என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை | மதுரை சோமு | ஆதிசேஷ ஐயர் | பாடல் வரிகளுடன்
Vložit
- čas přidán 21. 08. 2024
- பாடல்: என்ன கவி பாடினாலும்
அருளியவர்: அயனம்பட்டி ஆதிசேஷ ஐயர்
பாடியவர்: மதுரை சோமு
ராகம்:-சிவரஞ்ஜனி
தாளம்:- ஆதி
பல்லவி:-
என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...
என்ன கவி பாடினாலும்
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியும் பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை
என்ன கவி பாடினாலும்
அட்சரலட்சம்
அட்சரலட்சம் தந்த
அன்னல் போஜ ராஜன் இல்லை
பக்ஷ்முடனே அழைத்து
பரிசளிக்க யாரும் இல்லை
இக்கணத்தில் நீ நினைந்தால்
எனக்கோர் குறைவில்லை
முருகா... முருகா...
லட்சியமோ உனக்கு முருகா
லட்சியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
என்ன கவி பாடினாலும்
குரலில் இப்படி ஒரு உருக்கம் யாரும் தரமுடியாது,நெஞ்சை பிழிகிறது
ppppllllllllllllllllllllllllllllllpppppppppplppplllppppppppppppppllllllplllppppppponcjjkkkoppppppppppppppppiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioiiiip000o90oooooooo
...........kllllllookkkkkkkkkkkkkk9888888888888jinnnnnnnijiiiiiiiitt664eeeeeeeerrrkk ppppppppppp6
இனிமேல் இப்படி பாட ஒரு பாடகர்??
காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 78ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
இவர் மதுரை திரு .சோமசுந்திரம்
(மதுரை சோமு அவர்கள். ) அல்லது தண்டபாணி தேசிகர்.
@@raghavanseshadri1781 oh தேசிகரும் ம.சோமுவும் ஒருவரா?
7uuuk
8i
Recent ah viral Aana super singer junior audion la sinna paapa padunatha paathuttu yaarulaam idha search panni paathuttu ulla vandhinga, attendance 👆 pottu poonga
❤
Yes😊
ஐயா உங்கள் பாடலை வைத்து பல பேர் வாழ்கிறார்கள். அடியேன் தங்கள் குரலுக்கு அடிமை.
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை அன்னையும் அறியவில்லை அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன் மாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன் மாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை இஜகத்தில் நீ நினைந்தால் முருகா முருகா
இஜகத்தில் நீ நினைந்தால் என்கோ குறைவில்லை இஜகத்தில் நீ நினைந்தால் என்கோ ஓர் குறைவில்லை இலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை இலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
அருமை நண்பரே❤❤❤❤❤
மனதை நெகிழ வைத்த பாடலும் குரலும்.... அருமை..
நன்றி 🙏
எத்தனை முறை கேட்டாலும் ருசித்தாலும். திகட்டாத தேன் மதுரை சோமு.. டி. எம். எஸ். சீர்காழி... இவர்கள். என்னப்பன். முருகனுக்காகவே. பிறந்தவர்கள்.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... 🐓🐓🐓🐓🐓🐓
Super singer reals பாத்துட்டு வந்தவங்க யாரு 👇👇👇👇
முருகனுக்கு இப்படி ஒரு பாடல் உள்ளதை இப்போதே அறிகிறேன்😳
🙏🙏🙏🙏🙏🙏
தெய்வ அருள் பெற்ற பாடகராக திகழ்ந்து நம் நெஞ்சங்களில் வாழ்பவர்
அய்யா சோமு அவா்களே தாங்களுக்கு கோடி நமஸ்காரம். நான் கேட்காத பாடல் மறு பிறவி அடைந்தது போல்
"மருதமலை மாமணியே முருகையா" பாடல் வந்த போதுதான் இவர் தமிழ் மக்களின் அன்பைப் பெற்று மனதில் நீங்காத இடம் பிடித்தார்!
கர்நாடக இசை உலகில் கொடி கட்டி பறந்தவர் அவர். மருதமலை மாமணியே பாடலின் மூலமாக திரையிசை பாடல்களை மட்டுமே கேட்பவர்களுக்கும் அறிமுகமாகி உள்ளம் கவர்ந்தார்.
இசை மாமேதை
இதுவே இவர் சினிமாவில் பாடிய முதல் மற்றும் கடைசி பாடலும் ஆகும்...
மதுரை சோமு அவர்களின் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதியதாக கேட்பது போல் இருக்கும். ஜெயஸ்ரீ
இப்பாடலை கேட்டல் கண்ணீர் தானாக வழிந்தோடுவது மட்டுமல்லாது இறைபக்தி கூடுகிறது ஐயா - நன்றி
அருமையான சோகப்பாடல் இந்த மாதிரி யாரும் இனிமேல் பாட முடியாது சோமு சோமு சோமு நீ வாழ்க நீ வாழ்க
சோமு ஐயா அவர்களின் குரலின் உருக்கம் உயிரோடு உறவாடும். அவர் இந்தப்பாடலைப் பாடியதை முன்னால் இருந்து பார்க்கும் பாக்கியம் 1979 ல் பெற்றேன்.
No comparison to any thing in world
gopijr2003@yahoo.co.in
அருமையான பாடல்.. அலட்சியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை முருகா.. என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...
Murugan
கொடுத்து வைத்தவர் நீங்கள்.
எனக்கு நிம்மதி இல்லாத போது கேட்கும் முதல் பாடல் ஆறுதல் அளிக்கும் குரல் .முருகா இன்னும் என்ன சோதனையே..
உள்ளம் உருக்கி உவப்பெய்திப் பாடும்போது அவர் நாக்கில் சரஸ்வதி நடம்புரிந்தது போன்ற பாக்கியம் செய்தவர் காலஞ்சென்ற மதுரை சோமு ஐயா அவர்கள். அவர் பாடல்களை நாம் எப்போது வேண்டுமானாலும் கேட்க உதவும் தற்கால கைபேசி (கையுலகம்) க்கும் இந்த நேரத்தில் நாம் நன்றி கூறவேண்டும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
Arumai Muruga Saranam
பத்ம ஸ்ரீ மதுரை சோமு அவர்கள் குரலில்தான் இந்த பாடலை கேக்கணும் என எனக்கு தோன்றுகிறது
தெய்வீக குரல் கேட்கும் போதே அழுகை வருகிறது.ஐயாவின் அருகில் முருகனும் தெரிகிறார்
"இக்கணத்தில் நீ நினைந்தால்
எனக்கோர் குறைவில்லை
முருகா..... முருகா..."
அற்புதமான பாடல்
நெஞ்சம் நெகிழ்ந்திடும்
ராகம்,பாவம்.
இசை மேதை"மதுரை சோமு"
அவர்களின் புகழ் வளரட்டும்🙏🙏
ஸ்ரீஆனந்ததாஸன்
ஆனந்தம்
சோமுவின் குரல்வளம் வெறும் சுருதி தாளம் ராகத்தால் மட்டும் மெருகேறவில்லை. எத்தனையோ பிறவி களில் அவர் செய்த நற்பயன்களால் விளைந்த தவ பலத்தால் அவருக்குள் சுயம்புவாக உயிர்ப்போடும் உணர்வோடும் இருக்கும் பரவச ப் பேருணர்வும் பாவனை நிறைந்த கலைச் சிறப்புமே ஆகும். ஆயினும் இவரைப் போன்ற மகோன்னதமான சங்கீத கலாநிதியை இந்த இசை உலகம் ஏனோ இரண்டாம் இடத்தில் தான் வைத்திருக்கிறது. இது இசை உலகமத்திற்குக் கிடைத்த சாபம்.
கல்லும் உருகி விடும் உங்கள்குரலுக்கு முருகனும் கரைந்துஇருப்பார் காப்பார்முருகன்
முருகா முருகா முருகா என்று கதறவேண்டும் போல் உள்ளது.
உண்மைவரிகள்வலிகிறதுமனம் முருகாஇக்கனம்நீநினைத்தால் நான்பணக்காரன்
இப்படிப்பட்ட குரல்வளம் மிக்க இனிமையான தெய்வீக ராகத்தில் பாடுவதற்கு இன்னொருவர் பிறந்து வருவதற்கும் வாய்ப்பில்லை உள்ளபடியே என் மனதை இவ்வாறு நான் எந்த பாடலுக்கு என் மனதை இழந்ததில்லை
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இறங்க
வில்லை.
இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர்
குறையுமில்லை(2)
அலட்சியமோ உனக்கு முருகா
உன்னை நான் விடுவதில்லை
முருகா.(2)❤❤❤❤❤
திருத்தம்: அண்ணல் போஜராஜன்... அலட்சியமோ உனக்கு உன்னைநான் விடுவதில்லை…
மனதை உருக்கும் பாடல் நடுவில் அவருடன் இருக்கும் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் அவருக்கு நிகர் அவரே.
ராதாகிருஷ்ணன்
கோவை
இந்த பாடல் கேட்கும்போது எனக்கு அழுகையே வந்துவிட்டது. முருகா முருகா முருகா
That is the right response to this song, if your heart is pure
அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
ஆணையாம்பட்டி எந்த டிஸ்டிரிக்
@@dthirumangai7592 boolk
ஆரம்பிக்கும் போதே உயிர் உருகுது முருகா முருகா
கவலை, மன அழுத்தம் இருக்கும்போதேல்லாம் நான் தேடிவந்து கேட்கும் பாடல். முருகனின் அருளா அல்லது மதுரை சோமு அய்யாவின் குரல் வளமா எனத் தெரியவில்லை இதுவரை எத்தனை முறை கேட்டிருந்தாலும் ஒருமுறை கூட சலிப்பே வரவில்லை...
Best singer is Madurai Somu the great
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீ ஆனந்ததாஸன்
முருகா முருகா கண்கள் குளமாகி வேண்டுகின்றேன் தமிழ்நாடு உள்ளடக்கிய இந்தியா வை போலி திராவிடம் பிரிவினை தமிழ் தேசியம் அயல்தேச மத ங்கள் மற்றும் சமயங்கள் ஆகிய தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி தேசம் நல்ல கதி பெற ஒரு வலிமையான நல்லவரைத் தேர்ந்தெடுக்கும் நல்ல புத்தியை அனைத்து அடியார் களுக்கும் பிற அன்பர்களுக்கும் தா. சைவம் உலகெல்லாம் தழைக்க உன் திருப்புகழ் இல்லங்கள் தோறும் இசைக்க அறநெறி தவறாத அரசு அமைக்க எங்களுக்கு ஒருமித்த வலுவான சிந்தனை மற்றும் செயலை ஆற்ற அருள் கொடப்பா.
லட்சியமோ இல்லை;, அது அலட்சியமோ உனக்கு, உன்னை நான் விடுவதில்லை, முருகா முருகா 🙏🙏🙏
👌👌👌👌🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
உண்மையுள்ள பக்தி
உல்லம் உருகி பாடுகிறார் அய்யா மதுரை சோமு.
அருமையான பாடல் சோமு அய்யா
மருதமலை மாமணியே முருகையா பாடிய வரும் இவரே.
மிக உச்சசாயிலில் இவர் பாடியது போல் இதுவரை யாரும் பாடவில்லை.
என்ன கவி பாடினாலும் இவரது மொலடி . முடியாது இவர் போல் பாட இயலாது.
ஏன் எனக்கு கண்ணீர் வருகிறது!. உருகும் மதுரை.சோமு அய்யா வின் சோக குரலா? (அ) அவரது கமகங்களா? (அ) பாட்டின் அழுத்தமான வார்த்தைகளா ? புரியவில்லை.
தங்களுக்கு ஏற்பட்ட உணர்வு எனக்கும் ஏற்பட்டது
Mee too 🙏
Me too.
Yes... I have same feel.
உயிரை உருக்குகிறது....இந்த பாடல்.....
அருமையான முருகர் பாடல்
பாடி . நாங்கள் அனைவரும்
உங்களை காணமுடியவில்லை
என்ற ஏக்கம் எங்கள் உயிர்
உள்ளவரை உங்கள் குரல்
மனதில் ஒலித்து கொண்டே
இருக்கும்
அருமை அருமை சோமு ஐயாவின்... உருக்கும் குரல்...உடன்...வயலின்? இசை 🙏
சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏எம் மகிழ்ந்து நெகிழ்ந்து உருகியது சிவமே🙏🙏🙏🙏 😭😭😭😭🙏🙏🌿🌿🌿🌿
நான் வழக்கமா கேட்கும் மதுரை சோமு பாடல்களில் இதுவும் ஒன்று.
ஈடு இனையில்லாத பாடல் கேட்கும்போது கண்ணில் நீர் வருகிறது அற்புதமான குரலுக்கு சொந்தமான மதுரை சோமு ஐயா பாடல் அருமை அற்புதம்
Late always now fifty yearnot feel now twenty year am happy bless
என்னை மிகவும் கவர்ந்த பாடல் எழுதியவருக்கு அல்லாது பாடியவருக்கு எனக்கிருக்கும் பாதிப்பு " அன்னையும் அறியவில்லை" என்ற பரிதவிப்பு இருந்திருக்கும். அன்னையும் அறியவில்லை...... ஆகா!.. அன்னையும் அறியவில்லை ... சபாஷ்!. என்ற இடங்கள் என்னை மிகவும் கவர்ந்து, பாதித்தது. அருமை! அருமை!. நன்றி.
👌👌👌👌👌👌👌🧡🧡🧡🧡🧡
என்னுடைய மனதின் புலம்பல்
புல்லரிச்சி போயிருச்சி உடம்பு
ரசிக்கிறார் இசையை அல்ல... இறைவனை 🔥🔥❤️
உண்மையான பாட்டு.. மனதை உருக்கும் குரல்.. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்..
Super Voice 👌
சோமு ஐயா வைத்தவிர வேறு ஒருவர் இப்பாடலை கையாலுவது கடினம். இவர் பாடுவதற்காகவே இயற்றப்பட்டிருக்குமோ தெரியவில்லை. உருக வைக்கும் முருகபக்தர்.
எத்தனையோ பாடல் வந்து அத்தனையும் இறைவன் மயம்இல்லையென்றுசொன்னால் இன்பமயம்என்பதில்லை.
இந்தபாடலில்இறைவன்உள்ளான்என்பதைஉள்ளம்உருகிபாடியது.
இப்பாடலை என்று கேட்டாலும் கண்கள் குளமாகும்
இவரை பேன்ற பாடகரை இனி காண்பது அரிது.மருதமலை மாமணியே என்ன ஒரு அருமையான பாடல்
அப்பாடல் சீர்காழி அவர்கள் பாடியதென்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன்
இசையை உணர்ந்தவர்களுக்கு
இது தேன் சுவை
மற்றவர்கள்
கழதைக்கு தெரியுமா
கற்பூர வாசனை
பெரும் மகிழ்ச்சி ..முருகனருள் முழுமையா பெற்ற மகத்தான மனிதர்
ஐயா சோமு அவர்களுக்கு எங்கள் உருக்கமான நன்றிகள் - முருகனை நினைத்து இப்படி பாடவேண்டும் என்றால் எங்கள் வேண்டுதலை மறந்து இப்பாடல்எங்களால் உங்களை போல் மன உருகி பாடமுடியவில்லை |
மதுரைசோமு அவர்களின் மதுரக்குரலோசை மறக்க முடியாதபடி செய்து விட்டபாட்டு
ஓம்முருகா
இந்த பாடலை கேட்க கேட்க மனதில் உள்ள இறுக்கம், கஷ்டம், துன்பம் நீங்கி மனம் தெளிவாகிறது.
இந்த அற்புதமான பாடலின் ராகம் நீலமணி அல்லவா? மதுரை சோமு அய்யாவின் குரலில் திகட்டாத தேனாக ஒலிக்கின்றது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
subscribe
தினமும் காலை சுப்ரபாத பூஜைக்கு இந்தப் பாடலை பாடி சென்னியாண்டவரை வணங்கும் பாக்யத்தை வழங்கிய சிரகிரி வேலனுக்கு கோடானுகோடி நன்றிகள்.
சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரோ.
ஒவ்வொரு தடவையும் என்னை அழவைத்த இவர் ஒரு மஹான்! இசையின் ஆத்ம ஞானி!
இந்த ஜென்மத்தில் என் காதுகள் மற்றும் ஆழ் மனது ஏதோ புண்ணியம் செய்துள்ளது . வணங்குகிறேன் மஹான் ஐயா!🙏🏻🙏🏻🙏🏻
Nice Alabanai is enjoyed in this song.
பழனிமலை முருகனை நினைத்து இந்த பாடலை கேட்க கேட்க எனக்கு அழுகை வந்து கொண்டே இருந்தது
🙏 நீலமணி ராகத்தின் உருக்கம் மிகவும் அருமை🙏🌹
🙏❤️😍
கோடி நமஸ்கரம் ஐயா-தனித்துவம் உங்கள் குரல்வளம் & ராக-ப்ரஸ்தாரம் - etc etc🙏🙏🙏💐💐💐
🔥Om Muruga Saranam🔥
உயிரோடு கலந்த உருக்கமான பாடல். ஐயாவின்குரல்
மனதில் கவலைகள் நிறைந்த நேரத்தில் உயிரையே பிழிந்து உருக்கும் குரல் ஆறுதல் தந்திடும் பாடல் மதுரை சோமு அய்யா புகழ் காலத்தால் அழியாது.
மதுரை சோமு பாடும் விதம் குரல் வளம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது. உங்கள் குறைகளை சொல்லி இந்த பாட்டை போட்டு உங்கள் "முருகனை " வணங்கினால் கண்ணீர் வடியும். இது நிட்சயம். உங்கள் மனம் அமைதியாக முருகனிடத்தில் இருக்க வேண்டும். என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை 🙏😩😩💦
தாங்கள் இந்தப் பாடலை பாடியதை நேரில் ரசித்தேனே. 1975ம் ஆண்டு பாலகோபாலபுரம் பள்ளி பொள்ளாச்சியில். நீங்கள் என் தந்தையின் நெருங்கிய நண்பர் எனபதில் எனக்கு மிகுந்த பெருமை.
குறள் வளம் முருகன் அருள் கண்ணீர் வருகிறது.முருகா
இதயம் கசிந்து விடுகிறது...
இசைப் பேரரசு.குரல் வளம்.
ஓம் முருகா சரணம் சரணம் சரவணபவ முருகா 🌹🌹🌺🌼🌼வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🌹🌹🌿☘🍀🌼🌼🤲🤲🙏🙏
பக்தன் எப்படிப் பாடுகிறார், உள்ளமும் உடலும் உருகி உருகிப் பாடுகிறார்.
Special song for Shri madurai somasundaram ayya avargaluku.it was very famous song since1970 onwards.this song was written by my grand father Shri anayampatti adisesha iyer.honoured to listen this song
🙏
Great salute to my family
👏🤝
Namaskarams
மனமுருக எழுதிய அந்த மகானுக்கு வணக்கங்கள். அவர் பிறந்த நாட்டில் பிறந்ததையே பாக்கியமாக நினைக்கிறேன். அவருடைய வாரிசாக நீங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களுக்கும் வணக்கம்
siva siva 🙏
om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava
saravna gugha sanmugha 🙏
இன்னும் நான் கேட்காத பாடல் எத்தனையோ?❤
I don't know Tamil.
But What a Devotion while Singing.
Mesmerising Voice.
Even Gods go crazy at his Devotion& Involvement.
This is called
"The Art of Singing"
Koti Koti Pranam to this Legend🙏🙏🙏
SIR, THE SINGER CRIES WHY LORD MURUGA DOES NOT BLESS HIM. WHY EVEN LORD MURUGAS MOTHER, FATHER UNCLE OR AUNT DO NOT CARE HIM. EVEN IF I SING LOTS OF SONGS. IF LORD MURUGA BLESSES THERE WONT BE ANY PROBLEM. MURUGA I WONT LEAVE YOU............
Ennudeya sabtha nadiyum adangividugiradhu. I ENJOYED THIRUVARUR TEMPLE AND ASWAMETHA mahamandapam in West mambalam chennai
சமீபத்தில் சித் ஸ்ரீராம் அவர்களின் இனிமையான குரலில் கேட்ட பொழுது மெய் மறந்து போனேன்
இப்பொழுது இரண்டாவது முறையாக கேட்கிறேன் மெய் சிலிர்க்க வைக்கிறது அருமையான பாடல் அருமையான குரல்
அப்பனே முருகா என்ன கவி பாடினாலும் உனக்கோ கேட்பதில்லை
கவிதை அருமை பாடிய மதுரை சோமுஅய்யா குரல் வளமோ பெருமை உருகிப் பாடினால் அருள் கூடாமலா போகும்
மிக மிக அருமையான பதிவுகள் நன்றி வாழ்க வளமுடன் அருள்நிதி அக்குஹீலர் க ஏ மோகனசுந்தரம் காஞ்சிபுரம்
முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
உந்தன் மனம் இரங்க வில்லை,,,,,இறைவனை குறை சொல்வது
போல் இல்லையா,,,,,,
அருட் பெருஞ் ஞோதி தனிப் பெருங் கருணை,,,அல்லவா அவன்,,
இனிய குரலமுதே
எங்கள் துயர் களையும் பெருங்கடலே
இம்மண்ணில் என்றும் இறவாப் புகழ்க்கொண்ட இசையரசே
உங்கள் பொற்பாதத்திலென் தாழ்பணிந்து வணங்குவேன் கோடி கோடி முறை
ஓம் முருகா
ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது நாம் செய்த பெரும் பாக்கியம். இசை தெய்வத்தின் உண்மையான குழந்தை. வீண் விளம்பரம் தேடத் தெரியாதவர். அவர் ரொம்பவே busy ஆ வெளி நாடு எல்லாம் போய் விட்டு வந்து busy ஆன நேரம். எங்க ஊருக்கு mid night ல நேரே aerodrome ல இருந்து மேடை க்கு vanthu throat கட்டி கொண்ட தை கூட பொருட் படுத்தாமல் இசை பற்றி நீண்ட விளக்கம் கொடுத்து எல்லா நாட்டு இசையும் பாடி காண்பித்தார். ஆனந்தம் மக்களுக்கு. அப்போ எல்லாம் record கூட செய்தார்களா தெரியல. வாழ்க ஐயா somu. வளர்க அவர் தம் புகழ் 🙏🙏
Chinnachirupenpola
அருமையான பாட்டு. நன்கு குரல்வளம் மிகுந்த பாடகர். கேட்க நாங்கள் பாக்கியம் பெற்றோம்.
அருமையாக இருக்குஇந்த பாடல்
போஜராஜன் என் குலத்தெய்வம்.. அருமையான பாடல்
போஜராஜன் என்பவர் யார்
வயலின் : லால்குடி ஜெயராமன். மிருதங்கம்: சி.எஸ். முருகபூபதி.
ஆயிரம் நமஸ்காரம்
அருமை அருமை
தெய்வத்திரு மதுரை சோமு அவர்களின் தெய்வப் புகழ் வாழ்க!
மெய் சிலிர்த்தது
CARNATIC legend Somu iya avrgal. Meenakshi Maindhan.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
Ayya unkal patham thottu vannunkiren
ஆஹா! உள்ளம் உருகுதய்யா
நீலமணி ராகத்தில் அமைந்த இந்த பாடல் கேட்க ரொம்ப அருமை
நம் சிந்தயை மேம்படுத்த கூடிய, இனிய குரல்,
My God. What a voice modulation. Our mother tongue Tamil iis above anyther language. Proud to born in TamilNadu. Feel like crying.