திருவானைக்கா

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • திருச்சிற்றம்பலம்
    மூன்றாம் திருமுறை
    திருவானைக்கா
    பண் :கௌசிகம்
    பாடல் எண் : 1
    வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
    தேனைக்காவி லின்மொழித் தேவிபாக மாயினான்
    ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
    ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத மில்லையே.
    பொழிப்புரை :
    வானிலுள்ள இருளைப் போக்கும் வெண்மதியைச் சடையில் தாங்கி , தேன் போன்ற இனிய மொழிபேசும் உமாதேவியைத் தன்திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு , திருஆனைக்காவில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைச் சரணாக வாழ்பவர்கட்குத் தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாமல் பிறதுணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் எதுவும் இல்லை .
    குறிப்புரை :
    வானை - செவ்வானத்தை ; கா - காத்திருத்தல்போல . வெண் மதி , மல்கு - ஒளிமிகும் . புல்கு - பொருந்திய . வார்சடை , செவ்வானம் சடைக்கு உவமை . கா - முதனிலைத் தொழிற்பெயர் . இல் - ஐந்தன் உருபு ஒப்புப்பொருள் . தேனைக்காவில் இன்மொழி - தேனைக் கலந்துள்ள இனிமைதங்கிய மொழி . ( காவில் காவுதலில் உள்ள இனிமை . காவுதல் - கலந்திருத்தல் ). அபயம் - சரண் ; புகலிடம் ` வார்தல் , போகல் , ஒழுகல் மூன்றும் , நேர்பும் , நெடுமையும் செய்யும்பொருள ` என்பது தொல்காப்பியச் சூத்திரம் ( சொல் . சூத் . 317. ) ஏனைக்காவல் வேண்டுவார் . ஏதம் - தம்மைத்தாமே காத்துக்கொள்ள முடியாமற் பிற துணை வேண்டும்படி நேரும் பெரிய அபாயம் . ஏதும் - எதுவும் , ஆனைக்காவில் அண்ணலைச் சரணாக வாழ்பவருக்கு இல்லை . வாழ்பவர் - நான்கன் உருபுத்தொகை . ` ஐந்தவித்தான் ஆற்றல் ` என்புழிப்போல ( திருக்குறள் ) பாடபேதம்: வானைக்காவல்
    பாடல் எண் : 3
    தாரமாய மாதரா டானொர்பாக மாயினான்
    ஈரமாய புன்சடை ஏற்றதிங்கள் சூடினான்
    ஆரமாய மார்புடை யானைக்காவி லண்ணலை
    வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.
    பொழிப்புரை :
    தாரமாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான் . கங்கையைத் தாங்கிய சடை முடியில் சந்திரனையும் சூடியவர் . சோழ அரசனின் வேண்டுகோளுக்கிணங்க , அவனது தொலைந்த இரத்தின மாலையைத் திருமஞ்சன நீரோடு தம் திருமார்பில் ஏற்றவர் . திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானை அன்புடன் வணங்குவார்களின் தீவினைகள் யாவும் நீங்கும் .
    பாடல் எண் : 11
    ஊழியூழி வையகத் துயிர்கடோற்று வானொடும்
    ஆழியானுங் காண்கிலா வானைக்காவி லண்ணலைக்
    காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
    வாழியாகக் கற்பவர் வல்வினைகண் மாயுமே.
    பொழிப்புரை :
    ஊழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கின்ற பிரமனும் , திருமாலும் இறைவனின் முடியையும் , அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் அண்ணலான சிவபெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடியவினையாவும் மாய்ந்தழியும் .
    குறிப்புரை :
    ஊழிக்காலம் தோறும் , உயிர்கள் தோற்றுவான் - உயிர்களுக்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைப்பவன் . வாழி - வாழ்வு தருவது . இகரம் கருவிப் பொருளில் வந்தது . பதிகக் குறிப்பு எட்டாம் பாடலில் இராவணன் செயல் குறிக்கப் பெறாமலும் , ஒன்பதாம் பாடலில் வரும் அரி , பிரமர் செயல் திருக்கடைக்காப்பில் வரப்பெறவும் அமைந்துள்ளது .
    திருஞானசம்பந்த பெருமான் பொற்கழல் போற்றி! போற்றி!!
    www.thevaaram.org

Komentáře •