'ACHCHO PATHIKAM'('அச்சோப்பதிகம்')~THIRUVASAKAM ~SUNG BY MAYILAI SRI Pa. SARGURUNATHAN.

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2023
  • எட்டாம் திருமுறை.
    ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
    'திருவாசகம்'.
    051 - 'அச்சோப் பதிகம்'
    'அச்சோ' என்பது வியப்பிடைச்சொல். இறைவன் தமக்குச் செய்த கருணையை 'அச்சோ 'என்று வியந்து பாடிய பதிகமாதலின், இஃது அச்சோப்பதிகம் எனப்பட்டது.
    சிறப்பு : அனுபவவழி அறியாமை.
    (அனுபவம் வந்த வழியை அறியாமை.)
    கலிவிருத்தம்.
    திருச்சிற்றம்பலம்.
    முத்திநெறி அறியாத
    மூர்க்கரொடு முயல்வேனைப்
    பத்திநெறி அறிவித்துப்
    பழவினைகள் பாறும்வண்ணஞ்
    சித்தமலம் அறுவித்துச்
    சிவமாக்கி எனை ஆண்ட
    அத்தன்எனக் கருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 1.
    நெறியல்லா நெறிதன்னை
    நெறியாக நினைவேனைச்
    சிறுநெறிகள் சேராமே
    திருவருளே சேரும்வண்ணம்
    குறியொன்றும் இல்லாத
    கூத்தன்தன் கூத்தையெனக்
    கறியும் வண்ணம் அருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 2.
    பொய்யெல்லாம் மெய்யென்று
    புணர்முலையார் போகத்தே
    மையலுறக் கடவேனை
    மாளாமே காத்தருளித்
    தையலிடங் கொண்டபிரான்
    தன்கழலே சேரும்வண்ணம்
    ஐயன்எனக் கருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 3.
    மண்ணதனிற் பிறந்தெய்த்து
    மாண்டுவிழக் கடவேனை
    எண்ணமிலா அன்பருளி
    எனையாண்டிட் டென்னையுந்தன்
    சுண்ணவெண்ணீ றணிவித்துத்
    தூய்நெறியே சேரும் வண்ணம்
    அண்ணல்எனக் கருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 4.
    பஞ்சாய அடிமடவார்
    கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
    நெஞ்சாய துயர்கூர
    நிற்பேன்உன் அருள்பெற்றேன்
    உய்ஞ்சேன்நான் உடையானே
    அடியேனை வருகஎன்று
    அஞ்சேல்என் றருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 5.
    வெந்துவிழும் உடற்பிறவி
    மெய்யென்று வினைபெருக்கிக்
    கொந்துகுழல் கோல்வளையார்
    குவிமுலைமேல் வீழ்வேனைப்
    பந்தமறுத் தெனையாண்டு
    பரிசறஎன் துரிசுமறுத்
    தந்தமெனக் கருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 6.
    தையலார் மையலிலே
    தாழ்ந்துவிழக் கடவேனைப்
    பையவே கொடுபோந்து
    பாசமெனுந் தாழுருவி
    உய்யுநெறி காட்டுவித்திட்
    டோங்காரத் துட்பொருளை
    ஐயன்எனக் கருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 7.
    சாதல்பிறப் பென்னுந்
    தடஞ்சுழியில் தடுமாறிக்
    காதலின்மிக் கணியிழையார்
    கலவியிலே விழுவேனை
    மாதொருகூ றுடையபிரான்
    தன்கழலே சேரும்வண்ணம்
    ஆதியெனக் கருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 8.
    செம்மைநலம் அறியாத
    சிதடரொடுந் திரிவேனை
    மும்மைமலம் அறுவித்து
    முதலாய முதல்வன்தான்
    நம்மையும்ஓர் பொருளாக்கி
    நாய்சிவிகை ஏற்றுவித்த
    அம்மையெனக் கருளியவா
    றார்பெறுவார் அச்சோவே. 9.
    திருச்சிற்றம்பலம்.

Komentáře • 46

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +3

    திருச்சிற்றம்பலம்

  • @eatingsamayal5255
    @eatingsamayal5255 Před rokem +4

    வயலின் இனிது மிருதங்கம் இனிது குரலோ இனிது இனிது பதிவும் இனிது உங்கள் இறை பனி சிறக்க எல்லாம் வல்ல ஈசன் அறுளட்டும் ஓம்நமசிவாய

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před rokem

      அடியேனின் பணிவான வணக்கங்களும் நன்றியும்.. 🙏🙏🙏

    • @rukmanymaran2995
      @rukmanymaran2995 Před 10 měsíci

      You have done many many good deeds in your last birth, to get this chance in your this life. I feel the the God presents in your voice. I think I should have done at least few good things to your pedals.. God may give you a long blessed life.

  • @maruthachalamkrishnasamy2846
    @maruthachalamkrishnasamy2846 Před 9 měsíci +2

    நன்றிகள்.
    "யார் பெருவார்,?யார் பெற்றிருக்கிறார் மாணிக்க வாசகரைத் தவிர?
    ஏற்கனவே பதிவாகி அடியேனும் பதிவிறக்கி பல முறை கேட்டு ஒருநாள் காணாமல் போன பதிவு.
    இன்று அந்த ஆனந்தம் மறுபடியும் என்னெஞ்சில்.
    " சுண்ண வெண்ணீறு அணிவித்து"
    எம்பெருமான் நடராஜனின் அபிஷேகத்தின் போது, திருநீறு அபிஷேகத்தைக் காண நாலாயிரங் கண்ணும் போதாது.
    அபிஷேக திருநீற்றை, தீட்சிதப் பெருமக்கள், அள்ளி எடுத்து, கீழே கிறங்கி நிற்கும் அன்பரிடம் வழங்குவார்கள்.
    உலகத்து நிதியெல்லாம் ஒருசேரப் பெற்றக் கருமியைப் போல, பேரின்பத்தோடு கைநீட்டி பெற்றுக் கொண்டு நெற்றி, கை, உடம்பு என,பேரார்வத்தோடு பூசிக்கொள்வார்.
    அதே வேகத்தில் திரும்பி, சுற்றி நிற்கும் மற்ற அன்பர்களிடம், யான் பெற்ற பெரும் பேரின்பம், அனைவரும் பெரும் விதமாக வழங்கி விடுவார்கள்.
    எத்தனை அபிஷேகம் நடந்தாலும், திருநீற்று அபிஷேகம் தனி அழகு.
    புகை கிழம்பி, ஒரு மயக்கும் மாய உலகம் கண் முன்னே விரியும்.
    அந்த அழகைக் காண வரும் திருவாதிரைக்கு தில்லைக்கு வருகிறேன்.
    நன்றிகள் நண்பரே.

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před 9 měsíci

      மிக்க மகிழ்ச்சி நண்பரே!
      தில்லையம்பலவனின் அபிஷேகத்தைக் கண்குளிர, மனங்குளிர தரிசித்துத் தாங்கள் பெற்ற ஆனந்த புளகாங்கிதம் நன்கு உணர முடிகிறது.
      நன்றி நண்பரே...

  • @srk8360
    @srk8360 Před rokem +4

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிகப் பதிவு..
    நன்றி நன்றி ஐயா
    திருச்சிற்றம்பலம் 🙏💐💐💐💐💐💐

  • @nellaiulavarapani7175
    @nellaiulavarapani7175 Před 2 měsíci +2

    🙏🙏 🕉 🙏🙏

  • @user-bq7mm7st6m
    @user-bq7mm7st6m Před 7 měsíci +2

    நமசிவாய🙏

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 Před měsícem +1

    No words

  • @selvarasathanaraj9720
    @selvarasathanaraj9720 Před 11 měsíci +1

    உய்யும் நெறிகாட்டும் சைவநெறிதனில் திருவாவுரர் தருவாசகம் வியப்பு! அச்சோவே பதிகம் வியப்பிலும் வியப்பு!
    ஐயா உமது காந்தர்வ குரலில் உள்ளத்தை உருக்கும் திருவாசகம் வியப்பு!!!

  • @chandranp1503
    @chandranp1503 Před 9 měsíci +1

    Verilm

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Před rokem +1

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA

  • @jayasreejayachandran2989

    மிகவும் அருமையான பதிவு ஐயா! சொல்ல வார்த்தைகள் இல்லை! சற்குருநாதர் ஐயா அற்புதமாக பாடியுள்ளார்! கண்கள் ஈறன் அணிந்தது.
    மிக்க நன்றி ஐயா, பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před rokem +1

      தங்களின் அன்பார்ந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. வணக்கங்கள். 🙏🙏🙏🙏

    • @jayasreejayachandran2989
      @jayasreejayachandran2989 Před rokem +1

      @@balasundharamsubramaniam318 🙏🙏🙏🙏🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Před 6 měsíci +1

    Thiruchitrampalam 🙏🙏🙏om sivaya nama 🙏🙏🙏🙏🙏

  • @swaminathanv5733
    @swaminathanv5733 Před 6 měsíci +1

    மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 Před 7 měsíci +1

    இனிய குரல். செட்டிநாடு காரைக்குடிஇல் கேட்டது....

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 11 měsíci +1

    சிவாயநம.
    சிவா திருச்சிற்றம்பலம்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 11 měsíci +1

    சிவாய நம🔱🙏🙏🙏🙏🙏🌿🙏

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 Před 11 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 Před 11 měsíci +1

    ஓம் நமசிவாய

  • @ramallingam7275
    @ramallingam7275 Před 9 měsíci +1

    அற்புதம் 🙏

  • @ashakrgb6592
    @ashakrgb6592 Před rokem +1

    Fantastic keep it.up

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 Před 9 měsíci +1

    💚💛🧡🙏🙏🙏🤝👍

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj Před 8 měsíci +1

    அச்சோப்பதிகம் என்று போடாமல் ஏன் முத்திநெறி !!

    • @balasundharamsubramaniam318
      @balasundharamsubramaniam318  Před 8 měsíci

      பதிகத்தின் தொடக்க வரியினைத் தலைப்பாகக் கொடுக்கப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை.
      தாங்கள் விரும்பிய வண்ணம் அச்சோப் பதிகம் எனத் தலைப்பினை அடியேன் மாற்றம் செய்துள்ளேன்.
      வணக்கம், நன்றி.