'Divine Tribute to Swamy Nammazhwar: Etharkkagavo Vandaai Enakkagave' | எதற்காகவோ வந்தாய் எனக்காகவே
Vložit
- čas přidán 10. 06. 2022
- Description
எதற்காகவோ வந்தாய் எனக்காகவே | Etharkkagavo vandaai Enakkagave |
Ragam : Amruthavarshini
எதற்காகவோ வந்தாய் எனக்காகவே
மாறா
குதித்தாய் இங்கு உதித்தாய் ஒரு கணக்காகவே
பிறந்தாய்
புளியடி வளர்ந்தாய்
உலகை துறந்தாய்
உனை மறந்தாய்
கண்ண பரன்தாளை
வாய்ந்திடவோ!
மதித்தாய்
மாலை துதித்தாய்
நூலில் பதித்தாய்
வாழ விதித்தாய்
பாரோர் கதிபெற்று
உய்ந்திடவோ!
வண்டாய்
கமலச்செண்டாய்
பரன்தாள் கண்டாய்
பிறிதும் அண்டாது
அதில் தண்டேனும்
நுகர்ந்திடவோ!
முழுதும்
ஆதொரு பழுதும்
இன்றி, தொழுதும்,
இன்றி அழுதும்
அரியின் அழகை
நீ, ஆழ்ந்திடவோ!
விருந்தாய்
வினையறு மருந்தாய்
வண்பா அருந்தாய்
எனும் அரும் தாய்
நீ, வருந்தா
யாம் வாழ்ந்திடவோ!
ஆறாய்
அதுவே பேறாய்
கழல் தாராய்
திருப்பேராய்
எனும் மாறா
என்னுள் பாய்ந்திடவோ!
வேதம்
தீந்தமிழ் கீதம்
செய்தோதும்
நின்பாதம்
யாம் போதும்
இங்கு ஓர்ந்திடவோ!
ஈசன்
எனும்நான் நீசன்
யதிராசன்
தாள்பாசன்
மனவாசன்
வில்லிதாசனுக்கோ!