ப்ரம்மா கோயில் திருப்பட்டூர்
Vložit
- čas přidán 12. 03. 2024
- #bollywood #hollywood #trichyyoutuber #kollywood #ayodhyarammandir #thiruvanaikoil #thuvannamalaiarunachaleshwar#vekkaliamman #kapaleeshwarartemple #saibabatemple#tamilculture #kumbakonam_views #tanjaiperiyakovil#birdslover#sappatturaman#shortsfeed #
God bless🙏🙏
திருவண்ணாமலையிலும். மகிழமரம் உள்ளது
தங்களது தகவலுக்கு மிக்க நன்றி
Back ground music/noises super ......keep it up
Ok thank you
இந்து வழிபாட்டுத் தலங்கள் பலபேருக்கு வாழ்வாதார ஸ்தலமாக இருக்கும்
முக்கிய குறிப்புகள் :
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு முன் அதன் அருகில் இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயம் செல்ல வேண்டும். அக்கோவிலில் தான் ஈசனுக்கு வியாக்ர் பாதர் என்னும் முனிவர் அபிஷேகம் செய்து வழிபட்டு பின் ஜீவ சமாதி அடைந்தார். இங்கு சென்ற பிறகு தான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும். வியாழக்கிழமை அன்று சென்றால் நல்லது. மற்ற சாதாரண நாட்களிலும் செல்லலாம். ஒருவருடைய ஜென்ம நட்சத்திரம் அன்று சென்றால் இன்னும் சிறப்பு. குரு பகவானுக்கு வியாழன் அன்று சிறப்பு. அந்த குரு பகவானுக்கு அதிபதி பிரம்மா. ஆகவே வியாழக்கிழமை அன்று வழிபாடு செய்வது நல்லது. கோவிலுக்கு தங்களது ஜாதகம் எடுத்து கொண்டு செல்லவும். ஜாதகத்தை ஒரு நோட்டில் எழுதி எடுத்து கொண்டு போகவும். காகிதத்தில் எழுதியோ அல்லது பிரண்ட் அவுட் எடுத்தாலோ அதை ஒரு Envelope cover'ல் வைத்து கொடுக்கவும்.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு முறை என்று ஒன்று உள்ளது. முதலில் ஈசனை தான் வணங்க வேண்டும். பிறகு தான் பிரம்மாவை வணங்க வேண்டும். ஏனெனில் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். மூன்றாவதாக பதஞ்சலி முனிவர் மண்டபம் செல்ல வேண்டும். இங்கு சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். நான்காவது அம்மன் சன்னதி. ஈசனை வழிபட்ட பிறகு வெளியில் வந்து பிரம்மா சன்னதி எதிரில் ஜாதகம் வாங்குவார்கள். தங்களது ஜாதகம் அவர்களிடம் கொடுத்து விட்டு அங்கேயே அர்ச்சனை செய்ய வேண்டும். ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்த பின்னர் நம்மிடம் தருவார்கள்.
பிரம்மா சன்னதியில் தங்கள் ஜாதகம் கொடுக்கும் போது அவரவர் சக்திக்கேற்ப மஞ்சள் (கொம்பு மஞ்சள் / விரலி மஞ்சள்) வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. கோவில் ஐயரிடம் கேட்டு விட்டு பிறகு வாங்கிக் கொடுக்கவும்.
மற்றொரு சிறப்பு இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு உள்ளது. பிரம்மா பிரதிஷ்டை செய்த ஜோதிர்லிங்கங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
இந்த ஆலயம் வழிபட்ட பின்னர் விதியை மாற்றும் வரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இது ஒருவருடைய விதியை (ஆயுள்) மாற்றும் ஆலயம். இங்கும் ஜாதகங்கள் கொடுத்து அர்ச்சனை செய்யலாம். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு பின்னால் உள்ளது.
அய்யனார் கோவில் -
இங்கும் ஜாதகம் கொடுத்து அர்ச்சனை பண்ணலாம். கோவில் வெளியே யானை சிலை உள்ளது. அங்கு தேங்காய் உடைப்பது நல்லது.
வழிமுறைகள்:
1. காசி விஸ்வநாதர் ஆலய தரிசனம். (இங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொள்ளவும்)
2. தலையெழுத்தை மாற்றும் பிரம்மபுரீஸ்வரர் ஆலய தரிசனம்.
(இங்கு முதலில் ஈசன் வழிபாடு, பின்னர் பிரம்மா, மூன்றாவது பதஞ்சலி முனிவர் தரிசனம் , இறுதியாக அம்மன் தரிசனம் மற்றும் ஜோதிர்லிங்க தரிசனம்)
3. விதியை மாற்றும் வரதராஜப் பெருமாள் ஆலய தரிசனம்.
4. அய்யனார் கோவில்
5. காசி விஸ்வநாதர் ஆலயம் செல்லும் முன்பு அங்கு இருக்கும் குளத்தில் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்து கொண்டு செல்ல வேண்டும், ஏனெனில் இந்த குளத்தில் உள்ள நீர் ஒருவருக்கு அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி விடும்.
இந்த கோவிலுக்கு போகும் வழி:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் (25 Kilometers from Trichy) என்னும் ஊர் உள்ளது. அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரம் ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு என் கைப்பேசி எண்கள் 7358234746 / 9884742019
நன்றி நீங்கள் அனுப்பிய தகவல் எனது subscriber's க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி
எந்த naal vishesh mana nall.
திங்கள் மற்றும் வியாழன்