பாடல் - 15 ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்; கர்த்தாவில் ஆனந்திக்கவும்;

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • பாடல் - 15
    1.ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்; கர்த்தாவில் ஆனந்திக்கவும்;
    விசாரம் விட்டோய்ந்திடுவோம்; கெம்பீரித் தாராதிக்கவும்;
    செய்வோம்! செய்வோம்!! சத்யேகரைத் துதி செய்வோம்!(2)
    2.பரா பரன் மெய் வஸ்துவாம்! தயாபரர் ஆண்டவரே;
    வந்தார் இவ்வையகத்தில். ஆம்! இரட்சிக்க வல்லவரே.
    3.பிசாசின் உபாயங்களால் பயங்கர மோசமுண்டாம்;
    ஆனாலும் தேவாவியினால் ஒத்தாசையும் ஜெயமுமாம்.
    4.தரித்தரமே யாயினும் சந்தோஷம் விடாதிருப்போம்;
    மா கல்வி இல்லாவிடினும் ஓயாமலே ஸ்தோத்தரிப்போம்.
    5.ஏகோபித்துப் பாடிடுவோம் மகோற்ச வானந்தத்தினால்,
    சத்யேகரைப் போற்றிடுவோம், கெம்பீர சங்கீதத்தினால்.

Komentáře •