அநாதி சிநேகத்தால் | Anaathi Snegathal

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2020
  • #Anathi_snehathal
    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரையா
    உம் காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே
    உங்க அன்பு பெரியது
    உங்க இரக்கம் பெரியது
    உங்க கிருபை பெரியது
    உங்க தயவு பெரியது
    அனாதையாக அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே
    நிலையில்லா உலகத்தில்
    அலைந்தேனையா
    நிகரில்லாத இயேசுவே
    அணைத்துக் கொண்டீரே
    தாயின் கருவில் தோன்றும் முன்னே
    தெரிந்து கொண்டீரே
    தாயைப் போல ஆற்றித்
    தேற்றி நடத்தி வந்தீரே
    நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனையா
    கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே

Komentáře • 2