வள்ளலார் அருளிய ஆறாம் திருமுறையில் இதுதான் முதல் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2020
  • திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறையில் முதல் பாடல் பரசிவ வணக்கம். வடலூர் எம்.எஸ் கார்த்திக் அவர்களின் தெய்வீக குரலில் பாடலும் செந்நெறி. பா. தண்டாணி அவர்களின் தெளிவான உரையும் கண்டு மகிழுங்கள்
    எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
    எல்லாம்வல் லான்தனையே ஏத்து
    இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
    றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
    வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
    சும்மா இருக்கும் சுகம்.
    திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
    சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
    தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
    திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
    உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
    உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
    மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
    வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
    அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
    அன்பெனும் குடில்புகும் அரசே
    அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
    அன்பெனும் கரத்தமர் அமுதே
    அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
    அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
    அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
    அன்புரு வாம்பர சிவமே.
    ------------------------------------------------------------------------------------
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ------------------------------------------------------------------------------------
    #Vallalar #thiruvarutpa #VallalarSongs #திருவருட்பா / @thiruvarutpa thiruvarutpa tv, thiruvarutpa

Komentáře • 29

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 Před 4 měsíci

    மிகவும் அருமை அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Před rokem +3

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை!!!. அற்புதமாக மிகவும் பக்திஉணர்வுடன்பாடுகிறார். U.tube மூலம் திருவருட்பா பாடல்களை கேட்கவேண்டும் என்ற எண்ணம்இன்றுதான் ஏற்பட்டது. முதல்முறையாக கேட்ட எனக்கு முழுமையாகவும் கேட்டுமகிழவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும்வகையில் அருமையாக பாடியள்ளார். பாடல்விளக்கமும்அருமை.

  • @arulprakash7305
    @arulprakash7305 Před rokem +6

    பாடல் பாடியவரின் குரல் இனிமை... விளக்கம் கொடுத்து விளக்கியதும் அருமை...

  • @viswanathan.gviswanathan5077

    ஐயா அற்புதமான விளக்கம் ஐயா நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @selvathurai5837
    @selvathurai5837 Před 2 lety +4

    நன்றி ஐயா. ஆரம்ப நிலையில் இருக்கும் எங்களுக்கு உங்கள் விளக்கங்கள் பேருதவியாக இருக்கு

  • @subramanianragavan4034
    @subramanianragavan4034 Před 5 měsíci +1

    ஆகா, கார்த்தி அய்யா,,, மிக சிறப்பு

  • @arulprakash7305
    @arulprakash7305 Před rokem +2

    வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @n.gangadharanp.g.velayudha3856

    வண்ணாங்குப்பம் சன்மார்க்க சங்கம்.

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +5

    Sir, welldone👌👌

  • @kuppusamy1964
    @kuppusamy1964 Před 2 měsíci

    M.kuppuswamy

  • @ganesanr3553
    @ganesanr3553 Před 3 lety +2

    Arutperum Jothi...Arutperum Jothi...Thani Perum Karunai...Arutperum Jothi

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před 3 lety +3

    சிறப்பு அய்யா. நன்றி

  • @krishnanr8506
    @krishnanr8506 Před 2 lety +2

    நன்றி ஐயா

  • @jayabalanpriya2648
    @jayabalanpriya2648 Před 2 lety +3

    அருமை ஐயா நன்றி

  • @jananichitra7558
    @jananichitra7558 Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @Vallalar6090
    @Vallalar6090 Před 3 lety +1

    ARUTPERUMJOTHI
    ARUTPERUMJOTHI
    THANIPERUMKARUNAI
    ARUTPERUMJOTHI
    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
    Vanakam Aaiya 🙏

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 Před 3 lety +3

    🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +2

    Sir, thankyou🙏🙏

  • @OVRagul
    @OVRagul Před 3 lety +2

    Arutperumjothi Arutperumjoth
    Thaniperumkarunai Arutperumjothi

  • @vigneshdivine6855
    @vigneshdivine6855 Před rokem +2

    Arutperunjothi Arutperunjothi Arutperunjothi

  • @vallalar7508
    @vallalar7508 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 Před 3 lety +2

    ARUMAI

  • @UCJKV
    @UCJKV Před 2 lety +3

    Arputhamana pathivu

  • @revathidamodharan759
    @revathidamodharan759 Před 3 lety +2

    Arutperum Jyothi

  • @Raja_Rajamanickam2024

    தடையுறாப் பிரமன்
    விண்டு (விஷ்ணு)
    ருத்திரன்
    மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன்
    விந்து நடையுறாப் பிரமம்
    உயர் பராசக்தி
    நவில் பரசிவம் என்னும் இவர்கள்
    இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின்
    கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே.
    திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார்.
    குறிப்பு:
    வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage )
    இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா
    சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும்
    இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் ,
    கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.

  • @thiruchitrambalam9692
    @thiruchitrambalam9692 Před 10 měsíci +2

    Artputam artputhamme othuvar name pls🙏🙇🏻‍♂️

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před 3 lety +3

    சிறப்பு அய்யா. நன்றி