போதைக்கு அடிமையா? திருமூலர் சித்தர் சொல்வதை கேளுங்க - கள்ளுண்ணாமை பாகம் 2 | Thirumoolar Kallunnamai
Vložit
- čas přidán 9. 06. 2021
- Thirumoolar Thirumanthiram, Tirumantiram, திருமூலர் அருளிய திருமந்திரம், கள்ளுண்ணாமை, Kallunnamai
திருமூலர் சித்தர் தனது திருமந்திரத்தில். "கள்ளுண்ணாமை" என்ற அதிகாரத்தில் 13 பாடல்களாக உபதேசித்துள்ளார், கள் என்றால் போதை தரும் எல்லாப் பொருள்களும் அடங்கும்.
திருமந்திரம் - 331
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே
விளக்கம்:
இரவு பகல் என்று தெரியாமல், எந்த சிந்தனைகளும், எண்ணங்களும் அற்று, நினைப்பும் இல்லாத, மறப்பும் இல்லாத நிலையில் அமர்ந்திருந்தால் நம் உள்ளே பேரானந்த சிவானந்தத் தேன் ஊறும். நிறைய பேர் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மதுவை குடித்து வீணாக அழிகின்றனர், இரவு, பகல் என்னும் இரட்டை நிலைகளைக் கடந்த இறைவனின் திருவடிகளைப் பற்றினால் இறைவனே கொடுக்கும் தனக்குள் உண்டாகும் பேரானந்த சிவானந்ததேனை அருந்தலாம்.
திருமந்திரம் - 332
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே
விளக்கம்:
சக்தியை வணங்குபவர்களில் சிலர் அவள் அருளைப்பெற்று மந்திர தந்திரசக்திகளை அடைய வேண்டும் என்று மதுவைப்படைத்து பின்பு அருந்துகின்றனர். இது அறியாமை ஆகும், மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள் தம்மை மறந்த நிலையில் அவர்களுடைய ஆற்றலும் அழிந்து போகும். உண்மையான அருள் சக்தி என்பது இறைவன் மேல் எண்ணத்தை வைத்து சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெற்று, உண்மை ஞானத்தை அடைவதே ஆகும்.
திருமந்திரம் - 333
சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே
விளக்கம்:
சிவம் அருள் பெற்றால் அதில் சக்தியின் அருளும் இருக்கும். அதுபோலவே சக்தி அருள் பெற்றால் அதில் சிவத்தின் அருளும் இருக்கும். இரண்டும் கலந்து தமக்குள்ளேயே இருக்கிறது என்பதை உணரந்து அடைந்தால் உண்மையான சக்தியின் தன்மையாகிய அட்டமா சித்திகளும் கிடைக்கும்.
திருமந்திரம் - 334
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.
விளக்கம்:
நம்முள்ளே ஊறும் சிவானந்தத் தேறலே நமக்கு உண்மையான இன்பம் தரும் மதுவாகும். அந்தச் சிவானந்தத் தேறல் நம்முடைய அறிவு மயக்கத்தைப் போக்கும். பொய்யான தத்துவங்களை நீக்கும். நாமே சிவம் என்பதை உணர்த்தும். பொய்யான தவமுறைகளை நீக்கி உண்மையான போகத்துள் போகச் செய்யும். நாம் உண்மை என்று நம்பும் இந்த உலக இன்பத்தை மறந்து, பரமானந்தம் பெறுவோம்.
திருமந்திரம் - 335
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே
விளக்கம்:
இறைவனை அடைய வேண்டும் என்று சிவ சிந்தனையில் இருக்கும் சிவயோகிகள் பிராணாயாம முறையில் மூச்சுக்காற்றை தன் வசப்படுத்தி அதனால் கிடைக்கும் குண்டலினி சக்தியின் மூலம் அமிர்தத்தை பருகி எட்டுவித சித்திகளையும் பெற்று பேரானந்தத்தில் இருப்பார்கள். அப்படி இல்லாமல் உலக இன்பங்களில் மோகம் கொண்டவர்கள் மதுவைக் குடித்து மூடர்களாகி மதம் பிடித்த யானை போல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபம் கொண்டு அறிவை இழந்து ஒரு நாள் இறந்து போகின்றனர்.
திருமந்திரம் - 336
உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே
விளக்கம்:
ஈடுஇணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை எப்போதும் தியானத்தில் எண்ணி குண்டலினியை எழுப்பி மூச்சுக்காற்றின் மூலம் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்று ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்த்து பேரின்பத்தைத் தரும் அமிர்தம் ஊறும் இடத்தைத் திறந்து அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தை பருகி சமாதி நிலையை அடைந்து பேரானந்த நிலையில் இருக்கலாம்.
#aalayamselveer #thirumanthiram #kallunnamai
சிவாய நம
🙏🙏🙏
ஓம் சிவாயநம
🙏🙏🙏
மிகவும் நன்றி எங்களது ஐயா வாழ்க்கை மேம்பட்ட உதவ என்றும் எங்களின் இதயத்தில் நீங்கள் ❤❤❤😂❤❤❤❤
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி தாய் நாடு தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி
🙏🙏
👣🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏 அருமை சிறந்த கருத்துக்கள். நன்றி ஐயா.💐
🙏🙏
ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏
Thanks a lot for such videos...
Om namashivaya
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
🙏🙏
ஓம் 🙏🙏🙏🙏🙏🙏 சாய் ராம்
🙏🙏
Lots of information this video bro
Om Nama shivaya 🕉️🔱🙏📿🙏
I never drinks alhols
🙏🙏🙏god bless you
Lock down yeppo mudiyum brother?...
Innum oru varam irukkalam, ithuvarai update ethum illai
Anna kalyanam panna udane kovilukku varenu vendikkitten Abirami Amman Kita ana Corona time la mrg ana Nala poga mudiyala ipo enakku baby poranthuttu but innum pokala
after lock down is over pogalam sister problem ondrum illai
Saivum vs asaivum please ,,,🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
அண்ணா, நேற்று கனவில் நான் சிவபெருமானை கண்டேன்... கைலாய மலையில் நெற்றி கண்ணை திறந்த நிலையில் அவர் தோன்றினார்... இதன் பொருள் என்ன என்று கூற முடியுமா?
அவரின் அருள் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு என்று பொருள் சகோ
@@AalayamSelveer நன்றி அண்ணா
அண்ணா வணக்கம் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கல் உப்பு பரிகாரம் பண்ணலாமா அண்ணா
வணக்கம் சகோதரி, கூடாது
Anna please reply pannunga en thalaimela vachuruntha clip mela palli vilunthuttu ennoda right hand alkatti virala thandittu Keele vilunthuttu palan sollunga anna bayama irukku
Bayapada ethvum illai sister ithanal entha doshamum illai kavalai vendam
Rompa thanks anna
Anna en kanavar alavukku athikama kudikirar, ethai Ennal nirutha oru vaithyam or valipadu sollunga pls pls pls😪
Sister try this czcams.com/video/kOx0T2RLUyI/video.html
Also start praying Varahi Amman she will help you czcams.com/video/xg-gmDE5ol8/video.html
Smoking habit la irunthu ennala
Nengal manathu vaithal mattume atil irunthu veli vara mudiyum, ungalal mudiyum decide panni udane stop pannunga
Intha corana val en hus velai illai velai kedkka edthvthu slogam sollungga brother
Follow this sister czcams.com/video/t8d2pvvQJrQ/video.html
Also follow this Abirami Anthathi sister czcams.com/video/6UcK9g4TU8M/video.html