அச்சோப் பதிகம் - திருவாசகம் | Acho Pathigam - Thiruvasagam | So So Meenakshi Sundaram Speech |

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • அச்சோப் பதிகம் - திருவாசகம் | Acho Pathigam - Thiruvasagam | So So Meenakshi Sundaram Speech |
    #ஆன்மீகசொற்பொழிவு #aanmeegam #aanmegam #tamildevotional #sosomeenakshisundaram #திருவாசகம் #அச்சோப்பதிகம் #AchoPathigam #thiruvasagam

Komentáře • 16

  • @vedicvoicemedia
    @vedicvoicemedia  Před 7 měsíci +3

    திருவாசகம் - அச்சோப் பதிகம்
    முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
    பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
    சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
    அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 1
    நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
    சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
    குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
    அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 2
    பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
    மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
    தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
    ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 3
    மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
    எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
    சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்
    அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 4
    பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
    நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
    உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
    அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 5
    வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
    கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
    பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
    அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 6
    தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
    பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
    உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
    ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 7
    சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
    காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
    மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
    ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 8
    செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
    மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
    நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
    அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 9

  • @meenadharmalingam7304
    @meenadharmalingam7304 Před 17 dny

    ஓம் நமசிவாயம் வாழ்க

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி நன்றி
    ஓம் சிவ சிவ சிவ

  • @pgiri345
    @pgiri345 Před 7 měsíci +1

    ஓம் சிவயநம ஐயாவின் திருவாசகம் உரை இது போல யாரும் கூற முடியாது , பதிவு செய்தவர்களுக்கு நன்றி , வாழ்த்துகள்.

  • @narayanaswamip91
    @narayanaswamip91 Před 7 měsíci

    அச்சோபதிகமவிளக்க உரைகேட்டுமகிழ்ந்தேன்

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Před 2 měsíci

    அச்சோப் பதிகம் விளக்கியமைதற்கு மிக்க நன்றி அய்யா🙏🏼🙏🏼🙏🏼 தங்கள் திருவடிகளை பணிகிறேன் 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏼🙏🏼🙏🏼

  • @veeramani195
    @veeramani195 Před 7 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @smiledd2128
    @smiledd2128 Před 7 měsíci

    😢😢😢😢🙏🙏🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    ஓம் நமசிவாய நமஹ