Siva Siddhantha - An Introduction ll சைவ சித்தாந்தம் பேசும் மானுட விடுதலை ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2024
  • #saivasiddhantha,#malangal
    சைவ சித்தாந்தம் பற்றிய அறிமுக விளக்கம்

Komentáře • 175

  • @mybelovedplanet
    @mybelovedplanet Před měsícem +36

    இன்னும் தோண்டத் தோண்ட இந்து மதத்தில் எவ்வளவு பிரிவுகள் வருமோ? இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன்.நீங்கள் மட்டும் தான் இவ்வளவு ஆழமாக எல்லா மதங்களையும் ஆராய்ந்து எளிய முறையில் எங்களுக்கு சொல்கிறீர்கள். Best wishes dear Murali Sir, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😊

    • @mybelovedplanet
      @mybelovedplanet Před měsícem +1

      இணையத்தில் pdf தமிழில் கிடைத்து விட்டது. படிக்க வேண்டும்

    • @Madhukrishnan-pv6tc
      @Madhukrishnan-pv6tc Před měsícem

      இந்து மதத்தில் பிரிவுகள் புதிதாய் ஒன்றும் தோன்றவில்லை. பல மதங்களை ஒன்றிணைத்து தான் இந்து மதம் என பெயரிட்டான் நம்மை ஆண்ட வெள்ளைக்காரன்.

    • @a314
      @a314 Před měsícem

      ​@@mybelovedplanetcan you share the link please?

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 Před měsícem

      இந்து ஒருமதம் கிடையாது.சிவனை வணங்குபவர்கள் சைவர்.பெருமாளை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள்.ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.

    • @-_.0O
      @-_.0O Před měsícem +3

      எத்தனை பிரிவுகளை சேர்த்து இந்துமதம் உருவானதோ அவ்ளோ ....

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +5

    பசு என்றால் உயிர்கள்.... மனிதர்கள் மட்டுமே அல்ல

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +4

    இப்போது தான் இவருக்கு ஞானம் பற்றிய சிந்தனை பிறந்துள்ளது!....

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 Před měsícem +3

    ஐயா
    வணக்கம் மிக அருமையான விளக்கங்கள், நன்றி
    ஒரே திருத்தம்
    ஓரிடத்தில் ஆன்மா சடப்பொருள் என்றீர்கள், சைவசிந்தாந்தப்படி ஆன்மா ஒரு போதும் சடமல்ல, அறிவுப்பொருள் , உயிர்ப்பொருளே.
    ஆன்மா இறைவனை நோக்குகையில் சிற்றறிவுப் பொருள்.
    உடலில் இல்லாத போது செயல்படாதது என்பது உண்மை ஆனால் சடமல்ல.
    சடத்திற்கு அறிவு கிடையாது.
    எனவே ஆன்மா சடப்பொருளாக பார்க்க முடியாது.
    கருத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும்

  • @User_saivan
    @User_saivan Před měsícem +4

    தங்களின் விளக்கம் அருமை.
    சிறு திருத்தம்
    மாயை உலகத்தை படைக்கவில்லை.
    மாயை ஒரு சடம்.அது உலகை படைக்கமுடியாது.
    மாயை என்ற மூலப்பொருளை கொண்டு கடவுள்தான் உலகை படைக்கிறார்.
    எப்படி களிமண்ணை கொண்டு குயவன் பானை செய்கிறாரோ அதுபோல.
    சுருக்கமா சொல்லப்போனா
    மாயையால் ஆன உடலையும் ஏற்கனவே இருக்கும் உயிரையும் இணைக்கும் வேலையை சிவன் செய்கிறார்.
    youtube.com/@gurumany?si=iDIVC0s6CL2jR61v

    • @mohankumarchellaiah7202
      @mohankumarchellaiah7202 Před 27 dny

      உண்மை.ஆன்மா சதசத்து. மாயையிலிருந்தே இறைவர் புவனத்தைப் படைக்கின்றார்.

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před měsícem +7

    திருத்தம…..கடவுள் கொடுத்த உடம்பு…படைத்த உலகம் மாயை என்கிற நுண் பொருளிலிருந்து படைக்கிறார்….ஆன்மாவைப் படைப்பதில்லை…..ஆன்மாவின் முடிவெடுக்கும் திறன் ….அதன் தனித்தன்மை

  • @pravingandhi9285
    @pravingandhi9285 Před měsícem +8

    சைவம் என்று சொல்லடா தெய்வம் ஆகி நில்லடா..
    இதுதான் உண்மையான சைவத்தின் வெளிப்பாடு. இதை மிகச் சிறப்பாக நீங்கள் சொல்லி உள்ளீர்கள்
    மிக சிறந்த எடுத்துக்காட்டுகளை எங்களுக்கு காட்டி உள்ளீர்கள்..
    தாங்கள் பல வீடியோக்கள் போட்டிருந்தாலும் தமிழராக,,ஒரு சைவமாக எனக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்த வீடியோ
    .நான் நம்புகிறேன் தமிழர்களுக்கான பணி தொடரும் என்றும் உங்களிடத்தில் இருந்து என்று 👏👏👏👏😮

    • @user-dd2lq7yc3b
      @user-dd2lq7yc3b Před měsícem

      சைவம் சனாதனம் இந்து மதம் எல்லாம் ஆட்சியாளர் நாள் இலகுவாக கொண்டு வந்து தமிழர்களை பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை ஒரு மாயையின் பெயர்

    • @readyforknowing3009
      @readyforknowing3009 Před měsícem

      ​@@user-dd2lq7yc3bAnd you have proof?

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 Před měsícem +3

    ஐயா தங்களின் மிகப்பெரும் வாசகன் யான்
    சைவசித்தாந்தம் அருமை. ஒருசிறிவிளக்கம் மாயை ஆணவத்தை தருவதில்லை
    ,மாயை கைவிளக்குபோல் உதவி இருளில் வழிகாட்டும் பெருவிளக்கு சூரியன் வரும்வரை

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 Před měsícem +3

    ஆழமான கருத்துக்களை எளிமைப் படுத்தி சொன்னவிதம் அருமை
    சில விசயங்கள் தொடர்ச்சியாக வருவதுபோல் தோற்றம் தருகிறது கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடியிருக்குமென நினைக்கிறேன்
    நான் என்கிற தன்மையின் அடர்த்தியும் வீரியமும் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் (ப்ராப்தம்) இவற்றைப் பற்றிய நம் மனதின் புரிதலும் வேறுபடுகிறது
    மனம் (அழுக்கு அல்லது ஆணவம்)தேய தேய நமது இந்த உலகம் மெல்ல நிறம் மாறுகிறது இந்த வாழ்க்கையே ஒரு மாயை என்பார்கள் சிலர் அதெல்லாம் இல்லை அது அவர்களின் மனப்பிதற்றல்கள் இந்த உலகம் உண்மைதான் என்பார்கள் பலர் ஆனால் இவை இரண்டுக்குமிடையில் ஒரு மெல்லிய புள்ளி உண்டு அதுதான் இணைத்தும் பிரித்தும் வைத்திருக்கிறது
    இறையைப் பற்றியும் உயிர்கள் பற்றியும் இவை இரண்டுக்குமான தொடர்பு பற்றியும் பல்வேறு காலகட்டங்களில் பல பெரியோர்களால் அனுபவங்களின் வாயிலாக சைவ சித்தாந்தம் கட்டமைக்கப் பட்டுருக்கிறது ஆனால் அவற்றிற்குள் ஒளிந்து கிடக்கும் உண்மைகளை இப்போது நாம் எந்தளவிற்கு புரிந்துகொண்டோம் என்பது கேள்விக்குறியே உங்களைப்போன்றவர்களாலேயே என்னைப் போன்ற எளிய மனிதர்களுக்கும் இப்போது வந்தடைகிறது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @rajamanickam7061
    @rajamanickam7061 Před měsícem +2

    🙏அய்யா வணக்கம். பதி, பசு, பாசம் உங்கள் விளக்கம் புரிந்துகொள்ள எளிமையாக உள்ளது 🙏

  • @chidambarambabuji
    @chidambarambabuji Před měsícem +2

    நன்றி முரளி சார்.அருமையான பதிவு.இளைய தலைமுறைக்கு சைவ சித்தாந்த கருத்துக்கள் வழி காட்டும்.

  • @meiporul-wiki
    @meiporul-wiki Před měsícem

    பெருங்கடலைக் குறுக்கிச் சிறுதுளி தேனாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா… hope this inspires your followers to study Siddhanta proactively.

  • @ponravi5918
    @ponravi5918 Před měsícem +7

    ஐயா! தங்களது உரை புரியும்படியாக இருந்தது! மகிழ்ச்சி. இன்று சீவ சித்தாந்தம் என்பது வழக்காற்றில் சைவ சித்தாந்தம் என்று மாறி விட்டது. இன்று இதன் உண்மையான தத்துவங்களை அறியாமல் பகுத்தறிவில்லாத கருத்துக்களை நம்மிடையே பரப்பி வருகிறார்கள். அதற்கு ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். புலால் உண்ணாதவர்கள் பின்பற்றும் நெறியே சைவ நெறி என்றும். இறைச்சி சாப்பிடுபவர்கள் சீவனை வணங்கத் தகுதியற்றவர்கள் என்றுமான ஒரு தவறான கருத்து நடைமுறையில் பரப்பப்படுகிறது.நம் முன்னொடிகள் ஆதி காலத்தில் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி உண்டுதான் தஙகளது வாழ்க்கையை ஓட்டினார்கள். ஏன் சீவபெருமானால் திருக்காளத்திநாதர் என்ற பட்டம் பெற்ற கண்ணப்பன் என்ற வேட்டைக்காரன் இறைச்சிப் படையலைப் படைத்துத்தான் இறைவன் திருவடியடைந்தான் என்பது வரலாற்று உண்மை!! அடிப்படை தத்துவங்கள் முழுதும் தெரியாமலும், முன்னோர்கள் ஏடுகளிலும் கல்வெட்டுக்களிலும் ஏன் கோவில் கோபுரங்களில் சிற்பமாக விளக்கிச் சென்றவற்றை புரிந்து கொள்ளாமல், அறிவு மங்கி தவறான தத்துவங்களை சீவனுள்ள மனிதர்களிடையே கொண்டு செல்ல வேண்டாம். எனது குருதேவர் அருளிய ஒரு தத்துவத்தை இங்கே விளக்க விரும்புகிறேன். இறைக்கு (பதிக்கு) இயக
    ற்கையாகவே மூன்று சத்திகள் உண்டு. அதை அவர் விருப்பத்திற்கேற்ப காரியப்படுத்த முடியும். காரியம் என்ற ஒன்று இருந்தால் அதற்கு காரணம் என்ற ஒன்று இருக்கும். இது தத்துவம். மூன்று சத்திகள் எது என்றால் 1. இச்சை சத்தி (விருப்பம்) 2. கிரியை சத்தி (செயல்பாடு) 3. ஞான சத்தி (முற்றும் உணர்தல்). இதிலிருந்து நாம் அறியப்பட வேண்டியது. இறையின் விருப்பப்படி இந்த பயிரின, உயிரன, மனித இனங்கள் இந்த மண்ணுலகில் சுயமாகவே (இயற்கையாகவே) தோன்றுகின்றன. தனித்தனி உருவத்தையும்
    (உடல்) நாமத்தையும் (பெயர்) பெற்றதும், தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் பெற்ற ஆவி, ஆன்மா, ஆருயிர் இம்மூன்றும் சேர்ந்து சீவன் என்ற ஒன்று இறையின் விருப்பப்படி உருவாகிறது.இயற்கையாகவே இந்த சீவன்கள் தோன்றும் போதே ஆணவம், மாயை, கன்மம் என்ற மாறுபட்ட தத்துவங்களைக்கொண்ட அசுத்த வித்தைகள் இந்த சீவன்களைப் பற்றிக் கொள்கின்றன. 1. ஆணவம் - தானே வலியவன், பெரியவன், தானே உலகம் என்ற எண்ணத்தில் நிற்பது. 2. மாயை - எது உண்மை என்று அறியாது மயக்கத்தில் திளைத்திருக்கும் நிலை. 3. கன்மம் - மாயா காரியங்களில் உழன்று, நன்மை-தீமை அறியாது ஊழ்வினை, சூழ்வினை, ஆள்வினை, விதி கடந்து பாவ - புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைக் கடந்து மாயை விலகி வீடு பேறு அடைவது (இறையின் திருவடி சேர்தல்) பொருளில் குற்றமிருந்தால் சான்றோர்கள் மன்னிக்கவும். நன்றி யூ டியூப்!!!

    • @readyforknowing3009
      @readyforknowing3009 Před měsícem

      If one believes Siva = Compassion = Mercy & is a true Saivaite he/she will stop eating meat.

    • @monishcheenu6822
      @monishcheenu6822 Před měsícem

      எல்லாம் தெரிந்த மாறி பேச கூடாது. இறைவன் அருள் பெற புலால் மறுத்தல் அவசியம் ஏனெனில் இறைவன் அன்பே வடிவமாக உள்ளார். கருணை உள்ளம் இருந்தால் மட்டுமே அருள் கிட்டும் . திருவள்ளுவர் , திருமூலர், வள்ளலார் கூறுவதும் இதனாலேயே.

    • @monishcheenu6822
      @monishcheenu6822 Před měsícem

      சிறு குழந்தை தன் மூக்கில் விரல் விட்டு பீலையை தின்னும் நீவீரும் தின்பீரோ. அறிவு வளர ஆன்ம பக்குவம் பெற புலால் உண்ணாமை கடைபிடித்தல் அவசியம்.

    • @prasadkannan765
      @prasadkannan765 Před 3 dny

      கண்ணப்பர் கதை - தயவுசெய்து பெரியபுராணம் படிக்க. முற்பிறவிகளில் ஈட்டிய சிவபுண்ணியங்களளும் தவத்தினாலும் கண்ணப்பருக்கு முக்தி. கண்ணப்பர் உடைய முற்பிறவி அர்ஜுன், அவன் செய்த தவற்றிற்காகத்தான் அடுத்த பிறவி.
      இறைவன் விருப்பப்படி உயிர்கள் இயற்கையாகவே சுயமாகவே தோன்றுகின்றன. தவறு. தோன்றும் எப்பொருளுக்கும் அழிவு உண்டு. ஆன்மா தோன்றவும் இல்லை அழியவும் அழியாது.
      மாயை - மயக்கத்தில் திளைத்திருக்கும் நிலை. தவறு. மாயை என்பது ஒரு பொருள், இந்த உலகமே மாயையால் ஆனது, அனைத்து அணுக்களும் மாயையால் ஆனது.

  • @VasanthakumariJayaraman
    @VasanthakumariJayaraman Před měsícem +4

    சிவஞான போதம் வழித்துணை விளக்கம் மற்றும் சிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம் ஆகிய புத்தகங்கள் ஆனந்த ராசன் ஐயா அவர்களின் முக்கிய படைப்புகள்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před měsícem +2

    So much philosophy, but the inference is limitless doubt, faithlessness, hopelessness only prevail in myself. Till 63 rd age i couldn't adopt/ adapt to any spritual philosophy, or spritual enlightment. I am still searching. But Lord Siva is one of my favorite God. Anyway thank you very much sir. You have rendered a great service😊, with your guidence only Iam able to know about saiva Siddhantham. After lunch at 3.00 P.M my mind was vaciilating about after death life, but your discourse have given solace. 🎉 21-4-24.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Před 28 dny

    You only can explain in extraordinary way
    Thanks

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Před měsícem +5

    ஓவ்வொரு பதிவும் எம்மை மேலும் மேலும் பக்கவமடைய செய்கின்றது. நன்றி ஐயா❤

  • @Impactgamer2019
    @Impactgamer2019 Před měsícem +2

    கலியுக நாத்திகன் எழுப்பும் அனைத்து வினாவுக்கும் சைவ சித்தாந்தம் விடை அளிக்கிறது.

  • @EchoElite20
    @EchoElite20 Před měsícem +1

    உயிர் ஜடப்பொருளன்று .
    அறிவுப் பொருள் ஆகும். உயிர் ஆணவத்தைப் பற்றியதால் அறியாமையில் சிக்கிக் கொள்கிறது.

  • @manickam1971
    @manickam1971 Před měsícem

    Excellent Murali Sir... Continue your greatest service to mankind 🎉🎉🎉

  • @user-ou3bl4hp4s
    @user-ou3bl4hp4s Před měsícem

    Very very Impartent and very secrets anma siva ragasiyam thankful for your speech good 🎉
    M

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 Před 14 dny

    i have received more answer for my life time questions

  • @captainsvn1489
    @captainsvn1489 Před 7 dny +1

    Very well explained Anna,.
    But, when we can read all this books and apply the teachings In out life.

  • @manigandanmani9718
    @manigandanmani9718 Před měsícem +3

    கோடி நன்றி

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Před měsícem

    Though I studied , your assiduous, critical exploration is special to understand this philosophy.

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 Před měsícem +2

    Saiva sidhdhanta is oceanic..
    Don't just laugh at 2000 years of wisdom

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 Před měsícem

    Extraordinary explanation great
    Thanks

  • @ullagellam5856
    @ullagellam5856 Před měsícem

    Extraordinary sir .
    Even though you have mentioned this as introduction you have covered from rock bottom to the peak siva siddanta sir. Many thanks for your massive efforts. I could see how many books you have referred and how much you have prepared prior to upload this video sir. Thanks 🙏 a lot.

  • @BalaKumaran-cw7cm
    @BalaKumaran-cw7cm Před měsícem

    பதி -அரசன்
    பசு -குடிமக்கள்
    பாசம் -ஆட்சி செய்யும் முறை
    ஒரு மன்னன் எப்படி தனது நாட்டை அன்பாக (பாசம்) நிர்வகிக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துவது தான் சைவ சித்தாந்தம். இதுதான் அந்த முப்பொருள் உண்மை இவை மூன்றும் என்றும் உள்ளவை

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před měsícem +2

    நன்றி அய்யா......

  • @govindarajv9819
    @govindarajv9819 Před měsícem +1

    ஐயா சிவனை பற்றிய விளக்கம் நீங்கள் சொல்லும் அருமையா உள்ளது. 😅😅😅

  • @jayaprakashsubramanian2979

    Excellent. Further I want to hear from you, Sir. Thirumoolar also telling same thing. I read Thirumandiram. Pathi, Pasu and Maya all the three are Anadhi. But to get rid of Maya we have to surrender God. Om Nama Shivaya. Please discuss about Vainavam also. Namaskar.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Před měsícem +3

    வீர சைவம் லிங்காயத் மதம் குறித்து கேட்க ஆசை.

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před měsícem

    Good analysis and true also.

  • @sujithaganesan3230
    @sujithaganesan3230 Před měsícem +1

    The physical world is true. The life which we live in this physical world which is basically constructed out of thoughts and memories is an illusion. The way to live life is to live in the present and observe each moment, thoughts, sounds, vision, etc. Creative power and manifestations are something that we could do in this physical world. We should understand that there should be total detachment when performing such actions. The result would be mind blowing which will in turn be not acknowledged by the performer. These actions might form the basis of life in the future, people may monetise it for survival, so and so forth but that is ok. After all physical life is based on money and wealth creation which is again nothing but an illusion. Understand that nothing is permanent in the physical world. They all disappear when time comes.

  • @marimanikam3999
    @marimanikam3999 Před měsícem +2

    ஆய்ந்து ஆய்ந்து பார்த்தால் ஓய்ந்து போவது தான் மிச்சம்.
    ஒரே சிறந்த வழி ஞானம் பெற தியானம்.
    அதிலும் சிறந்தது, விஞ்ஞான பைரவ தந்திரா . ஓரளவு மனித அறிவிற்கு எட்ட கூடியது.

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c Před měsícem

    நன்றி பேராசிரியர் முரளி அவர்களே ☺️

  • @nagarajr7809
    @nagarajr7809 Před měsícem +1

    சிறப்பு சார்

  • @sathvikhasamajam8890
    @sathvikhasamajam8890 Před měsícem

    Very useful sir

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Před měsícem +1

    சுத்த வித்தை சதாசிவம் நமக்கு அருளட்டும்...தூய அறிவினால் வாழ அருளட்டும்...

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Před měsícem +1

    What is the difference between kul (clan) deity worship and forefather, (munnor) worship sir.. 21-4-24.

  • @kalaivananvanan9850
    @kalaivananvanan9850 Před měsícem +2

    🙏🙏🙏 God

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs Před měsícem +4

    தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் " - கண்ணதாசன்

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před měsícem +3

    வைணவம் ஏற்கனவே சாமிpபியம், சயுச்சியம் போன்ற கருத்துகள் 1000 ஆண்டுகளுக்கு முன் ராமானுஜர் கூறியுள்ளார்

  • @Karthik23550
    @Karthik23550 Před měsícem

    நன்றி❤

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +1

    தனு .....கரண புவன

  • @jairamjairam5532
    @jairamjairam5532 Před měsícem

    நன்றி

  • @santhoshsanth9191
    @santhoshsanth9191 Před měsícem

    Sidhantham @ Saiva Sidhantham is very High Philosophical , u r explaining basics, But there are many other books written by many Philosophers in Tamilnadu like Santhalinga Adigalar , Many High Guru's are still present but not known (famous) Like Meignanamoorthi swamigal (Self Attained), Palani , there Philosophy is high class ,

  • @munish5049
    @munish5049 Před měsícem +1

    🕉️

  • @sachinm4092
    @sachinm4092 Před měsícem

    🙏🙏🙏

  • @iraivan010
    @iraivan010 Před měsícem

    நீங்கள் படித்து புரிந்ததை பிறர்கு கேட்கும்படி உரைப்பதும் ஒரு கலை, அதை நீங்கள் சிறப்பாக செய்து வருகின்றீர்கள் . ஆனால் சைவ சித்தாந்த விளக்கத்தை மட்டும் எளிதில்புரியும்படினு சொல்ல முடியவில்லை. நன்றி அய்யா.

  • @vairamuttuananthalingam7901

    நன்றிகள் வணக்கம்

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b Před měsícem

    🎉🙏🙏🙏💐👏

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +2

    மேலைநாட்டு ஆபிரகாமிய மதங்கள் இறைவன் மற்றும் மனிதனைப் பற்றி பேசும்! ஆனால் சைவம் தான் இறைவன் மனிதன் மற்றும் பிற உயிரினங்களின் உய்வை பற்றி பேசுகிறது!.....வைணவத்தை விடவும்!

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramum9599
    @ramum9599 Před měsícem +1

    சைவக்கடலில் முத்துக் குளிக்க வைத்தீர் ஐயா !!!???🙏🙏🙏🙏🙏

  • @KavithaBala1980
    @KavithaBala1980 Před měsícem +1

    Simulation theory க்கு யாராவது vote போடுறீங்களா இங்க???😊

  • @hariniselvam2540
    @hariniselvam2540 Před měsícem +1

    Paid at will channel aaga matrinaal enna sir. Interested can pay sir.

  • @prasadkannan765
    @prasadkannan765 Před 3 dny

    12:33 இறைவன் உலகத்தை படைக்கவில்லையா? இல்லை என்பது தவறு. மாயையை காரியப்படுத்துவதே இறைவன் தான். சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம்.
    12:39 சச்சிதானந்தம், சத்து, சித்து, ஆனந்தம். சத்து - நிரந்தர பொருள், சித்து - அறிவுடைய பொருள், ஆனந்தம் - ஞானம் அடைந்த பொருள்.
    13:40 உலகை படைத்தது மாயை. தவறு, மாயை சத்து பொருள் சித்து பொருள் அல்ல, ஒரு அறிவற்ற பொருளால் படைக்க முடியாது. சிவஞானபோதும் இரண்டாம் சூத்திரம்.
    14:11 மாயை ஆன்மாக்களை பற்றுக் கொள்கிறது. தவறு, அறிவில்லாத மாயையால் எவ்வாறு ஆன்மாவை பற்றிக் கொள்ள முடியும், மாயையை ஆன்மாவுடன் இணைப்பது இறைவன் தான். சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம்.
    15:23 நிமித்தகாரனண் - உண்டு பண்ணுவதற்கான பொருட்கள் இருந்தாலும் பொருட்களை உண்டு பண்ண கர்த்தா வேண்டும். குயவன் இல்லாமல் களிமண் மண்பானை ஆகாது.
    19:11 செயல்படுவது மூலமாக நடக்கிறது, சரியான தர்ம கர்மாக்களை செய்து. தவறு, தீ வினைக்கும் பிறப்பு உண்டு நல் வினைக்கும் பிறப்பு உண்டு. நல்வினை செய்தால் ஞானம் கிடையாது. அதனால்தான் திருவள்ளுவர் இருள் சேர்க்கும் இருவினை என்றார். ஞானம் என்பது சிவதீட்சை பெற்றுக் கொண்டு, அனுஷ்டானம் சிவபூசை சிவயோகம் மூலமாக பிறக்கும். உலக புண்ணியம் செய்தால் சொர்க்கத்திலே பிறப்பு, திருக்குறள் 50, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். சிவ புண்ணியம் செய்தால் ஞானம். இதைத்தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் என்றார் திருவள்ளுவர்.
    21:50 சைவ சித்தாந்தம் என்பது மற்ற சமயவாதிகளின் கருத்துக்களை உள்ளடக்கியது. இதை உங்களுடைய கருத்து என்று கூறியதற்கு நன்றி. ஆனால் சைவ சித்தாந்தம் அப்படி சொல்லவில்லை. சிவ ஆகமங்கள் மற்றும் வேதங்களின் சாரமே சைவ சித்தாந்தம்.
    22:00 இதற்கு மேல் நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.. முழுக்க முழுக்க சைவ சித்தாந்தம் பற்றிய தவறான கருத்துக்கள் நிறைய உள்ளன..
    தயவுசெய்து மாபாடியும் படிக்கும் பேராசிரியர் ஆனந்தராசன் அவர்களிடம் இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கச் சொல்லுங்கள். பின்பு உங்களுக்கே புரியும்.
    நான் உங்கள் சேனலுக்கு வந்தது சமண சமய கருத்துக்களை கேட்பதற்கு, நீங்கள் பதிவேடு செய்த தற்போதைய வீடியோவை பார்ப்பதற்கு, அப்பொழுதுதான் பார்த்தேன் சைவ சித்தாந்தத்தை பற்றியும் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். சரி நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் என்று பார்த்தால் முழுக்க முழுக்க தவறான செய்திகளை கூறுகிறீர்கள்.
    இதே போல் தான் ஒரு முழுமையான research செய்யாமல் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் இருக்கும் என்பது தெரிகிறது..
    யூட்யூபில் ஏதோ ஒன்றை போட்டு பணம் சம்பாதிப்பதற்காக தவறான கருத்துக்களை இங்கே பதிவிட வேண்டாம்.. நேரத்தை எடுத்துக் கொண்டு proper analyzation and research செய்து தகவலை பரிமாறவும்.

  • @peace5916
    @peace5916 Před měsícem

    Background la 3 🏵️🏵️🏵️🌀🌀🌀 what is this?

  • @shany47
    @shany47 Před měsícem +1

    ஐயா தங்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன். மிகச்சிறப்பாக பல தத்துவக் கருத்துக்களை நீங்களே தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள். பல அறிஞர்களது பேட்டிகள் அருமையாக இருக்கும்.
    ஆனால் இந்தப்பதிவு ஏமாற்றமளித்துள்ளது. தவறான பல கருத்துக்கள் சைவசித்தாந்தம் என்ற பெயரில் கூறப்பட்டுள்ளது. எளிமையான நடை தவறல்ல, தவறான தகவல்களே தவிர்க்கப்பட வேண்டியது.
    உண்மைத் தகவலை விரும்பும் தங்கள் அன்பன் சண்முகம். 🙏

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před měsícem

    Professor, these sastra texts r used to build a religion structure. That's y thirumular 's siddha philosophy isn't discuss in public in early 19th 20th century.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před měsícem

    To enter in his path v need his permission. It is saivism

  • @anithabalaji9876
    @anithabalaji9876 Před měsícem

    Please create video on sivagnapotham

  • @kalimuthusrinivasan2831
    @kalimuthusrinivasan2831 Před měsícem

    Permanent magnet - flux lines - iron dusts

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c Před měsícem

    நீங்கள் ஒரு அருமையான கதை சொல்லி... ஐயா.நீங்கள் நாவலையும் எங்களுக்கு தந்தால் நன்றாக இருக்கும் ஐயா.

  • @umakanthan53
    @umakanthan53 Před měsícem +1

    Kashmeera saivam is said to be the pioneer to the tamil saiva siddhantha. Your comment please.

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před měsícem

      Thirugnana sambandar 200 years before adi sankara

    • @yuvanbalasundaram3339
      @yuvanbalasundaram3339 Před měsícem

      Totally worng saiva siddhantha much early than காஷ்மீர் siddhantha

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před měsícem

      @@yuvanbalasundaram3339 that is the whole problem…never give credit to saivasiddhanta …want every philosophy to surrender to vedantha

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před měsícem

      இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்…..சம்பந்தர்….அத்துவிதம் பற்றியது

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před měsícem

      திருமூலர், திரு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமானவர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார், பாம்பன் சுவமிகள், மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்…..

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před měsícem +1

    சத்+சித்+ஆனந்தம்=சச்சிதானந்தம். சத்=அது (சிவன்), சித்=அறிவு, ஆனந்தம்=எல்லை அற்றவன்

  • @jayapald5784
    @jayapald5784 Před měsícem

    வணக்கம் அய்யா

  • @manface9853
    @manface9853 Před měsícem

    Only super god siva

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 Před měsícem +1

    விஷணு காத்தல் தொழில்

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před měsícem

    வணக்கம் ஐயா தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது உண்மை என்பது. நன்றி ஐயா

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před měsícem +1

    பிரம்மத்துடன் மாயை கலக்கும் போது உலகம் & உயிர்கள் உண்டாகிறது

    • @MM-dh3wr
      @MM-dh3wr Před měsícem

      இது யாருடைய த்த்துவம்

    • @krishnamoorthysp
      @krishnamoorthysp Před měsícem +2

      இது அத்வைத தத்துவம்

  • @user-nx3gf1ff7m
    @user-nx3gf1ff7m Před měsícem

    Thirumanthiram is the base

  • @ramum9599
    @ramum9599 Před měsícem

    த.நா.அரசியல்வாதிகள் ஓட்டையும், பொன்னையும் ஒன்றாக பார்ப்பார்களா !!!!😅😅😅😅🎉🎉❤❤

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Před měsícem

    Christinity says father , son and holy ghost - is this theory come from indoaryan created vedam or is this originated from saiva sithantham?

    • @dushyanthihoole3340
      @dushyanthihoole3340 Před měsícem

      The triune God is in the Bible Old Testament 1400 to 400 BCE books way before saiva sidhdhantam. Then how? Bible New Testament with Jesus's direct words read and preached in Chennai, Kerala, North etc from 40 AD.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Před měsícem

      @@dushyanthihoole3340 Saiva sindhartham is much older than that Thirumala is said to be 3000 BCE

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 Před měsícem +1

      @@dushyanthihoole3340 Professor has given an overview of Saiva sidhdhantam. Indian philosophies are based on Bramasutra which is a simplified form of Vedhas. Adi Shankarar, Ramanujachariyar and Madthuvar wrote commentaries on Bramasutra to establish the relationship between Pathi and Pasu as Advaitham, Visitadvaitam, Dwaitham respectively. Here extensively they discuss about Pathi, Pasu, Pasam and Maya, such things are not in Abrahamic religion. In their commentaries they counter argued statements or principle from other religions which were existing at that time. No details were available on any Abrahamic religion in their commentaries.

  • @sivasubramaniyan4584
    @sivasubramaniyan4584 Před měsícem +1

    எதற்காக இந்த குழப்பங்கள்? கடவுள் என்று ஒன்றும் இல்லை. இந்த பிரபஞ்சம் உண்டாக காரணமாக இருந்தது எதுவோ அது தான் கடவுள். அது ஆணா பெண்ணா, உருவமுள்ளதா உருவமற்றதா, பேசுமா பார்க்குமா கேட்குமா.... இதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரியாத கடவுளுக்கு ஆயிரம் சித்தாந்தங்கள் எதற்கு? கண்ணுக்கு தெரியாத, புத்திக்கு புலனாகாத ஒரு சக்தி உள்ளது. அந்த மாபெரும் சக்தி என்பது நிஜம். நாம் எல்லாரும், தானாகத் தோன்றிய இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிரினம். வாழும் வரை வாழ்ந்து விட்டு, காலம் முடிந்ததும் இறந்து போகிறோம். இறந்த பின் இந்த மண்ணோடு கலந்து விடுகிறோம். அந்த இறை சக்தியை உணர்ந்து கொள்ளும் தன்மை தான் ஞானம். அதுவே பக்தி வளரவும் ஒரு சாதனமாக இருக்கிறது. இத்தனை வேதாந்த சித்தாந்த வியாக்கியானம் எல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கை அடிப்படையில் தான் ஏற்படுத்தப்பட்டது. வேறு எதுவுமேயில்லை. ப்ரும்மம் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் சக்தியை உணர்ந்து போற்றி வணங்குவோம்.

    • @monishcheenu6822
      @monishcheenu6822 Před měsícem

      இறை சக்தியை உணர்ந்தால் மட்டும் போதாது. உண்மை புலப்பட வேண்டும். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் உங்களுக்கு பதில் சொல்லும்

  • @chinnaduraig.7352
    @chinnaduraig.7352 Před měsícem

    ருத்ர காமிக ஆகம இந்த ஆகமத்தில் சிவபெருமான் தன்னை எப்படி வணங்குவது எப்படி தீட்சை பெறுவது என்பதை விளக்குகிறார்

  • @PasupathiB-uq9we
    @PasupathiB-uq9we Před měsícem

    YOU sagothari 6b h. H. Mmmmmm..
    9

  • @rajorajorajo2824
    @rajorajorajo2824 Před měsícem

    Phone நம்பர் வேணும் sir

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem +1

    கிறிஸ்தவ மதம் பரப்பவே வந்த ஜி.யூ போப் திருவாசகம் மொழிபெயர்ப்பு செய்ததை நினைக்க

  • @masilamani3920
    @masilamani3920 Před měsícem

    சேக்கிழார் நெறி

  • @devasenabharath6518
    @devasenabharath6518 Před měsícem

    காணொளி தொடக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி சொன்னீர்கள் அது சரியாக விளங்கவில்லை raply plz sir🙏🙏

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 Před měsícem

      சிவஞான மாபாடியம். சிவஞான போதத்திற்கு பேருரையாக சிவஞான முனிவரால் எழுதப்பட்டது.

    • @devasenabharath6518
      @devasenabharath6518 Před měsícem

      Thank you so much sir

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před měsícem +1

    வேதாந்தம், சைவம், யோகா, சாங்கியம் ஆகிய கருத்துக்களின் தழுவலே சைவ சித்தாந்தம்

  • @veda6028
    @veda6028 Před měsícem

    பிரம்மம் வேறு ஆன்மா வேறு. இரண்டும் வேறு வேறு.ஆன்மா பிரம்மத்தில் ஒ ருபோதும் கலக்காது.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před měsícem

      கடவுளைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் இயற்கையைப் பற்றியும் இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஆற்று நீர் குளத்து நீர் கிணற்றுநீர் கடல்நீர் என்று தனித்தனியான பத்திரத்தில் எடுத்து வந்து ஒரே பாத்திரத்தில் ஊற்று பின்பு கடல் நீர் ஆற்றுநீருடன் கலக்கமாட்டேன் குளத்து நீர் கிணற்று நீருடன் கலக்கமாட்டேன் என்று தனித்தனியாக நிற்கிறதா என்று பார். அது போலத்தான் பிரம்மத்திலிருந்து வந்த ஆன்மா மீண்டும் பிரம்மத்திலேயே ஐக்கியமாகி விடுவதான் இயற்கையின் நியதி.

  • @rogersri
    @rogersri Před měsícem +1

    உங்கள் ஆழமான சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால், 'உடல் அல்லது மனநல குறைபாடு' என்பது சாபமாகவோ அல்லது தண்டனையாகவோ நீங்கள் கூறியது அதிர்ச்சியளிக்கிறது.
    தனிப்பட்ட முறையில் என் பார்வையில் இயற்கையில் கடவுள் அல்லது மதம் இல்லை.
    அடுத்த ஜென்மத்தில் அல்லது கர்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    சிவ தத்துவத்தில் கடவுள் பிரபஞ்சத்தையோ மனிதனையோ படைக்கவில்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டால் ஊனம் என்பது இயற்கையின் நாடகம் (உங்கள் வார்த்தைகளில் 'மாயா'). சரியோ தவறோ அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. இயற்கையில் வேறுபாடு இல்லை. அனைத்தும் இணைந்து வாழ்கின்றன.
    தயவுசெய்து இயலாமை பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளவும்.

    • @SocratesStudio
      @SocratesStudio  Před měsícem +1

      We present the views of various Schools of philosophy. They need not be the views of Professor

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před měsícem

    ஆசீவகம் ஜைனம் பௌத்தம் இவற்றின் கருத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்டது சைவ சித்தாந்தம்.நன்றி.

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 Před měsícem

      இதை எதன் அடிப்படையில் சொல்கிறீர் அய்யா

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Před měsícem

      @@vijayasakthi7514 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நூற்பொருள் உடையது ஆசீவகம் ஜைனம் பௌத்தம்.ஆனால் சைவம் வைணவம் நூற்பொருள் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Před měsícem

      ஆசிவகம் ஜைனம் பௌத்தம் இது மூன்றுமே இறைவன் இல்லை என்ற என்ற கொள்கை கொண்டது. இறைமறுப்பு கொள்கையைக் கொண்டிருந்தாலும் ஆன்மா கர்மா மாயை பிறப்பு இறப்பு என்று வேதத்தில் இருந்த தத்துவங்களைத்தான் கூறுகிறது. சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணாபத்யம் செளரம் ஆகிய அனைத்திற்கும் வேதம் ஒன்றுதான் ஆகமங்கள்தான் வேறு வேறு. திருக்குறளுக்கு பல்வேறு நாபர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் உரை எழுதியிருப்பதைப்போலத்தான் வேதத்தின் தத்துவங்களை தங்களுக்கு புரிந்த வகையில் ஆகமங்களாக பல்வேறு காலக்கட்டங்களில் ஆகமங்களாக எழுதியுள்ளார்கள்.

  • @veda6028
    @veda6028 Před měsícem +5

    கடவுள் இருப்பது உண்மையானால் ஏன் ஒருத்தரை பணக்காரனகவும் ஒருத்தரை ஏழையாகவும் வைப்பாரா?அவருக்கும் பாரபட்சம் உண்டோ.அப்படியானால் அவர் கடவுள் இல்லை.

    • @sujithaganesan3230
      @sujithaganesan3230 Před měsícem

      ஏழை, பணக்காரன் என்று எதுவும் இல்லை. அது நம் எண்ணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதை நோக்கி உழைத்தால் ஏழை பணக்காரனாகலாம். எண்ணிலடங்கா நம் வாழ்க்கையை மாற்ற முடியும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் நாம் அதை விரும்பி உழைக்கும்போது, ​​நம் வாழ்க்கை மாறும். உளவியல் ரீதியாக நாம் அனைவரும் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். இது ஞானத்தின் மிக உயர்ந்த நிலை.

    • @sujithaganesan3230
      @sujithaganesan3230 Před měsícem

      ஏழை, பணக்காரன் என்று எதுவும் இல்லை. அது நம் எண்ணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதை நோக்கி உழைத்தால் ஏழை பணக்காரனாகலாம். எண்ணிலடங்கா நம் வாழ்க்கையை மாற்ற முடியும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் நாம் அதை விரும்பி உழைக்கும்போது, ​​நம் வாழ்க்கை மாறும். உளவியல் ரீதியாக நாம் அனைவரும் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். இது ஞானத்தின் மிக உயர்ந்த நிலை.

    • @gnanavel66
      @gnanavel66 Před měsícem +1

      Money created by human. Money used to group people to certain clans. Money not created by God!!

    • @monishcheenu6822
      @monishcheenu6822 Před měsícem

      கடவுள் மிக்க கருணை உள்ளவன் . உங்கள் கருத்தை ஆராயவும்

    • @sujithaganesan3230
      @sujithaganesan3230 Před měsícem

      That compassionate God is you. Money is created by thought. When u understand that, value for money is gone. You will also understand that there is no duality in life. All are one and same. There is no rich or poor. Psychologically all are same. When you want money and dream of it, you can achieve it. It's called manifestation. Your thoughts form the basis of physical life which is illusory. When life is lived understanding thoughts are nothing but illusion, your real life begins and you are there.

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Před měsícem

    Only advaitha is truth

  • @chinnaduraig.7352
    @chinnaduraig.7352 Před měsícem +1

    ஆகமங்கள் சிவபெருமானின் பஞ்சமுகத்தில் இருந்து தோன்றின

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 Před měsícem

    Without doing Sadhana...just reading books...you just can't say

  • @elangamani4612
    @elangamani4612 Před měsícem +4

    ஒரே.... குழப்பம் போங்க...

    • @ganesanr736
      @ganesanr736 Před měsícem

      என்னுடய கருத்தும் அதுவே. மற்ற காணொலிகளைபோல ஒரு தெளிவோடு செல்லவில்லை. குழப்பம்தான்.

  • @jayabalan2304
    @jayabalan2304 Před měsícem

    இதுலாம் தெரியாமல் மற்றவர்கள் சொத்தை கொள்ளை அடித்து வாழ்கிறார்கள்

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Před měsícem

    வணக்கம் ஐயா

  • @eonworldwide4724
    @eonworldwide4724 Před měsícem

    No point in talking about philosophy and theology unless people can display honesty compassion and steadfast in their principles so that they are trustworthy
    Hindus are totally unreliable

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Před měsícem

    இன்னும் ஆழமாக சைவத்தை இவர் புரிந்து கொள்ள வேண்டும்

  • @kuttykutty-fu8hg
    @kuttykutty-fu8hg Před měsícem

    தயவு செய்து பகுதி பகுதியாக போடவும் காணொளி மிக அதிக நேரம் போகிறது

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Před měsícem

    முப்பொருள் அணாதி.உடல் எங்கிருந்து வந்தது.இரண்டு பொருட்கள் சேர்ந்துதான் மூன்றாவது ஒரு பொருள் உண்டாகிறது.எந்த எந்த இரண்டு பொருட்கள் ஒன்றிணைந்து உடல் என்ற மூன்றாவது பொருள் உண்டானது? இருப்பது மூன்று பொருட்களே.நாலாவது ஒன்று எப்படி வந்தது.!

    • @rameshmahadevan41
      @rameshmahadevan41 Před měsícem

      தனுகரணபுவனபோகம் ,மாயை ஆண்டவன் அளித்தல.

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 Před měsícem

      @@rameshmahadevan41 ஆன்மாவுக்கு அளிக்கிறாரா?சும்மா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.ஆன்மாவுக்கு ஏன் அளிக்கிறார்..?ஆன்மா பாசத்தைப் பற்றிக்கொண்டு படாதபாடு படுகிறது.என்றைக்கு பாசத்தை விட என்றைக்கு மோட்சம் அடைய!

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 Před měsícem

      ​@@vairavanmariappan559சார்ந்ததை சாரும் ஆன்மா(பசு) அனாதியாக பாசத்துடன் கட்டுண்டு கிடக்கிறது. எல்லாம் அறிந்த பதி(இறைவன்) அறிவித்தால் அறியும் பசு(ஆனமா)விற்கு பாசம்(மலம்-அழுக்கு) என்னும் இருளை விலக்கும உத்தியை அறிவிக்கும் பொருட்டு மாயை என்னும் சிறு விளக்கை கொடுக்க ஆன்மா இயக்கம் கொண்டு கர்மாவை ஈட்டுகிறது. இவ்வாறு சிறிது இயக்கமும் கர்மாவும் பெற்ற ஆன்மாவிற்கு மேலும் 24+7+5 தத்துவங்கள்(கருவி) கொடுத்து பசுவை பதியிடம் இணைய வைப்பதற்காக. பசு சார்ந்ததை சாரும் என்பதால் இறை தன்மையான பேரானந்தத்தை பெறும். மேலும் விவரங்களுக்கு அரண்பனி, கமல விநாயகர் சத்சங்கம், ஞானத்திரள் போன்ற வலையொளிகளைப் பார்க்க.

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 Před měsícem

      ஆணவம் கண்மம் மாயை உலகு உயிர் இறைவன் யாவும் அனாதி என்று சொல்வதை புரிகிறேன்...சிவனே என இருக்கனும் ...அன்பே சிவம் என இரு என புரிஞ்சுக்கிறேன லிங்க சிவன் ஓரு குறீயிடே...சுத்த சிவமே அருள்க

  • @peace5916
    @peace5916 Před měsícem

    Background la 3 🏵️🏵️🏵️🌀🌀🌀 what is this?