பெட்ரோல் பங்கில் புகுந்த காட்டு யானை; பரப்பரப்பு வீடியோ வெளியீடு

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • மேட்டுப்பாளையத்தில் குன்னூர் சாலையில் பெட்ரோல் பங்கில் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் அண்மைக்காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் அந்த காட்டு யானைகள் சாலை
    ஓரங்களில் நடமாடி வருவது அதிகரித்து காணப்படுகிறது
    குறிப்பாக மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் அடிக்கடி காட்டுயானைகள் சாலையை கடந்து சென்று வருகின்றன
    இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த சாலையில் ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து நெல்லி மலை வனப்பகுதிக்கு இடம்பெயர வந்த காட்டு யானை ஒன்று திடீரென அருகில் இருந்த பெட்ரோல் பங்குக்குள் புகுந்தது
    வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போதே சாலையை கடந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்குக்குள் புகுந்தது
    பின்னர் இந்த பெட்ரோல்பங்க் அருகே இருந்த தர்பூசணி கடை ஒன்றின் கூரையைப் பிரித்து உள்ளே ஏதாவது உள்ளதா என தேடியது
    உள்ளே ஒன்றும் கிடைக்காத நிலையில் பின்னர் அந்த யானை அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் செல்ல தொடங்கியது
    இந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Komentáře •