சர்வ மங்களம் அருளும் ஸ்ரீ காமாட்சி விருத்தம் வரிகளுடன் | Sri Kamakshi Virutham with Lyrics
Vložit
- čas přidán 8. 09. 2024
- காரடையான் நோன்பு அன்று படிப்பது மிகவும் சிறந்த பலன் தரும்.
ஒவ்வொரு பாராவின் நிறைவிலும் "அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே." என்கிற வரிகளை சேர்த்துக் கொண்டு பாராயணம் செய்யவும்.
காமாக்ஷி அம்மன் விருத்தம்
கணபதி காப்பு
மங்களஞ்சேர் காஞ்சிநகர் மன்னுகாமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே -- திங்கட்
புயமருவும் பணியனியும் பரமனுளந்தனின் மகிழும்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
விருத்தம்
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே
சுக்ர வாரத்திலுனை கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந்திடாது.
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா
சிவ சிவ மஹேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன் மணியுநீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே (1)
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பினொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனாற் சொல்ல திறமோ (2)
கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
குழப்பமா யிருப்பதேனோ
சதிகாரியென்று நானறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதகனக் கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள் வாய் (3)
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்துநான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்.
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டனிட்டறியேன்
ஆமிந்த பூமியிலடியனைப் போல் மூடன்
ஆச்சிநீ கண்ட துண்டோ (4)
பெற்றதா யென்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
புருஷனை மறந்தே னம்மா
பக்தனாயிருந்து உன் சித்தமும் இரங்காமல்
பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில் லாமலே
பாங்குட னிருப்பதம்மா
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
இது தர்மமல் லவம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையோ
யிது நீதி யல்ல வம்மா
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ
அதை யெனக்கருள் புரிகுவாய் (5)
மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
மணிமந்திர காரிநீயே
மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலையரை யன்மக ளானநீ
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ
தயாநிதி விசாலாட்சிநீ
தாரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும்நீ
சரவணனை யீன்ற வளும்நீ
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேறுபெற வளர்ந்த வளும்நீ
பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
பிரியவுண் ணாமுலையுநீ
அகிலாண்டவல்லி நீயே (6)
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்
கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன்
காதி னில் நுழைந்த தில்லையோ
இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது
இதுதரும மல்ல வம்மா
எல்லாரு முன்னையே சொல்லியே யேசுவார்
அது நீதியல்ல வம்மா (7)
முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள்
இம் மூடன் செய்தா னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
மோசங்கள் பண்ணினேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா.
சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாண மாகுதம்மா
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக வுன்
அடியேன் முன்வந்து நிற்பாய் (8)
எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்கள்
இன்பமாய் வாழ்ந் திருக்க
யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள்
உன்னடியேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென் றுறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
போக்கடித் தென்னைரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா (9)
பாரதனிலுள்ளவும் பக்கியத்தோடென்னைப்
பாங்குட னிரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாயுன்மீதில் சிறுயனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென்
னம்மையேகாம்பரி நீயே (10)
எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனி ஜெனன் மெடுத் திடாமல்
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பி னேனே
முன்பின்னுந் தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக் காதே யம்மா
வெற்றி பெற வுன்மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனா ரேசப் போறார்.
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத்தீரு மம்மா (11)
- ஆத்ம ஞான மையம்
எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும் இனி ஜெனனம் எடுத்திடாமல் முத்தி தர வேண்டும் அம்மா அருமையான பதிவு நன்றி மா கண்கள் கலங்கியது 🙏🙏🙏
கண்டிப்பா அம்மா... காமாட்சி அம்மன் விருத்தம் கேட்ட கண்ணீர் கண்களில் பெருக்கெடுக்கிறது🥺🥺
நான் காமாட்சி விருத்தத்தை
30 வருடங்களாக பாராயணம் பண்ணிவருகிறேன் அம்பிகையின் பரிபூரண அருளைப் பெறமுடியும் என்பதை நான் அனுதினமும்
உணர்ந்து வருகிறேன்
இதை ஒரு வகுப்பாக எடுத்து
அனைவருக்கும் அம்பாளின்
அனுக்கிரகம் கிடைக்கும்
படிக்க வேண்டும் என்று எனது சிறு வேண்டுகோள்
எங்கள் வகுப்பில் உள்ள அனைவரும் அம்பாளின் அருளையும் ஆசியைப் பெற்றவர்கள் நிறைய பக்தர்கள்
வகுப்பில் சேர்வது எப்படி
கண் முன்னே அம்பாளை நிறுத்திய து குரல் வலம் அருமையான இருந்தது.நோன்பு அன்று கிடைத்து பாக்கியம்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே....
இந்த வரி கீழே இருந்தாலும் மற்ற வரிகளுக்கு மணிமகுடமாய் மிகவும் அழகாக காமாட்சி அம்மையின் அழகுப்போல திகழ்கிறது....
என்னவென்று சொல்ல தெரியவில்லை.... அந்த வரி மிகவும் ஈர்த்துவிட்டது...
மிக அருமையான பதிவு கண்ணில் நீர் வழிந்தது அம்மா நன்றி அம்மா 🙏
Çççç
@@matibalaboomija9909 f
வணக்கம் அம்மா மிகவும் உருக்குகிறது அம்மா. இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன். மிகவும் அருமை. கடந்த 6 நாட்களாக தினமும் 5 முறையாவது கேட்டு விடுவேன். பாராயணம் செய்யத் தொடங்கிவிட்டேன். மிக்க நன்றி குழுவினருக்கும் அம்மாவுக்கும். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய 🙏
Meee to bro
அருமையோஅருமை மமிக்கநன்றி உங்கள் குமுவில் சேர இயலுமா அம்மா
@@lakshmibalachandran3468 k kkmkm km to get the q and the rest
B
💯 true
மூச்சு விடக் கூட மறந்திருப்பேன் ஆனால்
காமாட்சியை நினைத்து நினைத்து மனமருகி பாடிய நேரம் தான அதிகம் ஆனால் இன்று நா பலத்துன்பங்களுக்கு
ஆளாகி இருக்கேன்
இதில் இருந்து எப்படி வெளிவருவது என்றுகூடதெரியல அவள் என்னுடன் இருந்து எங்களை காத்துக்கொண்டிருந்வள் இன்று அவள் என்னுடன் இருக்கின்றாளா என்று நினைக்கும் அளவுக்கு மிகுந்த துன்பத்தை கொடுத்து விட்டாள் இந்த காமாட்சிவிருத்த்தை பாடிக்கொண்டு இருக்கேன் நம்பிக்கை இழக்காமல் தாயே காமாட்சியே உன் திருவடிகள் போற்றி
போற்றி
Everything thing will be alright.. don't worry. God bless
அன்னை காமாட்சிக்கு ஒரு முறை அபிஷேகம் செய்யுங்கள்
என் தாய்ய் என் தாய்!! காமாக்ஷியை பற்றி சொன்னேள் மிக அற்புதம். உங்க மேலஉள்ள மரியாதைக்கு அளவே இல்ல மிக்க நன்றி.
00000000000000000000000000000000000
Iiiiii
பங்குனி நவராத்திரி விழா பதிவிற்கு காத்திருக்கிறேன் ஆத்ம தோழி 🌼🌺🙏
Engal kula deivam sri kamatchi amman....
நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏, என் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியது அம்மா 🙏🙏🙏
கண்ணில் நீர் பெருகியது தாயே. உள்ளமும் ஊனும் உருகியது. மிக்க நன்றி அம்மா
ஆத்மா தாங்கள் பதிவிடும் அணைத்து ஆன்மிக தகவல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என் மனதில் இருந்த சிறு சந்தேங்கங்களும் திறந்தன, மேலும் உங்கள் பதிவுகளை என் சொந்தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரையும் பார்க்க சொன்னேன் அவர்களும் பயன் அடைந்து வருகிறார்கள் நன்றி🙏
அருமையாக இருந்தது...காமாட்சி விருத்தம் பாடலும் பாடல் வரிகளை எங்களுக்கு தெரியப்படுத்தியற்கு மிக்க நன்றி....
Nandri Amma Yenna solluvadhu nu Theriyala Nalla padvukku Nandri gal koooodiii
நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி முப்பெரும் தேவியான காமாட்சி அம்மனை வழிபட்டால் நினைப்பவர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் எல்லா நலன்களும் தந்து அருளுவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
உண்மையிலேயே மெய் சிலர்க்கிறது 🙏🙏🙏
I am listening this from one month and today I thought of searching the benefits of chanting this. And you uploaded the same video. Kamakshi arul kataksham kedachaa maadhiri feel aachi. ;. Ungalidam erundhu edhai ketu kanneer perugiyadhu
வேர லெவல்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
உள்ளம் உருகி கண்ணீர் ததும்ப ஆனந்தமாக கேட்டு ரசித்தேன் மிக்க நன்றி நடராஜர் பத்து, அவினாசி பதிகம் , அருணாசலீஸர் பதிகம் இம்மூன்று பதிகங்களை யும் பதிவிடுங்கள் இதேபோல்
Super video Amma
Om Namashivaya 🕉️🔱🙏
இந்த விருத்த பாடலை கேட்டு சிரிப்பு சிரிப்பாக வந்தது ஏனென்றால் இத்தனையும் என் வாழ்வில் நடந்து கொண்டியிருக்கிறது தாயை எப்படியெல்லாம் திட்ட வேண்டுமோ அப்படி திட்டியும் கெஞ்சயும் படப்பட்டுவுள்ளது தாயே சகலமும் எண்டுஇருதேன் இப்போதும் எப்போதும் கஷ்டங்கள் மட்டும் தான் என்னை சுழ்ந்து உள்ளது
எனக்கும் அதே நிலமை தான்
அம்மா தினம் தினம் தரும் தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.உங்கள் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.வீர வேல் வெற்றி வேல்.
மிகவும் மகிழ்ச்சி அம்மா வாழ்க வளமுடன் நன்றி
மிக அ௫மையான பதிவு, காமாட்சி பதிகம் பாராயணம் செய்த உங்கள் குழுவினர் மற்றும் உங்களுக்கும் மிக்க நன்றி உங்களுடன் சேர்ந்து நானும் பாராயணம் செய்தேன்
Arumaiyana parayanam Amma, Thankaludaiya Anmega sevaiku Nanri Amma🙏🙏🙏
மிகவும் அருமை அம்மா.🙏..
Discription ல்.அருமையாக தாங்கள் கொடுத்து இருப்பது மகாபெரியவர்அருள்.
மனம் நிறைந்த நன்றிகள் அம்மா.🙏💐💐💐💐💐
கண்களில் நீர் பெருகுகிறது. நன்றி அம்மா
மிக மிக சிறப்பான அருமையான காமாட்சி அம்மன் பாடல் மற்றும் வரிகளுடன்
பாடிய அனைவருக்கும் வணக்கம்🙏
ரொம்ப அழகா இருக்கு மா.காமாஷிவிருதம் எவ்வளவு பக்தி யாய்சொல்லுகிறீர்கள் காமாஷி அம்மாபோற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் காஞ்சி காமாட்சி அம்மா 🙏❤️🙏
Annai Kamakshi Ammaiye🙏🙏🙏🌺🌺🌺🌷🌷🌷
Sri Kamakshi thaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
அம்மா இனிய காலை வணக்கம் காமாச்சி அம்மா. எனக்கு மிகவும் பிடிக்கும் அவுங்களை பார்த்தால் போதும் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும் .
வாராஹி மாலை குறித்து தாருங்கள் அம்மா ப்ளீஸ்
மெய் சிலிர்க்கிறது......
அழகான விருத்தம், அருமையான வரிகள். அபிராமி அம்மை பதிகமும்; நடராஜர் பத்தும் கலந்த பொருளின்பம்.
🙏🙏🙏🙏🙏amma. Yen kangalilum kannir vanthathamma😭🙏🙏🙏
மிகவும் அ௫மையான பதிவு
அருமை அருமை அம்மா ஆனந்தம் கண்களில் நீர் பெருகுதம்மா உல்லத்தின் பாரம் மெல்ல தாய்யவளின் பாதத்தில் சமர்ப்பித்தது போல் உணர்ந்தேன் அம்மா
கோடான கோடி நன்றிகள் அம்மா
ஸ்ரீகாளிகாம்பாள் காமாட்சி அம்மன்
🌺🌺🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺🌺
Vanakkam Amma eppol tha n entha pathivu kettathu kannil thanni vanathathu amma enalku Tamil theriyathu analum onga pathivu ellam Nan pakkum thanks amma
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கங்கள் அடுத்த பதிவுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம்...
thank you amma nanum kamakshi virutham parayanam paninen manasuku nirivaka ullathu amma. intha ulakathil ulla ella jeeva rasiyum nalamaka iruka vendukiren kanji ksmakshi amma👐👐🙏🙏
இந்த பாடல் வரிகள் நடராஜர் பத்தோடு ஒத்து போகுதுல்ல அம்மா
Shivankamatchi ammane en thunai en veettu kulam kakkum deivam
🙏அம்மா மிக அற்புதமாக இருந்து அம்மா 💗நன்றி
Tears flow every time I sing Kamakshi virutham 🙏🏾
விருப்பங்களை நிறைவேற்றும் விருத்தத்தை மனம் குளிர இன்ப செவியில் கேட்டு மகிழ்ந்தேன் இந்தப் பதிவை சமர்ப்பிப்பதற்கு மிகவும் நன்றி அம்மா
Arumai Om Muruga Potri Potri 🙏
Nice and thank u and blessings kamakchi maa pl mangalyam soon pl maa
Daily kamatchi amman stothiram song engal vetil olikum sister nithyasri madam voiceil
அருமையான பதிவு நன்றி நவநீதகிருஷ்ணன் உத்தமர்சீலி
நன்றிகள் பல என்னுடைய வீட்டிலே அனுதாபமும் இவ்விருத்தம் தனியாக அமர்ந்து பாடுவேன் ஆனால் இன்று அக்குறை என்னில் தீர்ந்தது ஏனெனில் என்னுடைய வீட்டிலே இந்த அன்னையர் அனைவரும் வந்து பாடியது போல் இருந்தது அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க இக்காமாட்சி விருத்தம் பாடப்படும் இடங்கள் பாக்கியம் பெற்று விளங்கும் பாடுவோர் அனைவரும் பாக்கியம் பெற்று விளக்குவார் மீண்டும் மீண்டும் நன்றிகள் பல வாழ்க வளர்க
அனுதினமும் பாடுவேன்
வணக்கம் அம்மா மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி.........அம்மா மிக அருமையான பதிவு ...நன்றி அம்மா
Super Sairam 🙏 Thanks
Very nice sri kamatchi amman virutham song ma bcoz ennoda ammavum sri kamatchi amman romba pudikum maa pls bless me and my mom thayeh kamatchi amma om sakthi💙🌹🙏😇
நன்றி சகோதரி அருமை மகிழ்ச்சி மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏
எப்போதும் போல அழகான பதிவு. அனந்த கோடி நமஸ்காரம் அன்னை காமாட்சிக்கு. உங்கள் இனிமையான குரலுக்கு நன்றி அம்மா.
மிக்க மகிழ்ச்சி, அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.....
கேட்க கேட்க இனிமை
Super mam
I can hear at night everyday. Please RAKSHIPAI AMMA KAMAKSHI DURING CORONA LET ALL PEOPLE STAY HAPPILY PLEASE DESTROY THIS SAID DISESE MANY CHILDREN MARRIAGES Are HELD UP.MAM PLEASE PRAY FOR THIS WORLD WELL BEING.
ஓம் காமாட்சித் தாயே போற்றி🙏🙏
Thank you mam. Very nice.
மிக அருமையான பதிவு நன்றி...
Megavum arumaiyana pathivu nandri Amma kankalelil kañneeŕ vanthathu amma
நல்ல விளக்கம் அளித்த மைக்கு நன்றி 🎉🎉🎉💐💐🌺🌺👌👌👌👍👍💪💪💪
Very very nice thank you ma'am
அருமையான பாடல் வரிகள். உள்ளத்தை உருக்கும் குரல். கண்கள் குளமாகி விட்டன. மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
En.manam kavarnthu..padall.
En vazhkaiku.oru arththam...
Kuduthu...vazhinadathum.padall....
Amma...thangall karunaiyalea...🙏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓
Aathma gnaana anbu tholiku iniya mathiya vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️🙏🙏🙏
மிக்க நன்றி நன்றி அம்மா மிகப் பெரிய பொக்கிஷம் நீங்கள் எங்களுக்கு உணர்த்தியது மகிழ்ச்சி மை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை
Arumai Amma. Intha video parkkum bakkiyam enakku kedaithatharkku ungalukku nanri Amma.
என் தாயின் பாடல்கள் கேள்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு அம்மா👌👌👌 கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍
மிக் க நன றி அம்மா
காமாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ☸️🕉🌹🌷🌺🙏
Amma unmai than annai kamatchi virutham kannir vara vazhikirathu, thanks alot romba nandri amma
அற்புதமான பாடலை கொடுத்த உங்களுக்கும் பாடலை பாடிய அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் அம்மா. நன்றி.
கண்களில் ஆனந்தகண்ணீர் வருகிறது.மிக்க நன்றி. உங்கள் மூலம் பாடல் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்
இந்த பதிவுக்கு மிக்க நன்றி தமக்கையே .
நன்றிகள் கோடி....🙏
மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏 நன்றி
Inta virutham muthalmuthala kelkiren romba pramadam mikka nantri mam 🙏🙏
Arumai amma manathukku enimaiyaga erukkerathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களுடைய இந்த பாடல் எங்களுடைய மனதிற்கு மிகவும் ஆனந்தம் அளித்தது நன்றி
I used to listen this since four years,....very pleasant songs and also touchy lyrics...as conversation as between a mother and the son❤️
பதிவுக்கு ரொம்ப நன்றி அம்மா🙏 பார்வதி பதயே நமக
Amma vanakkamamma I am very very very very happyma Indha padhiu enakkagave kuduthadhupol irundhadhu
Om Maha sakthiye potri potri potri Amma Arupotham Amma 🙏🙏🙏🙏🙏💕💕💕💕
உங்க பக்கத்துல உட்கார்ந்து இதை கேட்ட மாதிரி இருக்குமா மனசுக்கு அவ்வளவு ஒரு அமைதியா இருக்கு
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
மகிழ்ச்சி சகோதரி நான் உங்கள் பதிவுகள் வர.வேண்டும் என்று நினைத்து எதிர்பார்த்து காத்திருந்த போது கிடைத்த பதிவுகள்.. நன்றி சகோதரி
I like your tamil speech mam😇
மனமார்ந்த நன்றி அம்மா😍😍😍💐💐💐💐💐❤❤❤💛
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
மகளிர் தின வாழ்த்துகள் அம்மா 💐
Mikavum inimaiyai ullathu.arumaiyaka padinarkal.romba ths.god bless amma
Intha padalai paditha ammavukku en paradukkal amma.nandri.