‘முன்னூருக்கு வாருங்கள் முன்னுக்கு வரலாம்’ # இதோ எந்தன் தெய்வம்’ பகுதியில் தரிசித்த ஆலயம்தான் இது

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • சிவாலயங்களில் சிவபெருமான் பொதுவாக கிழக்கு நோக்கியே காட்சி தருவதையும், தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருவதையும் நாம் தரிசித்திருப்போம். ஆனால், தரிசிப்பவர்களின் வினைகளைக் களைந்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண அருளும் ஐயன் ஆடவல்லீஸ்வரர் இங்கே ஞான குருவாக தெற்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும் காட்சி தருவதை தரிசித்த வேளையில் நாம் வியந்துதான் போனோம்.
    தாமரை மலர்களால் எதிர்த்துவரும் பெரும் படைகளை அழித்து வெற்றிவாகை சூடமுடியுமா?
    `முடியும்' என்று காட்டி முருகப்பெருமான் அருளாடல் நிகழ்த்திய தலமும் இதுதான். ஆம், கண்கொள்ளா பேரழகுடன் இங்கே நாம் தரிசிக்கும் முருகப்பெருமானின் அருளால், இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் நல்லியக்கோடன் எதிரிகளை வெற்றி கொண்ட வரலாறு நம்மையும் அந்த முருகப்பெருமானிடத்தே சரணடையச் செய்துவிடுகிறது.
  • Hudba

Komentáře • 2