அன்பும் அருளும் தரும் கடப்பா லலிதாம்பிகை அபிஷேக ஆராதனை
Vložit
- čas přidán 12. 06. 2024
- லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீளச் செய்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.
உலகின் எல்லா பெண் தெய்வங்களும் சக்தி என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். சக்தி இல்லையேல் சிவமே இல்லை என விவரிக்கிறது புராணம். சிவத்துக்கே சக்தியாகத் திகழ்பவள் பராசக்தி. உலகின் எல்லா ஆற்றலுக்கும் காரணகர்த்தாவாகவும் கிரியா ஊக்கியாகவும் இருந்து செயல்படச் செய்யும் சக்தி, பெண் தெய்வங்களுக்கு உண்டு.
ஒரு வீட்டில், பெண்ணின்றி எதுவும் அசையாது. எந்தவொரு இல்லத்தில் பெண் ஆராதிக்கப்படுகிறாளோ, அந்த வீடு சுபிட்சம் பெறும். அங்கே அம்பாள் மனமுவந்து வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம். - Hudba