மஸ்ஜித் ழிரார் பற்றி கூறப்பட்டுள்ள வரலாறு | சூரா தவ்பா வசனங்கள் 107 முதல் 110 வரை

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2023
  • மஸ்ஜித் ழிரார் பற்றி கூறப்பட்டுள்ள வரலாறு
    சூரா தவ்பா வசனங்கள் 107 முதல் 110 வரை
    இன்னும் ( இஸ்லாம் மார்க்கத்திற்குத் ) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு ( நிராகரிப்புக்கு ) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி ( வேறொன்றும் ) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
    அல் குர்ஆன் : 09-107
    ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று ( தொழவும், தொழ வைக்கவும் ) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
    அல் குர்ஆன் : 09-108
    யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது ( தானே சரிந்துவிடக்கூடிய ) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு ( அந்த அடிப்படையில் ) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் ( கட்டடத்தை அமைத்தவரா? ) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
    அல் குர்ஆன் : 09 - 109
    அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் ( இடி க்கப்பட்டது ); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை . அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.
    அல் குர்ஆன் : 09 - 110
    moulavi - azhar seelani

Komentáře •