வெங்கடேச பெருமாள் திருக்கோயில் சௌகார்பேட்டை, சென்னை
Vložit
- čas přidán 20. 06. 2024
- பைராகி மடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் என்னும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் என்பது தமிழ்நாட்டின் சென்னை மாநகரம், ஜார்ஜ் டவுன், முத்தியால்பேட்டை, ஜெனரல் முத்தையா 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும்.
5 ஆம் நூற்றாண்டளவில் நிம்பர்கா, ராமானந்தி மற்றும் விஷ்ணு ஸ்வாமி ஆகிய வைணவப் பிரிவுகளில், கோவில்கள், மடங்கள் மற்றும் மத குருக்களைப் பாதுகாப்பதற்கான பயிற்சி பெற்ற சாதுக்களின் இராணுவப் படை உருவானது. பைராகி துறவிகளின் இந்தப் படையை ஒருங்கிணைத்த பெருமை சுவாமி பாலானந்தரையே சாரும். சுவாமி பாலானந்தா தனது சீடர்களான பவானந்தா, அனுபவானந்தா, விர்ஜானந்தா, மற்றும் போன்ற ஆச்சார்யர்களின் துணையுடன் இராஜஸ்தானில் பைராகி இராணுவ அமைப்பை நிறுவினார். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மஹந்த் ஜெய்தாராமின் தலைமையில் பைராகி துறவிகளின் இராணுவம் மிகவும் வலுவாக இருந்தது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், பரத்பூர் மற்றும் குலு மன்னர்களின் படைகளில் பைராகி துறவிகள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தனர் - Hudba