ஆலந்தான் உகந்து... - சுந்தரர் திருப்பாட்டு

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2023
  • சொற்றமிழ்ச்செல்வர் சோலார்சாயி அவர்களின் தெய்வீக குரலில் சுந்தரர் திருப்பாட்டு- இசை - நாம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------சுந்தரர் தேவாரம்
    இடக்கண் பார்வை பெற்ற பதிகம்
    இடம்; காஞ்சியம்பதி திருக்கச்சி ஏகம்பம்
    சுந்தரரர் பெருமான் திருவொற்றியூரில் சங்கிலியாரை மண முடித்தபின், திருவாரூர் செல்லவும், அங்குள்ள வீதிவிடங்க பெருமானாரை வழிபட எண்ணங் கொண்டு திருவொற்றியூரை வி்ட்டு நீங்கும் போது சங்கிலியாரை மணப்பதற்கு ” இவ்வூரை விட்டு போகேன் ” என செய்த சத்தியம் மீரப்பட்டதால் , இதனா்ல் ஈசன் தந்த சபாத்தால் இருகண்களும் இழந்து குருடானார். அப்போது சுந்தரரர் இந்த கொடுந் துயரத்தை நீக்கும் பொரு்ட்டு இறைவரை நினைந்து திருப்பதிகங்கள் பாடினார். பின் காஞ்புரம் சென்று ஏகாம்பர நாதரை வணங்கி உன்னை தரிசிக்க என் கண்ணைத் தந்தருள் என்று வேண்டி மனம் உருகி பிராத்தனை செய்தார். அப்போது இறைவர் இடக்கண் மட்டும் பார்வை கொடுத்தருளினார். அப்போது பாடிய பதிகமே ” ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ” என்ற பதிகம் திரு கச்சி ஏகம்பரஈஸ்வர் முன் நின்று பாடிய பதிகம் இறைவரும் சுந்தரரின் அன்பிற்கு பணிந்து அவருக்கு கண் பார்வை அளித்த வரலாறு .
    எனவே நாம் இப்பதிக பாடல்களை மனம் உருக வேண்டி பாடினால் கண் சம்பந்தப்பட்ட கண்நோய் உள்ளவர்களுக்கு
    அந்நோய் நீங்கப்பட்டு பூரண குணமைடவர் என்பது உறுதி.
    சுந்தரரரின் திருவாக்குப்படி இப்பதிகப் பாடல்கள் பத்தும் பாடுவோர் “நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகெய்துவர் தாமே ”
    திருக்கச்சி ஏகம்பம் திருச்சிற்றம்பலம்
    ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
    ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
    சீலந் தான்பெரி தும்முடை யானைச்
    சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
    ஏல வார்குழ லாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    கால காலனைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 1
    உற்ற வர்க்குத வும்பெரு மானை
    ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
    பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப்
    பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை
    அற்ற மில்புக ழாள்உமை நங்கை
    ஆத ரித்து வழிபடப் பெற்ற
    கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 2
    திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
    செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
    கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
    காம னைக்கன லாவிழித் தானை
    வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
    பெரிய கம்பனை எங்கள்பி ரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 3
    குண்ட லந்திகழ் காதுடை யானைக்
    கூற்று தைத்த கொடுந்தொழி லானை
    வண்டலம்புமலர்க் கொன்றையி னானை
    வாள ராமதி சேர்சடை யானைக்
    கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
    கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
    கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வறே. 4
    வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
    வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
    அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
    அரும றையவை அங்கம்வல் லானை
    எல்லை யில்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 5
    திங்கள் தங்கிய சடையுடை யானைத்
    தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
    சங்க வெண்குழைக் காதுடை யானைச்
    சாம வேதம் பெரிதுகப் பானை
    மங்கை நங்கை மலைமகள் கண்டு
    மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
    கங்கை யாளனைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 6
    விண்ண வர்தொழு தேத்தநின் றானை
    வேதந் தான்விரித் தோதவல் லானை
    நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
    நாளும் நாம்உகக் கின்றபி ரானை
    எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
    என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
    கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 7
    சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
    சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
    பந்தித் தவினைப் பற்றறுப் பானைப்
    பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
    அந்த மில்புக ழாள்உமை நங்கை
    ஆத ரித்து வழிபடப் பெற்ற
    கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 8
    வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம்
    வாலி யபுரம் மூன்றெரித் தானை
    நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
    நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
    பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
    பரவி யேத்தி வழிபடப் பெற்ற
    கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 9
    எள்க லின்றி இமையவர் கோனை
    ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
    உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
    வழிபடச் சென்று நின்றவா கண்டு
    வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
    வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
    கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 10
    பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்
    பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்
    கற்ற வர்பர வப்படு வானைக்
    காணக் கண்அடி யேன்பெற்ற தென்று
    கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக்
    குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்
    நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார்
    நன்னெ றிஉல கெய்துவர் தாமே. 11
    திருச்சிற்றம்பலம் #அண்ணாமலை
    #gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்
  • Hudba

Komentáře • 87

  • @senthilkumarchinnarasu7555
    @senthilkumarchinnarasu7555 Před 9 měsíci +12

    சிவாயநம. எனது குழந்தைகளுக்கு பார்வை கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். சிவாயநம

  • @nanusri4558
    @nanusri4558 Před rokem +48

    நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை 48நாள் தொடர்ந்து கேளுங்கள்.அல்லது மனதில் பதித்து பாடுங்கள் கண்டிப்பாக.கண் பார்வை நன்றாகவே தெரியும்.இனி எந்த கண் குறைகள் இருந்தாலும் சரி யாகும்

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 Před rokem

      நன்றி 🙏 நமசிவாய 🙏🔱❤️

    • @user-eg1nw8xk7x
      @user-eg1nw8xk7x Před rokem +8

      அய்யா நானும் என் மகளுக்காக இந்த பாட்டை படிப்பேன் தினமும்பலன்கிடைத்தது சிவாய நம

    • @muthusamy4798
      @muthusamy4798 Před rokem +2

      ❤good

    • @rajakiranya5715
      @rajakiranya5715 Před 9 měsíci +2

      எனக்கு கண் பார்வையில் தொந்தரவு உள்ளன கேட்கிறேன் ஐயா சிவ சிவ

    • @shriharishatrughan9616
      @shriharishatrughan9616 Před 5 měsíci +1

      நன்றி நம சிவாய

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před rokem +11

    என்ன ஓர் அற்புதமான
    ராகம்! என்ன ஓர் இனிமையான குரல் வளம்!
    திரு சோலார் சாய் அவர்கள் உருக்கமான குரலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் முன் நின்று பாடியதுபோன்று
    பாடி நம் மனதையும்உருகச்
    செய்து விட்டார்கள். நன்றி யையும் வாழ்த்துக்களை
    யும் பாராட்டுக்களையும்
    தெரிவித்து மகிழ்கிறேன்.
    "சிவநெறித் திருத்தொண்டர்". நால்வரின் பதிகங்களை இப்பொழுது நாம் விரும்பிய சொற்களையோ வாழ்த்துக்களையோ சேர்க்க நமக்கு உரிமை இல்லை. பாடல்களுக்கு இடையே வாத்திய இசையை மட்டும் ஒலிக்க ச்
    செய்வது சிறப்பாக இருக்கும்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +9

    இப்பாடல் எவ்வளவுஅழகாக இருக்கிறது தமிழ் அழகேஅழகு

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +11

    அற்புதமான பாடல் என் ஈசனைப் பாடுவது அருமையான குரல்வளம் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @manjuladevikandhaswamy8905
    @manjuladevikandhaswamy8905 Před 10 měsíci +4

    உன்னை காண கண் கோடி வேண்டும் அவை இல்லை... இருப்பினும் இரண்டு கண்களும் நன்றாக தெரிய உம் பாதம் பணிகிறேன் 🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 4 měsíci +4

    என்ன அற்புதமான பாடல் என் ஈசனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

  • @rjbharathi6191
    @rjbharathi6191 Před 4 měsíci +5

    வரிகளுடன் பாடல் வந்தால் என் போன்றவர்கள் பாடல் வசதியாக இருக்கும் நான் தங்கள் அடிமை தாங்கள் நீடுழிவாழ வேண்டுகிறேன்

  • @muthukumar-me2tg
    @muthukumar-me2tg Před 5 měsíci +3

    தென்னாடுடைய சிவனே போற்றி🙏
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏

  • @vandarpoonkuzhali9214
    @vandarpoonkuzhali9214 Před rokem +13

    அருமையான பாடல்
    அருமையான குரல்
    ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +5

    🙏💐திருநீலகண்டம்🥀🌹சிவாய நமஹ🥀🦚திருச்சிற்றம்பலம்🌸🔥🦣🌷📿🙏🌹🙏🙏

  • @moganasiva71
    @moganasiva71 Před rokem +10

    சிவாய நம. சோலார் சாய் ஐயாவின் இனிய குரலில் நாம் அனைவரும் கேட்க வேண்டும்

  • @mrgmurugan3804
    @mrgmurugan3804 Před 7 měsíci +3

    எனது இரண்டு கண்களுக்கும் குறைபாடு இருக்கிறது என் அப்பன் ஈசன் அருள் புரிந்து என் குறைபாட்டை சரி செய்ய வேண்டும் என்னை சுற்றியுள்ள என் உறவுகளுக்கும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் கண் குறைபாட்டை சரி செய்ய என் அப்பன் ஈசன் அருள் வேண்டும் ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nanusri4558
    @nanusri4558 Před rokem +3

    குருவே சரணம் திருவடி சரணம்! சிவ! நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவருள் குருவின் கருணை சிவ!

  • @nanusri4558
    @nanusri4558 Před rokem +4

    சுந்தர் பதிகம் என்றால் சிவலோகம் பதிகம் தந்ததுற்கு நன்றி நமசிவாய ஐயா

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 Před 5 měsíci +3

    திருவாசகத்திற்கு உருகாதவர் எவரும் இல்லை திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சோழார் சாய் ஐயா அடியேன் முதற் கண் வணக்கம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +5

    மனம் மயங்கும் அற்புதமான ராகம் பாடல் பெற்ற வரிகள் என் ஈசனின் பாடலே அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Shernthapandi
    @Shernthapandi Před 4 měsíci +1

    ஆன்மீகம் பெருக உங்கள் அருள் வேண்டும் உங்கள் பாடல்கள் மிகவும் அருமை❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம் ஓம் நமோ

  • @arunadevi6443
    @arunadevi6443 Před 3 měsíci +1

    ஐயா உங்களது குரலில் பாடல் கேட்க மிகவும் அருமையாக உள்ளது 👏👏👏👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +3

    சுந்தரர் பதிகம். அருமை ஐயா . மிக்க நன்றி வணக்கம்.

  • @kavithaharikrishnan7336
    @kavithaharikrishnan7336 Před rokem +4

    சிவாய நம மிக மிக சிறப்பு நன்றி ஐயா

  • @manippstribol2709
    @manippstribol2709 Před 11 měsíci +4

    ஓம் நமசிவய சிவயநம என்றே தவறில்லாமல் பழகவும் சிவ சிவ

  • @anbarasananbarasan1519
    @anbarasananbarasan1519 Před 4 měsíci +1

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @rajasekara7558
    @rajasekara7558 Před rokem +3

    ஓம் நமசிவாயம் வாழ்க......❤️❤️❤️🙏 சோலார் சாய் அவர்களின் குரலில் தேவாரம் பதிகம்கேட்கும்போது மனம் சாந்தம் அடைகிறது ஐயா.

  • @NSaravanan-hj3mw
    @NSaravanan-hj3mw Před 6 měsíci +1

    ❤ Nandri Nandri Nandri Swamy 1🙏🙏🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +5

    என்ன அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @aurahealer8556
    @aurahealer8556 Před 10 měsíci +1

    சோலார் சாய் ஐயா வாழ்க வாழ்க வாழ்க பல்லாணடு

  • @vathsalabhavithra8479
    @vathsalabhavithra8479 Před 7 měsíci +1

    அனைவரும்கேட்டு பாடிட எளிய ராகம் மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்

  • @hari.om.2055
    @hari.om.2055 Před rokem +3

    God.blessing.you.sir.siva.siva.

  • @M.kumaran1987
    @M.kumaran1987 Před 2 měsíci

    திருச்சிற்றம்பலம் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ சிவ நசி மசி வசி யசி சிவாய சிவ சிவ ஓம் சிவ சக்தி ஓம் சிவ சக்தி ஓம் சக்தி

  • @arvibas4766
    @arvibas4766 Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய🙏🏼
    சுந்தரர் திருதாள்கள் போற்றி போற்றி🙏🏼

  • @user-du3yr1bi4y
    @user-du3yr1bi4y Před 2 měsíci

    எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நன்றாக கண்கள் தெரிய வேண்டுகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @chandhnic9865
    @chandhnic9865 Před rokem +3

    திருச்சிற்றம்பலம்

  • @user-dn6yu8vt6g
    @user-dn6yu8vt6g Před 25 dny

    ❤️❤️❤️❤️❤️

  • @rajendranudaiyarvaiyapuri7602

    ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...எனக்கு இடது கண் புரை அறுவை சிகிச்சை செய்து உள்ள நிலையில் இந்த பதிகத்தை கண்டு வாசித்து வருகிறேன்... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..

  • @acniherbs1455
    @acniherbs1455 Před rokem +3

    ஓம் நமசிவாய ஓம்

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Před měsícem

    அருமையாக!!பாட‌ல் தாங்கள் குலம் தழைக்க இறைவன்❤ ஈசனுடைய அருள் ஆசி என்றென்றும் உங்களுடையதாகப்பெறின் 🎉🎉🎉

  • @kamaladevi8453
    @kamaladevi8453 Před rokem +3

    நமச்சிவாய ஐயா

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 11 měsíci +1

    என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 Před 3 měsíci

    ஓம் சிவாயநம......
    ஓம் சிவாயநம.....
    ஓம் சிவாயநம......
    என்றும் குரு காக்க காக்க காக்க ......................

  • @Sivaganesh1986
    @Sivaganesh1986 Před rokem +3

    மிக மிக மிக அருமை

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவாயநம🙏 சர்வம் சிவார்ப்பணம்

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 Před rokem +3

    Om Namaha Shivaya 🙏

  • @harshinishanmugam7994
    @harshinishanmugam7994 Před měsícem

    🙏🙏

  • @geethabalaji972
    @geethabalaji972 Před rokem +3

    Arumai Ayaa 🙏

  • @bommaasree748
    @bommaasree748 Před rokem +5

    அம்மா போற்றி 🐘 குருவே போற்றி 🎊 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை 🍂 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இறைவா

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Před rokem +3

    🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿

  • @srinivasansivaramakrishnan7934

    Mannikavum. Alandaan pattu ķidaithu vittadhu❤

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 Před 6 měsíci

    Melodious.
    Sindhippaar
    Avar
    Sindhai
    Ul(2)aanai.
    ❤ Vaazththukkal
    ❤❤❤

  • @sangarapillaishanmugam8244

    thruchitrambalam

  • @hemalathavijayakumar9065
    @hemalathavijayakumar9065 Před měsícem

    என்னுடைய மகனின் இடது கண் பார்வை சரியாக வேண்டும் ஈசன் அருள் புரியட்டும்

  • @harshinishanmugam7994
    @harshinishanmugam7994 Před měsícem

    நமசிவாய வாழ்க

  • @saraswathis9718
    @saraswathis9718 Před rokem +1

    Thiruchittambalam

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 Před rokem +1

    Arumai nalla kural valam

  • @rjbharathi6191
    @rjbharathi6191 Před 4 měsíci

    ஓம் நமசிவாய நமசிவாய

  • @kandasamym6594
    @kandasamym6594 Před 7 měsíci

    சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு இரண்டு கண்களும் தெரியாமல் இருந்த நிலையில் சிவனின் அருளால் ஒருகண் பார்வை வந்தபோது சிவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பதிகத்தை பாடினார்.
    கண்ணில் குறைபாடு உள்ளவர்களும்.. அக்குறைபாடு தங்கள் குழந்தைகளுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வராமல் இருக்க இந்த
    பதிகத்தை படிக்க வேண்டும். அல்லது கேட்க வேண்டும். என்றும் நலமே.
    ஓம் நமசிவாய.. சிவாயநம. 🙏🙏🙏

  • @aravindr8619
    @aravindr8619 Před 3 měsíci

    தயவுகூர்ந்து வரிகளை உள்ளீடு செய்து எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 Před rokem +1

    Wazhlthukal

  • @bhuvaneswari5446
    @bhuvaneswari5446 Před 6 měsíci

    Om nama shivaya om

  • @shreevarshaa6063
    @shreevarshaa6063 Před 7 měsíci

    Omnasivaya 🎉🎉🎉🎉

  • @surekha7399
    @surekha7399 Před 4 měsíci

    Super voice 👌

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu Před měsícem

    Song super pls give meaning

  • @mrgmurugan3804
    @mrgmurugan3804 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @mrgmurugan3804
    @mrgmurugan3804 Před 7 měsíci

    🙏🙏🙏🙏

  • @s.sasikumar6863
    @s.sasikumar6863 Před 11 měsíci +1

    Its Sri Sundthar song

  • @parisithusubashini1616
    @parisithusubashini1616 Před rokem +3

    🙏🏻🙏🏻🙏🏻🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌟

  • @easytamilpoojas
    @easytamilpoojas Před rokem +2

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐

  • @janakinarayanan5608
    @janakinarayanan5608 Před 6 měsíci

    Lyrics not come

  • @user-gg3xv9lj4f
    @user-gg3xv9lj4f Před 10 měsíci

    Eluthudan paduing sami🙏🙏🙏🙏🙏🙏🙏