கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி மாவட்டம்
    """""""""""'"'"'"'''"""""""""""'"'"'"'''"""""""""""'"'"'"'''"""""""""
    தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீ வைகுண்டம் பகுதியில் பொருளாளர் திரு KM ரவி முதலியார் அவர்களின் தலைமையில் ஸ்ரீ வைகுண்டம் பகுதியைச் சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
    தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவர் திரு AR லட்சுமணன் அவர்கள், கௌரவ தலைவர் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் அவர்கள், செயலாளர் திரு பால தண்டாயுதபானி அவர்கள், பொருளாளர் திரு பாலமுருகன் அவர்கள் துறைமுக திரு முருகேசன் அவர்கள் மற்றும் தாப்பாத்தி திரு விஜய் அவர்கள், கழுகுமலை திரு
    சிவகுருநாதன் அவர்கள், திரு L முத்து கிருஷ்ணன் அவர்கள், கீழ்நாட்டுக்குறுச்சி திரு பிரபாகரன் அவர்கள், மகளிர் அணி தலைவர் திருமதி S. கௌசல்யா அவர்கள் பொருளாளர் திருமதி B. புவனேஷ்வரி அவர்கள், திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மற்றும் திருமதி பேச்சியம்மாள் அவர்கள் ஆகியோர் வெள்ள நிவாரணம் வழங்கும் பகுதிகளை தேர்வு செய்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    கிரேட்டர் சென்னை அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர், பீட்டா கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர், லயன்ஸ் கிளப் ஆஃப் ராயல் எக்ஸலென்ஸ் தலைவர் திரு Dr வழக்கறிஞர் K பழனியப்பன் அவர்கள், மாநில வேலை வாய்ப்பு பிரிவின் பொறுப்பாளர் திரு K நித்திய குமார் அவர்கள், கிரேட்டர் சென்னை பொருளாளர் திரு S சற்குண சேகரன் அவர்கள் மற்றும் திரு S மனோகரன் அவர்கள் ஆகியோர் கிரேட்டர் சென்னை சார்பாக கலந்து கொண்டனர்.
    திருநெல்வேலி மாவட்டத்தின் செயலாளர் திரு மகேஷ் முத்துக்குமார் பொருளாளர் திரு A செந்தில் வடிவேல் கலந்து கொண்டனர்.
    தென்காசி மாவட்டத்தின் சார்பாக தலைவர் திரு முத்தையா பிள்ளை அவர்கள், மதுரை மாவட்டத்தின் துணைத் தலைவர் திரு ராஜகோபால் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    அமைப்புச் செயலாளர் திரு போடி N ரவி பிள்ளை அவர்கள் மற்றும் மகளிரணி தலைவர் தமிழ் செம்மல் திருமதி வேலம்மாள் முத்தையா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    கிரேட்டர் சென்னை பொறுப்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர்கள் தென்காசி மற்றும் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பின் பொருளாளர் மாநில அமைப்பு செயலாளர் மகளிர் அணி தலைவர் ஆகியோர்களின் திருக்கரங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண பொருட்கள் ஜாதி மதம் கடந்து பாதிக்கப்பட்ட பலருக்கும் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இங்ஙனம்,
    போடி N ரவிபிள்ளை
    அமைப்பு செயலாளர்
    அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம்
    01-01-24
    #allindiamudaliyarpillaimarassociation #srivaikuntam #floodrelief #tuticorin

Komentáře •