சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம்,வெண்கலம் பெற்று சாதனை. Muthayammal Arts and Science College.Ventra

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியில் தனியார்(முத்தாயம்மாள்) கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் 3ம் ஆண்டு B.COM பயிலும் சந்தோஷ் என்ற மாணவன் பள்ளி பருவத்திலிருந்து ஜூடோ போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 85 கிலோ எடை பிரிவுக்கான ஜூடோ போட்டி தேசிய அளவிலானது கேரள மாநிலத்திலும் மற்றும் சர்வதேச அளவிலான போட்டி நேபால் நாட்டிலும் கலந்துகொண்டு மாணவர் சந்தோஷ் தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார். சிறப்பாக விளையாடிய மாணவன் தற்போது வருகின்ற ஜனவரி மாதத்தில் துபாயில் சவுத் ஏசியா ஜூடோ போட்டியில் மாணவர் கலந்து கொள்ள உள்ளார்.
    மேலும் அதே கல்லூரியில் பிரியா மற்றும் கவிதா என்ற மாணவி பளு தூக்கும் போட்டியில் தேசிய அளவிலான நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பிரியா என்ற மாணவி 69 கிலோ எடை பிரிவில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கத்தையும், கவிதா என்ற மாணவி 63 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். தற்போது காமன்வெல்த் போட்டியானது வருகிற 28ஆம் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் பளுதூக்கு போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என கூறினார். பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டுகளை தெரிவித்தனர்...

Komentáře • 2