கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : வலம்புரி அம்மன் கோவில் தெரு
Vložit
- čas přidán 13. 09. 2024
- அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : வலம்புரி அம்மன் கோவில் தெரு தெப்பக்குளம் அருகில் திருநெல்வேலி டவுன்
"""""""""""'"'"'"'''"""""""""""'"'"'"'''"""""""""""'"'"'"'''"""""""""
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுன், தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள வலம்புரி அம்மன் கோவிலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மாவட்ட தலைவர் செந்தில் அவர்கள் மாவட்ட செயலாளர் திரு முத்து மகேஷ் குமார் அவர்கள் மாவட்ட பொருளாளர் செந்தில் வடிவேலு அவர்கள், துணைத் தலைவர் திரு பணகுடி சங்கர் அவர்கள், துணைத் தலைவர் திருக்குறுங்குடி திரு மாரியப்பன் அவர்கள் , இணைச் செயலாளர் திரு எஸ்வி சுவாமிநாதன் அவர்கள், திருமதி சுப்புலட்சுமி அவர்கள் திருமதி கோமதி அவர்கள், இளைஞர் அணி பொறுப்பாளர் திரு ஹரிப் பிள்ளை அவர்கள் ஆகியோர் வெள்ள நிவாரணம் வழங்கும் பகுதிகளை தேர்வு செய்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கிரேட்டர் சென்னை அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர், பீட்டா கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர், லயன்ஸ் கிளப் ஆஃப் ராயல் எக்ஸலென்ஸ் தலைவர் திரு Dr வழக்கறிஞர் K பழனியப்பன் அவர்கள், மாநில வேலை வாய்ப்பு பிரிவின் பொறுப்பாளர் திரு K நித்திய குமார் அவர்கள், கிரேட்டர் சென்னை பொருளாளர் திரு S சற்குண சேகரன் அவர்கள் மற்றும் திரு S மனோகரன் அவர்கள் ஆகியோர் கிரேட்டர் சென்னை சார்பாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவர் திரு AR லட்சுமணன் அவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தின் சார்பாக தலைவர் திரு முத்தையா பிள்ளை அவர்கள், மதுரை மாவட்டத்தின் துணைத் தலைவர் திரு ராஜகோபால் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைப்புச் செயலாளர் திரு போடி N ரவி பிள்ளை அவர்கள் மற்றும் மகளிரணி தலைவர் தமிழ் செம்மல் திருமதி வேலம்மாள் முத்தையா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிரேட்டர் சென்னை பொறுப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர்கள் தென்காசி மற்றும் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பின் பொருளாளர் மாநில அமைப்பு செயலாளர் மகளிர் அணி தலைவர் ஆகியோர்களின் திருக்கரங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண பொருட்கள் ஜாதி மதம் கடந்து பாதிக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்ஙனம்,
போடி N ரவிபிள்ளை
அமைப்பு செயலாளர்
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்
01-01-24
#allindiamudaliyarpillaimarassociation #floodrelief #tirunelveliflood