ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமாவார நிகழ்ச்சியாக 108 சங்காபிஷேக பூஜை...
Vložit
- čas přidán 5. 09. 2024
- ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராசிபுரம் இரட்டைப் பிள்ளையார் கோவிலில் சங்கடகர சதுர்த்தி அபிஷேகம், பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கடைவீதியில் உள்ள இரட்டை பிள்ளையார் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தியை ஒட்டி அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இரட்டை பிள்ளையாருக்கு பஞ்சாமிர்தம்,பால் தயிர்,சிவக்காய், மஞ்சள்,திரு மஞ்சள், அரிசி மாவு, எலுமிச்சை,இளநீர், சந்தனம்,பன்னீர், தேன்,கரும்பு சாறு உள்ளிட்ட 13 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இரட்டை பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது.இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு இரட்டைப் பிள்ளையாரை தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டத்திலேயே இரட்டை பிள்ளையார் ஆலயம் ராசிபுரத்தில் மட்டும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.