"ஒரு மகள் தன்னுடைய தந்தை (அ) தாயின் சொத்தில் உரிமை கேட்க முடியாத முக்கிய 3 சூழ்நிலைகள்"
Vložit
- čas přidán 23. 08. 2023
- ஒரு மகள் தன்னுடைய தந்தை அல்லது தாயின் சொத்தில் உரிமை கேட்க முடியாத முக்கியமான மூன்று சூழ்நிலைகள்:
1. ஒரு தந்தை அல்லது தாயினுடைய சொத்து முதலில் மூதாதையர் வழிவந்த சொத்தா அல்லது தந்தை அல்லது தாயினுடைய சுய சம்பாத்திய சொத்தா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
அதன் பின்பு அந்த சொத்து தன்னுடைய தாய் அல்லது தந்தையின் உடைய சுய சம்பாத்திய சொத்து எனில் அவர்களுடைய வாழ்நாளில் அந்த சொத்தில் உரிமை கேட்க ஒரு மகளுக்கு உரிமை கிடையாது. ஒருவேளை அந்த சொத்து தன்னுடைய தாய் அல்லது தந்தையின் உடைய மூதாதையர் வழிவந்த பரம்பரைச் சொத்தாக இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தில் உரிமை கேட்க ஒரு மகளுக்கு உரிமை உண்டு.
2. இரண்டாவது சூழ்நிலை, ஒரு மகள் தானாக முன்வந்து விடுதலை பத்திரம் எனக்கு இந்த சொத்து வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து இருந்தால் அத்தகைய சொத்தில் உரிமை கேட்க மகளுக்கு உரிமை கிடையாது.
• Ancestral Property/மூத...
3. 20.12.2004 க்கு முன்பு ஒரு சொத்தானது பாகப்பிரிவினை செய்யப்பட்டு இருந்தால் அந்த சொத்தில் உரிமை கேட்க மகளுக்கு உரிமை கிடையாது என்பதை "வினிதா ஷர்மா vs ராகேஷ் சர்மா" என்ற வழக்கின் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்சொன்ன மூன்று சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில் ஒரு மகள் தன்னுடைய தந்தை அல்லது தாயினுடைய சொத்தில் உரிமை கேட்டு வழக்கு தொடரவோ, சட்டப்படி போகவோ முடியாது.
"VINEETHA SHARMA VS RAKESH SHARMA"
குடும்ப உறவு நாசமாக போக இந்த சொத்துரிமைதான்.
It's true
மகள்கள் செய்யும் அட்டோலியம் தாங்க முடிவதில்லை
ஆமாம் 😢😢😢
Thank you m'aam . Very clear explanation 💐
Super madam very clear thankyou so much
Super information tq madam.....
Arumaiya sonninga
Madam will and settlement deed will valid before 2004 ?
🙏🙏🙏
நன்றி அம்மா
The third case applies to which property....that is after 2004 a daughter can ask for share in self earned property of father ?
அப்பா இறந்துவிட்டார் அம்மா மட்டும்இருக்கிறார்அம்மா பெயரில் சொத்து இருக்கு, இன்னும் பாகபிரிவிநை செய்யவில்லை, அக்கா தம்பி , தம்பி சொத்து தரமாற்றா, எனக்கு வருமா ketkkamudiyumaa
கேக்கலாம்
Paramabara sothula religion change aana ponnuku urimai iruka? ( Hindu to Muslim) inum sothu ethum pirikala,, plz tell me mam
UDR அடிப்படையில் தந்தைக்கு கிடைத்த சொத்தில் மகள் உரிமை கேட்க முடியாமா?
பாக பிரிவினை சொத்தை அம்மாவால் விற்க முடியுமா அவரது பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல்
Enga thatha(VENKADACHALAM)oda appa(MUTHUSAMIGOUNDAR) 2004 la death agittaru but sothu eathume enga thatha name la mathama poitaru
Enga thatha(VENKADACHALAM) ku 3 children's (1-MALAR 2- SANKAR 3-RAMKUMAR)
Ipo problem enana muthusamigoundar ku 4 children's en thatha avanga thangachi 3per
2011 la enga (muthusamigoundar) name la irunthu en appa Ramkumar and periyappa and athai malar ku patharam panni en thatha (Venkadachalam)kudutharu
Naanga 2019 la patta pannom en appa (ramkumar and Sankar)name la
En athai malar patta pannnala
Ipa one week munnadi than pannom
Problem: muthusami ponnunga 3per la 2per death oru ponnu than iruku
Ipa avanga pasanga vanthu problem pannuranga share venum nu
Muthusami name la kuda sothu illa varisu urimai than irunthuchi
Solution pls.......😐😞
இப்பொது அம்மாவும் என்னை கண்டுகொள்ளவில்லை நான் அனாதையாக நிற்கிறேன்
கண்டிப்பாக கேட்கலாம்... உரிமை உண்டு
😅@@legalfighter30
Hi mam thatha vangana idam paatti meala iruku avangaluku 1magan 3 magalgal avargal vangiyathu koil idam porampoku nu solranga 2 magalgal marriage aagi husband death ayita piragu 35 years ah thatha patti kuda tha irukanga aana magan problem aagi veeta vitu poidranga 25 years kazhichi paatti kooptu ne inga vanthu du pa solli koopdaranga vanthu 2 years kulla avanga iranthu poidranga ella documents um ponnunga eduthu vachittu enaku veetla pangu venunu kekaranga idharkidaiyilaye thatha oru ponnuku idam vanki veedu thaniya katti kuduthuttaru thathavum death aagitanga ippo oru ponnu mattum antha veetlaye irunnthukitu patti jewells ellame eduthukitanga patti iruntha veetayum eduthukitu avanga paiyan marumagal nu vachikitu veedu vidamatenu pidivathama irukanga maganuku oru magan oru magal antha maganum ippo death aagara nilaiyila irukanga ippo avarum death aagitaruna avar maganala antha sothula urimai kora mudiyuma illa case eathavathu potta koil idam apdinu problem varuma
V2la அப்பாதா இருக்காங்க அம்மா இல்ல. நான் என் தம்பி my sister அது ஓடிபோய் marriage pannikichu 19 வயசுல. appa sambaaruchu amma பேர்ல ரெண்டு இடம் வாங்கி போட்டாங்க. இடத அப்பா peruku இல்லனா எங்க ரெண்டு பேரு பேர்ல மாத்தனும்னா அது வந்து sign poattaathaa mattha முடியுமா pls சொல்லுங்க.
Ennakum adhae doubt
இந்த சொத்தின் மூலமாகத்தான் சகோதர சகோதரி பாசம் முறிந்து போகிறது பெண்களுக்கு சுபகாரியங்கள் திருமணம் போன்ற அனைத்து காரியங்களும் ஆண்கள் சீர் சிறப்பு பங்கு கொடுத்துவிட்டு எப்படி செய்வது பெண்கள் பாசத்திற்கு கட்டுபடவேண்டும் அந்த பெண் இறந்தால் கூட 5 குடம் தண்ணீர் ஊற்றுவது எப்படி இது பெண்களின் தவறான எதிர்பார்ப்பு
என் அம்மா அப்பாக்கு டிவோர்ஸ் ஆகி 20வருடம் ஆகிருது நான் அம்மாவிடம் 19வருடமா வளர்ந்து வருகிறேன் அப்பா என்னை இதுவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் இப்பொது அப்பாவிடம் சொத்து கேட்கமுடியுமா சொத்து தாத்தா பெயரில் உள்ளது
மூதாதையர் சொத்தில் பேரப் பிள்ளைகளுக்கு முழு உரிமை உண்டு.
பயனுள்ளதாஇருந்தது❤
வனக்கம் முதல் சுழ்நிலை இருக்கும் பட்சத்தில் மூன்றாம் சூழ்நிலை சாத்தியமாகுமா
2024.ல் பிரவிகள் நடந்தது. இப்போ எனக்கு கிடைக்குமா.
Oru sothu 2 aha perethu 1pangu4 mahaluku koduthathu poga 2pangai 1 maganukum avaren manaivekum perethu kodutar
Tarporhu antha 1 pangel magalgaluku bagam tharavenduma
question not clear....
வீடு மகனுக்கா?மகளுக்கா?
சட்டப்படி மகளுக்கு உரிமை உண்டா?
பொண்ணு கு வீடு 1% கூட உரிமை இல்ல நியாயமும் இல்ல 😊
சுய சம்பாத்திய சொத்தில் உரிமை கிடையாது என்கின்ற பிரிவு எந்த சட்டத்தில் எந்த பிரிவு அறிவிக்கவில்லை. அது வேண்டும்.
வணக்கம் மேடம் இப்ப என்னோட அம்மாவோட பிறந்தவங்க மொத்தம் அஞ்சு பேரு ரெண்டு ஆண் 3 பொண்ணுங்க இப்போ எங்க ரெண்டு மாமாவும் அவங்க ரெண்டு பேரும் இருக்கிற இடத்துல ரெண்டு பேரும் பாதி பாதியா பிரிச்சுக்கிட்டு வாய்மொழியாக பிரிவினை பண்ணிட்டாங்க எழுத்துப்பூர்வமான பாகப்பிரிவினை கிடையாது 2004 க்கு முன்பே பிரிச்சுட்டாங்க. இப்ப அந்த சொத்துல எங்க அம்மா பங்கு கேட்டா அந்த வழக்கு செல்லுமா செல்லாதா
I think sellathu
Mam ungkakitta paesanum.pls.
Madam yen appavin peyaril veedu vullathu nangal 3 pillaiga 1 annan oru akka nan 3 per appa veedu 3 pillaigalukkumnu sollierunthanga ....appa 2007 yeranthuttanga amma yenudan erukkanga annaunum yeranthu 3 varudam akirathu ..... Anni veetil erukkanga yengalukku pagam kudukkamudiyathu yenkirargal appavin peyaril erukkum sothai appavin erapirku piraku ammaval 3 perukku vuyil yelutha vurimai vullatha appadi seiyya mudiyuma madam pls madam yenakku reply pannunga madam
அப்பாவின் பெயரில் உள்ள சொத்து அவருடைய இறப்பிற்கு பிறகு அவருடைய வாரிசுகள் அனைவருக்கும் சென்று சேரும். இதில் அம்மா உயில் எழுதுவது என்றால் அவர்களுடைய பாகத்தில் மட்டுமே உயில் எழுத முடியும். மற்றவர்களுடைய பாகத்திற்கு உயில் எழுத முடியாது. மேலும் உங்களுடைய நிலையை பொருத்தவரை உங்களுக்கு சரிசம பங்கு உண்டு. வழக்கு மூலமாக பெற்றுக் கொள்ள முடியும். Contact me 8072751209
@@legalfighter30 mikka nanri madam cal panren mam nalai
ஐம்பது வருடங்கள் கழித்து பெண் தந்தை சொத்தில் பங்கு கேட்க முடியுமா மேடம்
Mam ,yen husband avanga amma vode yedathile veedu ketteruk ,10 years aidch ,avanga amma avanga randu sistersku 2 laksham kodukka sonnange ,ana ipo nanga kettuna veedu vilka porom avangaluk randu perukum ammakum serth ore mathiri pangu kekurange antha veetin urima yaruk mam,nanga avangaluk yevalo kodukkanum ,antha veetin mathippu 25 lack
Call me 8072751209
அம்மா எனக்கு என் தாய் உயில் வழியாக ஒரு சொத்தை எனக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார் எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் ஒரு மகன் இருக்கிறான் எனது மகள்களுக்கு நிறையவே செய்து விட்டேன் இதன் பின் எனது மகனுக்கு அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன் எனது மகள்கள் எதிர்காலத்தில் வழக்கு தொடர வாய்ப்புள் ளதா....? மேலும் எனது மகனுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதா தீர்வு என்ன? அறிய விரும்புகிறேன்
Please please please answer me. No CZcams channel answered me. We are three. 1 sister, myself and my brother. We done some of the properties through settlement deed in 2000. ImAncestral 6:00 properties not not done still not done partition. I have a daughter and son. One house in Chennai which I got through partition can I give it my son on my own. Can my daughter acquire the property. It's my father's own property. He bought it.
call me 8072751209
பூர்வீக சொத்தில் 1980 ல் பாகப்பிரிவினை மூலம் தந்தைக்கு கிடைத்த சொத்தில் மகள் இப்போது உரிமை கோர முடியுமா?
எனக்கும் அதே சந்தேகம்தான்
என் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த நிலத்தை என் அப்பாவின் பெயரில் எழுதினார். என் அப்பா அந்த நிலத்தில் வீடு கட்டி அவருடைய இளைய மகளான என் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டை என் அப்பாவின் மூத்த மகளான என் அக்காவும் அவளுடைய மகளும் (என் அப்பாவின் பேத்தி) உரிமை கேக்க முடியுமா என்று சொல்லுங்கள்?
(எனக்கு என் கணவர் செலவில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நிகழ்ந்தது. என் ஏழு வருடம் சம்பாத்தியம் அப்பா வீடு கட்டுவதில் ஒரு சிறு பங்கு இருக்கும்.
அதனால் அப்பா எனக்கு மட்டும் வீட்டை எழுதிவிட்டார். என் அப்பா அவருடைய முழு செலவில் அக்காவிற்கு ஆடம்பரமாக வரதட்சணையோடு நிச்சயம், திருமணம் செய்தார்.)
Madam, தயவு செய்து தங்கள் கருத்தை ரிப்ளை செய்யுங்கள்🥺. மிக்க நன்றி 🙏
சுய சம்பாத்திய சொத்தை ஒருவர் தான் விரும்பியபடி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைப்பதற்கு முழு உரிமை உண்டு. அதன்படி பார்க்கும்பொழுது தாத்தா தன்னுடைய வாழ்நாள் காலத்திலேயே அவருடைய மகனான உங்களுடைய அப்பாவிற்கு அந்த சொத்தினை எழுதி வைத்துவிட்டார். எனவே சொத்தின் உடைய உரிமை முழுவதும் உங்களுடைய அப்பாவிற்கு சென்றுவிட்டது. அதன் பிறகு உங்களுடைய அப்பா தன்னுடைய விருப்பத்தின் பேரில் தன்னுடைய வாழ்நாளில் அந்த இடத்தை உங்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்து இருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தில் உரிமை கேட்பதற்கு உங்களுடைய அக்கா மட்டுமல்ல வேறு யாருக்குமே உரிமை கிடையாது.
@@legalfighter30madam, 🥹 என்னை அலையவிடுவேன் என்ற மிரட்டல்களை கேட்டு வேதனையோடு இருந்த என் மனதை தாங்கள் உடனடியாக அளித்த மிகவும் தெளிவான பதில் நிம்மதி தந்தது 😌 என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
Madam, 🥹 கோர்ட்டில் கேஸ் போட்டு என்னை அலையவிடுவேன் என்ற மிரட்டல்களை கேட்டு வேதனையோடு இருந்த என் மனதை தாங்கள் உடனடியாக அளித்த மிகவும் தெளிவான பதில் நிம்மதி தந்தது 😌 என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
paiyan madham mari viduven yendru miratukiran, apdi maarinaala maadhan thorum petror kana paramaripu selavu thogai thara thevai ilai yendru miratukiran.. idharku parents yena vali seiya vendum
மகன் மதம் மாறினாலும் CR.P.C.125 ( Criminal Procedure Code) படி பராமரிப்பு தொகையினை கொடுக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம். தவறும் பட்சத்தில் RDO விடம் முறையீடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மகன் கிட்ட பராமரிப்பு கேக்குற மாறி மகள் கிட்ட பணம் கேக்கலாமா 😅@@legalfighter30
Love marriage pannikita sothil panku ketkalama
கேட்கலாம் . ஒரு வேளை அந்த சொத்து தந்தையினுடைய சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால் அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு.
என்னுடைய அம்மா எழுதிய உயில்படி எனக்கு கிடைத்த சொத்தில் என் மகள் உரிமை கேட்க முடியுமா
அம்மா உடைய சுய சம்பாத்திய சொத்து எனில் உயில் எழுதி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
மிகவம் நன்றி. மற்றும் பட்டா நம்பர் தவறாக உள்ளது. அதை திருத்தம் செய்ய முடியுமா
செய்ய முடியும்
@@legalfighter30 பட்டா எண் மாற்ற வேண்டும் என்றால் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். உயில் எழுதியவர் மற்றும் சாட்சிகள் இறந்து விட்டனர். எனக்கு வயது 70 ஆகிறது. உயிலில் 2 வீடுகள் உள்ளது. ஒரு வீட்டுக்கு அம்மா பெயரில் பட்டா உள்ளது. மற்ற வீட்டுக்கு என் பெயரில் பட்டா உள்ளது. என் பெயரில் உள்ள வீட்டை என் மூத்த மகனுக்கு உயில் எழுதி வைத்து விட்டு அம்மா பெயரில் பட்டா சிட்டா உள்ள வீட்டை விற்பனை செய்ய வேண்டும்.அம்மா பெயரில் உள்ள வீட்டின் பட்டா சிட்டா என் பெயரில் மாற்றம் செய்த பிறகு தான் விற்க முடியுமா. 2 வீட்டுக்கும் வீட்டு வரி மற்றும் eb. Service என் பெயரில் உள்ளது. தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
Call me sir ....8072751209
சுய சம்பாத்திய அப்பா சொத்து, அப்பா, அம்மா இல்லை, இன்னும் சொத்து பிரிக்கல. மகளுக்கு வருமா
தாத்தா சொத்து, தாத்தா இல்லை, மகள் (அம்மா) இல்லை, சொத்து இன்னும் பிரிக்கல, பிள்ளைகளுக்கு வருமா
Call me 8072751209
கண்டிப்பாக சொத்தில் பங்கு உண்டு
Why did thy need child thy keep their assets own itself
பரபுதரளமாகமகன்மகள்அப்பாஇறந்தாலும்பணம்காசுகேட்டகலாம்சரியா
மகன்மகளுக்குசெரத்துபங்குஉண்டுமருமகள்பங்குகிடையாது
மகள்மகன்கண்டிப்பாகபணம்காசுகேட்கதான்வேண்டும்சரியா
😮
வணக்கம். பூர்வீக சொத்து என்னுடைய அம்மா பெயரில் உள்ளது. என் உடன் பிறந்தவர்கள் இருவர். அம்மா தான பத்திரத்தில் என் தம்பி க்கு எழுதி கொடுத்து விட்டார் . எங்களுக்கு ஆதரவு இல்லாமல் இருக்கின்றோம்... சொத்தின் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா
என்னோட அம்மாவின் சகோதரர்கள் அம்மாக்கு சேர வேண்டிய அணைத்து டாக்குமெண்ட்ஸ் அம்மாவின் பாஸ் புக் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க அவங்களிடம் சமரசமா பேசுனாலும் திட்டுறாங்க என்னையும் block பன்னிட்டாங்க. அம்மாக்கு பாட்டியின் ஓய்வு உதியம் கிடைக்குனு சொன்னாங்க ஆனால் அதுக்கும் sign போடமாட்டேன்னு சொல்றாங்க. அம்மாவும் மனநிலை சரி இல்லாதவக எங்கள பத்தி யோசிக்காம அவர்களாம் இப்டி பன்றாங்க. அம்மாக்கும் goverment பணம் வரும் அதையும் வாங்க விட மாட்டுறாங்க. நானும் கல்யாணம் ஆன பொண்ணு என்ன பண்றதுன்னு சுத்தமா புரியல. நிம்மதி இல்லாம பன்னிட்டு போய்ட்டாங்க.அவங்கள கேக்க யாருமே இல்ல. சும்மா எங்க அம்மா கத்துறாங்க அதான் வீட்டுக்கு வரலன்னு நாடகம் ஆடுறாங்க. எப்போ பாத்தாலும் நகை எங்க பாட்டி ஓட பணம் எங்க உயில் எங்கன்னு கேக்குறாங்க. அதுக்கு பதில் சொல்லலைனு எங்க அம்மாவுக்கு ஏதும் தராமல் போய்ட்டாங்க.
மேடம் தயவு செய்து பெண்களுக்கு சாதகமாக பேசுங்கள் ஏன் என்றால் நீங்களும் ஒரு பெண் என்பதா மறவாதீர்
😆
பாக பிரிவினை சொத்தை அம்மாவால் விற்க முடியுமா அவரது பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல்