SONG| மருவூர் பொன்மழை| சக்தி ஆசிரியர் சோமசுந்தரம்| MELMARUVATHUR PONMAZHAI |
Vložit
- čas přidán 20. 08. 2024
- Lyrics - Sakthi Somasundaram
Singer - Sakthi #AjaeyShravan
Music Composer - Sakthi Radhika Sivaraj
Programming & Mixing - Sasi Keys
Video script - Sakthi Sridevi Velumyl
Video editing - Sakthi Uma, Sakthi Indira
Thumbnail - Sakthi Harsha
Recordist - Sakthi Yuvaraj, Prasad Labs
For Adhiswara
#amma #omsakthi #guru #amma #melmaruvathur #kanakadharastotram #ponmazhai #bangaruamma #adhiparasakthi
ஓம்சக்தி
குருவடி சரணம் திருவடி சரணம்
கருணை மழை பொழியும் மருவூர் அரசியை கனக மழை பொழியச் செய்யும் புலவர் சோமசுந்தரம் அவர்களின் "மருவூர் பொன்மழை" கேட்டு கான மழையில் நனைவோமா சக்திகளே
1.மாதாவாக இம் மண்ணில்
மருவூர் இறங்கி வந்தவளே!
தாதா எனவே பணி கேட்டுத்
தரணியை நானும் ஒளிசெய்வேன்!
காதும் காதும் வைத்தாற்போல்
கனிவுடன் நயந்து கேட்டிடுவேன்!
போதும் போதும் எனும் படிக்கே
பொன்மழை எனக்கே பொழிவாயே!
2. ஏதோ சொன்னான் இவன் சொன்னான் என்னும் வார்த்தை அல்ல இவை!
தீதோ நன்றோ நானறியேன்!
தெய்வமே பொன்மழை பொழிவாயே!
வாதுகள் வழக்குகள் வம்புகளாய்
வாடித் தனியே தவிக்கின்றேன்!
பேதைவறுமை தனைநீக்கிப்
பெய்க பொன்மழை நீ தாயே!
3.எட்டுத்திக்கும் உனைவேண்டி
எட்டாச் செல்வம் எட்டிடுமே!
பட்டுத் தெளிந்த பக்தன் இவன்
படட்டும் என்றே இருப்பாயோ!
எட்டாச் செல்வம் எட்டிடுமா?
இல்லை எட்டாதங்கே போயிடுமா?
எட்டாச் செல்லம் எட்டுதற்கே
இங்கே பொன்மழை பொழிக அம்மா!
4. மருவத்தூரிலே வந்துதித்து
மங்காச் செல்வம் அளிப்பவளே!
மந்திரத் தமிழில் நீ நின்று
மனமும் கனிந்தே களிப்பவளே!
இகபர சுகமே எல்லோர்க்கும்
ஏற்கும்படியே தருபவளே!
மகனிவன் பணிந்தே கேட்கின்றேன் மழைபோல் செல்வம் தருவாயே!
5. எல்லார் போலவும் பகட்டுக்கா
இங்கே பொன்மழை கேட்கின்றேன்?
வல்லார் முன் போய் நில்லாமல்
வழங்குக பொன்மழை என்றேன் நான்!
வறுமை ஒழிக்க ஒருபக்கம்
வளம்பல செய்ய மறுபக்கம்
வருவாய் தருவாய் என்றே நான்
வான்மழை போலக் கேட்கின்றேன்!
6.என்வலக் கையில் பொருளிருந்தால் இல்லார்க்கெல்லாம் வழங்கிடுவேன்!
இதுவும் தாயே தந்ததென இவ்வுலகெல்லாம் முழங்கிடுவேன்!
என் இடக்கையில் பொருளிருந்தால் எல்லார்க்கும்மே கொடுத்திடுவேன்!
இதுவும் தாய்நீ தந்ததென
ஏழாயிரம் கோடி தொடுத்திடுவேன்!
7. மருவத் தூரிலே மருவரசி
மனங்கவர் ஞானக் குருவரசி!
மாதா வுனக்கே மகனாகி
மண்ணில் வறியனாய்த் திரிவதுவோ?
மருவரசி பெற்ற ஒரு பிள்ளை
மனந்தான் குறுகிக் கூசுவதோ!
மருவூர்ப் பெருமை இதுவென்றே
மற்றவர் கேலி பேசுவதோ?
8.ஆர் ஆர் வந்தார் அந்நாளில்
அழகிய திருமிகு ஆரூரில்!
ஊரார் வியந்து பாராட்டும்
உன் திருத் தொண்டர் உருள்வலத்தால்
பாரோர் மகிழ மழை தந்தாய்
பாவி எனக்கே ஆகாதோ?
பரிதவித்து இங்கே நான் கிடந்தால் பராசக்தி மனந்தான் நோகாதோ!
9. உலகம் செழிக்கத் தாமரையில் உட்கார்ந்திருக்கும் திருமகளே!
கலகம் செய்யும் மண்ணுலகில்
கனகப் பொருளே பேசுதம்மா!
கலக்கம் எனக்கும் வந்ததம்மா!
கையில் காசில்லை என்பதனால்!
விளக்கம் தரவே பொன்மழையை
விரைந்து நீயே பொழிக அம்மா!
10. வேம்பின் இலையை வீசியதால் விளைந்த பொன்மழை யாமறிவோம்!
காம்பின் பாலை நினைந்தளிக்கும்
காராம் பசுவே ஆனவளே!
வீம்பும் வேகமும் எனக்கில்லை
வெற்றியே விளைக்கும் திருமகளே!
தேம்பும் பிள்ளை துயர் தீர்க்கத்
தெய்வமே! பொன்மழை பொழிவாயே!
11. தர்மம் தழைக்கச் செய்திடுவேன்
தாயுன் புகழைப் பாடிடுவேன்!
மர்மம் செய்யும் மாயத்தை
மகன் இவனிடத்தும் செய்யாதே!
கடமை தன்னைச் செய்வதற்கே
கனக மழையும் பொழிவாயே!
கருணை மழையைப் பொழிபவளே!
கனக மழையும் பொழிவாயே!
12. பொன்மழை எனக்கே பொழிந்திட்டால் புறப்பட்டு விடுவேன் உனைநோக்கிப்
பண்மழை போலப் பாட்டிசைப்பேன் பங்காரு அடிகள் பணிகேட்பேன்
கட்டிய துணியொன்று போதுமெனக் கண்டிப்பாக நான் வருவேன்!
எட்டிய மட்டும் அவர் பணியை
இவ்வுல கெல்லாம் செய்திடுவேன்!
13.சங்கரன் முன்னே பொழிய வைத்தாய்! வேதாந்த தேசிகர்க்கும் அவ்வாறே!
தன்கரம் கொண்டே இவனுக்கும் தங்கமழை இங்கே பொழிவாயே!
வறுமை வாழ்க்கை விளிம்புக்கே
வாடியே போகத் தெம்பில்லை!
பெருமை உனக்கே சேருமம்மா
பெய்க பொன்மழை நீ தாயே!
14. கலைகள் எல்லாம் தருபவளே! கவலைகள் எனக்கே தருவதுமேன்?
விலையாய் எனையே ஏற்றிடுவாய்! விரைந்தே பொன்மழை பொழிந்திடுவாய்
வேய்ங்குழல் ஊதும் கண்ணன் போல் விளங்குமுன் புகழை ஓதிடுவேன்!
தாழ்குழல் மகளே! தாயவளே!
தங்கமழை இங்கே பொழிவாயே!
15.நாதமே! கீதமே! நன்மகளே!
நானிலம் ஆளும் பொன்மகளே!
வேதமே! வித்தையே! வேம்பரசி!
விரும்பியே தங்கமாய் ஆனவளே!
பச்சைத் துளசியில் பசும் பொன்னைப் பார்த்திட ஆக்கித் தந்தவளே!
இச்சை என்மேல் கொள்வாயே!
இன்றே பொன்மழை பொழிவாயே!
16. வாடிய பொழுதில் வண்டமிழில் வழங்குக பொன்மழை எனக்கேட்டுப்
பாடிய பாடல் படிப்பார்க்கும்
பக்கம் நின்றே கேட்பார்க்கும்
நாடிய செல்வம் தர இங்கே
நற்றமிழ் தன்னில் வேண்டி நின்றேன்!
தேடிய செல்வம் தருவாயே!
தெய்வமே! பொன்மழை பொழிவாயே!
17.தாயான குருநாதர்
தயைபோலப் பொழிக அம்மா!
சேயான அவரன்பின்
சீர்போலப் பொழிக அம்மா!
மருவத்தூர் அடிகளாரின்
மனம்போலப் பொழிக அம்மா!
குருவான எம்மிறைவர்
குணம்போலப் பொழிக அம்மா!
18.சீர்மருவூர்ப் புகழ்போலச்
சிறந்திங்கே பொழிக அம்மா!
நேர்நின்று அருள்பேசும்
நின்விழியால் பொழிக அம்மா!
அருள்மழை பொழிகின்ற
ஆறுபோல் பொழிக அம்மா!
பொருள் மழை பொன்மழையாய்ப் புவியெலாம் பொழிக அம்மா!
எல்லா தெய்தவங்களும் எனது அருமையான பங்காரு அம்மா தான்.
என் கூட இரவும் பகலும் இருக்கிறாள் என்னுடைய பொன்னானபங்காரு அம்மா.
Omsakthi amma thayae Arul purivae
Om sakthi guruvadi sarnam thiruvadi saranam om sakthi
Omsakthi
Omsakthi amma saranam amma amma thayae Arul purivae
Enagu ropapudichipato
Amma kapathu omsakthi
Very nice 👌👌
Romba nandri thaye
எனக்கு எனது பங்காரு அம்மாவை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று எனக்கே தெரியாது.
Om sakthi amma potri song very nice meaning ful
Guruvadi Saranam thiruvadi Saranam amma
Omsakthi Guruvadi Saranam Thiruvadi Saranam
ஓம் சக்தி!
பொன் மழை பொழிந்த அருட்செல்வங்களுக்கு அருட்பெருந்தெய்வத்தின் அருளாசி மலர்கள் பொழிய வேண்டுகிறேன்.
Ammathaye arulmazypozivaye
Om shakthi Amma 🙏🙏🙏
குருவடிசரணம். திருவடிசரணம். ஒம்சக்தி
ஓம் சக்தி சக்திகளுக்கு அன்பான வணக்கம்💐💐
மருவூர் பொன்மழை பாடல் அருமை சக்தி..
இப்பாடலை படித்ததால் தான் கொரோனா டைம்லே எனக்கு இழந்த வேலை மீண்டும் கிடைத்தது சக்தி.. என் வாழ்வில் நடந்த அம்மா அற்புதம் 2020
கஷ்டப்படுகிறவர்கள் இப்பாடலை படித்தால் வாழ்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் சக்தி..
இப்பாடல் இசையுடன் வெளிவராத என ஒரு ஏக்கம் என் மனதில் இருந்தது.இப்போது அந்த ஆசையும் நிறைவேறியதும்...ஆதிஸ்வரா சேனலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சக்தி..
அருள்திரு அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா💐💐💐
இசை அமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்,வீடியோ எடிட்டிங் சக்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..../💐💐💐💐💐💐
Guruvadi saranam thiruvadi saranam amma
அழகில் மிளிர்ந்தாய் ஓம்சக்தி ஓம்
Om sakthi maruvoor ponmazhai 🙏🙏🙏sakthi somasundaram iyya Lyrics super
Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma amma thayae Arul purivae
வையம் எல்லாம் அருள் மழை பொழியும் அம்மா..! மக்களுக்காய் வந்த அருட்பெரும் தெய்வம் பொன் மழை பொழிகிறாள் மக்களுக்கு செழுமை தந்து எங்கெங்கும் தர்மம் நிலைத்திட!
Omsakthi amma saranam amma guruvadi saranam thiruvadi saranam amma
Omsakthi ammavae saranam amma
Om Shakti Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Om Sakthi
அம்மா... எங்களுக்கு எது தேவை என்று உனக்கு தான் தெரியும்... அருள் மழை.. கருணை மழை.. பொழிந்து அருள்க தாயே..
Omsakthi amma saranam amma
ஓம்சக்தி
குருவடிசரணம் திருவடிசரணம்
உலகமொல்லாம்சக்தி நெறிஓங்க வேண்டும்
ஒவ்வெருவர்மனக் குறையும் நீங்க வேண்டும்
ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு.அடிகளார் அவர்களின் திருவடி களே சரணம் அம்மா
Good happy song
Om sakthi Amma saranam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍
நமது ஆலயத்துக்கு கிடைத்த அருபெரும் புலவர்களில் ஒருவர் ஐயா சக்தி.சோமசுந்தரம். ஓம் சக்தி! !!
ஓம் சக்தி.
உருக்கமான இசை வடிவம்;
உணர்வுப் பூர்வமான வார்த்தைகள்;
கண்ணை மூடி அன்னை முன் அமர்ந்து இதனைக் கேட்பதே தியானமும் வேண்டுதலும் ஆகும். புலவர் பெருமகனாரே, அன்னையின் அருளால் வாழ்க பல்லாண்டு. ( T. V. மகாதேவன், அவிநாசி ).
Omsakthiamma
Mana amithi tha amma
நமது பங்காரு அம்மா புலவர் பெருமகனாரை பல்லாண்டு பல்லாண்டு வாழ வைப்பாள். இது உறுதி.
Om Sakthi guruvadisaranam thiruvadisaranam amma 🪔🪔🪔manam urugavaikkum ponmazhai song 🙏🙏🙏
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா ❤❤❤
Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஓம் சக்தி பராசக்தி
சக்தி புலவர் சோமசுந்தரம் ஐயா
பொன் மழை படித்ததில் மிகவும்பிடிக்கும் பலன்கிடைத்த
அம்மாவின் தொட்டில் நானும் ஒருவன்
சக்தி ராஜேந்திரன் தருமபுரி
இன்று பாடல் வரிகள் மிகவும் அருமை
சத்தி. அனைத்து சக்தி பயன்
Sakthi Amma
எனக்கு பொன்மழை ஒன்றும் எனக்கு வேண்டாம் என்னுடைய பொன்னான பங்காரு அம்மா என்னுடன் எப்போதும் இருந்தால் போதும் அம்மா.
Omsakthi thaye we need yr blessings always amma we want to see our vamsi pappa amma
Somasutharam. Anna. Anubavithu ezhuthi. Ullar. Super
Omsakthi🌺🙏🙏🙏🌺
Om sakthi parasakthi guruvadi saranam thiruvadi saranam amma🙏🙏🙏🙏🙏🙏
Om Sakthi 🙏 parasakthi 🙏 Guruvadi saranam thiruvadi saranam 🙏🌹🌹🌹🦜🦜🦚🦜🦜🌹🌹🌹
Omsakthi ammave saranam amma
GURUVADI SARANAM THIRUVADI SARANAM
Omsakthi amma thayae arul private amma🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏om 🙏sakthi 🙏thunai 🙏🙏🙏
OmzKthi guruvàdi saranam thiruvadi saranam❤❤❤❤amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️😊😊
ஓம்சக்தி
ஓம்சக்தியே! ஓம் பங்காரு அடிகளே ஓம்!
எனக்கு என்னுடைய அம்மாவின் அருள் மாத்திரம் போதும்.
Supperiorpowersong 100%result
awesome
Om sakthi para sakthi Athi para sakthi
My fevarait song oom parashakthi thaye potry
அம்மா சரணாகதி
Kanakadharam Stotram In Amma's Version
அம்மா தாயே எங்களுக்கு உடல் சுகம் உள்ள சுகம் ஆயு ட்காலத்தையும் நீட்டி தாங்க
Super
Om Shakthi barashakthi 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சக்தி வாழ்க வளமுடன்
Om Sakthi Ammave Sarnam Amma.
ஓம் சக்தி அம்மா வே சரணம் அம்மா இந்த பாடலில் வந்த வரிகள் போல் அனைவருக்கும் பொன்மழை பொழிவாய் தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா 🙇🏻♀️🙏🏻🙇♂️🙏🏻🙇🏻♀️🙏🏻🙇♂️🙏🏻
Om shanti parashakti amma 🙏
அம்மா ❤️
ஓம்சக்தி
குருவும் திருவுமான எங்கள் அம்மா! நீ இந்த உலகத்தைக் காத்தருள்க.
எனக்கு என்னுடைய பங்காரு அம்மாவின் மந்திர புன்னகையும் என்னுடைய பங்காரு அம்மாவும் என் கூட இருந்தால் போதும் பொன்மழை ஒன்றும் எனக்கு வேண்டாம்.
Om sakthi✨️❤️
உயிர் உயிர்ப்புடன்உள்ளபாடல்
Omsakthi parasakthi guvadi saranam thruvadi saranam🙏🙏🙏🙏🙏
🎉o.sakthi
Om Sakthi Thayae en venduthalai niraivethu Thayae 🙏🌿🙏
Om sakthi
ஓம் சக்தி பராசக்தி.. அருமையான அம்மா பாடல்.. செந்தமிழ் தேன் கலந்து ஊட்டியது போல் தெரிகிறது... பாடல் இனிய படைப்பு,.
Our father and mother are the primary gods. We must worship them first
ஓம்சக்தி🙏🙏
எனக்கு என்னுடைய பங்காரு அம்மா என்னிடம் இருக்கும்போது எல்லா செல்வங்களும் என் கூட இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
Amazing 🇮🇳🌿
Ramayana is the fight for the woman and Maha bharata is the fight for the land
Omsakthi amma
Om sakthi 🙏
omsakthi AMMA
அம்மா என்றால் அன்பு
🙏🙏🙏 OMSAKTHI AMMA THUNAI 🙏🙏🙏
Amma pangaru amma nalla vali kanbingal amma
Amma ennul irukum guru natha enkurai enul irukum cancer rai poor natural kunmaku thayee amma voonarulum karunayum vendumarul purivai thayee omsakthi ammaa ammaa
அம்மா நீயே என் அடைக்கலம் என் கணவர் ஆயுளை காத்து ..எனக்கு நீண்ட மாங்கல்ய பாக்கியத்தை தாரும் அம்மா..என் கணவர் உயிரை காத்தருளும் தாயே,...
Amma pls bless me with good job ma...
அம்மா சரணாகதி!!
Divine fragrance will save you but cosmetic fragrance will not save you
Ohm sakthi
Enga amma amma
Arumai yana isai vadivam.....innum niriya paadalgal...vadivamaikka pada vendum....💐💐💐💐🔱🔱🔱🪔
What a Mesmerizing rendition by the singer.. divine voice ...👌👌👌
om sakthi. superb song
Om Sakthi Parasakthi. Guruvadi saranam Thiruvadi saranam Amma. Very nice song.
குருவே சரணம்மா✨✨✨♥️
🙏🙏🙏🙏🙏
Ean yivvalavu thunpathai kodukiray
Om Sakthi 👍
The holiest Redeemer is Adigalar who can do anything in the universe
Though new devices are invented by science to save women none is Useless. Only the grace of Adigalar can save them
Ohm