அண்ணாவின் பெயரை எப்படியாவது ஒரு பாடலில் நுழைத்து விட எம்ஜிஆர் காட்டிய முனைப்பு!
Vložit
- čas přidán 21. 08. 2024
- #அண்ணாவின் பெயரை எப்படியாவது ஒரு பாடலில்
நுழைத்து விட எம்ஜிஆர் காட்டிய முனைப்பு!
#Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
In and arround chennai.
Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
#Camera :Duraisami
Editing :Madhumathi
Creative head :Amudha bharathi.
நல்ல உறவை பலப்படுத்த உதவும் பாடல். அழகாக பாடினீர்கள்.
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
வாழ்க புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்கள்
Great
எளிமையான இசை ஆழ்ந்த. கருத்துக்கள் ஏழியிசை வேந்தர்
சௌந்தர்ராஜன் மாமன்னர் சொல்லியபடி மெல்லிய குரலில்
அமர்க்களம்.
பெரும்பாலும் ஸ்ரீதர் அவர்கள் டி எம் எஸ் அவர்களுக்கு குறைவாகவே வாய்ப்புகள் வழங்குவார். கடைசி காலங்களில் எம் ஜி ஆர் படங்களில் கேட்கவே வேண்டியதில்லை..... இப்படிப்பட்ட சூழ்நிலையில், இவருக்கு இங்கு இந்த பாடல் வழங்கப்பட்டு மிகவும் அற்புதமாக அமைந்த பாடல்.
"நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவர்க்கும் முன்பு உறவு இருந்தால் பின்பு பிரிவு வரும்"
"சோலை மலர் கூட்டம் சொந்தம் கொண்டாடி சிரித்து உறவாடுமே"
"உடலின் பின்னோடு உலவும் நிழல் கூட இருட்டில் பிரிகின்றது"
"வெளிச்சம் வரும்போது உடலை நிழல் தேடி இனைய வருகின்றது."
"என் மனம் பொன் மனம் என்பதை காணலாம்"
இது போன்ற வரிகள் அடங்கிய பாடல். இன்னும் கூட சில வரிகள் உள்ளன.
மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம். நன்றி.
அபாரம் அபாரம்
முதலில் ஒரு சிறு அறிமுகம்.
படத்தில் எம் ஜி ஆர் அண்ணனாக வரும் எஸ் வி சகஸ்நாமம் பற்றிய ஒரு சிறு குறிப்பு.
பிறப்பு 1913-பிராமணர். சிறுவயதிலேயே நாடக குழுவில் சேர்ந்து, என் எஸ் கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர் ஆகிறார்.1935,ல் மேனகாஎன்ற படத்தின் மூலம் திரை துறையில் நுழைகிறார்.
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என் எஸ் கிருஷ்ணன் உள்ளே செல்ல, நாடகக் குழுவை இவர்தான் கவனித்துக் கொண்டார்.
இவரைப் பற்றி இங்கே ஏன் குறிப்பிடப்படுகிறது என்றால்....!? இவர் "நாலு வேலி நிலம்" என்ற படம் ஒன்றை தயாரித்தார். அந்த படம் தோல்வியாக அமைந்ததால்..... வினியோகிஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தார். அப்படிப்பட்ட நேர்மையான மனிதர் இவர்.
(ரஜனி படம் ஒன்று சரியாக போகாததால் வினி யோகிஸ்தர்களுக்கு திரும்ப பணம் கொடுத்ததை ஆஹா ஓஹோ
என்று புகழ்தார்கள்.)
இவர் அந்த
காலத்திலேயே நேர்மையாக நடந்து கொண்ட மனிதர்.
இவர் தயாரித்த நாலு வேலி நிலம் என்ற படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் உள்ளது. தெரிந்தவர்கள் அந்த பாடல் பற்றிய தகவல் தரவும்.நன்றி.வணக்கம்.
இந்தப் பாடலில் வரும் group violin இடையிசையின் சாயல் "சிலர் அழுவார் " மற்றும் "காதல் சிறகை " என்கிற பாடல்களிலும் இருப்பது
போலத் தோன்றுகிறது.
மிகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற எம் ஜி ஆர் அவர்கள் நடித்த ஒரு படத்தில் தத்துவ பாடல் இல்லை.(அவரது படங்களில் தத்துவ பாடல்கள் இல்லாமல் இருப்பது அரிது) அந்த படம் எது எண தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.
சகோதரர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்ட போது அதை சரி செய்ய முயலும் தம்பியின் பாசப் பாடல்.எம்ஜிஆரின் தத்துவ கொள்கைப் பாடல்களில் அண்ணாவின் பெயரை உச்சரித்து பாடும் பாடல்கள் ஏராளம்.பூமழை தூவி ஒன்றே குலம் என்று .தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே.போன்ற எண்ணற்ற பாடல்கள்.
நண்பரே வணக்கம்.
எத்தனையோ தத்துவ பாடல்கள் இருக்க.... இதைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். பரவாயில்லை. இதுவும் கேட்கக்கூடிய பாடல் தான். விமர்சனம் நாளை பார்ப்போம்.
நிற்க,
அம்மம்மா காற்று வந்து, இந்தப் பாடலுக்கு ஐந்து பதிவுகள் அடியேனால் கொடுக்கப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் சென்று பார்க்கவும். 🙏
உரிமைக் குரல் படம் வெற்றி பெற்றது என்றாலும் என்னைப் போன்ற MGR ரசிகனுக்கு அது ஏமாற்றத்தையே கொடுத்தது. அவருக்கு உடை அலங்காரம், சிகை அமைப்பு ஆகியவை சரியில்லை. பாடல்களில் விரசம் மிகுந்திருந்தது. லதாவின் ஜோடிப் பொருத்தம் சரியில்லை. படத்தில் nativity இல்லை. ஸ்ரீதருக்கு ஏற்ற படமில்லை அது.
உங்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்றெல்லாம் படம் எடுக்க முடியாது. உரிமைகுரல் மாபெரும் வெற்றிப்படம் மட்டுமல்லாமல் இயக்குனர் ஸ்ரீதரின் கடனை எல்லாம் தீர்த்த படம். இதற்குப் பின்னால் வந்த படங்களில் தான் சிகை அலங்காரம் மிகவும் மோசமாக இருந்தது எம்ஜிஆர் இருக்கு உதாரணமாக மீனவ நண்பன் இன்று போல் என்றும் வாழ்க போன்ற படங்களில் சிகை அலங்காரம் கேவலமாக இருந்தது. எம்ஜிஆர் லதா ஜோடி பல பல படங்களில் வெற்றிகரமாகவே அமைந்தது. அதற்காக கிழவிகளுடன் எம்ஜிஆர் ஜோடி சேர்ந்து நடிக்க முடியுமா? நீங்கள் நேட்டிவிட்டி என்று குறிப்பிடுவது எம்ஜிஆரின் வேட்டி கட்டுவதை தான். அதையும் ரசிகர்கள் என்றுஇன்று போல் என்றும் வாழ்க, உழைக்கும் கரங்கள் போன்றவற்றில் ஏற்றுக்கொண்டார்கள். படம் வெற்றி பெற வேண்டும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் பணம் போட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்பதுதான் திரைப்படத்தின் குறிக்கோள், அதை விடுத்து தத்துவங்களில் இறங்கி இருந்தால் எம்.ஜி.ஆரும் காலியாகி இருப்பார். வெற்றி பெற்ற படங்களை குறை சொல்வதால் எந்த பலனும் இல்லை. மக்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நம் கருத்து அதில் திணிப்பதில் அர்த்தம் இல்லை,
@@S.pMohan-yu9rq மிகவும் அருமையாக உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு மகிழ்ச்சி. வெகு நாட்களாக என் உள்ளத்தில் இருந்த கருத்தை சொன்னேன் அவ்வளவே. MGR, அவர் 1960களில் தோன்றிய அதே தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தின் தாக்கமே, உ.சு.வா படத்திற்குப் பின் வந்த உரிமைக் குரல் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட படங்களில் அவர் தோற்றம் காண சகிக்காமல் போனதன் காரணம். இயக்குனர் ஸ்ரீதரின் கடன் துன்பம் தீர்ந்ததெல்லாம் நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான்.
ஆமாம் நண்பரே MGR தோற்றம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறியது, சிவாஜியும் அப்படியே. இவர்கள் இருவரும் bell bottom போட்டு நடித்த காலம் வேடிக்கை யாக இருந்தது. இருந்தாலும் உம்மை எம்மை போன்ற நிரந்தர ரசிகர் கூட்டம் இருந்ததால் எல்லாவற்றையும் ரசித்தோம் சில நேரம் முகம் சுழிக்கவும் செய்தோம் ஆனால் ஒவ்வொரு படமும் பாடமாக இருந்தது. இப்போது அப்படி இல்லையே நண்பரே!@@SubramaniSR5612
70களுக்கு பிறகு தான் மக்கள் திலகத்தின் இளமை ஜொலித்தது.உரிமைக்குரல் படத்தில் தான் எம்ஜிஆரின் ஹேர்ஸ்டைல் அழகாகவும் நேர்த்தியாகவும் பிறகு நினைத்ததை முடிப்பவன் .நீதிக்கு தலை வணங்கு.சிரித்து வாழ வேண்டும்.பல்லாண்டு வாழ்க போன்ற படங்களில் மேலும் அழகாக இளமையாக நடித்தார்.
@@S.pMohan-yu9rqசரியாகத்தான் சொன்னீர்கள். இதன் பிறகு வந்த படங்களில் எம் ஜி ஆர் அவர்களுக்கு முதுமை தோற்றம் வந்துவிட்டது. கிராமத்துக்காரன் பேண்ட் அணிந்து விவசாயம் பார்க்க முடியாது. வேட்டி கட்ட வேண்டும். கொஞ்சம் ஸ்டைலாக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று இதை செய்துள்ளார்கள்.