Sivapuranam in Tamil | திருவாசகம் சிவபுராணம் முழு விளக்கம் | மஹாசிவராத்திரி
Vložit
- čas přidán 7. 03. 2024
- நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
/ @deeptalkstamilaudiobooks
👇 Rajesh Kumar Crime Novels 👇
1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Facebook Page: / deeptalkstamil
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
வாழ்ந்தலும்
சிவன் பாதமே 🙏🏽
வீழ்ந்தாலும் சிவன் பாதமே 🙏🏽
இப்படிக்கு ஈசன் மகன் 🙏🏽❤🎉
நானும் ஈசன் மகள்🙏❤❤
L@@eswarimurugesan2013ad74e😅9t
🙏🙏
அருமையான விளக்கம் சிவா
உங்கள் குரல் மிக அருமையா உள்ளது சொல்ற வித மிக மிக அருமையாக உள்ளது❤❤❤❤❤❤ஓம் நமசிவாய ❤❤☝☝☝☝☝☝☝
சிவபுராணத்தின் முழு அர்த்தத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன். அந்த சிவனே உங்கள் குரலில் அதை பூர்த்தி செய்து விட்டார். எல்லாம் சிவமயமே ஓம் நமசிவாய...
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உங்கள் குரலின் மூலமாக திருவாசகம் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் 🖤 விஷயத்தை கூட உருக வைக்கும் தன்மை உண்டு திருவாசகத்துக்கு . ஈசன் அடி போற்றி நாதன் தாள் போற்றி 🎉
தீபன் அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றி வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா சரணம்
🙏🙏🙏🕉️🙏🙏🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺
மண்ணால் தோண்றி மண்ணால் வளர்ந்து மண்ணுக்கே செல்லும் உடம்பு இதை மறவாமல் இருப்பதற்கே திருமண்ணும் திருநீறும் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤🎉
சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் சொல்லி யதற்க்கு மிக மிக மிகவும் நன்றி, அந்த ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன் நீங்கள் 💜💜💜💜💜✨✨✨✨✨🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐
என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள்
Om namachivayaa
உங்கள் குரலின் வாயிலாக திருவாசகத்தை தெறிந்துகொண்டென் நன்றி சகோதரரே
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அருமை பெருமைகளை எடுத்து சொல்ல எவரேனும் உண்டோ
சதுரகிரி பூ லோக சொர்க்கம்
உங்களால் இன்று திருவாசகத்தை உணர்ந்து கொண்டேன். நன்றி
சிவசிவ எம்பெருமானே நமசிவாய ஹரகர மகா தேவா 🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 தயவு பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் சிவாயநம நற்றுணையாவது நமச்சிவாயவே சிவார்ப்பணம் சமர்ப்பணம் சீவனே ஆன்மா தவம் சிவமே குருவாய் அருளும் வடிவம் எம்பிரான் மாணிக்கவாசகர் திவ்ய மலரடிகள் திருவடிகள் போற்றி போற்றி
உங்கள் குரலில் திருவாசகம் விளக்கம் மிகவும் அருமை ஓம் நம சிவாய 🙏🙏🙏
சிவாய நமக ❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க தில்லையடி நாயகனே போற்றி திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய
atha tha avaru soldraru nalla kelunga
தமிழ் மூதாதை சிவனே போற்றி
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
தீபன் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி
ஓம் நமசிவாய வாழ்க ❤️
ஈசன் அடி போற்றி நாதன் தாள் போற்றி 🔱🌺📿🔱🌺📿🔱📿🌺🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂♥️♥️♥️♥️♥️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌒🌓
இதன் விளக்கத்தைக் கேட்கமுடிந்ததால் இன்று மனம் சந்தோஷம் அடைந்தது . ஓம்நமசிவாய 🕉🙏🌺
சிவ சிவ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
சிவபுராணம் கேட்கும் போது சிவனுடைய அடியாராக மாற வேண்டும் மனம் தோன்றியது
ரொம்ப நாள் ஆசை பாட்டு நிறைய தடவை கேட்டு இருக்கிறேன் பொருள் தெரியவில்லை என்ற ஏக்கம் இருந்தன உங்கள் மூலம் நிறைவேறியது நன்றி ஓம் நமசிவாய!
உங்க குரலில் சிவபுராணம் கேட்டு என் கண்களில் ஆனந்த கண்ணீர் மழை
உணர்ந்தேன் உருகினேன் அழுகையால் அன்பே சிவம் ❤
ஓம் நமசிவாய வாழ்க
சகோதரர் அவர்களே வணக்கம் 🙏 சிவபுராணம் கேட்பதற்க்கும் படிப்பதற்க்கும் ஆனந்தம் தருகின்றது அதிலும் தங்கள் குரல் மூலம் அதன் பொருள் உணர்ந்து அகம் மகிழ்ந்தேன் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய ஓம்❤❤❤
எல்லா தெய்வங்களுக்கும் கடவுள் சிவன்
அருமை அருமை 🤝🤝👌👌சகோதரா...சிவாயநம நமச்சிவாய வாழ்க...🙇♀❤🙏
ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி
ஓம் நமசிவாய
அருமை தெளிவான விளக்கம். ஓம் நமசிவாய
ஓம்நமசிவாய ஓம்சக்தி அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏💞
தீபக் அண்ணா வணக்கம் ஓம் மகான் மாணிக்கவாசகப் பெருமான் திருவடிகள் போற்றி மிகவும் அருமையாக இருந்தது அண்ணா❤❤❤🙏🙏🙏
Very nice anna விளக்கம் om naasivaya..arumai vilakkam anna
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏
அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி
அவன் இவன் யமனாக இருந்தாலும் சிவம் இல்லையேல் அனைவரும் சவம்
Om Namachivaya Rompa arumaiya sonnengal thankyou
அருமை அருமை ஓம் நமசிவாய 🙏
உங்கள் குரல் வளம் அருமை. ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய மிகவும் அருமை யான பதிவு மிக்க நன்றி என் ஆசை நிறைவேறியது
திருவண்ணாமலை நினைக்க முக்தி தரும் தலம் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய... கேட்டு கொன்டே இருக்கனும் போல் இருக்கு... அருமையான பதிவு ஐயா
Superb swamy om nama shivaya 🙏❤️
ஓம் நமசிவாய 🙏
அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி.. வாழ்க நலமுடன் 😊
❤ Om Namah Sivaaya 🙏🏽🙏🏽 Wazga Walamudan, Thambi & Anaiwarum 🙏🏽🙏🏽🙏🏽
ஓம் நமசிவாய நமக
மிகவும் அருமையான பதிவு சகோதரா இதை கேட்டு மெய்மரந்தேன்
அருமை அருமை 🙏🏻சிவயநம 🙇♀️
Om namah shivaya 🙏🙏🙏
Super bro
மனதை உருக்கும் வாசகம் தேன் மாதிரி வரிகள் மற்றும் விளக்கம் ஓம் நம சிவாயம்
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
சிவபுராணம் தந்தமைக்கு நன்றி உங்கள் கணீர் குரல் அருமை..நீங்கள் மென்மேலும் வளர்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
ஓம் நமச்சிவாய வாழ்க ❤❤❤
ஓம் நமசிவாய நமஹ 🙏🌹
மிகவும் 😂 தெளிவாக
விளக்கம் கொடுத்ததற்கு
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் 🌹
நெடு நாள் ஆசை நிறைவேறியது
அருமையான பதிவு வாழ்க வளமுடன்❤
நன்றி நண்பரே ❤
திருவாசகம் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா 🤍
ஓம் சிவாய நம என்றும் உம் புகழ் பெருக என் சகோதரா
மிகச் சிறந்த முயற்சிக்கு மனமார்ந்த நன்றி!
அருமை👌👌 அற்புதம்👌👌 நன்றி🙏🙏 நன்றி🙏🙏
ரொம்ப நன்றி அண்ணா, ஓம் நம சிவாய 🙏
ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏
Om Nama Shivaya 🙏🏼 Thennadudaye Sivane Potri, ennatreverukkum Iraiva Potri Potri 🙏🏼
ஓம் நமசிவாய வாழ்க
Super sir arumaiyaana vaasipuku nanri very powerful voice sir
Thiruchittrambalam, Ungaludaiya intha sivapuranam vilakkam mikaum arumai. Oru vendukol Ithai polvea thiruvasagathaium muluvathumaga mithamulla 50 thalaippaiyum vilukumaaru kettu kolkiren. Mitka nanri. Thiruchittrambalam.🙏
Sivaya nama 🙏
ஓம் நமசிவாய 🙏🔥🙏
தென்னாடுடைய சிவனே போற்றி
திருசிற்றம்பல நாயகா போற்றி 🙏🔥🙏
மிக்க நன்றி ஐயா.
அருமை... feeling good... feeling happy, feeling satisfied. thanks bro
ஓம் நமசிவாய போற்றி போற்றி...
அருமை எளிமை நன்றி
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namah sivaya🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப நன்றி தீப் டால்க்ஸ் தீபன்
Arumaiana speech and meaning ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய சிவாய நம ❤❤
🪔🪔🙏🙏🙏 என்னவென்று சொல்வது இறைவன் அருளால் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும்
Excellent Excellent Excellent very super very happy ❤❤
Om namashivaya
Ungaludaya vilakamum thelivana ucharippu mei urugha seikirathu. Arumai ayya 👏👍🤝
அருமையாக இருந்தது.நான் திருவாசகம் புத்தகம் வாங்கி வந்து ஒரு சில நாட்கள் ஆனது. உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு நானும் அதை வாசிக்க ஆரம்பித்தேன். நன்றாக இருந்தது.நன்றி🙏
ஓம் நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻
Thank you bro for explaining thiruvasagam.. 😊
அருமை அருமை ❤❤
இன்பமே சிவம் 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🐍🐮🕉️🌺🌒😊
சொல்ல வார்த்தை இல்லை 🙏
ஓம் நமச்சிவாய 🔥🔥🔥🔥🔥
Om namah shivaya 🕉️🙏🏼
🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
Thank you so much brother nan innaiku kuda shivapuranam paadinen but sariya meaning theriyala so intha video enaku romba useful ah irunthuchu
Om Nama Shivaya ... 🥹🥹🥹🕉️🔱
உணர்ந்தேன் உன்னையே உன்னையே மறந்தேன் என்னை என்னை ஓம் நமசிவாய❤
மிக மிக அருமை
ஓம் நமசிவாய ❤