எந்நாளுமே துதிப்பாய் l Ennalume Thuthippai l Christian Tamil Keerthanai l Ponnappanagar CSI Choir
Vložit
- čas přidán 4. 06. 2024
- Ennalume Thuthippai l Tamil Christian Keerthanai l Sung by CSI Ponnappanagar Choir l Kanyakumari District l Tamilnadu l India l Email : choircsipnr@gmail.com l Lyrics by : Rev.S.Paramandham, Sankarankovil.
Lyrics:
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது.
பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால்.
நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்.
பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே, சத்திய மேயிது.
மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே.
தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.
என் நாளுமே துதிப்பாய் அருமையான பாடல் எங்களுடன் பகிர்ந்து கோண்டது மிக மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
பழைய பாடலில் என்றும் மகிமையின் பிரசன்னம் உண்டு.நன்றி.
Nice song 🙏
Good news good news rejoice in the Holy Spirit