Nanguneri 🙏 11 Garuda Seva Perumals 🙏

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2022
  • திருநாங்கூர் 11 கருட சேவை விளக்கம்:
    09.02.2016 இரவு 11 மணிக்கு
    11 திவ்யதேச ௭ம்பெ௫மான்களையும் ஒரே இடத்திலே கருட சேவையில் ஆழ்வா௫டன் ஸேவிக்கலாம்.
    கருட சேவை பற்றி அனைவருக்கும் தெரிய படுத்தவும்......
    பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்!
    குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
    நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
    வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்ஆயின செய்யும்
    நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே.
    திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
    தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
    அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
    அமர்ந்தேத்த இருந்தவிடம்
    என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்
    பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
    மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்..
    நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
    11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
    தை அமாவாசைக்கு மறுநாள்- கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் எழுந்தருள... திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை- மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்
    ஆண்டு தோறும் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் சந்நிதியில் தை அமாவாசைக்கு மறுநாள் 11 பெருமாள்களும்
    கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் உற்ஸவம் நடைபெறும்.
    அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..!
    தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்து சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!
    பெருமாள்கள் வீதியுலா காட்சியுடன் 11 கருட சேவையை தரிசித்தால் புண்ணியங்களின் பலன்கள் ஏராளம் கிடைக்கும்,
    திருநாங்கூர் மணிமாடக் கோயில்
    சீர்காழிக்கு அருகே விளங்கும் திருத்தலம், திருநாங்கூர். இந்த ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் 5 திவ்ய தேசங்கள். ஆக மொத்தம், பதினொன்று! பல மலர்கள் சேர்ந்த ஒரு மலர்க் கொத்தாக இந்த திவ்ய தேசங்கள் திகழ்கின்றன.
    ஒரே பகுதியில் உள்ள திவ்யதேசங்கள்தானென்றாலும், ஒன்றுக்கொன்று நெடிய தொலைவில்தான் அமைந்திருக்கின்றன.
    இதுதான் அந்த திவ்ய தேசங்களின் பட்டியல்:
    1. திருக்காவளம்பாடி,
    2. திரு அரிமேய விண்ணகரம்,
    3. திருவண்புருடோத்தமம்,
    4. திருச்செம்பொன்செய் கோயில்,
    5. திருமணிமாடக் கோயில்,
    6. திருவைகுந்த விண்ணகரம்,
    7. திருத்தேவனார்த் தொகை,
    8. திருத்தெற்றியம்பலம்,
    9. திருமணிக்கூடம்,
    10. திருவெள்ளக்குளம்,
    11. திருப்பார்த்தன்பள்ளி.

Komentáře • 1