இசை ரசிகர்களின் பொற்கால 1980-ல் நகரின் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்த இன்றும் இன்பம் தரும் பாடல்கள்
Vložit
- čas přidán 22. 06. 2021
- 1980 Nagaram engum padalgal
ஆயிரம் மலர்களே ...
பூவண்ணம் ...
இளமை என்னும் ...போன்ற 1980-ல் ஒலித்த பாடல்கள் முழுவதும் கேளுங்கள்
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Kannan Vandhu Paadugiran Song • Video
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - czcams.com/users/tamilcinema...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in - Krátké a kreslené filmy
இப்படிப்பட்ட பாடல்களை ரேடியோவில கேட்டுக்கொண்டும் கூடவே சேர்ந்து பாடிக்கொண்டும் எங்க அம்மா சமையல் வேலை வீட்டு வேலை எல்லாம் செய்வாங்க... நானு என் தம்பியும் ஊஞ்சல் ஆடிக்கிட்டு எங்க அம்மா கூட சேர்ந்தது எங்களுக்கு தெரிஞ்ச வரிகளை நாங்களும் பாடுவோம்...😇☺☺தெரியாத வரிகளை அதே ராகத்துல பாடுற மாதிரி உலருவோம்..... 🤣🤣🤣 நினைக்கும் போது சிரிப்பு வருது....ஆனால் அந்த புன்னகைக்கும் மேலை... மனசு கஷ்டமா இருக்கு அந்த காலத்தை கடந்து இப்போ மீண்டும் அதே காலத்துக்கு போக முடியாதானு ஏக்கத்துல கண்ணுல கண்ணீர் வருது... 😞🥺🥺
இந்த பாடல்களை கேட்கும் போது என் கண்களில் நனைகிறது. வேகம் வேகம் என்று எவ்வளவு சந்தோசத்தை இழந்து நிற்கிறோம்.மீண்டும் வாரதா 80 என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்.
We are run behind the money. No time to analyze which is real happiness
@@arularul-ye3gz yes true
எனது இளமை பருவத்துள்ளல்களை நினைக்கவும்; அதன் நினைவுகள் முதுமையில் கூட துள்ளத்தூண்டுகிறது...
இனிய இளையராஜா இசையில் காணக்குயில்களின் இணையுடன் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் குரலில் .....
ஐயோ சொல்லி மாளாதே...💐💐💐💐💐
True , really missing the real happiness
Super
இலங்கை வானொலியில் இது போன்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்த அந்த இனிய நினைவு நாட்கள் மீண்டும் வருமா.அது ஒரு இனிய நாட்கள்.அதை மறக்கவே முடியாது.ஜென்சி மலேஷியா வாசுதேவன் குரல் மிகவும் இனிமை
1980 களில் வந்த பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு, கேட்டு மகிழ்வோம். பாடல்களுக்காக சில படங்களை அப்பொழுதெல்லாம் 75 பைசா டிக்கெட்தான் அதற்குமே வசதியிருக்காது தின்பண்டங்கள் வாங்க 5 பைசா, 10, பைசா, 20 பைசா கிடைக்கும் அதைச் சேர்த்து வைத்து சனி, ஞாயிறுகளில் காட்சி நேரம் 10 மணி எனில் 9 மணிக்கெல்லாம் திருப்பத்தூர் தங்கமணி, மஞ்சுளா திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்த இப்பொழுது நினைத்தாலும் மலரும் நினைவுகளாக மனதில் வலம் வருகிறது. கண்களிலே நெகிழ்ச்சியான கண்ணீர்.......
10,20பைசான்னு பார்த்தா,மன நிறைவு இருந்ததே,அது இப்போது எத்தனை லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது.இது சும்மா வாய்வார்த்தையாக சொல்லவில்லை.சாதாரண விஷயத்திலும் அப்படி ஒரு சந்தோசம் இருந்தது.அதிக வெயில்,புழுக்கம், கொசுத்தொல்லை,துரோகங்கள்,போட்டி மனப்பான்மை,ஆடம்பரம் இப்படி எதுவுமே கிடையாது அப்போது!
மலரும் நினைவுகள் அப்பாவுடன் நாங்களும் கண்டரமாணிக்கத்திலிருந்து திருப்பத்தூர் மஞ்சுளாவில் பார்த்த காலங்கள்
Super super
Nangalum kandramanikkam thangamani ,manjula theaterilil padam pathrukken super ana ilamai vayathu😌😌😌😌
நான் இந்த மாதிரி படங்களை திருச்சி யில் பேலஸ் ஜூபிடர் ராமகிருஷ்ணா கெயிட்டி ராஜா அரணா பத்மா மணி போன்ற தியேட்டர்களில் இரண்டு ரூபாய் ஒனனரை ரூபாய் டிக்கெட் எடுத்து மாலை ஆறு மணி காட்சி க்கு சென்று பார்ப்போம் இப்போது அந்த கால பசுமையான நினைவுகள் என் மனக் கண்ணில் கனவு கடலாக ஓடுகிறது இனி இந்த மாதிரி படங்களும் வராது பாடல்களும் வராது
கவலையே இல்லாத நாட்கள்.நீரோடைபோன்ற வாழ்க்கை உண்மையான அன்புடைய நட்பும் சொந்தமும் நிறைந்த நாட்கள்.
உண்மை தான்
ஆமாம் உண்மைதான்.😢
Last time very limited source, no internet, no colour TV ,but we still enjoyed happiness 🤭👏👐😫😄😥🖕💖💓😂🤣🙏🙌😀✝️🔯🕉️
100% உண்மை
உண்மைதான். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.
கடந்து விட்டது. இனி அப்பா, அம்மா, பாட்டி, மாமன், அத்தை, அண்ணன் அண்ணி, அக்கா தங்கை என கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் இனி எப்போது வரும். 🙋🙋🙋
நான் காரில் தனியாகப் செல்லும் போது இப்பாடல்களை தான் கேட்பேன் அப்பொழுது என்னுடைய பழைய நனைவுகளோடு பயணிக்கும் போது தனி இன்பம் ஆனால் அந்த காலம் மீண்டும் வராது
குறைந்த வருமானம்.
நிறைவான மனசு.
அளவில்லா சந்தோஷம்.👍🙏
Super sir
Yes cent percent orrect
ஆம். அத்துடன் உண்மை அன்புடன் ஆன உடன் பிறப்புகளும் உறவுகளும்..😭
@@ushar7365 உண்மையான வார்த்தைகள்,,,
நன்றாக சொன்னீர்கள்
தமிழகத்தின் தமிழின் இசையின் தலை சிறந்த பொற்காலம் என்றால் அது 1970s மற்றும் 1980s தான். இனி எக்காலமும் திரும்பவே வராது.இப்பூவுலகில் யாருமே அது போன்ற அனுபவங்களை பெற போவதில்லை. முடிந்து விட்டது. சிறந்த சகாப்தங்கள். சிறந்த காலங்கள். ஆஹா அருமை அருமை. இயற்கை கோலோச்சிய காலங்கள். இன்னும் நம்மில் இளமை ஊஞ்சலாடுகிறது என்றால் இது போன்ற பாடல்களால்தான். இந்த அருமையான பாடல்களை எல்லாம் இந்தக்காலத்தில் வரும் காலத்திலும் ரசிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அதனால் தான் சிறந்தகாலங்களை இசை தமிழ் இழந்து விட்டது.
Truly said.
எத்தனை வயதானாலும் தன் இளவயதை நோக்கி பயணிக்க வைக்கும் இப்பாடல்கள் எத்தனை நம் தமிழ் உறவுகளின் இளவயது உண்மையாகநேசித்த
உள்ளங்களை சொர்கத்திற்கு கொண்டு
செல்கிறது.
Love is great it must want truth.
Arumaiyana padalkal pazhaya ninaiyugal
உன்மை மனதை மயக்கும் பாடல்
Old is gold
excelent
ஏனோ தெரியவில்லை இப்பாடலைக் கேட்கும் போது என் அம்மாவுடன் வாழ்ந்த 80s கால நினைவுகள் என்னை வாட்டுகிறது. வானொலியில் இப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே கிராமத்து வீட்டில் இருந்த காலம் கண் முன்னே வருகிறது
Ss...really 🎉
❤
👍💯
Really 😢
1964 இல் பிறந்த எனக்கு இந்த பாடல்களை இலங்கை வானொலியில் கேட்பது தான் மிக பெரிய பொழுது போக்கு. ஏழ்மையான குடும்பத்தில் என் தாய் வாங்கி தந்த ரேடியோ இல் கேட்ட நினைவு வந்து என் விழிகலை கண்ணீர் திரை இடுகிறது. என் அம்மாவை நினத்து.
For me too sister
சந்தோஷ் சாம்ராஜ்ஜியத்தில்
வாழ்ந்தவர்கள் நாம்
பணம்வந்துவசதிகள்வந்தாலும்அந்தநிம்மதிஇல்லை
❤நானும் 1964 தான்
1964.march.12.enaku.
@@sureshkumarseenithamby4685🙏🙏🙏🙏
பொக்கிஷம். மனம் திரும்பி பார்க்கும். இலங்கை வானொலியில் கேட்ட நினைவுகள் மீண்டும் வருகிறது.
இலங்கை வானொலி தான் கதி ....👌👌👌
True
இலங்கை வானொலியை மறக்க முடியாது.இப்போது 50 மற்றும் 50+வயதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால்
J
உண்மை
இந்தப் பாடல்களைக் கேட்கும்பொழுது கண்களின் நீர் வடிகிறது மலரும் நினைவுகள்
அந்த காலம் போல இனி எப்பவும் வராது பூமி அழிந்து உருவானாலும்.
100./. உண்மை...
ஆமாம் அழிந்து உருவானாலும் ....
உலகம் அழிந்தால் மீண்டும் பரிணாமத்தில் இது போன்று எல்லாமே வரும்
True
@@prithibanruby2147 மீண்டும் வருமா
இனி இப்படி ஒரு இசை மகான் நம் தமிழ் நாட்டில் தோன்றுவான் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் நாட்டில் தோன்றிய இசை தெய்வம் நம் இசை ஞானி .இன்னும் பல நூறு ஆண்டுகள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்படிக்கு இளையராஜா காதலன்.
L
You are correct sir 👌👌👌👌👍
இசை; சலீல் சௌவுத்திரி
எனது இளமை பருவத்துள்ளல்களை நினைக்கவும்; அதன் நினைவுகள் முதுமையில் கூட துள்ளத்தூண்டுகிறது...
இனிய இளையராஜா இசையில் காணக்குயில்களின் இணையுடன் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் குரலில் .....
ஐயோ சொல்லி மாளாதே...💐💐💐💐💐
இந்த பாடல்களை கேட்கும் போது மனதை என்னம்மோ பண்ணுது பழையஞாபகம் அம்மா அப்பாவுடன் இருந்த வாழ்கை அவர்களுடன் சென்றபடங்கள் எல்லாம் ஞாபகம் வருது
Don't worry Lalitha...80 will come soon when you are alive in 2080 👍🏿
S
உங்கள் பிள்ளைகளும் ஒரு காலத்தில் இது போல் ஏங்குவார்கள். இது காலத்தின் கட்டாயம்.
Yes👏
@@Op_Gamerz007 h😅uuuuu77uuuuyyyyyyyyyhhhyyhyhhhyhyyhhhhyhhhhhhhhhhhhhhhhhhhhh
ஆயிரம் மலர்களே
பொன் மாலைப் பொழுது
என் இனிய பொன் நிலாவே
பருவமே புதிய பாடல் பாடு
கண்மணியே காதல் என்பது
காற்றில் எந்தன் கீதம்
இளையநிலா பொழிகிறது
இதெல்லாம் 80s மட்டும் இல்ல, all-time hits! Great selection!
Correct
ஜென்சி அம்மாவின் குரல் சொல்லமுடியாத மன உணர்வுகளை அள்ளித்தருகின்றது!
Yes குரல்இதயத்தைஉருக்குகிறது
அது ஒரு பொற்காலம் இனி மேல் வரவே வராது
Real
You are correct✅ sir❤❤❤
சிறு வயதில் நான் என் பாட்டி வீடு இருந்த திரு உத்திரகோசமங்கை எனும் சிவ ஸ்தலத்தில் என் சித்தி இலங்கை வானொலியில் மாலை நேரத்தில் இந்த பாட்டுக்களை போட்டுவிட்டு வாசல் தெளிப்பார்கள். நீங்கள் சொல்வது போல் அது மகிழ்ச்சியான நாட்கள்
sssss
Voor peyar evvallavu azagu
சகோ நான் 10 வது மாணவன் 1980 ல் ... சைக்களில் பள்ளி போகும் போது காற்றில் தவழ்ந்து வந்து காதில் விழுந்த பாடல்கள். இன்றும் என் பள்ளியை கடக்கும் போது பழைய நினைவுகள்.............
(நான் சேலம்)
என் அம்மாவின் ஊர்.
@@kumaravelnathan199 same year. 10th.
எங்க அப்பா அம்மாவுக்கு நாங்கள் ஏழு பேர் நாங்கள் ஐந்து பேர்
அக்கா தங்கைகள் இரண்டு தம்பிகள் அத்தனை கஷ்டத்திலயும் எங்களை
நல்லா வளர்த்தார்கள் அந்த கஷ்டதிலையும் எங்களுக்கு கொடுக்கும்
காசை சேர்த்துவச்சு 80s ல வந்த
பெரும்பாலான படங்களை பார்த்து
விடுவோம் இனிவருமா அந்த வசந்த காலம்
Appo yethanai per irunthalum pasi porurhu valkaiyai oottuvom
நீங்கள். அக்கா தங்கைகள். மற்றும் தம்பிகள். மற்றும். உங்கள். பெற்றோர் பல்லாண்டு வாழ்க
Hi one difference,we are also 7 kids, one boy nd the rest girls. Golden days. It won't come again . Feel so sad.
இந்த மாதிரி பாடல்கள் இன்னும் இருநூறு வருடம் ஆனாலும் கூட வராது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கடந்து போன இளமை பருவம் திரும்ப வராது.இம்மாதிரி பாடல்கள் மூலம் மீண்டும் அக்காலத்திற்கே சென்று வாழவேண்டும் ஆசை வருகிறது.
இப்போ இந்த 2021 நவம்பர் மாதம் யார் கேக்கறீங்க மனதுக்கு பிடித்த அருமையான பாடல்களை
Iam listening to it now on November 2021.Will listen to it forever.
என் நினைவுகளை மீட்டெடுக்க மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்... I LOVE 💘
நான்
I am
Me also in Nov 2021
இந்த காலகட்டத்தில் பயணித்த லடசோப லட்சம்பேர் என்னுடைய மனநிலையையொத்தவர்களாகவே இருக்கிறார்கள். கமென்ட்ஸ் பார்த்துதான் சொல்கிறேன். எல்லோருடைய கமென்ட்ஸ் படிக்கும்போது நாம் நினைத்ததுதானே என்ற ஆனந்தத்துள்ளலும், ஆனந்தக்கண்ணீருமாய் வருகிறது ஒவ்வொரு பாட்டுக்கும் நம்முடன் பயணித்தவர்களின் சம்பவங்களும், நிகழ்வுகளும் ஞாபகத்தில் வந்து....ஆஹா சொல்ல வார்த்தைகள் இல்லை. சினிமாவும், பாட்டும் சாதாரணம் இல்லை. அதுவும் 80 நமக்கு பொற்காலம்
Tears come
80,lovely year
ஆயிரம் மலர்களே பாடலை கேட்டாலே ஒரு சோக ஆனந்தம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👍
உண்மை உண்மை நண்பர்களே என் ஒரு இனிமையான பாடல்
நம்புவீர்களா நான் என் தாத்தாவோடு பால்கனியில் போய் பார்த்த படம் சென்னையில் night show trafic இல்லாத மௌண்ட் ரோடில் நடந்து👌
ஆனந்த சோகம் 😅
எஸ் 100@ உண்மை
ஒரு நல்ல நடிகர் விஜயன் ! அவர் மரணித்து 15 வருடமாகுது ! பாரதிராஜா என்ற அரிய கலைஞனின் ஆரம்ப கால படைப்பு ! நிறம்மாறாத பூக்கள் ! இளையராஜாவின் இன்னிசையில் இன்றும் இப்பாடல் அந்த கால நினைவுகளை கண் முன் காட்டுவதாக உள்ளது ! இனி என்ன விலை கொடுத்தாலும் அந்த (கவலையற்ற உல்லாச )நாட்கள் வருமா ? கவியரசின் கடைசி கால கை வண்ணம் . தொடர்ந்து வந்த பாடல்களும் சிறப்பு ! நன்றி. வாழ்க வளமுடன் !
இது 70ம்ஆணடு பிறந்த. அதிஷ்டசாலிகளுக்கான காலம்
முன் பிறந்த
இந்தப் பிறவியில் இப்படி ஒரு பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பது வீட்டுப் இன்றும் அந்த காலத்துக்கே செல்வது போன்ற ஒரு நினைவு வருகிறது
இசை ஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு நான் அடிமை, எத்தனை தலைமுறை மாறினாலும்,மாறாதது அவரின் பாடல் வரிகள் தான்,,,,மனசு சரியில்லை என்றால் அவரின்
பாடல் மட்டுமே எனக்கு மருந்து.....
வானிலை வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்....எத்தனை தடவை கேட்டாலும் மனதை தொட்ட இசை..
78
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்...
வானிலை = Weather
வானிலே = In the sky
@@mahendraperiyadanam3801😊p
😊😊😊😊
Pppp
இப்பாடல்களை கேட்டால் மனம் மயங்கி விடுகிறது
ஆமா
Yes
ஒரே மன நிலையில் பல பேர்..
இளமையான குளிர்காற்று மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது...! யதார்த்தமான இந்தக்காலச்சுமைகளை மறக்கச் செய்கிறது!
இளையராஜா இசை உலகில் ஒரு அவதாரம்!
1964 இல் பிறந்தவன் தான் நானும். வானொலியை கேட்பதற்கு கூட வாய்ப்பும் வசதியும் இல்லாத சிற்றூரும் குடும்பமும். எப்போதோ எங்கெங்கேயோ கேட்டு அவற்றில் மூழ்கி மிதந்து வாழ்க்கையின் வசந்தத்தை தந்த பாடல்கள். காலம் உருண்டோடி விட்டது. வாழ்க்கையை சவால்களுடன் சந்திக்கும் நிலையில் வயதும் வாழ்க்கை யும். கற்பனையில் மிகுந்த அந்த காலங்கள் இந்த பாடல்களின் வழியில் பெற்ற மகிழ்ச்சியும் நினைவில் மட்டுமே இருக்கின்றன.
❤
"அலைகள் ஓய்வதில்லை" காலேஜ் கட் அடித்து பல முறை பார்த்த படம்.
கார்திக், ராதாவின் முதல் படம்.
அருமையான அமைதியான வாழ்க்கை.
நமக்கு கிடைத்த பொக்கிசம் இசை ஞானி இளயராஜா அய்யா
Yes
சரியாகச் சொன்னீர் இளைய ராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
சிறு வயது ஞாபகம் வருகிறது... ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது..
Äü0ip
9b
S
உண்மை
Enakkumdhan❤️❤️❤️❤️👍👍👍
வசந்தகாலமான 70, 80 காலகட்டங்களில் பிறந்து, மகிழ்ச்சியை மறந்து 2023 வெறுப்பின் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் இப்பாடல்கள் மட்டுமே ஆறுதல்🙏
😊😊0
உண்மை
I am 51
உண்மை நண்பரே
EN sir/madom veruppu Enjoy and accept life as it is
அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இலங்கை வானொலியில் இது போன்ற பாடல்களை கேட்டு பாடிக்கொண்டே இருப்பேன். மீண்டும் அந்த நாட்கள் வருமா
Definitely வராது இனி கனவில்தான் அது porkaalaam 👍👏
என்றும் மறக்க முடியாத பாடல்
Varave varathu😭😭😭😭😭😭
அருமை... அற்புதம்... என்ன ஒரு இசைகோர்வை...,
என் பதிர் பருவத்தில்
கேட்டு ரசித்த இசை தட்டுக்கள்.....
ஏதோ மனதில் ஒரு அரிச்சல் எதையோ இழந்து விட்ட சோகம் திரும்ப முடியாத வாழ்க்கை சொர்க்கம் எது என்று கேட்டால் அந்த நினைவுகள் மட்டும்தான்
Yes
அழ மட்டும்தான் முடிகிறது.....
அப்போது இருந்த நண்பர்கள் இப்பபோ எங்கேயோ😢
உண்மைதான்... 1964 ல் பிறந்த என் போன்றவர்களுக்கு இந்த பாடல்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தது...
அந்த காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்...
இனிமை இளமை புதுமை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாறாதது....
S
Yes
S
Yaa
அன்புடன் அழைக்கின்றோம்
அது ஒரு அழகிய கனாக்காலம். அற்புதமான நாட்கள். மிக்க நன்றி
Qhfr
True
ஜென்சி குரல் தேன்அமுது
எத்தனை குரல் வந்தாலும்
இந்தகுரலுக்கு இனைஇல்லை
இணை
Yes yes yes Yes yes Yes yes Yes yes
ஜானகி அம்மா குரல்
Nice👍👍👍
@@samsbanu9604 ஜானகி அம்மா குரல் இனிமைதான் ஆழ்ந்து கேட்டால் செயற்கை இழையோடும் ஆனால் ஜென்சி அவர்களின் குரல் ராஜாவின் புல்லாங்குழல் போல மனதை வருடும்.
நாம் நாகரிகத்தை கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கிறோம்...அப்போது பாடலை கேட்க ஆர்வமும்.நேரமும் இருந்தது அனுபவிக்க...இப்போது வேகமான வாழ்க்கையில் நிறைய சந்தோஷம் இழந்து விட்டோம்... பாடலை கேட்கும் போது வானொலி பெட்டி ஞாபகம் வருகிறது அப்படி ஒரு வாழ்க்கை சொர்க்கம் தான்..விரசம் இல்லா வாழ்க்கை... அனுபவித்த அந்த நாட்கள் கிடைக்குமா?👌👌👌
Unmai 1980 Ilayaraja songs anaittum then karkandu
அது வசந்த காலம்.😢
True
True
இசை பிரம்மாவின் ராஜா வின் பாடல்கள் அனைத்தும் அருமை
பூ வன்னம் பாடல் கங்கைஅமரனின்
கவிதைக்கு சொல்ல வார்த்தை இல்லை சிறந்த பாடல் ஆசிரியர்
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
பூ வண்ணம்
Ithu kannadasan. Gangai amaran ippadi lam kilichitalum. 😂
@@tamilastro7849 யோவ்... இது கங்கை அமரன் கிழிச்சது தான்யா
@@tamilastro7849 கங்கை அமரன் பாடல்களை கேட்டால் தெரியும்
கிழி கிளி கிலி
1980 களில் சிலோன் வானொலியில் மாலை 5 மணிக்கு பொங்கும் பூம்புணல் நிகழ்ச்சியில் கேட்ட பாடல்கள்.
மனது வலிக்கின்றது.
மிகவும் கணமாக உள்ளது.
true
பொங்கும் பூம்புணல் நிகழ்ச்சி at Morning 7 AM.
தூரத்தில் கேட்டாலும் மனதின்
ஓர த்தில் ஒரு பரவசம்......
இந்த பாடலை கேட்க்கும் போது மனது தானாகவே என்னுடைய இளமை காலத்தை நோக்கி பயணிக்கிறது
11
Ma
எனக்கும் தான்
Sweet memories
உண்மை..
இளமை கால நினைவுகளை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் இனிமையான பாடல்கள். பாடல்களை தொகுத்து வழங்கியவரு க்கு நன்றி.
My heart 💜❤️ always 💯 love 💕 above songs,still enjoying listening old 80,90'songs😢🎉😂❤😊😅😮😢🎉😂
@user-py2cq9pp1t oo😊oooool😊ooo0oooo9oooooo😊l😊ooooooóooooooooooóooooooooooo0ooooooooooloó😊😊l😊l😊o😊0olo😊ooo0o😊l😊😊l😊oo😊😊😊0l😊😊óo😊ooo0oploo😊o9😊ooól😊ooooóo😊ooooo😊loópooóó😊oóol😊ó😊ó😊ó😊ooo😊oooooo😊ooóoóóoo😊oóloooooooóoo😊oⁿ😊oœ9ooóooóoolo9oo9oo9oooo9oooo9op00oloo0óooooóoo0oooooóoooooooooooooooóooóoooó0ooo9o0oo9loooo900oo0oooo9o
நாங்கள் ஒவ்வொரு நொடியும் நிதானமாய் அமைதியாய் கழித்த நினைவுகளே ஞாபகமாய் வருகிறது
இன்றும் இந்த பாடலை கேட்கும் போது தன்னை அறியாமல் ஒரு சோகத்தையும் மகிழ்ச்சி யையும் அடைகிறேன்
மிகவும் உண்மை.
உண்மை
கேட்க கேட்க தெவிட்டாத இனிமையின் பாடல்🌺🌺🌺🌺🌺
இந்த பாடல்களை அந்த காலத்தில் வானொலியில் கேட்டோம் என்று நினைக்கும் போதே சொர்க்கத்தில் இருந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
Wonderful beautiful happy யான இன் இசை மழை
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.
இழந்த அந்த நாட்களை இந்த பாடல் மூலம் மீட்டு கொடுத்து விட்டீர்கள். மனது கணக்கிறது. சரியாக 35 ,40ஆண்டு கள் கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜென்சி அம்மா பாடல்மூலமும் விஜயன் சார் நடிப்பின் மூலம் இதயத்தை வெண்றுவிட்டீர்கள்
உண்மை
Mega mega arumai athuoru kana Kalam 1970 pranthavagal illayaraka's thottathil malaruntha pookgal
1980 பாடல்கள் இன்றைய 60 வயது தாண்டியவர்களுக்கு இன்றும் இளமையை நிலை நிறுத்தி நினைவுறுத்தும் பெல்பாட்டம் பாடல்கள் கடந்து போன கனா காலங்கள்
உணர்ச்சிகளை அனுபவித்து இதமாக இதயம் வருடும் பாடல்கள்,,,
இதையெல்லாம் கேட்டுவிட்டு சமீபத்திய 2021 to...பாடல்களை கேட்கும்போதே காதில் ரத்தம் வடிகிறதே!
Ohh neenga kekkureengala enna??!!!!
You know ippo oru music director or singer yarayume identify panna mudiyala
ஆயிரம் மலர்கள் பாட்டு கேட்கும் போதெல்லாம் என் இளம் வயதிலேயே ஏதோ சோகம் கலந்த ஆனந்த மகிழ்ச்சி நினைவலைகள் தாக்கம் செய்கிறது. இசைஞானி இளையராஜா தமிழ் பொக்கிஷம்
Having been born n brought up in the diaspora ( S. Africa), we , knowing precious little Thamizh , could not fully appreciate these marvellous songs. These lovely melodies of five or six decades ago failed not to enthrall us ; each time they came over the air , our ears were glued to our radio sets. In those distant times relatively few Thamizh thiray-paadakgall were distributed by local film importers . So we prized the few film songs we were lucky to hear. Listening after many decades to these well-composed n brilliant music holds us spell-bound ! What a far cry to the many raucous loud showy tunes that passes for modern day songs !
I like your camand
கண்ணீர் சிந்தும் அந்த பொற்கால நினைவுகளை மீட்டியமைக்கு
தொகுப்பாளருக்கு நன்றி
இந்த பாடல்களில் உள்ள இனிமை எதிலும் கிடைத்ததில்லை ,நன்றி .
In 1984, preferably, we enjoyed these songs, college Interval, Motta maadi , sitting in the wall of water well..PTC bus.,While in train with friends..so...on..
1980ஆண்டின் பாடல்கள் அருமை மயிலும் அழகு
Really as 1965 born all these songs remaining me of students life of Madurai medical college! Studying for the exams till 300 am with these melodies Raja sir songs . Really Raja sir travelling all the way till now. Really happy days
வசந்தமான வாழ்க்கையில் அக்கால நினைவுகளின் ஒரு பொன்னான நேரத்தை நாம் பங்கு கொண்டுள்ளோம்!!!!வாழ்த்துக்கள்
அழகான. மலரும். நினைவுகள்....
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத.மனதை மயக்கும் அருமையான பாடல்கள்
காலத்தால் அழிக்க முடியாத பாடல் Hatsoff ILLAIYARAJA SIR....
65ல்பிரந்து77ல்ஐந்தாம்வகுப்பைமுடித்துஆடுகலைமேய்க்கசென்றநாள்முதல் பாடல்களை ரசிக்கத் தொடங்கின நான் எண்பதுகளின் பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள்இன்றும்ஆனந்தகண்ணீவருகிறதுபதிவாளருக்குநன்றி.
அது ஒரு அழகிய காலகட்டம்
அழகிய மட்டும் அல்ல மனம் கலங்கிய கண்களுடன் இருந்த காலம்
எதிர்ப்பார்ப்பு இல்லாத இளமை..!
கனவுகளில் கண்ணீர் சிந்தும் காதல் மனம் ! ஒருத்திக்காகவே பூத்திருக்கும் உதிரம்... பணத்தை மதிக்காது பாசத்தில் விளைந்த உறவுகள் ... பரபரப்பு இருத்தும் பக்குவமாய் நகரும் நேரம்... இன்றே பக்குவமிருந்தும் பரபரப்பில் மரண பல்லாக்கு தூக்கும் மானிடம். ..✍️
அப்ப. எதுவும் இல்ல சந்தோசம் இருந்துச்சி இப்ப எல்லாம் இருக்கு ந்தோசம் இல்ல
True
மிகச் சரியாக சொன்னீர்கள்.நன்றி.
Santhosam ellam nam manathai
Poruthathu thaan. Ezhikku irukkum
Mana niraivu kodeswaranukku
Irukkathu. Pothum enndra maname
Pon saiyum marunthu.
@@babumohan4549 %q%%
Vunmai bro
எனது இளமைப் பருவத்தில் கேட்டது.
Kalathal aziyadhavai meendum varadha kalam
Selected 🎵 are 👌 (1) ஆயிரம் மலர்களே மலருங்கள் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - நிறம் மாறாத பூக்கள் (1979) (2) ஆகாய கங்கை🌲 (கவிஞர் M G வல்லபன்) - தர்மயுத்தம் (1979) (3) பூவண்ணம் போல நெஞ்சம் 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - அழியாத கோலங்கள் (1979) இசை: சலீல் செளத்ரி (4) இளமை எனும் பூங்காற்று 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - பகலில் ஒர் இரவு (1979) (5) கண்மணியே காதல் என்பது 🌲 (கவிஞர் பஞ்சு) - ஆறிலிருந்து அறுபது வரை (1979) (6) பொன்மாலைப் பொழுது 🌲 (கவிஞர் வைரமுத்து) - நிழல்கள் (1980) (7) பருவமே 🌲 (கவிஞர் பஞ்சு) - நெஞ்சத்தை கிள்ளாதே (1981) (8) என் இனிய பொன்நிலாவே 🌲(கவிஞர் கங்கை அமரன்) - மூடுபனி (1980) (9) காற்றில் எந்தன் கீதம் 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - ஜானி (1980) (10) பேரைச் சொல்லவா 🌲 (19) பறந்தாலும் விட மாட்டேன் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - குரு (1980) (11) எங்கேயும் எப்போதும் 🌲 (20) சிவசம்போ 🌲(கவிஞர் கண்ணதாசன்) - நினைத்தாலே இனிக்கும் (1979) இசை: MSV (12) ஜெர்மனியின் செந்தேன் மலரே 🌲 (கவிஞர் பஞ்சு அருணாசலம்) - உல்லாசப் பறவைகள் (1980) (13) சிப்பி இருக்குது முத்துமிருக்குது 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - வறுமையின் நேரம் சிவப்பு (1980) MSV (14) என் கண்மணி 🌲 (கவிஞர் வாலி) - சிட்டுக்குருவி (1978) (15) Senorita 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - ஜானி (1980) (16) மடை திறந்து 🌲 (மணிவண்ணன் & கவிஞர் வாலி) - நிழல்கள் (1980) (17) பருவ காலங்களின் கனவு 🌲 (கவிஞர் கங்கை அமரன்) - மூடுபனி (1980)(18) ஆகாயம் மேலே 🌲 (கவிஞர் வாலி) - நான் வாழவைப்பேன் (1979) (21) நானே நானா 🌲 (கவிஞர் வாலி) - அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979) All 🎵 were composed by ILAYARAJA except where noted ✅
SUPAR M D
Ever green
என்னைப்போல் நினைவுகள்
Super sir
அருமை. அழகாக வரிசைப் படுத்தி உள்ளீர்கள்..சிறப்பு
80s period songs patttri sonnal puriadhu anubavitha namakku dhan theriyum adhan arumai...
இந்த பாடல்கள் பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைக்கிறது 😊
80 - 90 Songs are wonderful . Hearing such songs repeatedly made me to replenish the sweet memories had during that golden period, which is unforgettable in my life . Thanks to those who gave such melodies by their concerted effort .
ஆனந்தமும் அழுகையும் .மனசு பாரமானது
Yes
👍
என்னால முடியல மனச என்னவோ பன்னுது
எம் ஜி வல்லபன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் ராஜா வுடன் பயணித்த வர்கள் மறக்கமடியாதவர்கள்
These r evergreen songs , l have enjoyed with melodious songs,by the grace of God, this period was golden Era
55 இல் 25 ஐ உணர்ந்தேன் சிறப்பு பகிர்ந்தமைக்கு நன்றி
உண்மையான மெலோடி சாங்
வேறு மொழிக்காரங்க நடிச்சும்
எப்படி கேட்க அருமையாக இருக்கு. இசை/வரிகள்....👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அது ஒரு கவலை இல்லாத காலம்
கண்ணில் கண்டது கடந்தது நினைவில் உள்ளவை நிலைத்து நிற்கும் நிங்காது நிற்கும் இது ஒரு நீழல் வாழ்க்கை
இந்தப் பாடல்நெஞ்சை வருடிஇதயத்தை கொள்ளை கொண்டு போகும்உயிரின் ஓசை கல்லூரி நாட்களில்பாடல் கேட்காத நாட்கள்வீணான நாட்களே என்று எனது பழைய ஞாபகம் எனக்கு 50 வயது ஆனாலும் என்றும் கண்கள்குளமாகிறது
இலங்கை வானொலி அன்று ந
ம்வாழ்வி
ல் பிரிக்கமுடியாத அங்கம்
நான் பிறந்தது 1979 ஆனாலும் இந்த பாடல்கள் ௮னைத்தும் ௭னக்கு பிடித்தவை
மனதை மயக்கும் அருமையான பாடல்கள்
நல்ல இசை தொகுப்பு நன்றி..
Old memories are upcoming. Those days are memorable days
பழைய நினைவுகளை தூண்டும் அற்புதமான பாடல்கள் மனதிற்குசுகமளிக்கிறது நன்றி
Manimegalai alaga irukinga
Golden and Ever green days of 1980's. Why can't the year 1980 come again in our life. My VANA VANI SCHOOL days in IIT Campus Madras. What a great and excellent composition of Raja Sir. We need Illayaraja Sir throughout our life. This Maestro must give plenty, plenty, plenty of melodious songs like this. God Bless him with good health.
Dedicated to all those who love these 21 songs.
Please enjoy yourselves
00:00 Malargaleh Malarunggal
03:22 Aagaaya Gangai
07:49 Poovannam Pohla Nenjam
12:31 Ilamai Ennum Poonggatru
16:49 Kanmaniyeh Kaathal Enbathu
21:01 Ithu Oru Pon Maalai Poluthu
25:13 Paruvameh Puthiya Paadal
29:00 En Iniya Pon Nilaveh
32:55 Kaatril Unthan Geetham
37:05 Pehrai Sollavaa Athu
41:26 Engehyum Eppothum
47:49 Germaniyin Senthehn Malareh
52:59 Sippi Iruku Muthum Iruku
58:37 En Kanmani En Kaathali
1:02:17 Sinorita I love you
1:06:25 Malaivirunthu
1:10:58 Paruvamaana
1:13:49 Aagayam Meleh Paathalam Kileh
1:18:12 Paranthaalum Vidamaatehn
1:23:15 Jegameh Manthiram Sivasamboh
1:27:26 Naaneh Naana
Nc
70.80.என்னுடய இனிமையான நாட்கள் மற்றும் அனைத்து பாடல்களும் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது
Life la enaku iruntha orea oru sandosamana ondru but Intha padalgal evlavo sandoshthai munbu koduthatho. Ipothu migavum manam vethanai valiyaga ullathu munbu childhood memories happa irukum inam puriyatha sandosam but now amma ena vitu poitanga athuve ipo Amma vin nabagam vanthu kollukirathu mudiyala romba kastama iruku ivlo seikirama enga Ammmava kuttitu poitan intha kadavul konja nall enkuda happya enga Amma iruka vittu irukalam 😭😭😭😭😭😭 😭😭😭😭
Amma Miss you Amma love you so much Amma
will pray for your mother sister...God is Wonder & Great, He loves your mother, yourself and everyone, take care, bye🙏✌️
எத்தனை ஆண்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் உயிர் இருந்து கொண்டே இருக்கும் அப்படி ஒரு பாடல்