பாடல் - 15 ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்; கர்த்தாவில் ஆனந்திக்கவும்;
Vložit
- čas přidán 3. 07. 2024
- பாடல் - 15
1.ஏகோபித்துச் சேர்ந்திடுவோம்; கர்த்தாவில் ஆனந்திக்கவும்;
விசாரம் விட்டோய்ந்திடுவோம்; கெம்பீரித் தாராதிக்கவும்;
செய்வோம்! செய்வோம்!! சத்யேகரைத் துதி செய்வோம்!(2)
2.பரா பரன் மெய் வஸ்துவாம்! தயாபரர் ஆண்டவரே;
வந்தார் இவ்வையகத்தில். ஆம்! இரட்சிக்க வல்லவரே.
3.பிசாசின் உபாயங்களால் பயங்கர மோசமுண்டாம்;
ஆனாலும் தேவாவியினால் ஒத்தாசையும் ஜெயமுமாம்.
4.தரித்தரமே யாயினும் சந்தோஷம் விடாதிருப்போம்;
மா கல்வி இல்லாவிடினும் ஓயாமலே ஸ்தோத்தரிப்போம்.
5.ஏகோபித்துப் பாடிடுவோம் மகோற்ச வானந்தத்தினால்,
சத்யேகரைப் போற்றிடுவோம், கெம்பீர சங்கீதத்தினால்.