தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன்
Vložit
- čas přidán 7. 08. 2024
- ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - முன்னுரை
00:50 - இவ்ளோ உயரத்துல எப்படி கட்டிருப்பாங்க?
02:27 - படிகள் இல்லாம எப்படி போயிருப்பாங்க?
04:10 - மலைக்கு மேல இத்தன கற்களா?
06:24 - இராவணனின் நீச்சல் குளம்!
08:51 - இராவணன் அசுர குலத்தை சேர்ந்தவரா?
09:38 - பாறையில் பழங்கால வெட்டுகள்
11:19 - இது அசுரர்கள் கட்டியதா?
12:13 - இயற்கையா? Advanced டெக்னாலஜியா?
13:30 - பாறையில் வினோத வெட்டுகள்
14:24 - முடிவுரை
Hey guys, இன்னிக்கு நாம ஸ்ரீலங்கால இருக்கிற ஒரு பிரமாதமான இடத்தப் பாக்கப் போறோம். இந்த எடத்தோட பேரு Sigiriya. உலகத்துல எங்கயுமே இது மாதிரி ஒன்னு கிடையாது. அதனால தான் இத 8வது உலக அதிசயம் அப்படின்னு சொல்றாங்க.
இது ஒரு ரொம்ப பெரிய ராட்சஸ கல்லு, ஒரே கல்லு, கிட்ட தட்ட 660 அடி உயரம் இருக்கும். இதோட மேல் பாகம் பாத்திங்கன்னா flat ஆ இருக்கும். யாரோ ஒரு பெரிய கத்தி வச்சி cut பண்ண மாதிரியே இருக்கும். மேல இருக்கற இடிபாடுகள பாத்தா ரொம்ப அற்புதமான அதே சமயம் ரொம்ப மர்மமான விஷயம்மெல்லாம் இங்க இருந்த மாதிரி தெரியுது. So நம்ப இப்ப நேரா மேல போயி அங்க என்ன இருக்குன்னு பாக்கலாம்.
இங்கயும் அங்கையுமா நெறைய கல்லுங்க வச்சி கட்டியிருக்கற structures இருக்கு. இது எல்லாமே பாக்கறதுக்கு கொஞ்சம் வித்யாசமா இருக்கு. இது இங்க வந்து பாக்கற ஜனங்கள மட்டும் குழப்பல. Archeologistsஆல கூட இதெல்லாம் என்னன்னு முழுசா ஒரு முடிவுக்கு வர முடியல. இங்க பாக்கற எல்லாமே 1500 வருஷம் பழசுன்னு மட்டும் அவங்க சொல்றாங்க. ஆனா இந்த structures எல்லாம் என்னன்றது இப்ப கேள்வி இல்ல. எப்டி கட்டணாங்கன்றது தான் கேள்வி.
பழைய காலத்து ஸ்தபதிங்க இத்தன கல்லுங்களையும் மொதல்ல அந்த பெரிய பாறை மேல எப்படி கொண்டு போனாங்க. 30 லட்சம் கல்லுங்க இங்க இருக்கும்ன்னு சொல்றாங்க. இத்தன கல்லுங்கலையும் இந்த பாற மேல வச்சி கண்டிப்பா செஞ்சிருக்க முடியாது ஏன்னா அந்த அளவுக்கு களி மண் எல்லாம் இங்க இல்ல. இந்த கல்லுங்கள யெல்லாம் அவங்க தரையில இருந்து தான் கொண்டு வந்து சேத்திருக்கணும்.
இப்ப இதுல இன்னும் வினோதமா இருக்கறது என்னன்னா தரைல இருந்து இந்த கல்லையெல்லாம் மேல கொண்டுபோறதுக்கு பழைய காலத்து ஆளுங்க use பண்ண படிங்க எதுவும் இங்க இல்ல. இந்த metalல செஞ்ச படிங்க எல்லாம் போன centuryல செஞ்சது தான். இந்த படிங்களே இல்லன்னா இந்த பாறை ஏரறது ரொம்ப கஷ்டம். இந்த மொத்த கல்ல சுத்தியும் இப்ப நெறைய விதவிதமான படிங்க வச்சிருக்காங்க. இங்க சுத்தி சுத்தி ஏறரா மாதிரி படி இருக்கு பாருங்க. இந்த spiral படிங்கள இந்த பாறையிலயே வேற ஒரு உயரத்துக்கு வச்சிருக்காங்க.
பழைய காலத்து ஸ்தபதிங்க ரொம்ப கம்மியான படிங்கள தான் வச்சிருக்காங்க, ஆனா அந்த படிங்க கூட சரியா மேல போயி சேரர மாதிரி இல்ல . இதனால தான் 200 வருஷம் முன்னாடி வரைக்கும் யாருக்கும், இங்க இருக்கற உள்ளூர் ஜனங்களுக்கு கூட Sigiriya பத்தி எதுவுமே தெரியாம இருந்திருக்கு. ஏன்னா மேல ஏறி போயி என்ன இருக்குன்னு பாக்கறதுக்கு படியே இல்லையே. 1831ல இந்த Sigiriya வோட இந்த இடி பாடுகள Jonathan Forbes அப்படின்ற ஒரு englishகாரர் தான் மொதல்மொதல்ல கண்டுபிடிச்சார். பழைய காலத்து ஜனங்க மொதல்ல இந்த Sigiriya மேல எப்படி ஏறுனாங்க? இந்த மலைய சுத்தி காடு மாரி இருக்கற இந்த எடத்துல எப்படியோ hiking பண்ணி ஏறிட்டாங்கன்னு வச்சிக்கலாம். ஆனா 30 லட்சம் கல்லுங்கள தரைல இருந்து மேல கொண்டு வரணும்ன்னா சரியான படிங்க இருக்கணும். இல்லன்னா இத்தன கல்லுங்களயும் மேல கொண்டு வர்றது சாத்தியமே இல்ல. இந்த கல்லுங்கள எல்லாம் இந்த மல மேலயே செஞ்சாங்கன்னு வச்சிக்குவோம். அப்ப கூட அத செய்யறதுக்கு நூத்துக்கணகான ஆளுங்க இங்க ஏறி வந்திருக்கணும். அவங்களுக்கெல்லாம் சாப்பாடு எங்க இருந்து கிடைச்சிருக்கும். சுத்தி பாருங்க, இத சுத்தி எங்கையும் சாப்படறதுக்கு எதுவும் கிடைக்கற மாதிரி பழ மரமோ, விவசாய நிலமோ எதுவுமே இங்க இல்ல.
அப்பறம் இங்க வேல செய்யறதுக்கு tools க்கு என்ன பண்ணாங்க? எப்படி பெரிய பெரிய tools எல்லாம் அவங்க தூக்கிட்டு வந்திருப்பாங்க? எங்க rest எடுத்து தூங்கியிருப்பாங்க?
இதோட நிக்கல, இதுல இன்னும் குழப்பமான விஷயங்க இருக்கு. கொஞ்சம் கவனிச்சி பாருங்க. இங்க கல்லுங்க மட்டும் இல்ல. இந்த பெரிய பெரிய பாறைங்கள பாருங்க. இதெல்லாம் marble. பால் மாதிரி வெள்ளையா இருக்கற இந்த marble கல்லுங்க எல்லாம் இந்த எடத்த சேந்ததே இல்ல. அதோட இதெல்லாம் ரொம்ப weight ஆன பாறைங்க. இங்க படிங்கள்ல இருக்கற ஒவ்வொரு கல்லும் கொறஞ்சது 50 pound weight ஆவது இருக்கும், அதாவது ஒரு 20, 25 கிலோ weight ஆவது கண்டிப்பா இருக்கும். இந்த மாதிரி ஆயிரக்கணகான marble கல்லுங்க இங்க இருக்கு. Marble இங்க இயற்கையா அக்கம்பக்கத்துல எங்கையும் கிடைக்கலன்னு experts ஒதுக்கறாங்க. அப்ப எப்டி அதையெல்லாம் இங்க எடுத்துட்டு வந்தாங்க? அதுவும் 660 அடி உயரம் இருக்கற இந்த மலைக்கு மேல, ஏறுறதுக்கு படிக்கட்டு கூட இல்லாம எப்படி?
ஆனா இந்த கல்லுங்களும், marbleம் கூட என்ன கொழப்பல. நான் யோசிக்கற விஷயம் என்னன்னா இந்த granite தான். இங்க இருக்கற இந்த பெரிய water tank பாருங்களேன். அத சுத்தி இருக்கற கல்லு, marble பாறைங்க இது எல்லாத்தையும் கூட விட்டுடுங்க இதை மட்டும் பாத்தா உங்களுக்கு ஒன்னு புரியும்.
#Srilanka #Sigiriya #praveenmohantamil
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1. ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள் - czcams.com/video/rpZXdFuBvoM/video.html
2. என்ன மாதிரி தொழில்நுட்பம் இது ? - czcams.com/video/OfmwUTSxetk/video.html
3. ஹோய்சாலேஸ்வரா - மெஷின்களால் கட்டப்பட்டதா? czcams.com/video/GSWG0bd51K0/video.html
மிக மிக அருமையான பதிவு நண்பரே... உங்களுடைய அனைத்து பதிவுகளும் சிந்திக்கவைக்கும் நிலையில் இருக்கிறது.... இது சிவகிரி என்றே அழைக்கப்படும்
பிரவீன் மோகன்...
இலங்கை வேந்தன் இராவணன் பிராமண குலத்தை சேர்ந்தவர்...
ஆனால் இராவணன் தமிழ் மன்னன் என்று கூறுகிறீர்களே....
I think crane and elevator technology may be used because the screw carvings are there so there may be screw type elevator technology may be used and the screw rotated by the people at the base of the Mountain the elevator goes up and down. Then the holes is there is used to stop the elevator at height to take rest for the people who work in the base. These are my thoughts l think my thoughts help you to think in different ways
@@srp5285 ஜாதி வேண்டாம்ன்னு சொல்றவங்க தான் ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்😂
வணக்கம் ஐயா. ........
சீகிரியா கல் உள்ளே போக. கூடிய பாதை இருந்ததாக அந்த இடத்தில் வேலை செய்த முண்ணோர்கள் சொல்லி இருக்காக .....
அந்த பாதையில் உள்ளே சென்றால் 7 அரை உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் ......
அந்த வழி பாதை தாங்கள் சீகிரியா செல்லும் போது சிங்கத்தின் கால்கள் இரண்டுக்கு மத்தியில் சிங்கத்தின் தலை இருக்கும் நடு பகுதியில்தான் உள்ளது ........
அக்காலத்தில் X.C.B . BELL என்ற ஒருவரால் பாதையை காங்ரீட் போட்டு மூடப்பட்டுள்ளது
அந்த காலத்தில் காங்ரீட் வேலை செய்த முண்ணோர்கள் சொல்லி இருக்காங்க........
Im In srilanka ....
நம் முன்னோர்கள் திறமைகள் அறியாமல் இருப்பது நம் துரதிஷ்டம்.. உங்களின் சேவைக்கு நன்றி. மீண்டும் நமது கலை நுட்பக்கலை இக்கால மக்களுக்கு காட்டும் உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்
தமிழரின் அறிவு பற்றியோ தொழில் நுட்பம் பற்றியோ ஐயம் தேவையில்லை. இதை நாம் நம்புவோம். பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும் வரும் இளம் தலைமுறை யினரை அறிய வைப்போம்.தமிழன்டா!!!
உலகின் முதல் புஷ்பக விமானம் 3000 ஆண்டு முன்பே கண்டுபிடித்து
இயக்கிய தமிழ் அரசன்
இராவணன் மட்டுமே
இராவணன் ஆரிய இனத்தை சேர்ந்த பிராமணர்
தமிழரல்ல....
இராவணன் காலம் கி. மு.8500 (refer மா சோ விக்டர்)
இராவணன் தமிழன் கிடையாது ஐயா.. வரலாறு பிழை. '. இராவணனுக்கு தமிழகத்தில் கோவில் இல்லை... உத்திரபிரதேசத்தில் தான் நெறைய இருக்கு..
@SELVA - MAS
தமிழ் என்பது ஒரு மொழி...இனமல்ல..
உலகில் மூன்று மனித இனங்கள் மட்டுமே...
நீக்ரோ.இனம்..
காக்கேசிய.இனம்..
மங்கோலிய இனம்....
இந்தியாவில் பெரும்பான்மையாக காக்கேசிய மற்றும் காக்கேசிய -நீக்ரோ கலப்பு மட்டுமே.....
ஒரே இனத்தில் பலநூறு மொழிகள் பேசுவோர்கள் உள்ளனர்......
@SELVA - MAS 😀😀😀
தமிழனின் நுட்பம், பாதுகாக்க வேண்டிய பொக்கிசங்கள்
இலங்கை வந்து வாழுங்க அதெல்லாம் சிங்கள படைப்பு என பிதற்றுவது தெரியும் நீங்க வேற
@@deshan_Mahela ஜ்
உண்மையிலே கோவில் பத்தி சொல்லும் போது கடவுளின் கதைகள் தான் இடம்பெறும் ஆனால் அவர்களின்
அறிவியலையும் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறிர்கள் உண்மையிலே பாராட்டுக்கள்
நன்றிகள் பல
Yes yes
அவர்கள் அந்த உயரத்திற்கு சென்றதால் தான் நாம் இன்றும் அவ்வளவு பெரிய உயர்த்தில் இருக்கிறோம் 👍 நீங்களும் எங்கள் உள்ளத்தில் உயரத்திலேயே உள்ளீர்🙏
நன்றி திரு பிரவீன்.
உங்களால் நாங்களும் பயணடைத்தோம். மலேசிய மண்ணில் இருந்து. 🙏
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல..!
அருமையான பதிவு... வியப்பாக உள்ளது... உங்கள் பதிவுகளின் விளக்கங்கள் உங்கள் அருகிலேயே நடந்து சென்று நேரில் கேட்டறிந்த உணர்வை தருகிறது... மிக்க நன்றி...
I also feel the same
@@luckyteams832 thanks
Kulattai vettiyagal engeponathu
நேரில் சென்றால் கூட இந்தஇந்த மாதிரி தெளிவாக பார்க்க முடியாது அந்த அளவிற்கு உங்களின் விளக்கமும் காட்சிப்படுத்தலும் அருமைவாழ்த்துக்கள் நண்பரே💐💐💐🙏🙏🙏👍👍👍🙏🙏🙏✈️✈️✈️
நன்றி சகோ!!!
Sure
உங்களின் வரலாற்று தேடல் ஆர்வம் நெகிழ வைக்கிறது
நன்றி சகோ!!!
அப்போது இருந்த தமிழர்களின் அறிவை பார்க்கும்போது வியப்பாகஇருக்கிறது ,இப்போதய தமிழன் என்னைபார்க்கும்போது வருத்தமாக உள்ளது ,தமிழனை திட்டமிட்டு சதியால் இந்த உலகம் வீழ்த்தியுள்ளது ,இனி நாம் தமிழால் இனைந்து தமிழனாய் ஒன்றுபட்டு சாதிகடந்து இனமாக வாழ்வோம் .
பழங்கால மனிதர்கள் மிகவும் சக்தி வாயிந்தவர்கள்,
650அடி உயரத்தில் இவ்வளவு செங்கற்கள் கொண்டு செல்வதே மிகவும் கடினம் மற்றும் மிகவும் வழுக்கும் பாறையில் கொண்டு சென்று கோட்டை கட்டியது ஆச்சர்யமானது,சிகிரியா அற்புதத்தை எங்கள் கண் முன் கொண்டு வந்து எங்களை இலங்கைக்கு அழைத்து சென்று இராவணன் கோட்டையை சுற்றி காண்பிச்சதுக்கு
பிரவீன்மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏.
Nandrolone. Mangala
மிக்கநன்றி. மங்களா
ஆம் அருமை
I also Thank-you 🙏
True! Very difficult to lift heavy weight stones such a height. They made it possible with the help of slaves who sacrificed their lives.
நான் உங்களிடம் வைத்த வேண்டுகோளை நிறைவேற்றி விட்டீர்கள் மிகவும் நன்றி ஐயா. உங்களுக்கு தேடலுக்கு இறைவன் ஈசன் துணை இருப்பார் என்றும்.
ஏற்கனவே ஆங்கில சேனலில் பீரவீன் இதை பதிவிட்டு உள்ளார்.
மிக்க நன்றி!!!
மலையை சுற்றி இருந்த மண் கால போக்கில் சரிந்திருக்கலாம்
எப்படி இருந்தாலும் நம் முன்னோர்கள் நம்மைவிட மிக சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்
இருக்கலாம்,
சீகிரியா அண்சமவெளி எச்சப் பாறை
ஆறரித்த பாறை ஆகும்.
அப்படி இருந்தால் சிகிரியாவின் அடிப்பகுதியில் அற்புதமான தனித்தனி நன்கு கட்டமைக்கப்பட்ட சிறிய பாறைகள் இருப்பது எப்படி சாத்தியம்
நன்றிகள் பல நாங்கள் தான் சொல்ல வேண்டும். இத்தகு தகவல்கள் அரசாங்கங்களால் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும். அழிந்த விஞ்ஞானங்களுக்கு உயிரோட்டம் வேண்டும்.
நாங்களே அங்கு சென்று பார்தது போல் இருக்கிறது சகோ நன்றி நன்றி 🙏🙏🙏
இந்த வீடியோவ தமிழ்ல பார்க்க ஆசை இருந்தது நன்றி தமிழ்ல போட்டதற்க்கு bro
It seems like our ancestors had advanced engineering technology as wells as flying technology.
Very True
Tamil Ella transalate pannuga
மோகன் சார் விமானம் முதலில் கண்டு பிடித்தவன் இராவணன் அதனை பயன்படுத்தி இவைகளை செய்து இருக்கலாம். அல்லவா
exactly
illai...........thamizan than..................ha ha ha............
விமானம் குபே ரணுடையது. அவனிடமிருந்து இராவணன் பிடிங்கி கொண்டான்
@@friendpatriot1554 பல வரலாறு தெரியாதவர்கள்........................தமிழ் நாட்டில்..............பெரிய பருப்பாட்டம் பெசுவனுங்க கெட்டா...........
@@raghavank8788 ravanan tamilan dhane sir
தமிழனின் தொழில் நுட்பம் ஆராய்ச்சி செய்வதற்காக தனிமூளை வேண்டும்..
இது மனிதர்களின் வேலையே ; காட்டில் உள்ள மரங்களை வெட்டி சாரம் கட்டி பொருட்களை மேலே எடுத்துச்சென்றிருப்பார்கள்.ஆனால் எந்தப்பயன் பாட்டுக்காக இப்படிச் செய்தார்கள் என்பதை ஊகிக்க முடியவில்லை.உங்களின் கடினமான முயற்சி பாராட்டத்தக்கது
மிக்க நன்றி!!!
மேலும் பல ரகசியங்களை அறிய
உண்மையோ ஆராய்க " கானொலி காண்க!!!!!!
Mohan sir ku nandri. Amazing. Sirpikku thalai vanankuren.
Sir,kannan vishvakarmavai vaithu Sea kku adiyil dhuvarahavai uruvakkum pozhudhu,,,INDHA sigiriya why sir manidharhal illamal nichayamaha ravanan uruvakkierupadhil,oru acharyame ellai sir..
உலக தமிழர்கள் இதை பார்க்க வேண்டும் பகிர வேண்டும்..
கண்டிப்பா பகிருங்கள் நண்பா..!
Mr. Praveen Mohan, thanks for revealing our ancient life.
I pray Lord Shiva will give you strength, wealth and health to explore more and more.
Thanks Brother.
எங்களால் பார்க்க முடியுது ஆனால் கணிக்க முடியவில்லை சகோ காணொளி அருமை
நன்றி சகோ..!
இது வரை கேள்வி படாத ஓர் அற்புதமான இடம். பிரவீன் சார் உங்கள் narration சூப்பர்! மிக்க நன்றி
🇱🇰👍🥰
Semma place
இந்த பதிவெளோம் இங்கிலீஷ் ல பார்த்துட்டேன் ஆனாலும் தமிழ் மொழியில் கேட்கும்போது ரொம்ப நல்லா இருக்கு நன்றி பிரவின்🙏🙏🙏🙏🙏
அற்புதம் அதிசயம் காண கிடைக்காத காட்சி பிரமித்து போனேன் எப்படி இவை நடந்திருக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி இது போன்ற பதிவுகளை எதிர்பார்கிறேன்
நன்றி
உங்கள் பதிவை பார்க்கும் போது உங்களை நினைத்தும் பிரமிப்பாக இருக்கிறது. மிக்க நன்றி
சிவன் பக்தன் என்பதால்தான் ராவணனுக்கு இப்பேர்பட்ட சக்தி கிடைத்தது,
இலங்கை மட்டுமல்ல கைலாய மலையிலும் ராவணன் பெயர் சொல்லும்
மிக ஆச்சரியத்தை வரவழைக்கிறது
நேரில் சென்று பார்த்த மாதிரி இருக்கிறது
தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்
நாங்கல்லாம் நேர்ல வந்து பார்த்த மாதிரி இருக்கிறது உங்கள் காணொளி.
இவ்வுலகின் தலைசிறந்த தமிழ் பேரரசன் ராவணன்.. அருள்மிகு. ராவனேஸ்வரன்..இ லங்கேஸ்வரன்.. புகழ் ஒங்குக... தமிழனா.. சும்மாவா..
அது சரி, ராவணன் தமிழன் என்று எவன் நிரூபித்தான் ? தமிழில் ராமாயணம் மொழி பெயர்க்கப்பட்டதால் ராவணன் தமிழனாகி விடுமா ? அப்போ மலையாளம், தெலுங்கு, வங்காள மொழிகளிலும் ராமாயணம் உருவானது !! அப்படியானால் மலையாள ராவணன், தெலுங்கு ராவணகாரு, வங்காள ராவண் ராய் என்றுள்ளதா என்ன ? ஆதாரமில்லாமல் எதையும் வெளியிடும் தமிழ் வலைத்தளங்களை நம்பி ஏமாந்து கிறுக்கன் ஆக வேண்டிய அவசியம் எதற்கு ? மேலும் ராவணன் தமிழன் இல்லை பிராமணன் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பல முறை கூறியுள்ளாரே? அதற்கு தமிழன் பதில் என்ன ?
First class finding imagination and
Expert narrative very good survey
What else to say no words
thank you so much..!
வீடியோ அற்புதம் சகோதரா!..
மனிதன் என்பவன் உடல், உயிர், மனம், ஆன்மா, அறிவு இவற்றின் கூட்டு!..
ஆன்மா இறைவனின் பகிர்வு!. மனம், அறிவு மனித உயர்வு!.
*மனித மூளையில் இடப்புறம் மன அறிவு - இது இக்கால மனிதர்கள் தெளிவு!*
*மூளையின் வலதுபுறம் ஆன்மீக அறிவு!.. அது அக்கால மனிதர்களின் ஞானம்!*
ஆன்ம ஞானத்துக்குள் உடல், உயிர், மனம், அறிவு எல்லாமும் அடங்கும்!(அடக்கம்).
ஆனால் ஆன்மா என்கிற பேரறிவு - பேரின்பம், இவை நான்கிலும் அடங்காது!..அதனால் நம் சிற்றறிவுக்கு முன்னோரின் ஆன்மீக வாழ்வு புரிந்துகொள்ளவே முடியாது!..
அறிவியல் விடுத்து ஆன்மீகவழியில் 100% மெய்யுணர்வு பெற்ற ஞானிகளுக்கு மட்டுமே இந்த அற்புதங்களை தங்களின் உள்ளுணர்வுகளால்(ஞானக்கணங்களால்) மட்டுமே உணர்ந்து அறியமுடியும் தங்களின் தவமுயற்சியால்!!!.
நம் ராமரால் மந்திரத்தால் கூட கட்டமுடியாததை நம் ராவணன் அவர்கள் இப்படி ஒரு அதி அற்புதமான புதிரான கோவிலை இவ்வளவு பெரிய மலை உச்சியில் கட்டி இருக்கிறார் மிகவும் பெருமையும் ஆச்சர்யப்படும் ஒரு விசயம்தான் ராமரை விட அதிக புத்திசாலிதான் என்று நினைக்கத் தோனுது நன்றி வணக்கம் இன்னும் கொஞ்சநாள் போனா எத்தனை லோகங்கள் இருந்தது என்று கதையில் படித்ததைக் கூடக் கண்டு பிடித்து எங்களுக்கு சொல்லி விடுவீர் போல் தெரிகிறது நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Sir u r really a superhuman sir u r mind is rly rly extraordinary he should be awarded based on his works....hatts off of sir
thank you so much..!
நான் 2018 ஆம் ஆண்டு சுற்றுலா சென்போது பார்த்துள்ளேன்.இதை சுற்றி ஆழி உள்ளது.அதில் முதலைகள் கிடப்பதாகவும் குறிக்கப்பட்டு இருக்கும்...
தலைவா அது ஆழி அல்ல, அகழி
அநேக கேள்விகள்.
விடை தெரியா மர்மங்கள்.
மொத்தத்தையும் தொகுத்தளித்த உமக்கு நன்றிகள்!
சரித்திர சம்பவங்களை நான் பார்க்க விரும்புகிற தமிழர்களில் நானும் ஒருவன் உங்களுடைய பதிவுகள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது நன்றி!
I wish tamil people realise the tech behind olden structures
You are like a previous treasure for us. The way you decode the secret s of ancient architecture is amazing. You are a step above than archelogical Dept. One thing I liked is you never ever blame the excavation dept. Even though you explain in detail with proofs, you are very neutral. We totally believe in you
Thank you so much 😀
Same here
👍👍👌👌 எங்களுக்கு நாங்கள் போக முடியாத இடங்களை பற்றி மிக சிறப்பாக வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏
மதிப்பிற்குரிய பிரவீன் அவர்களே . உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. இந்த பதிவை மட்டுமே பல முறை பார்த்து இருக்கிறேன் என்ன ஒரு பிரமாண்ட ம். என்ன ஒரு பிரமிப்பு. அதைவிட உங்கள் ஆராய்ச்சி மற்றும் விளக்கமும் அருமை . என்னே ஒரு அறிவு உங்களுக்கு .. வாழ்த்த வார்த்தைகள் இல்லை இறையருள் நிறைந்தவர் நீங்கள் வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள். சிகிரியா பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை... என் அன்னையின் பூர்வீகம் இலங்கை . நான் அடிக்கடி கேட்டு வளர்ந்த கதை இந்த இராவணன் கோட்டையும் கதையும் . உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அற்புதம் அறிவியல் விளக்கமும் அதைவிட அருமை 🙏🙏🌹
Brother u r a role model for many young archeologists.
thank you so much for your words..!
உண்மையென்றால் இது பொக்கிஷம் தான்.
மிகவும் ஆச்சரியமான ஒன்று! எடுத்து விளக்கமாக சொல்லிய உங்களுக்கு மிக்க நன்றி 🙏
எம் இலங்கையின்... பொக்கிஷம்.... ராவணன்..,. வாழ்த்து மறைந்த.... தமிழ் அரசர்...... மிகவும் பலசாலி... தமிழனின் வரலாறு... என்றும் அழியாது.....
மிக அருமை. 👌👌👌👌👍💐
வணக்கம் நான் ஓம்குமார்.
வீடியோ எடுக்கும் பொழுது நீங்கள் ஒவ்வொரு முறையும் கேட்கும் கேள்வி ....
இந்த வீடியோவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்று ஒவ்வொரு தடவையும் கேட்கின்றீர்கள் ஆனால் பலரும் அந்த வீடியோவை பற்றி எதுவும் பதில் கூறுவது கிடையாது....
இந்த வீடியோ நன்றாக இருக்கிறது உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் இப்படியே பதில்கள் கூறுகிறார்களே தவிர நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த மக்களும் சரியாக பதில் சொல்வதாக எனக்கு தெரியவில்லை .
ஆனால் ஒவ்வொரு உங்களுடைய வீடியோவுக்கு கீழும் நான் மிகப்பெரிய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றேன்.
என்னுடைய பதிவுகளை நீங்கள் இதுவரை பார்த்தது கிடையாது என்றே நான் நினைக்கின்றேன்.
இப்பொழுது இந்த வீடியோ குறித்து பேசுகின்றேன் .
இந்த வீடியோ கண்டிப்பாக எனக்கு மிகவும் பிடித்ததாக இருக்கின்றது .
இதை நீங்களே சொல்லி விட்டீர்கள் இது இராவணன் கோட்டை என்று....
கண்டிப்பாக இது இராவணன் இருந்து ஆட்சி செய்த ஒரு அரண்மனை என்றே எனக்கு படுகின்றது கண்டிப்பாக இந்த மலைக்கு கீழே உள்புறமாக பெரிய குகை போன்ற அமைப்பு ஒன்று இருக்க வாய்ப்பு உள்ளது....
இந்த மலையின் அடிபாகத்தில் இந்த மலைக்கு உள்ளே நுழைவதற்கான வழிப்பாதை கண்டிப்பாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது....
அதுவும் அல்லாமல் மேலே எவ்வளவு பெரிய தண்ணீர் தொட்டி இருப்பதற்கு காரணம் கீழே பாறையை வெட்டி எடுத்து இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
சூரியனுடைய வெப்பத்தின் காரணமாக உள்ளே அதிகமாக அனல் இறங்கும் போது வெட்கை அதிகமாக இருக்கும் அதனால் அவர்கள் மேலே அவ்வளவு பெரிய நீர் தேக்கத்தை நீர் தொட்டியை அவர்கள் கட்டி இருப்பதாக நான் நினைக்கின்றேன்.
இதுவெல்லாம் என்னுடைய ஊகம் தான் இருந்தாலும் என்னுடைய ஊகம் கண்டிப்பாக உண்மையாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது....
என்றே நான் எண்ணுகிறேன் நீங்கள் இன்னொரு முறை இந்த குகைக்குள் சென்றால் கீழ்ப் பக்கத்தில் இந்த குகையில் நுழையும் படியாக ஏதாவது ஒரு பாதை இருக்கிறதா என்ற நோக்கத்தில் ஆய்வு செய்தால் இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்றே நான் நினைக்கின்றேன்....
எல்லோரும் இந்த மலையின் மேலேயும் மலையின் சுற்றுவட்டப் பாதை மட்டுமே பார்க்கிறார்களே தவிர இதற்கு கீழ் பகுதியில் ஏதாவது வழி உண்டா என்று யாரும் பார்ப்பது கிடையாது.
அடுத்த முறை நீங்கள் செல்லும் பொழுது இந்த மலையின் கீழ் பகுதியில் ஏதாவது பாதை ஒன்று செல்லும்படியாக இருக்கிறதா என்பதை சற்று கவனித்தால் இந்த மலையை பற்றிய அரிய ரகசியங்கள் வெளிவரக் கூடும் என்றே நான் நினைக்கின்றேன்.
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் மிகவும் யோசிக்க தக்கதாகவும் பயனுள்ளதாக பயனுள்ளதாகவும் அனைத்து நம்முடைய முன்னோர்களின் பல அரிய ரகசியங்களை வெளிக் கொண்டு வருவதாகவும் இருப்பதாக நான் உணர்கின்றேன்.
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும் நான் மதுரையில் இருந்து
ஓம்குமார்.
நன்றி.🙏🙏🙏
ஓம்குமார் -- நீங்கள் சொல்வது போன்று இருப்பதற்கு சானஸ் கிடையாது . விமானம் மூலமாக ராவணன் அந்த இடத்திற்கு வந்து , அந்த ஸ்விம்மிங் pool la குளித்து சென்று இருப்பார் , மேன்மை யான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் , வானளாவிய குளியலை விரும்புவது இயல்பு.
@@monikasuganya377 அப்படி என்றால் ஒவ்வொரு முறையும் குளிக்க விமானம் மூலம் மேலே போவது பின்னர் கீழே வருவது இப்படி எல்லாம் தமிழ் கற்ற ஒரு மன்னன் இருக்க வாய்ப்பில்லை. இராவணன் என்ன ....23 ஆம் புலிகேசி வடிவேலுவா.....? நீங்க என்ன ஜோக் பண்றீங்க....? சரி அங்கே குளித்து விட்டு துணி எங்கே மாற்றுவது....பம்பரப்பா என்று பலர் முன்னே மாற்ற முடியுமா? அங்கே எங்கு தனி அறை இருக்கிறது? ஏதாவது சொல்ல வேண்டும் என கமெண்ட் செய்யக் கூடாது..... நன்றி ஓம்குமார் மதுரை
@@omkumarav6936 -- நீங்க , சொல்ர மாதிரி underground la வாழ்ந்து இருப்பார் என்பது தான், கேனத்தனமானது , ராவணன், மலைக்கு கீழ குழி தோண்டி வாழ்ந்தாரா ? Heat காக 600 அடி உயரம் கொண்ட பெரிய பாறை மேல தண்ணீர் தேக்கி வச்சாரா ? அவ்வளவு hight la இருக்குர தண்ணீர் 600 அடி உயர பாறையை தாண்டி கீழே உள்ள பாதாளத்தின் வெப்பத்தை தணிக்குமா? நீங்கள் சொல்ர எதாவது சாத்தியமா இருக்குதா ?
குளிக்க போகும்போது ராவணன் மட்டும் தான் போயிருப்பார் , ஊர்ல உள்ள எல்லாரையும் கூட்டிக்கிட்டா போவாரு ? அதுனால தான் அவரு ஆடை உடுத்த ரூம் கட்டல. அரண்மனை வேர இடத்துல இருந்து இருக்கும். ( மதுரை காரங்களுக்கு மூளைவளர்ச்சி பத்தலைனு நினைக்கிறோம் )
@@monikasuganya377நான் சொல்வது அண்டர் கிரவுண்ட் ல் அல்ல.... அந்த மலைக்குள்ளே.... அண்டர் கிரவுண்ட் என்றால் தரைக்கு கீழ் என பொருள்.....
முதலில் குளிக்க எவனாவது 600 அடி மேல் போவானா? நீங்கள் பேசுவதில் லாஜிக் கூட இல்லை....
ஒரு பெரிய மலையை தோண்டி அதில் உலகே வியக்கும் வண்ணம் கோயில் எழுப்பிய நம் முன்னோர்கள் ஒரு பெரிய மலைக்குள் ஒரு அரசவை அமைந்திருக்க மாட்டார்கள் என நீங்கள் சொல்வது ..... உங்களுக்கு புரிதல் அவ்வளவு தான் என் தெரிகிறது....
பொதுவாக குளிப்பதற்கு புது தண்ணீர் தான் சிறந்தது.... அங்கே நிற்கும் குட்டை தண்ணீரில் போய் அரசன் குளிப்பானா?
அங்கே எந்த ஆளும் இல்லை... பின்னர் அரசனே சுத்தம் செய்வது? வேறு அங்கே எந்த வேலையும் இல்லை.....அரசனே அனைத்து வேலைகளையும் செய்வான் என்றால் .....
அரசனுக்கு குளிக்கவே நாள் சரியாகிவிடும்......
உங்க கற்பனை ரொம்ப சூப்பர்....
ஓம்குமார் மதுரை
@@omkumarav6936 -- குகை இருந்திருந்தால் இது வரை அனைவருக்கும் தெரிந்து இருக்கும் , குகை அரசவை அங்கு கிடையாது , காணொலியை நல்லா கவனிசீங்களா , பழைய தண்ணீர் வெளியேறவும் , புதிய தண்ணீர் வரவும் அமைப்புகள் அங்கே இருக்கிறது , அங்கே ராவணன் மட்டும் தான் குளிச்சுருப்பார் , அதுக்கு டெய்லி க்ளீன் பண்ணணுமா ? Natural லா அது நல்ல தண்ணீர் தான் , தமிழ் மன்னர்களில் முக்கியமானவர்கள் கங்கையில் சென்று நீராடிவந்தார்கள் என்று கூற்று இருக்கிறது.
அருமையான பதிவு... இது வரை கேள்வி படாத ஓர் அற்புதமான இடம்.. நன்றிகள் பல..
வணக்கம் Bro.மிக. அ ருமை.இராவணண் கலை நுணுக்கங்களை கணக்கிட முடியவில்லை.தாங்கள் ஆராய்ச்சியால் கண்கலால் கண்டு கொண்டோம்.ன்றிகள் பல.பார்க்கும் போது மனதில் எழும் வினாக்களையே நீங்களும் எழுப்பியது மிகமகிழ்ச்சியாக இருந்ததுஅருமை அருமை🌟🌟🌟🌟👏👏👏👍👍👍
நன்றி சகோ
உங்கள் பதிவுகளால் பிரமிப்பிலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. பின்
எனது கருத்தாக என்னத்தைச்
சொல்ல.?
True
இந்த குன்று வியப்பின் உச்சம் 😮
சிறப்பு தம்பி. எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை இன்னும் கொண்டுவாருங்கள். சிறந்த தேடல்களுக்கு தலைவனுங்குகிறோம் 👍
Sure
தேடி பிடித்து அற்புதமாக வழங்கியதற்கு மிக்க நன்றி நண்பா 👍👍👍👍👍👍👍👍👍👍
Indian technology always superb... Thanks for your information... You are really great explorer...
It's Tamils marvelous achievements. It's Tamils who built these amazing monuments.
this is not a indian technology, say tamilan technology... India had made on just 100 years
This is in Sri Lanka not in india
This is sri lanka not india🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வடலூர் சத்திய ஞான சபை விளக்கி ஒரு காணொளியை போடவும் நண்பரே இதுவும் யாரும் கண்டுகொள்ளாத உலக அதிசயங்களில் ஒன்று தான்.....
அற்புதம் ஆச்சர்யம் இறைவனை நினைவுறுத்தும் இராமாயணம்.
சிகிரியா இல்லை சிவகிரி மலை இப்போது தான் சிகிரியா கூறுகிறார்கள் ஆனால் பழங்காலத்தில் சிவகிரி மலை நன்றி 🙏🙏🙏
❤unmaiyava❤
@Dishanmoses suwen Linsan Linsan sonmathu
@Dishanmoses suwen ahh ahh
ஆமா அது சிகிரியா இல்லை சிவலிங்கமலைதான் என்னபன்னுவா 😡😡😡
பிரவீன் மோகன், எவ்வளவு நுட்பமா ஒன்னு ஒன்னாக கவனித்து ஒப்பிட்டு அத்தனை சிறப்புகளையும் தெளிவா ஒலி ஒளி வடிவமா தந்துள்ளார், இத்தனை சிறப்பா யாரையும் புண்படுத்தாம எதையும் குறைத்து மதிப்பிடாம கச்சிதமா பதிவிட்டபடி இருக்கார், அவர் திறமையே நம்மை ஆச்சர்யப்பட வைக்குது, அப்போ நாம் நம்பும் முற்கால முதல்யுகங்களில் இருந்த வாழ்ந்த கந்தர்வ, யக்ஷ, கின்னர, கிம்புருஷர், தேவதச்ச மயன், விஸ்வகர்மா, விராட்புருஷர், அசுரர், ராக்ஷதர்/அரக்கர் இப்படி எண்ணற்ற மேல் ஏழுலக-/கீழ் ஏழுலக வாசிகள் “இருக்கலாம்”?? ‘எனநம்பும் வேதபுராணசாஸ்த்ராதிகள்கற்ற’ தெய்வநம்பிக்கையாளர் ஏற்பர்!
*சிவகிரி* ‘சிகிரியா’ பேர் எதாயினும் சிறப்புக்களை வியக்கின்றோம்! கிருஷ்ணன்-கிட்டு என, காமாட்சி-காமு என அழைப்பதில்லையா? அது அவை அப்படியே இருந்திட்டு போகட்டும்! நமக்கு துரதிஷ்டம்! இவைகளை நம்பாது போகட்டும், ஆய்வு நடத்த சமயபெரும் அறிஞர்களை அனுமதிக்க தொடர சாதகமான “அரசு” வாய்க்கவே இல்லை!
முடிவாக!
70,80 களில் ஸ்மாட் போன் இத்தனை வலை தளங்கள் வரும் என நாம் கற்பனை தானும் பண்ணலையே! தமிழனும் ஏனைய மக்களும் திறமைசாலிகளே!
இராவணன் விமானம் வைத்திருந்தார் என்பதிலிருந்து அவர் மேம்பட்ட தொழில்நுட்பவாதி என்றும், மருத்துவத்திற்காக பல நூல்களை எழுதியுள்ளார் என்பதிலிருந்து மிகச்சிறந்த மூலிகை ஆராய்ச்சியாளர் என்புதும் புலப்படுகின்றது. அப்படியானால் இந்த கட்டிட அமைப்பின் காலம் கண்டிப்பாக பல ஆயிரங்களைக் கணந்ததாகவே இருக்கும்.
மிகவும் வருத்தமாக இருக்கிறது நமது பாரம்பரிய கட்டிட கலைஞர்கள் எவ்வளவு சிரமப்பட்டு உருவாக்கிய கலை தொழில்நுட்பங்களை பாதுகாக்காது வளங்களை பிறர் அபகரித்த சண்டாளர்கள் இன்னும் அவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருப்பது வேதனைக்குரியது.
Super , Arumaiyana Pathivu , Thanks Bro
ரொம்ப ரொம்ப அற்புதமான இடங்கள் அவ்வளவு தெளிவா விளக்கமும் பதிவும் அருமை
மிக்க நன்றி!!!
Waking upto yet another mystery.....thank you, you tickle the consciousness everyday to go deep.....🙏
ஐயா உங்கள் காணொலியும் உங்கள் தேடலின் விளக்கமும் பிரமிப்பு. உங்கள் தேடல்களால் நீங்கள் உலக புகழ் அடைவீர்கள் இது நிச்சயம்.
Very True 👍
எட்டாவது அல்ல முதலாவது உலக அதிசயம்
Very good information
thanks a lot..!
ராவணன் தான் நமது மூத்த கடவுள் ,அவரின் பொற்பாதம் முத்தமிடுவேன்.
முதன் முதலில் இராவணன் பல தொழில்நுட்பங்கள் அறிந்தவர் என்றும் புஷ்பக விமானம் வைத்து இருந்த அரசன் என்றும் அறிந்து இருக்கிறோம். இராவணன் பற்றிய குறிப்புகள் தேடவும் பிரவீன். பற்பல விடயங்கள் கிடைக்கலாம் அல்லவா
வணக்கம் வழ்கவளமுடன் நலமுடன். அந்த தொட்டி தண்ணீர் வற்றாமல் பக்கத்தில் உள்ள தொட்டி ஒரு காரணம் நன்றி வணக்கம் வழ்கவளமுடன் நலமுடன்
அருமை🙏👍
ஒரு வேளை படிக்கட்டுகள் உட்புறமாக தரை சுரங்கதிலிருந்து மேற்புறம் வரை இருந்திருக்கலாம். அந்த ஓட்டைகள் வென்டிலேட்டர் களாக இருக்கலாம். வாயில் ரகசியமாகவே மறைக்கப் பட்டிருக்கலாம். நவீன கட்டிடங்களில் கூட மேலே நீச்சல் குளம் அமைத்து கட்டபடுக்கின்றன. படிகள் உள்ளே. நாம் தேடிப் பார்க்க வேண்டியது உள்ளே...
அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா reply பணுங்க.
நவீன சித்தர் பிரவீன் Sir.Good morning.
🙏Very good morning ☺️
Bro, just curious to ask this after watching another breakthru video. Did u find any similar grooves in temples ?
மிகவும் அருமையான பதிவு சார்
Awesome👏👏👏😊 really brilliant you Rock 🙏💕love from Bangalore🙏
Hi 👋 I'm also Bangalore
சிகிரியா பற்றி மேலோட்டமாகப் படித்தோம். அதிசயங்களை விளக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்
ஹேமாவதி போல்.
கனடா
Great camera work and explanation. I could able know about our Tamil historical places through this channel with the clear details. Praveen Sir your Tamil is superb and your channel deserves more subscribers. I you're new Subscriber from Bangalore.
It is like watching a thriller movie. I watched in 1.5 speed.your videos are really great. Thak u for taking us to the spot.
Bramipaaga irukirathu.....😍...Ungal thedal thodaratum with love 💓
Exactly
நன்றி🙏. திரு. பிரவீன் மோகன்.
வியப்பை விளக்கியதற்கு நன்றி. மிகவும் குழப்பமான சிக்கலான மனித உழைப்பினால் ஆனது என்று சொல்வதற்கு துணிச்சல் தான் வேண்டும். மிக அருமையான பதிவு
Bro semma 👌 no words niraiya vishayangal ungaladhan parthu kekrom 👏👏👏
nandri bro..!
இராவணன் சிறந்தவன்தான்...ஒரு பெண்ணை கடத்தி வந்து தொடாமல் வைத்திருந்த கண்ணியம்...தங்கைக்காக கடத்திய அண்ணன்...சீதை"மீது ஆசைபட்டாலும் ,சம்மதமில்லாமல் தொடாமல் இருந்த மனிதன்..பலசாலி....இயற்க்கை , பிரபஞ்சத்தில் நிறைய விடைதெரியாத மர்மங்கள் நிறைய இருக்கு....கரிகாலன் கல்லணை...ராஜா ராஜா சோழரின் தஞ்சை கோவில் , மதுரை மீனாச்சி அம்மன் , ஒரே நேர்கோட்டில் உள்ள கோவில்கள் ....இன்னும் நிறைய...விஞ்ஞானம் வராத காலத்திலே துல்லியமாக கணித்த ஜோதிடம் , கட்டிடகலை , உலகின் மிக சிறந்த மருத்துவம் இதுபோல இன்னும்.....
Yor are the best as always, I watch ur videos many times both English and tamil .love watching ur videos Praveen, you are one of the 💎 of India.God bless
இதுதான் முதல் அதிசயம் 🙂👍👌👏🙌
தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை
May be it was built in the ground level and later due to some natural calamity the structure was raised.This can be the reason why there was no steps going to the top.
Around the rock a lot of fresco paintings (similar to Ajantha caves) hundreds of poems on the walls.
வேர level bro எப்புடி கட்டினாங்க no idea விடை தெரியுதா வினா 🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பரா இருக்கு பா
வணக்கத்திற்குரிய மோகன்,
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ராவணன் - தமிழன் அல்ல. மற்றபடி அசுரகுலம் என்பது மனிதகுலத்திலிருந்து வேறுபட்டது அல்ல.
உண்மைதான் சகோதரி. இராவணன் தமிழன் அல்லன். சுரர் என்றால் தேவர்கள். அசுரர் என்றால், தேவர்களில் இருந்து மாறு பட்டவர்கள். மனித குலத்தை பூசுரர் (பூமியில் வாழும் தேவர்கள்) என்று சொல்வார்கள். நன்றி.
Thanks...
This is " Shiva Giri " this place was also one the famous Thamizh people linked, our olden days people were well known about this kind of places, yes, it should be the place of Raavanan, he was one of the maha Thabasvi, Maha Shivyogi in the Aathi Asurar ie heavy hight and weight people, so, he got unbelievable boons from Eraivan Shree SHIVA, so these kind of sculptures were very very simple to Shree Raavanan, but, after various people were captured by heavy struggling and Rama Ravana yuktham were destroyed most of the Sri Lankapuri....
Very very surprising all of them were methods were deeply cancelled to mostly all the people of this current world .... No body one say correctly.... God is only known...
Excellent research, welcome, you should find many more misterious places, God is great always blessing you.....
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM OM OM
Very True
⁵⁵
Hi Mohan Sir, very recently i came to watch ur videos.. ur efforts..ur language and the way u share ur ideas everything is awesome.. i hav great interest in tamil technology and architecture.. ur videos are greatly satisfying.. u r doing a great job more than an archaeologist.. congratulations and all the best.. one small request.. did u researched the Thillai natarajar temple at chidambaram.. if yes pls share that video.. if no, can u pls do it..
It's Great.....Thank u sir
You're most welcome 🙏🙏🙏
Unga alavuku yosika., parka engaluku avlo knowledge ila sir🙏🙏🙏
Thanks for giving your heart
புதிதாக ஒன்றைக்கற்றுக் கொள்ளும் மாணவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறது உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும்.Great salute praveen sir.
Super explain...panneenga bro...God bless you