Johnny Tamil Movie Songs | Rajni Hits | Sridevi | Ilayaraja Hits | INRECO Tamil Film Songs
Vložit
- čas přidán 2. 07. 2024
- Johnny is a commercially successful Tamil film written and directed by the versatile director J.Mahendran starring Super star Rajini in a dual role and stunning Sridevi in lead roles. Mahendran was one of the few directors who understood the magic and gave an aesthetic life to Ilayaraja’s soul (music). Johnny is not a movie it’s poetry on celluloid it’s music is magical, youthful and still echoed in hearts of all who celebrate love.
Johnny Tamil Audio exclusively on Inreco. Rajinikanth and Sridevi in lead roles. Directed by J Mahendran, Music composed by Ilayaraja, Produced by V Gopinathan under the banner KRG Productions. For more superhit songs of Ilayaraja, subscribe to INRECO Tamil Film & Modern Songs
Johnny Tamil Movie also stars Deepa, Prabhakar Reddy, Kanchana, Subhashini and Suruli Rajan.
Tracklist:-
Song: En Vaanile @ 0:00
Singers: Jency
Lyrics: Kannadasan
Music: Ilayaraja
Song: Asaiya Kathula @ 4:49
Singers: SP Sailaja
Lyrics: Gangai Amaran
Music: Ilayaraja
Song: Kaatril Enthan @ 9:27
Singers: S Janaki
Lyrics: Gangai Amaran
Music: Ilayaraja
Song: Oru Iniya Manadhu @ 14:00
Singers: Sujatha
Lyrics: Gangai Amaran
Music: Ilayaraja
Song: Senorita @ 18:20
Singers: SP Balasubrahmanyam
Lyrics: Gangai Amaran
Music: Ilayaraja - Zábava
இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
"ஹ..ஆ..
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
எங்கெங்கும் இன்பம் அது
கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு
ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை
காணாதோ
ஆனந்த ராகம்
பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம்
மேலும் ஏற்றும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
நில்லென்று சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை
ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம்
கேளாதோ
மௌனத்தில் தாளம்
போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே
நெஞ்சம் தேடும்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே"
~~~~~~~~~~~~~~~~
💎ஜானி 💎1980
💎ரஜினி 💎ஸ்ரீதேவி
💎ஜானகி
💎இளையராஜா
💎கங்கை அமரன்
Rajni Should be enjoyed as an ACTOR..
It's Amazing Composition of Ilayaraja🙏🙏🙏 ❤❤❤
👌👌 super song
Mahendran kannadasan ilayaraja a beautiful combination
Super song s
All songs super hit🎧🎶🎶🎵🎷🎼🎹📷🥁
Enrum isaiyaraaja avar
💢Music the life Giver 💢
"என் வானிலே
ஒரே வெண்ணிலா
என் வானிலே
ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்
கவிதை தாரகை
ஊர்வலம்
என் வானிலே
ஒரே வெண்ணிலா
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில்
ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா...ஆ..ஹா..
என் வானிலே
ஒரே வெண்ணிலா
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும்
இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா...ஆ..ஹா...
என் வானிலே
ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள்
கவிதை தாரகை
ஊர்வலம்
என் வானிலே
ஒரே வெண்ணிலா"
~~~~~~~¤💥¤~~~~~~~
💥ஜானி
💥1980
💥ஜென்ஸி
💥இளையராஜா
💥கண்ணதாசன்
Very nice song's
Beautiful songs
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
Download POTATHUKKU thanks 🙏🙏🙏
I really appreciate your kind words. Your support is our biggest motivation.
Impossible music
ವಾವ್ ಮ್ಯೂಸಿಕ್ ಸೂಪರ್ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ಧನ್ಯವಾದಗಳು 🙏🏻 🙏🏻 🙏🏻
பிரபல KRG ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, K.பாலாஜி, சுருளிராஜன், காஞ்சனா, சாமிக்கண்ணு, சுபாஷினி, V.கோபாலகிருஷ்ணன், குமரிமுத்து மற்றும் பலரது நடிப்பில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரையிடப்பட்ட படம்தான் "ஜானி''.
சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா & பால அபிராமியில் வெளியான திரைப்படத்தில் ரஜினியின் வழக்கமான சண்டை காட்சிகள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் முதல் இரண்டு வாரங்கள் பார்வையாளர்களின் வரவேற்பு போதிய அளவில் கிடைக்க வில்லை என்றாலும் கூட உணர்வு பூர்வமான கதை, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு மற்றும் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் பார்வையாளர்களின் மனம் மாற செய்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்!
நான் நண்பர்கள் சகிதம் பால அபிராமியில் படம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்!
ஸ்ரீதேவி பாடகியாக ரசிகர்களை கவரக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியதையும் ரஜினிகாந்த் வித்தியாசமாக இரட்டை வேடம் ஏற்று சுவாரஸ்யமாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் பிற்பாடு வெற்றி விழா கொண்டாடியதையும் மறுக்க முடியாதல்லவா?
இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசனும் இதர பாடல் வரிகளை கங்கை அமரனும் புனைந்துள்ளார்கள்.
கதாநாயகி ஸ்ரீதேவி ஒரு மேடை பாடகி என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப் படுத்தப்பட்ட S ஜானகி குரலில் ஒலிக்கும் "காற்றில் எந்தன் கீதம்", ஜென்சி பாடிய "என் வானிலே", சுஜாதா குரலில் "ஒரு இனிய மனது" போன்ற பாடல்களுடன் சுபாஷினிக்காக SP ஷைலஜா குரலில் "ஆசையை காத்துல தூது விட்டு" மற்றும் ரஜினி - தீபா டூயட்டான SPB குரலில் "செனோரிட்டா ஐ லவ் யூ" உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பெரும்பாலானோரின் விருப்பப் பாடல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை!
யதார்த்தமான கதைக்களமும், அதற்கேற்ற காட்சியமைப்பும் தவிர இயக்குனர் மகேந்திரன் படத்தை பொறுத்தமட்டில் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே கதை சொல்லும் விதமும் சிறப்பே!
பெரும்பாலான காட்சிகளில் வசனங்களுக்கு வேலையே இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அது தெள்ளத் தெளிவாகத் தெரியும்!
நிற்க.
யார் இந்த மகேந்திரன்?
இளையான்குடியை சேர்ந்த மகேந்திரன் எனும் J.அலெக்சாண்டர் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் நிதி நெருக்கடியை சந்தித்ததால் படிப்பை தொடர முடியாமல் இளையான்குடிக்கே திரும்ப முடிவு செய்தார். ஆனால் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். மக்கள் திலகம் MGR - ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர் கல்கியின் பொன்னியன் செல்வன் கதைக்கு திரைக்கதையை எழுதும்படி கூறினார். அப் பணி தாமதம் ஆனதால், காஞ்சித்தலைவன் படத்தில் MGR நடிக்க தொடங்கியபோது இயக்குனரிடம் மகேந்திரனை உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார்.
தமிழ்த்திரை உலகில் முத்திரை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில் புரட்சித் தலைவர் MGR தமக்கு மாத சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதை தான் பூர்த்தி செய்ய வில்லை எனினும் MGR அவர்கள் அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து தனக்கு பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய மகேந்திரனின் எழுத்துத் திறமை நடிகர்திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் திரைக்கதை வசனம் மூலம் நிரூபனமாயிற்று. அவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றது முள்ளும் மலரும் (1978) திரைப்படம் மூலம் தான் என்பதை நினைவு கூறுவதில் தவறில்லை. சுஹாசினி, சாருஹாசன் போன்றவர்களை திரையில் பரிணமிக்க வைத்த பெருமை மகேந்திரனையே சாரும்.
மகேந்திரன் 2019-ல் அவரது 79வது வயதில் காலமானார். எனினும் அவர் காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இன்னமும் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
இந்த அருமையான திரைக் காவியத்தில் இனிமையான பாடல்கள் இடம்பெற காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
23-05-2024
Thanks for watching, please like, share and subscribe
Put it repeatedly
I really appreciate your kind words. Your support is our biggest motivation.
My father favorite movie
❤
Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
Bgm also good in this movie
I really appreciate your kind words. Your support is our biggest motivation. Thank you.... Please Subscribe to Our Channel for more updates....
நன்றி சார்
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
Super song
Wonderful 👌👌👌 songs
See this where our God is; in music, that too, in the greatest emperor of music the only Ilayaraja🙏🙏🙏🙏🙏
Thank you for leaving such a heartfelt comment.
En vasippa kettu etthanai per setthu poiirukkan