கோவையில் யாரும் அறியாத திகில் பூமியின் ரகசியம் | coimbatore historical place | Archaeological site
Vložit
- čas přidán 11. 07. 2024
- கோவை மாவட்டம் அக்கநாயக்கன்பாளையம் பக்கத்தில் கோப்பாஹள்ளிமேடு என்று ஓர் இடம் உள்ளது.
'இங்கே பேய் இருக்கு. யாரும் போகாதீங்க'னு முன்பு சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரியவர்கள் எச்சரித்து வந்த காலம் இருந்தது.
ஆனால் அங்கு இருப்பது பேய் அல்ல. மூவாயிரம் ஆண்டு பழமையான வரலாற்று பொக்கிஷம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
வரலாற்று ஆர்வலரும் அரசு கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியருமான நடராஜன் இந்த இடத்தை ஆய்வு செய்த போது தான் உண்மை தெரிய வந்தது.
நம்ம தினமலர் குழுவும் அவருடன் சேர்ந்து கோப்பாஹள்ளிமேடு பகுதிக்கு போனது. அங்கு கண்ட காட்சிகள் வியப்பையும் பிரமிப்பையும் தந்தது.#coimbatore #historicalPlace #Archaeologicalsite #Dinamalar
அய்யாவின் கண்டுபிடிப்பை அரசாங்கம் கவனித்து தக்க பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகளை செய்யவேண்டும்🙏
நல்லா வாழ்ந்தாங்ளோ இல்லையோ இப்ப உள்ளவர்கள் போல இல்லாமல் மிகமிக நல்லவர்களாக வாழ்ந்திருப்பார்கள்.
உடனடியாக இப்பகுதியை இந்திய தொல்லியல் துறை முறையான வேலி அமைக்க வேண்டும்
நல்ல வேலை முன்னோர்கள் பேய் கதைகள் சொல்லி இருக்கிறார்கள் இல்லை என்றால் இன்நேரம் தங்கப் புதையல் இருக்கிறது என்று தோண்டி எடுத்து இருப்பார்கள் இன்று
திருப்பூர் ஈரோடு கோவை பகுதியில் நிறைய வரலாறு புதைந்து கிடக்கிறது.
இதுபோன்ற அமைப்புகள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மல்லையபுரம் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவார நிலப்பகுதியில் இதுபோன்ற கல்வட்டங்கள் முதுமக்கள் தாழிகள் உள்ளன தினமலர் இதை கவனிக்க வேண்டும்
அரசு கவனம் செலுத்திகள ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்
அங்க பேய் இருக்குன்னு சொல்லி வச்சதால தான் அந்த இடத்தை யாரும் சுரண்டாமல் ஆட்டைய போடாமல் விட்டு இருக்காங்க இல்லன்னா அதை எப்பயோ சுரண்டி இருப்பாங்க
எதிர்காலம் நம்மை மதிக்க வேண்டுமென்றால் கடந்த காலச் சின்னங்களை நாம் தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும். இதில் சுயநலமும் அரசியல் குறுக்கீடும் இருக்கவே கூடாது.
இதை முதல்வரின் தனிப்பட்ட கவனத்துக்கு தினமலர் கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து. Please sir. அல்லது நீதி மன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பகுதியை பாதுகாக்க பட்ட ஆய்வு பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க முடியும். நன்றி சார்
அரசு கவனம் செலுத்தி கள ஆய்வு செய்ய வேண்டும்
ஈரோடு மாவட்டத்தில் எழுமாத்துர் மலை அருகிலும் சில கல்வட்டங்கள் உள்ளன
என்னுடைய ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன் 😊
❤ எங்கள் ஊரில் இதைவிட நிறைய பலமை வாயிந்த பொருட்கள் நிறைய உள்ளன ஊர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள பொழிகால் கிராம் இங்கு வாழ்ந்த முன்னோர்களின் அடையாளம் எனக்கு தெரிந்த ஒருவர் நான்கு உலோக சிலைகள் எடுத்து வைத்து உள்ளார்
அரசு கவனம் செலுத்த வேண்டும்
எங்கள் தாத்தாவின் அம்மா ஊர் அக்கநாயக்கன்பட்டி 300 வருடங்கள் முன்பு
இதுபோல கல்வட்டங்கள் கரூர் திண்டுக்கல் மாவட்டங்களில் நிறைய உள்ளது.
அரசு இந்த வரலாறு பகுதியே பாதுகாக்க வேண்டும்.
பேராசிரியர் ஐயா, தங்களுக்கு தெரியாததா?யாரை தொடர்பு கொண்டு எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி. தயவு செய்து இன்னும் சரியான வழியே செல்லுங்கள் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம். வணக்கம். நன்றி.
ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடியவணக்கங்கள் .🎉🎉🎉