மாணவர்களுக்கு பரிசளிப்பு-பெண்களுக்கு சுயதொழில் துவக்க-புதிய நிர்வாகிகள் அறிமுக விழா - திருநெல்வேலி

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் 24-08-2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள, ஓம் சக்தி மாளிகை கல்யாண மண்டபத்தில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழா பேருரையாற்றினார், சங்கத்தின் பொருளாளர் திரு M. ரவி முதலியார் அவர்கள் மாவட்ட அளவிலான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் பரிசுகளும் வழங்கி பேருரையாற்றினார்.
    சிறப்பு விருந்தினர்களாக திருமதி. Dr. A. சுவர்ணலதா அருணாசலம் அவர்கள் மற்றும் நெல்லை திரு. ரெங்கநாதன் முதலியார் அவர்களும் கலந்து கொண்டார்கள். பெண்கள் சுயஅதிகாரம் பற்றி திருமதி. Dr. A. சுவர்ணலதா அருணாசலம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
    இந்நிகழ்வில் சங்கத்தின் அமைப்பு செயலாளர் முனைவர். பா. வேலம்மாள் அவர்கள், மத்திய ஒருங்கிணைப்பாளர்
    திரு. செ. கண்ணன் அவர்கள், AIMPA கல்வி & வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் திரு. K. நித்தியக்குமார் அவர்கள், திரு.லட்சுமண பிள்ளை தென்மண்டல தலைவர், அவர்கள் தலைமையிலும், தென்மண்டல செயலாளர் திரு. அனந்த பத்மகுமார் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்கள்.
    தென்மண்டல செயலாளர் திரு. M. மஹேஸ் முத்துக்குமார் மற்றும் அனைத்து நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் விழா சிறப்பாக நடந்தது. அனைத்து வட்டார நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட பெண்களுக்கு 5 தையல் மெஷின் வழங்கப்பட்டது. மற்றும் 20 பெண்களுக்கான இலவச ஆரி ஒர்க் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்க கிரேட்டர் சென்னை பெரும் பங்கு ஆற்றியது குறிப்பிடத்தக்கது. 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசகள் வழங்கப்பட்டது
    மேலும் இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளும் உட்பட 300க்கும் மேற்பட்ட பெண்கள், சமுதாய பெரியோர்கள், மாணவ மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட தலைவர் திரு. கோ. பூதலிங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
    #allindiamudaliyarpillaimarassociation #அனைத்திந்தியமுதலியார்பிள்ளைமார்சங்கம் #tirunelveli #newofficebearers #UnityIsStrength #educationwelfare #WomenEmpowerment2024 #AcademicAchievement

Komentáře •