உங்களுக்கு நன்றி ஐயா
O
சூப்பர்
Om shiva shiva shiva om vazhga valamudan nooruvayathu
ஓம் நமசிவாய
Arumaiyana kuraliyavukku om shivayanamaha
ஐயா அருமையான பாடல் வரிகள்! மந்திர வரிகள் !உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் ஐயா! (ஸர்வம்ஸ்ரீ சிவசக்தி மையம்!) வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா!
கோடிக்கணக்கான நன்றி.
🙏🙏🙏🙏👍💥
வாழ்க வளமுடன்
கார்த்திக்
Omnamsivaya omnamsivaya
Omnamsivaya. Omnamsivaya
Omnamsivaya. Omnamsivaya
Omnamsivaya. Omnamsivaya
Omnamsivaya. Omnamsivaya
ஓம் நமசிவாய.ஈசனே சிவகாமி நேசனே!தில்லைவாழ் நடராசனே!
Mugavum Aramaic. Thanks
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமை! பொருள் எளிதில் விளங்கும் படியான துல்லியமான உச்சரிப்பும் உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிப் பெருக்கும் ஒருங்கே அமைதல் சிறப்பு.
”ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்” அமைந்த இறைவன் அருள் புரிக!
Tamil liric
Arupotham Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖
சர்வம் சிவனே 🙏
திருவாசகத்திற்கு இணையாக தில்லை நடராஜரின் மீது பாடப்பட்ட நடராஜ பத்து ஆகும்..
சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலமாகத் திகழ்கின்றது.
மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள் ஆகும்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.
ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.
Om namashivaya namaha
My mind is so peace wow.
OHM NAMASHIVAYA
Intha oru padal thiruvasagathikku samam om shivayanamaha
என் மனதுக்கு பிடித்த பாடல் இருப்பிள்ளை இருக்கையில் நீ என்ன மலடு தானோ என ஈசனை கேக்கும் பாடல் இது ஒரு நிமிடம் என் கண்கள் கலங்கி நிற்கும் பாடல் இது
Sir🙏u r voice is god gifted sir....👍 Download panuraa maarii potuingaa sir....🙏 particularly this para make me cry....🥺 nonthu vanthena aiyram solii saevanthena . Like this u make audio of thiruvasagam and thevaaram plz sir....👌
Lol
மெய் சிலிர்க்கும் குரல் வளம்
அருமை ஐயா.
எம்பெருமான் சிவனின் அருளால் தொடர்ந்து பாட வேண்டும்.
திருமந்திரத்தை பாடினால் நன்று
Om namasivaya parameswara sasisekaraya ombavaya gunasambavaya namasthey
Om sivaya namaga om
மிக அருமையான தெய்வீக இசை. வாழ்த்துக்கள்
Super voice, pleasant recordings congratulations
OM Namakshivaya Sivaya Nama OM
This great singer, sang this Nataraja Pathu slow and steady for everybody to benefit the meaning clearly. Those realised the meanings will be crushed and will surrender them self to the Almighty Shivam !!! Hara Hara Shiva Shiva!!! Shiva Shiva Hara Hara!!!
Sarvam Shivamayam !!!!!!!!!!!!
DR. Ramani. Your voice , the presentation with perfect pronounce of the content with perfect divinity of God Lord Natarajar made me like melting the Ghee in a spiritual lamp every day, I never miss your song Natrajar Pathu before go to bed with heartful of feelings and relax of my mind. Live Long of your fame
மிகவும்நன்றிவாழ்த்துகள் பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர்
Om namachivaya
Omshiva Omshiva Omshiva omgughan arts sivailavarasu sivanadiyan
Om nama Shivaya appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa appa
Omnamachivaya
Om Arunachalaswara&Unnamalaiammal porti
ஐயா அருமை
கண்ணீருடன் கேட்கிறேன்
Songsuper
Anna padam thi tu VANANKUGIREN padalil Thankalai KANAVILLAI Nadarajarye parthu annantha kanner vadikiren nandri vanakam good night 🍎🍎🍉🍌🍌
Om nadaraja potto
Omshiva Shiva Shiva om
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Voice 👍
Wow, classic! Awesome! Extraordinary! Unbelievable rendering and soulful singing! Cannot listen to this without crying!
Om Namasivaya om porti
மனதை சிவமிடம் ஒருங்கிணைக்க செய்யும் மிகவும் ரம்மியமான பாடல்.ஓதுவார்க்கே உரிய வழியில் தகுந்ந இசை அமைத்து எம் போன்ற சிவனடியார்கள் கேட்டு உய்ய செய்த ஐயனே உம் அடி வணங்குகிறேன்.
"தில்லையில் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!!
அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று......
ௐ−ஓம் நம சிவாய
ௐ−ஓம் சிவாய நம!!
Valga Ramaniji valga
All the Valuable Ten Songs should be published in all the medias with Vedeo Songs. The author Sirumanavoor Munuswamy and Sivapuram D.V.RAMANI the great singer deserves appreciation.
Om Parameswara om
I Feel d grt. Divinity...n..HE is d only..Supreme...who has to b worshipped
fantastic Sir- Om nama sivaya
Iyya vanakkam your voice is very nice
Beautiful song
ஓம் நமசிவாய 🙏🙏🙏
எல்லாம் வல்ல இறைவன் இறைவி இன்னருள் அருள,வேண்டுகிறேன்.
a om namasiwaya
Saraniya nalapadiyaga Vala
Arulpuriwayaga
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Haragara Mahadev om
ஓம் ஸ்ரீ சிவாயநம 🙏 .
Excellent excellent excellent sir,i don't want to borne again, lord Shiva i beg you please make me to get mukti, bless me pirava varam ,lord Shiva i surrender you , please help me om shivaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமையான பாடல்.
கேட்கக் கேட்க நெஞ்சு அழுகிறது
நல்வாழ்த்துகள்
Congrats to Vijay Musical choice. The congrats will join the composer Munuswamy Ayya Avarkal who succeeded to bring philosophy and spirituality together in his virtual composition. Thiru D.V. Ramani's task in presenting the compositions in easy music is also a praiseworthy achievement. It's our duty to practice these songs in the form of prayer - Bajanams. Vazhka !!!
Mr.Kris, our heart felt thanks for your wish to everyone who contributed to this song.
அருமையான இசை தெய்வீகக்குரல் ஈசன் அனைவரையும் காக்க வேண்டும்
ஓம் நமச்சிவாய
🙏🙏🙏 DV ரமணி சாங்ஸ் அருமை மனம் உருகி பாடும் பாடல்
SIVAYA NAMAH.SIVAME ABAYAM.
ஒம் நமசிவாய, நன்றி மிகவும் நன்றி ஐய்யா 💞💕👍🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
Excellent performance
I lost myself hearing this Great meanings!!! Viewers of this Nataraja Pathu will be Blessed and will lose their sins !!! Hara Hara Shiva Shiva!!! Sarvam Shivamayam !!!!!!!!!!!!
நன்றிகள்
அருமை அயா இதை கேட்டு இப்பிறவி பலன் அடைந்தேன்
Super
Shivayanama
Essane song I typed out of all and various channel.this channel song singer voice is unique.
very very super voice.
All in one. That is lord shiva
Manathukku nimmathiyaaka irukkirathu...
..om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏
Omshiva Omshiva Omshiva
om namasivaya..
Manadhai urukkum paadal.....sivaya nama....padaithavarum padhivittavarum vaazhga....om namashivaya
Migavum nandri Guna sekar
Voice excellent
🙏🙏🙏
Voice super... Making me cry... Nandri ayya....
So peaceful to listen
Orumba nallaa irukku. Thiruchittrambalam
🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sharvesvara om
Touching the soul..
Super
Iamalwayaslikethissongsothankyou
Om nama sivaya
அற்புதம் சிவசிவ
மடல்க ள்
Super song
It is vedam. His Almighty's lotus feet is our Salvation.
With bowed head I thank Dr. Ramani Aiyah. And my appreciation for the album producers. God bless you all,,🙏🙏
அருமையான பாடல் 😍
Arumai sir Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏
d. v. ramani ki jai ho.
நன்றி ஐயா
அருமை நன்றி