அனுபவ பாத்தியம் சட்டம் || Adverse Possession
Vložit
- čas přidán 19. 05. 2021
- அனுபவ பாத்தியம் சட்டம் அதாவது Adverse Possession என்றால் என்ன என்பது பற்றி அனைத்து தகவல்களும் இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. எதிரிடை அனுபவ பாத்தியம் அல்லது அனுபவ சொந்தம் அல்லது அனுபவ உரிமை என்றும் இதனை குறிப்பிடுகின்றனர்.
Disclaimer: The views expressed in this channel are for informative purpose only and does not constitute legal advice. For your specific needs contact a lawyer or law firm. இந்த சேனலில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தகவலுக்காக மட்டுமே. இது legal advice அல்ல. உங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான சட்ட ஆலோசனைகளுக்கு உங்கள் வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர் அலுவலகத்தை அணுகவும்.
Wonderful
Thanks sir
எவ்வளவு சிறந்த விளக்கம்..அருமை ஐயா.
very informative ...thank you sir
Awesome explanation sir
Sir last month Endorlment panan.. Now practicsing junior advocate in chennai.... Unga videos ellame use fullah eruku sir...information gather panna. Tq sir
very helpful
Thank you brother, very useful information everyone must know.
Thanks
Thanks valuble information
Welcome
good explain sir.
அருமையானபதிவுசார்
Thanks sir
Thanks
Gentleman. As a kind request.. is this adverse possession is applicable among the sons of mother's property on gift deed. Thank you.
UDR இருந்து அனுபவம், வரி சிட்டா என் பெயரில் உள்ளது,,Udr முன்பு இதனை பயனாளர் ஒருவர் இப்போ வழக்கு வருகிறார்,,தீர்வு எப்படி வரும்
Sir porvika sothil anbavathiyam kitaikuma. 1.water bill 15year .2.Eb corent services 2 in 20year
3,)vittu vari rasithu iruku 20yers ah irukom sri .1 acar poorvikathula 2boy 1girl
Enga thatha Voda appa oda ponnu ipa pangu kekaranga
Ena pantrathu
உண்மை
Will adverse possession applicable among family members( Blood relations)?
வணக்கம் சார்,AD,கண்டிஷன் லேண்ட்,அடமானம் விவசாயநிலம், ஆதிதிராவிடர், (ம)வேறு சிலர் (mbc, Bc,) unregister பத்திரம் வைத்து நில ஒப்படை பட்டா பெற்றவரின் வாரிசுகளுக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்கள், இதில் யாருக்கு அனுபவ பாத்தியதை செல்லும் வாரிசுகளுக்கு உரிமை உள்ளதா, விபரம் தெரிவிக்கவும், நன்றி,
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு இடம் வாங்கணும் அந்த இடத்தோட அளவு ஐந்தரை சென்ட் அந்த இடத்துக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தாங்க பட்டா இல்ல ஈபி பில் வீட்டு வரி ரசீது இருக்கின்றது அதிலே ஒரு சின்னதா செட் வீடு இருக்கின்ற அந்த இடத்தில் ஐந்து ஆண்டுகள் கழித்து பட்டா அப்ளை பண்ணி வாங்கிக்கலாம் சொன்னாங்க ஆனா இப்ப அந்த இடத்தில கட்டட வீடு கட்டலாமா ஐயா சொல்லுங்க அப்படி வீடு கட்டினால் பட்டா வாங்க முடியுமா
Typo in 2nd case law title . Please read as " Ravinder Kaur Grewal & others Vs. Manjit Kaur & others.
எங்கள் குடும்ப கோவில் நிலம் 4 ஏக்கர் அளவில் உள்ளது. எனது தாத்தாவிற்கு முந்தைய தலைமுறையில் இருந்து பார்க்கப்பட்டு வருகிறது. எனது தாத்தாவிற்கு 4 ஆண் வாரிசுகள் 3 பெண் வாரிசுகள். என் தாத்தா udr பட்டவாக 2 ஆண் வாரிசுகளுக்கு மட்டும் மாற்றியுள்ளார். 2 பட்டாக்களாக தனித்தனியாக உள்ளன. இப்பொழுது நாங்கள் pettition போட்டால் அந்த 2 பட்டாக்களையும் ரத்து செய்து அனைத்து வாரிசுகளின் பெயர்களையும் கூட்டு பட்டாவில் இணைக்க முடியுமா..அவர்களிடம் udr பட்டா மட்டுமே உள்ளது.. மற்றபடி எந்த ஒரு ஆவணமோ மூலபத்திரமோ இல்லை.. எங்கள் தாத்தா பெயரில் இல்லாமல் நேரடியாக இவர்கள் பெயருக்கு udr இல் மாறியுள்ளது.. வில்லங்கத்தில் எந்த பதிவும் இல்லை..
வேலி சுற்றி வந்து மாடுகள்( 4) கட்டி வைத்து வருகின்றனர். இதற்கு நான் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாமா?
Hi sir I have one problem
Super sir keep educating us common ppl 👍
என்னுடைய தாத்தா பெயரில் சொத்து உள்ளது. இது பூர்வீக சொத்து.தாத்தாவிற்கு 5 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் எங்களுடைய பங்கை அவர் 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்...அவர் எங்களிடம் பின்வருமாறு கூறினார்.."என்னுடைய தாத்தா எங்களுடைய பங்கை அவருக்கு தான செட்டில்மென்ட் பண்ணி கொடுத்துவிட்டார் என்று.. நாங்களும் அதை நம்பி விட்டுவிட்டோம்.. இந்த வருடம் தற்செயலாக பட்டா நம்பரை வைத்து சோதித்து பார்த்ததில் அனைத்து சொத்துக்களும் என் தாத்தாவின் பெயரில் தான் உள்ளது..என் தாத்தா இறந்து விட்ட காரணத்தினால் 5 மகன்களின் பெயர்களும் பட்டாவில் உரிமையாளர்களின் பெயரில் வந்து விட்டது.. பாக பிறவினையும் செய்ய வில்லை.. அவர் எங்களுடைய பங்கை அனுபவித்த காரணத்தினால் அவரால் அனுபவ பாத்தியம் கோர முடியுமா?
ஒரே சர்வே நம்பர் நத்தம், மனை மற்றும் புஞ்சை க்கும் வருகிறதே
இதில் எது UDR no. எது T.S. number
Useful information sir. Thank you
Sir I have a plot next to my brothers home. As i am working snd living abroad I have given POA to my father in law. My brothers brothet in law has put some wood there and doing business. I am not in good terms with my brother. So I havent approached that person to stop doing business in my plot. It is almost 7 years now. So how do I take action? Please advice sir. Thank u
u can send a legal notice to the person
தாத்தா பெயரில் பட்டா உள்ளது. தாத்தாவின் வாரிசுகள் மூன்று நபர்கள் உள்ளனர். வாரிசுகள் இல்லாத காலகட்டத்தில் சொத்து பேரனுக்கு சொந்தமாகுமா சார்...விளக்கம் கொடுங்க சார்
வணக்கம் ஐயா...அருமையான தகவல்...ஒரு சின்ன சந்தேகம் ...ஒரு 50 செண்ட் கூட்டுபட்டவில் (5 நபர்களுக்கு)உள்ள பூர்விக சொத்தாகும்...இந்த பூர்விக சொத்துக்கு கிரயம் பத்திரம் இல்லை..இன்றும் எங்கள் 5 நபர் அனுப்பவத்தில் உள்ளது..ஆனால் அந்த சொத்து 10 வருடத்திற்கு முன்பு(இந்த 5 நபரில் ஒருவர் பெயருக்கு தனி நபர் பட்டா மாற்றபட்டுள்ளது...இதை மீண்டும் கூட்டுப்பட்டாவாக எப்படி மாற்றுவது ஐயா...எங்களிடம் பழைய கூட்டுபட்டா புத்தகம் உள்ளது..
கூட்டு பட்டாவாக இருந்த சொத்து எப்படி தனி பட்டாவாக மாற்றப்பட்டது என்ற தகவல்களை முதலில் ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறுங்கள் .அந்த விபரங்களை முழுமையாக தெரிந்து கொண்டபின் பட்டாவில் திருத்தம் செய்ய மனு கொடுக்கலாம். இங்கு கொடுக்கப்படும் இவையெல்லாம் பொதுவான ஆலோசனை தான் . உங்கள் ஆவணங்களைப் பார்த்து உங்களுடன் முழுமையாக விவாதித்த பின் தான் சரியான குறிப்பான ஆலோசனை சொல்ல முடியும் .எனவே மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் உங்கள் ஆவணங்களை காட்டி ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி
@@SattamOnline நன்றி ஐயா
my late father written will's state that 3 heir varisu they are not married ( 1 son+2 sister) son is well educated and settled . so mother having life interest one house and house Land afters his then house goes to 1st sister and house land goes to 2nd sister. now 23 years gone. my first sister needs money for his son education, and 2nd sister wants construct house she go for bank loan. is it possible my mother can do release deed of life interest the property and made separate document for each sister
Yes mother can release her life interest. Alternatively all the legal heirs can now come forward and execute a comprehensive partition deed.
@@SattamOnline very thankfull
தனது தந்தையின் இறப்புக்கு பின் தந்தையின் பெயரில் சிட்டா அடங்கல் உள்ள வீட்டை மகன்
விற்கிறார் அதை கிரயம் no.1. பெற்று 13 வருடங்கள் உபயோகித்து வேறு ஒருவருக்கு விற்கிறார்
கிரயம் no.2 பெற்ற நபர் அந்த வீட்டை 12 வருடங்கள் உபயோகிக்கிறார்
இந்த நிலையில் பட்டா மாறுதல் செய்ய கிரயம் no. 2 பெற்ற நபர் D.T யை அணுகும் போது
முதன் முதலில் விற்ற நபரின் வாரிசு சான்றிதல் கேட்கிறார்கள்
முதன் முதலில் விற்ற நபரும் இறந்து விட்டார்
அவரது
இதை எப்படி அணுகுவது
எளிய முறையில் பட்டா மாறுதல் செய்ய வழிமுறைகள் என்ன?
Anupava santru yaarukitta vanganum
ஐயா நாங்கள் 1900 ஆண்டுகளில் இருந்து பட்டாவுடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு பின்புறம் நத்தம் பொறம்போக்கு நிலம் இருந்தது அதில் ஒரு 3 அடி சேர்த்து பயன் படுத்தி வந்து உள்ளனர் எங்கள் முன்னோர். தற்போது 1995 அம் அண்டு அரசாங்கம் நத்தம் போறோம்போக்கை பிளாட் பிளாட் ஆக மக்களுக்கு கொடுத்துருக்கிறது. அதில் நாங்கள் 100 ஆண்டுகளாக பயன் படுத்தி வந்த எங்கள் வீட்டுக்கு பின்புறம் உள்ள 3 அடியும் சேர்த்து கொடுத்து விட்டார்கள், அதை வாங்கியவர் 1995 இல் இருந்து possession எடுக்க வில்லை, என்றும் நாங்கள் தான் அனுபவித்து வருகிறோம்.2018 இல் எங்களுக்கு 3அடி உள்ளது என்று எங்கள் மீது வழக்கு தொடுத்தயுள்ளார். இது யாருக்கு சதாகமாக அமையும்.
ஐயா வணக்கம் இந்த adverse possession அண்ணன் தம்பிக்குள் அவர் நலம் என்று தெரியாது ஆனால் நிலம் அவர் பெயரில் உள்ளது அந்த நிலத்தை உழுது பயிர் செய்து வருகிறேன் அவரும் அதைப் பார்க்கிறார் ஆனால் அவர் நிலம் என்று அவருக்கு தெரியாது ஆனால் இப்பொழுது அவருக்கு தெரிய வருது இந்த மாதிரியான பிராப்ளம் எதிரிடை அனுபவ பாத்தியதின் அடிப்படையில் வருமா கூறுங்கள் ஐயா
அண்ணன் தம்பி களுக்குள் பாகப்பிரிவினை நடந்து விட்டதா பாகப்பிரிவினை நடக்கவில்லை என்றால் அது குடும்ப சொத்து என்றால் அதில் யாரும் அண்ணன் தம்பிகள் ஒருவர் மற்றொருவருக்கு இடையே எதிரிடை அனுபவ பாத்தியம் கோர முடியாது
விவசாய நிலங்களும் இதற்குள் அடங்குமா
பொருந்தும்
most needed information
Court sale property ah ennoda grandfather sale eduthu irukanga..But still case la exparte irunthvaanga adverse possession iruntha enna pannurathu sir..
நீதிமன்ற ஏலம் மூலம் வாங்கிய சொத்தை சுவாதீனம் எடுக்க உங்கள் தாத்தா முயற்சி எதுவும் செய்யவில்லையா? அந்த சொத்து எப்போது ஏலம் எடுக்கப்பட்டது என்பது போன்ற விவரங்கள் தெரிந்தால் தான் சரியான பதில் அளிக்க முடியும். நன்றி
@@SattamOnline grand father 1959 court sale la edutha property aathu sir......1971 la oru suit ennoda grand father recovery of possession & waran(வாரம்) கேட்டு oru suit potu irukanga..antha time la (exparte)opposite party enga grand father kita waram(வாரம்) poturen solli document eluthi kututhu irukanga.. property ah vachu innum use pannuranga except patta avaunga kita onnu illa....Avunga enga pangali (பங்காளி) thaan sir...EC la still enga grand father name thaan varuthu...Register office la sale certificate ah ennoda grand father name la court irunthu register pannitanga with stamp fees ooda...
Waran என்று தாங்கள் சொல்வது என்னவென்று எனக்கு புரியவில்லை .ஏனென்றால் அந்த வார்த்தை எங்கள் ஊர் பக்கம் வழக்கத்தில் இல்லை .அதை கொஞ்சம் விளக்கவும்.
@@SattamOnline குத்தகைக்கு போடுவது sir
அவர்கள் குத்தகை பணம் தொடர்ந்து கொடுக்கிறார்களா?
ஐயா எனது தாத்தா 1974 ல் 58 சென்டு இடத்திற்கு பணம் செலுத்தினார். அதில் 44 சென்டு இடம் பத்திரம் எழுதிவாங்கிவிட்டார்.14 சென்டு இடம் எழுதி வாங்கவில்லை. ஆனால் அந்த முழு இடத்தையும் இன்று வரை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த 58 சென்டு இடத்தில் 17 சென்டு எனது அப்பா பெயரில் பட்டா மாற்றியாச்சு இன்னும் 41 சென்டு மாற்றாமல் அந்த நபரின் பெயரில் உள்ளது .அந்த முழ நிலத்தையும் பட்டா மாற்றவும் எழுதி வாங்காத 14 சென்டு இடமும் எங்களுக்கு சேர என்ன செய்ய வேண்டும். கொஞ்சம் அறிவுரை வழங்குங்கள்.
சார் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன் எனக்கும் இது போல் வழக்கு இருக்கின்றது பணம் கொடுத்து ரிஜிஸ்டர் ஆகாமல் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றது அதை எப்படி உரிமை கூறுவது என்று உங்களுடைய ஆலோசனை தேவைப்படுகின்றது
எதிரிடை அனுபவம் மூலம் உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்ப்புரை பெற்று பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது பிரதிவாதிகள் தடுக்கின்றனர் இதை எவ்வாறு அணுகுவது
Is this applicable for person with UDR patta
எங்களிடம் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது அதன் முதலாளிகள் எங்கு உள்ளார்கள் என்றே எங்களுக்கு தெரியவில்லை 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தான் விவசாயம் செய்து கொண்டுள்ளும் அதனை எங்களுது பெயருக்கு எப்படி மாற்றுவது
வணக்கம் சார் என் தந்தை அவர் மைத்துனர் இடம் மற்றும் அவர் இடம் இரண்டை மும் சேர்த்து ஒரு வீடு கட்டி வாழ்ந்து வந்தார் 96 ஆம் ஆண்டில் இரண்டு மனைக்கு சேர்த்து பட்டா வாங்கி வரி கட்டி வருகிறார் அவர் பெயரிலேயே மின்சார வரி குடிநீர் வரி செலுத்தி வந்தார் மைத்துனர் எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என் தந்தை 2005 வருடம் இறந்து விட்டார் இந்நிலையில் என் தந்தை யின் இரண்டாம் மனைவி என் மாமாவின் இடத்தை உயிலாக எழுதி வாங்கி கொண்டார் முதல் தாரத்திர்கு மூன்று வாரிசு இரண்டாம் வாரத்திற்கு ஒரு வாரிசு என் அப்பா 78 லவ் வீடு கட்டி 96 ல் பட்டா வாங்கி இன்றளவும் அவர் பெயரில் தான் அனைத்து வரி மும் செலுத்தி வருகிறோம் இந்நிலையில் சென்ற ஆண்டு மாமா காலமானார் இப்போது அவர் உயில் எழுதி வைத்த இடம் என சித்தி க்கு போகுமா அல்லது 12 வருடங்களுக்கு மேலாக என் தந்தை அனுபவ பாத்திரத்தில் இருந்ததனால் எங்கள் அனைவருக்கும் சொந்த மா ஆம் எனில் என்ன செய்ய வேண்டும்
உங்கள் தந்தை அவரின் மைத்துனரிடம் அனுமதி பெற்று இடத்தை அனுபவித்தாரா அல்லது எதிரிடை அனுபவ பாத்தியம் மூலமாக அனுபவித்தாரா என்பது முடிவானால் தான் உங்களுக்கு அனுபவம் வருமா என்பது பற்றி பதில் சொல்ல முடியும் .மைத்துனரின் அனுமதிபெற்று அந்த அனுமதியின் அடிப்படையில் அனுபவித்து இருந்தால் அந்த மைத்துனர் எழுதிய உயில் செல்லுபடியாகும் .எதிரிடை அனுபவ பாத்தியம் பெற்று அனுபவித்திருந்தால் உங்களுக்கு அனுபவ உரிமை கிடைக்கும் .இவை எல்லாம் ஒரு வழக்கு என்று வரும்போது சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் வாய்மொழி சாட்சியங்களை வைத்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும்.
நன்றி 🙏@@SattamOnline
எந்த ஒரு எழுத்து பூர்வ அனுமதி யும் பெற வில்லை ஆனால் நாங்கள் வசித்து வருவது அவருக்கு தெரியும்
எதிரிடை அனுபவ பாத்தியத்திற்கான நிபந்தனைகளைப் பற்றி இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன். அதை மீண்டும் பாருங்கள். அந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகி இருந்தால் நீங்கள் அனுபவ பாத்தியம் மூலம் உரிமை கொண்டாட முடியும். நன்றி
@@SattamOnline நன்றி
Sir we r in a house almost nearly 40years since 1970.....now my present neighbour all of a sudden files a suit against me for eviction.in 2009 ...we were not tenant under him or anybody..we. R in peace full posseion... Now he shows an evidence of property details that it belongs to him....our home is a small next to his building.....we r also attending the court regularly..we r quite afraid of our advocate as he speaks harshly.....shall we vacate ...or stay please answer me..
As per the details provided by you, you can claim adverse possession. But correct and proper opinion can be given only on seeing your case papers. It's upto you to decide whether to vacate or contest the case. Thanks
@@SattamOnline thank u sir