இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal
Vložit
- čas přidán 8. 09. 2024
- Idarinum Thalarinum - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : O S Arun | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan | Amutham Music
இடரினும் தளரினும் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : O S அருண் | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
நமசிவாய நமசிவாய செல்வம் பெருகவே
நமசிவாய நமசிவாய செல்வம் பெருகவே
செல்வம் பெருகிட நாளும் சொல்வோம் நமசிவாய
தேவாரத்தை பாடி வருவோம் நமசிவாய
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி)
ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.
தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
எண்ணரிய சிவஞானத்
தின்ன முதங்குழைத் தருளி
உண்ணடிசில் எனஊட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கண்ணார் அருள்புரிந்தார்.
For Music Streming & Downloads
Apple Music : / palan-tharum-pathikangal
Spotyfy : open.spotify.c...
Amazon Prine Music : music.amazon.i...
Jiosavan : www.jiosaavn.c...
Wynk Music : wynk.in/music/...
Google Play Store : play.google.co...
For More Videos: / amuthammusic
Facebook : / amuthammusicofficial
#Palantharumpthiganagal#osarun#bombaysaradha
Amuthammusic#lordsiva#thevaram
அய்யனே எழை மகளுக்கு இறங்கும் தெய்வமே என்னை இந்த கஷ்டத்தில் இருந்து காபாற்றுங்கள் தெய்வமே....
இந்த பாடல் கேட்ட ஒரு ரெண்டு நாள் மட்டும் தான் எனக்கு இருந்த கடன் எல்லாமே இல்லாமல் போய்விட்டது நன்றி சிவனுக்கு 🙏🙏🙏🙏😭
Eppidi.. Nanum kekaren... Ethum nadakala
ஓம் நமசிவாய 💐
ஒம்நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி... கைலாசநாதனே போற்றி போற்றி போற்றி....
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
இப்பாடலை கேட்குறேன் நம்பிக்கையுடன் என் கடன் சுமை குறைகிறது ஓம் நமசிவாய ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏
Yas
Evlo naal ketting please reply me
@@kanishker6thb644 15 day super
@@kanishker6thb64448 days kelunga
இன்னும் இறுதி 4 வரிகள்:
1)வினையாயினநீங் கிப்போய்,(2) விண்ணவர் வியனுலகம் (3) நிலையாக
முன்னேறுவர் 4)நிலமிசை நிலையிலரே -- திருச்சிற்றம்பலம்.
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஈஸ்வரா பரமேஸ்வரா இந்தப் பாடலை கேட்க கேட்க ஆனந்தம் .தங்களின் மிகவும் அற்புதம். ஈசனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ஒம் நமசிவாயம் எத்தனை முறை கேட்க்க கேட்க இனிமையான குரல் அந்த ஐய்யன் ஈசனே பாடுகிறது போல் இருக்கிறது ஈசனே சுவாமி சக்தி உமயவளே அம்மயே என் வறுமை நிங்கி நல்லது ஒரு வாழ்வு தாங்க இறைவனே போற்றி வணங்குகிறேன் ஒம் நமசிவாயம் வாழ்க .....
இப் பாக்கியம் எனக்கு இப்போது கிடைத்தற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
செல்வ வளத்தை தந்த இறைவா கோடான கோடி நன்றி ஐயா ❤❤❤❤
என் கடன் கடன் சுமை குறையய மறனத்தில் இருந்து எங்களை காப்பாத்து நமச்சிவாயா
அப்பனே இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு அப்பனே என்ன படைத்த சிவனே ஓம் நமசிவாய
அருமையான பதிவு!
ஆத்ம உணர்வுகள்!
இறை நிலை!
ஈசன் புகழ்!
ஓம் நமசிவாய
இந்த பாடலை கேக்கும் போது
கண்ணீ என்னை அறியாமலே
கசிந்து ருகுது அய்யனே அப்பனே
ஈசனே எங்கள் அனைவரதும்
கவலைகள் கஷ்டங்கள் தீர வேண்டும் அது போல் இன்னும்
யாரெல்லாம் கேக்கிறாகலோ
அனைவரும் மனம் நிறைவோடு வாழ வேண்டும் சிவ சிவ ஓம்😊
இனிமையான குரல்
இந்த பாடலை கேக்கும் போது
மனம் நிம்மதி பெறுகிறது
ஈசனே ஆறுதல் அடைந்தேன்
ஓம் நமசிவாய 🌹🪔🙏🙏🙏🙏🔱
என் மூச்சு உள்ளவரை ஓம் நமசிவாய. சிவ சிவாய
இந்த பாடலை கேட்டாலோ
பாடினாலோ நிம்மதியாக இருக்கும்
ஓம் நமசிவாய போற்றி என் கடன் நீங்கி செல்வம் வளம் தருக
🙏🙏🙏🙏🙏❤️Namah Shivaya Ellotudaiya Thevaikalayum Santhiyunko Appa
சிவாயநம எனக்கு இந்த பதிகம் ஐயாவின் குரலால கேட்டதுமே உடனே என் பண கஷ்டத்தை தீர்த்ததார் என் ஐயா ஈசன் சத்தியமாக சொல்றேன் இது உண்மை அன்பர்களே என் அப்பனை மனதார நினையுங்கள் தாயினும் இனிய என் தாயுமானவனை போற்றுங்கள் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும் என்னால் அவன் புகழை எப்படி பாடுவேன் இந்த கடையனால் பாடமுடியாது அழதான் முடியும் சிவ சிவ சிவாய நம
ஓம் நமச்சிவாயா நம்பிக்கையுடன். இந்தப் பாடலை தினமும் கேட்டு வருகிறேன் என் கணவரின் கடன் சுமை நீங்கி குடும்பம் சந்தோசமாக வாழ்வதற்கு அருள் புரியவும் நமசிவாய🎉🎉🎉🎉👏👏
இந்த இனிமையான திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரப்பாடலை கேட்க கேட்க எனது வறுமைகள் குறைந்து கொண்டே வருகிறது.. நன்றி ஐயா வணக்கம்...
ஓம் நமசிவாய
இனிமையான குரல் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்
ஓம் நமசிவாய நமக🙏🙏🙏🙏🙏
Excellent performance by OS Arun Dr k
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺️💐💐🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🤗👸👸👸👸🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம
பக்தி உணர்வை வளர்க்கும் - மனதை வருடும் இசையோடு - நல்ல குரல் வளத்தோடு கூடிய மிக்க அருமையான பாடல்.
இறைவன் மீதான பக்தி சரியானது .ஆனால் இறைவனை கொடுப்பவராகவும் கெடுப்பவராகவுமே உலகின் எல்லா சமயங்களும் காட்டுகின்றன .
தன் வாழ்வின் இடர்களை தீர்க்க - தனது தேவைகளை நிறைவேற்ற எல்லாமும் வல்ல ஒரு வல்லமையை மனித மனங்கள் நாடுகின்றன .இந்த உளவியலை உள்வாங்கி பின்னாளில் பக்தி வாணிகமாகிடும் நிலை பெறுகிறது .
நல்லதும் கெட்டதும் எவர் கொடுத்தும் வருவதில்லை
நான் செய்ததன் பலன்களை நான் அடைந்தே தீரவேண்டும் - நல்லது கெட்டது எதுவாக இருப்பினும் .என்பதை ஏற்க மனம் மறுக்கிறது .
அறியாமல் செய்கிற தவறுகள் பிழைகள் குறைகள் மன்னிக்கப்படலாம் .
அறிந்தே செய்கிற தவறுகளுக்கு குற்றங்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என்னும் நன்னெறிக்கு மாற்றாக -- குற்றம் செய்தாலும் காணிக்கைகளை பெற்று கொண்டு இன்னல்களில் இருந்து விலக்கு தருகிறார் - வேண்டுதல்களை நிறைவேற்றி தருகிறார் ''எல்லாம் வல்லவர்'' என்கிற சூழ்ச்சிகள் தான் சமயங்களை இயக்கிடும் சூசகங்கள்.
உலகையே உருவாக்கியவருக்கு நம்மால் என்ன காணிக்கை கொடுத்து விட முடியும்? என்கிற சிந்தையே உருவாகாமல் செய்திடுவதே பத்தி வாணிகத்தின் மூலாதாரம் .
''தீதும் நன்றும் பிறர் தர வாரா '' --- கணியன் பூங்குன்றனார் .
ஓம் நமசிவாய ஐயனே போற்றி போற்றி போற்றி ஓம் 🌹🪔🪔🌹🙏🙏🔱🪔🙏🙏
🌹🙏🪔🔱🌷🌺🪔🌹🔱🙏🙏
ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விதி மாரும் விணை தீரும் திருவாசகம் என்னும் தேன்
மனதுக்குள் தேனூரும் துன்பங்கள் தீரும் ஐயனே அப்பனே போற்றி போற்றி ஓம்
சிவ சிவாய நமஹா
ஐயா உங்கள் குரல் தெய்வீகமாக இருக்கிறது கண்களை மூடி கேட்டால் கண்கலில் தண்ணீர் வருகிறது நன்றி ஐயா ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏
எங்கள்வாழ்க்கைநிரந்தரமில்லை,இதனைஉணர்ந்துஅனைவரும்வாழ்ந்துசிவன்தாழ்பணிவோம்,
ஓம்நமச்சிவாயவாழ்க,
Great to hear.
உண்மை
🙏இந்த தேவார பாடல் கேட்க கேட்க... என்னுடைய வாழ்க்கை வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது.... அன்பு... கருணை... தர்மம் போன்ற நல்ல எண்ணங்களுடன்.... நன்றி என் அன்பு ஈசனே 🙏🙏🙏
உண்மை
ஓம் நமசிவாய
தேவாரம் இயற்றிய திருஞானசம்பந்தர் அவர்களுக்கு நன்றி
இப்பாடலை அனைவரும் கேட்க பதிவு செய்த தங்களுக்கும் நன்றி
ஓம் நமசிவாய
அருமை யான பாடல் தொடர்ந்து இப்பாடல் ஒலி க்க சொல் ல இறைவன் தான் அருள வேண்டும்
excellent🙏
கேட்க்க கேட்க திகட்டாத தேன் அமிர்தம்மாக இருக்கிறது ஐய்யா ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க...
அன்பே சிவம்... அவனன்றி அனுவும் அசையாது...சிவ....சிவ.... 🙏
ஓம் நமசிவாய
சிவாயநம om
ஒம்நமசிவாய
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱
L
இப்பாடலை கேட்க கேட்க என் வறுமை குறைந்து கொண்டே வருகிறது.ஓம் நமச்சிவாய.
❤
Vaasi theeravay kaasu nalguveer enra paadal kealunga innum nanraga irukkum.
True
நானும் வாசிதீரவே பாட்டு கேட்டேன் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது ஆனால் இப்போது பலன் இல்லாதது போல் தெரிகிறது எதனால் என்று தெரியவில்லை
Om namasivaya
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய!! ஓம் நம சிவாய!!!
Om Siva Siva
செல்வம் தரும்படி வேண்டுவது
இனித்த சர்க்கரை உண்ணவேண்டுவது போன்றது.
இடர்களை தரும் இகபோகம்
வேண்டாம்
இன்னலை த்தாங்கும் இதயவலிமையை வேண்டுவோம்.
வறுமை நம்மை வசப்படுத்துவது
தன்மை வேண்டுவோம்
இடர்களூக்கு இடர் பார்ப்போம்
அருண் அவர்களின் அன்பளிப்பு இது
அது தினம் கேட்டு
அமைதிபெறுவோம்.
அருண் ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ
இறைவனை வேண்டுவோம்
பரச
Super,song,thanks
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே
இப்பாடல் ஒலிக்க ஒலிக்க கடன் சுமை தொடர்ந்து குறைகிறது. ஓம் நமசிவாய வாழ்க 🙏💐
Good song....🙏🙏🙏
நமசிவாய வாழ்க
சமஸ்கிரதம் பாடல்களில்
பாடல் முடியும் சமயம்
பலஸ்ருதி என்று ஒன்று இருக்கும்.
அதுபோல் திருஞானசம்பந்தர் பாடல்களில் 11 வது பாடல் அந்த பதிகத்தை பாடினால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்லி இருப்பார்
இந்த பதிகத்தின் கடைசி அடியில்
" வினை ஆயின நீங்கிப்
போய் விண்ணவர் வியன் உலகம் நிலையக முன் ஏறுவர்
நில மிசை நிலை இலரே, "
என்று பதிகத்தின் பலனை கூறி முடித்து இருப்பார்
O. S. அருண் அவர்கள் தன் இனிமை சொட்டும் சங்கதிகளுடன் கூடிய
பாடலில் இந்த வரிகளை சேர்த்து பாட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.
R.பாலசுப்பிரமணியன்
ஓய்வு பெற்ற துப்பரவு அலுவலர். ஈரோடு - 7.
ஓம் சோமநாதீஸ்வராய நம்
ஓம். மல்லிகார்ஜுனஸ்வராய நமஹ
🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏💐
செல்வம் பெருகிட நாளும் சொல்வோம் நமசிவாய
Rempa kastama iruku katavule panakastam manakastathilum iruken enaku uthavi pannunka
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤🙏🙏🙏
🙏🙏🙏🙏💗💗💗💗
Om namasivaya en kadan nengi valvil oli peravendum namasivaya
Nice to hear
Super
ஓம் சிவனே நம
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
🙏Thank you for sharing with everyone
🙏May God Bless You
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏❤❤❤❤
Vazhga 🙏 valamudhan 🙏கடவுளே நன்றி 🙏
Ullam uruguthaiya kural mikka nantri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namah shivaya
Om namachivaya🙏🙏🙏🙏🙏🙏
அருமையான குறல்
Sivaya nama
Arummai thenisai
சங்கரா நின்அ௫ளால் நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கேறாம்
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
DEVOTIONAL song.
ஓம் நமச்சிவாய
om nama shiva.......💚
Omnamasiviaya
thiruchitrabalam
Vanakkam.Amutham Musicals-kku nantri. Edarinum padinal Thiruvavaduthurai -yil padiyadu.Thiruvavaduthurai-(Mayiladuthurai To Kumbakonam). , Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani. OmSivayanama.16.10.21.
அருமை
🙏🙏🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
Thank you for the beautiful song and the voice. May God bless you 🙏
Excellent
Siva Siva
Idar kalaivai eesaneee
Music voice irandum arumai
ஓம்சிவசிவஓம்
Divinely 🙏🙏
Ungal kural theiveeamanathuu. Iravan arul ungalukku nicchayam kidaikkum.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயம் போற்றி ❤️🙏✨
thiruchitrambalam atumyyana pathivu overflowing divine energy bakthi anbu mukthi allava
🙏🙏🙏
Can we have the lyrics in English too. It will help a lot of people who cannot read tamil
ஓம் நமச்சிவாய வாழ்க
சிவாய நமக I ❤
மிகவும் நன்றி ஐயா
Om nama sivaya nama om!
கிலி நமசிவாய 🤲
OmNma sevaya
❤❤❤❤
Om namah shivaya potri🙏🙏🙏🙏🙏