சீர்காழி பாடிய சின்னஞ்சிறிய வண்ணப் பறவை TMS க்கு சிவாஜி ஏன் மாற்றினார்? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2022
  • சின்னஞ்சிறிய வண்ணப் பறவை உருவான விதம்
    #chinnanchiriyaVannapparavai
    #sinnanSiriyaVannaParavai #tms_vs_seerkali #sivaji #vilari #alangudy
  • Zábava

Komentáře • 174

  • @sarvanabalaji
    @sarvanabalaji Před rokem +15

    அற்புதமான பாடல்.சீர்காழி அவர்கள் பாடிய பாடலையும் இசைத்தட்டில் சேர்த்திருக்கலாம்.அது கிடைக்காமல் போனது துரதிஷ்டமே

  • @uthirapathivelusamy5412
    @uthirapathivelusamy5412 Před rokem +8

    மிகவும் சரியாக சொல்கிறார். நான் மிக மிக மிக ரசித்து சுவைத்தது.
    ஜானகி அம்மாள் கீழிறங்கி இனிமையாக அழைத்துச் செல்வார்.அய்யா TMS அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் பாடலை கேட்பவர்கலையும் எழுந்து ஆட வைத்து விடுவார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கேமராமேன் அய்யா சிவாஜியின் நடிப்பில் மெய் மறந்து சிவாஜியின் ஒவ்வொரு முக அசைவையும் குலோசப்பில் சுட்டுத்தள்ளிவிடுவார். சிவாஜியின் கண், புருவம் உதடு மேல் தாடை கீழ்தாடை கன்னத்தின் அசைவு பெருமிதமாக எழுந்து உட்கார்வது கையசைவு. அய்யோ சொல்லி மாலாது. சிவாஜியின் இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் என் வேலையை நிறுத்திவிடுவேன்.அதுபோல் ஒரு நாள் இந்த பாடலை கேட்டதால் பேருந்தை தவறவிட்டு ( வேண்டுமென்றே) அலுவலகம் செல்லவில்லை.

  • @sena3573
    @sena3573 Před rokem +22

    உண்மை தான் சார். சீர்காழி ஐயா மாதிரி யாராலும் பாட முடியாது. பிடித்த பாடல். விளக்கம் அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @BG_23281
    @BG_23281 Před rokem +10

    சீர்காழியின் திறமையே திறமை .. அவரின் கம்பீர நுணுக்கம் ஒப்பில்லாதது

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před rokem +3

    TMS - the One & Only Voice - Most apt for Sivaji GaNesan. Especially, TMS's Singing and Sivaji GaNesan's performance for this Song were quite Brilliant. Sivaji's Decision was absolutely right. IF at all this story behind this song is true, then unfortunately, it was not a good decision on the part of KVM to have opted for Seerkazhi ayyaa first. Any way, this is an unforgettable song indeed both for TMS & Sivaji and also for KVM. Janaki too sang it nicely. Sivaji GaNesan's entry on to the stage, his Majestic Sitting posture, his body language, his facial expressions & lip moment - are all an absolute treat to watch - as he gave a complete life to TMS's hardwork. Brilliant composition by KVM based on Raagam Dharbaari Kaanada to KaNNadasan's nice lyrics.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Před rokem +6

    ஆஹா எவ்வளவு அருமையான விளக்கம் ஐயா ரொம்ப அருமையான பதிவு ங்க ஐயா
    என்னுடைய கருத்து என்னவென்றால்
    இந்த பாடல் சரிகமபதநிச
    என்ற ஸ்வரங்கள் வருவதால்சீர்ககாழி அவர்களை பாட வைத்திருக்கலாம் ஆனால் நடிகர்திலகம்
    அவர்கள் சீர்காழி அவர்களின் குரல்
    சற்று கணீர் என்று இருந்தாலும் உச்சியில் பாடும் போது சற்று குரலின் ஆண்மை தன்மை மாற்றமாகி விடும் ஆனால் டி எம் எஸ் ஐயா வின் உச்சிஸ்தியில் குரலின் தன்மை சற்றும்
    மாறாமல் பாடக்கூடிய திறமை வாய்ந்தவர் என்பதை நினைத்து தான் பாட வைத்திருப்பார்கள் என்பது தான்
    உண்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +10

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் மட்டுமே கலைக்கடவுள் ஆளுமை தொடரும் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி நம் நடிகர் திலகம் மட்டுமே

  • @rajappas4938
    @rajappas4938 Před 8 měsíci +1

    TMS ayya voice is most suitable for Sivaji sir and has won the hearts of all peoples.

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar and kvm ❤

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Před rokem +3

    அனைத்து
    விளக்கங்களும் அருமை...!! இன்னும் பல பாடல்களை எதிர்பார்க்கிறோம்..!!!

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +8

    பாடலில் தலைவர் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம் கலைத்தாயின் தலைமகனை இந்த உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலையுலக முதல்வன்

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 Před rokem +10

    எக்காலத்தும் நடிகர்திலகத்தின்
    இந்த பாடலை மறக்கமுடியாது.
    மேலும் கண்களிலே தோன்றும்
    காட்சிகள் கோடி கலக்கத்திலே பாடுதே ஊஞ்சலாடி என்ற வரிகள்
    வரும்போது நடிகர்திலகம் குளோசப் பில் வரும்போது முகபாவங்கள் என்றென்றும்
    மறக்கமுடியாது.இந்தபாடல் TMS
    பாடியது தான் பொருத்தம் கம்பீரம்.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +19

    சீர்காழி கோவிந்தராஜன் நல்ல நுணுக்கமான பாடகர் தான் ஆனால் ஒரு கற்பனை செய்து பாருங்கள் இந்த பாடலை சீர்காழி பாடியிருந்தால் நன்றாக இருக்குமா இந்த ராக ஆலாபனைக்கு சீர்காழி மாதிரியே டி எம் எஸ் கொண்டு வந்தாரா இல்லையா ஆரம்ப காலத்தில் படம் பாடல்கள் எல்லாம் யாருக்கும் யார் வேண்டுமானாலும் பாடினால் போதும் பாடகர்கள் நன்றாக பாடினால் போதும் என்று அப்போது உள்ள ரசிகர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் ஆனால் 1960 கால கட்டத்திற்கு பிறகு நிலமை மாறிவிட்டது டி எம் எஸ் வாய்ஸ் வந்த பிறகு தான் இந்த நடிகருக்கு இந்த வாய்ஸ் அருமையாக பொருந்துகிறதே என்று இசையமைப்பாளர்களுக்கே தெரிய வந்தது அதற்கு முன்பு சீர்காழி திருச்சி லோகநாதன் சிதம்பரம் ஜெயராமன் போன்ற பாடகர்கள் கோலோசி கொண்டு இருக்கும்போது தான் டி எம் எஸ் நுழைய அப்படியே தலை கீழாக மாறியது
    ஆரம்பத்தில் எம்ஜிஆர்க்கு சீர்காழி பாடிய
    சீர் மேவும் குருபதம் சிந்தையொரு வாக்கியம் சிரை மீது வைத்து போற்றி ஜெகமெல்லாம் மெச்ச ஜெய கொடி பறக்கவிடும்
    என் எஸ் கே அவர்கள் உடன் இணைந்து பாடியது
    ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே போன்ற பாடல்களை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்ட காரணம் அப்போது எம்ஜிஆர் வளர்ந்து கொண்டு வந்த கதாநாயகன் ஸோ பாடல்கள் நன்றாக இருக்கிறது என்று மட்டுமே நாம் ரசித்தோம் ஆனால் அதற்கு பிறகு அறிவு வளர்ச்சி அடைய அடைய காட்சி அமைப்புடன் ஒன்றி பாடல்களை ரசிக்க ஆரம்பித்து விட்டனர் அதனால் தான் சீர்காழியை பின்னுக்கு தள்ளி டி எம் எஸ் வாய்ஸ் முன்னிலை பெற்றது அதற்கு பிறகு சீர்காழி கெளரவ பாடகர் ஆனார்
    அதாவது கதாநாயகன் ஒரு சிக்கலில் சிக்கி சோகத்தை சுமந்து கொண்டு இருக்கும்போது வாய் அசைக்காமல் பின்னணி வாய்ஸ் மட்டும் வரும் பாடல்கள்
    மேகங்கள் திரண்டு வந்தால் அது மழை என சொல்வதுண்டு
    தொகையறா பாடல் பிரபலம் இல்லாத நடிகர்கள் பாடுவது போல உள்ள தத்துவம் சோகத்தை சுமந்த பாடல்கள்
    மகிழ்ச்சி பாடல்கள் என்றால் கதாநாயகன் நண்பர்கள் பாடுவதாக உள்ள டூயட் பாடல்கள் இப்படி பட்ட பாடல்களுக்கு மட்டுமே அவர் குரல் செட்டானது
    அது மட்டுமல்ல இவர் கொஞசம் கர்வம் கொண்டவர் என்பதற்கு ஒரு உதாரணம்
    திருவிளையாடல் படத்தில்
    ஒரு நாள் போதுமா பாடலை இவரை வைத்து பாட வைக்கலாம் என்று தானே எ பி நாகராஜன் கே வி மகாதேவன் அவர்கள் கேட்கும்போது அந்த காட்சி அமைப்பை கேட்டு விட்டு இவர் என்ன சொன்னார் தெரியுமா
    அதில் என் குரல்
    டி எம் எஸ் குரலுக்கு தோற்கடிக்கடிப்பது போல வரும்
    காட்சிக்கு நான் பாட முடியாது என்று சொல்லி அதற்கு பிறகு தான் பாலமுரளி கிருஷ்ணா பாடினார் அவருக்கும்
    காட்சி அமைப்பு சொல்ல பட்டது
    ஆனால் அவர்
    படத்தில் சிவாஜி கணேசன் பரமசிவனாக வரும் போது அந்த எம் பெருமான் ஈஸ்வரனிடம் என் குரல் தோற்பது எனக்கு மகிழ்ச்சியே என்று சொல்லி பாடினார் இந்த குணம் சீர்காழியிடம் இல்லை

    • @raaji_lk
      @raaji_lk Před rokem

      தமிழர்களுக்கு இடுப்பு எழும்பை வளைத்து குனிந்து கும்பிடு போட வராது. அதனால் தான் சீர்காழி இளையராஜா போன்றோர் தொடர் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      அழகான உண்மையான அலசல் !நன்றீங்க 👸 🙏

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +1

      பாலமுரளிகிருஷ்ணாஅவர்கள் தமிழில்அறிமுகமானநேரம். வாய்ப்பைநழுவவிடக்கூடாதென நினைத்திருக்கலாம்.சொந்தவாழ்க்கை மற்றும்பொதுவாழ்க்கையில் உண்மையாய் இருப்பவர்கள்பேசு வது கர்வமாகத்தோணுவதில்ஒன் றும்ஆச்சரியமில்லை.கௌரவபாட கரானதும்நல்லதே.அவர்குரலுக்கு தனித்தன்மை இருப்பதால் முதல் மரியாதைஉண்டு.உப்பின் ருசி யாக அளவான அவர்பாடல்களில் உண்டு இனிமை.

    • @ravivenki
      @ravivenki Před rokem +2

      மாமனிதர் Tms ஐயா என்றும் Great. அவரை மிஞ்சி எந்தப் பாடகரும் கிடையாது என்பதே காலம் அழுத்தமாக உணர்த்தும் உண்மை.

    • @raaji_lk
      @raaji_lk Před rokem

      @@ravivenki வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு😛

  • @shanmuga9745
    @shanmuga9745 Před rokem +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @mansuralimansurali4643
    @mansuralimansurali4643 Před rokem +3

    நானும் இதுநாள் வரையில்.. சுசிலா, கண்ணதாசன்..என்றுதான் நினைத்திருந்தேன். ஜானகி, பஞ்சு என்பது ஆச்சரியமான தகவல்தான். நன்றி

  • @anandram4422
    @anandram4422 Před rokem

    அருமையான இந்த பாடலின் பற்றி இவ்வளவு தகவல்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சகோ....

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +9

    அண்ணா ! வணக்கம்! அழகானப்பாடலை ரொம்ப நல்லாச்சொன்னீங்க! அற்புதமானப்பாடல் இது ! அண்ணா! டிஎம்எஸ்சையும் சிவாஜியையும் பிரிக்கமுடியாதே அண்ணா! அதனாலதான் சிவாஜி அப்பிடிச்சொல்லீருக்கார்! கரெக்ட்தானே! இதிலே டிஎம்எஸ் சா சிவாஜியாங்கறப்போட்டியே நமக்குவரும் அளவுக்கு அத்தனை நேர்த்தியாபண்ணீருப்பாங்க இருவரும்! சிவாஜியேப்பாடுறாப்புலே அப்பிடிஒரு எக்ஸ்பிரஷண்ஸ் குடுத்திருப்பார் அட்டகாசமான நடிப்பு ! ராகபாவங்களை தாளலயத்துடனும் சரளீவரிசைகளை பிறழாமலும் வாயசைப்பில் கொண்டாந்திருக்கும் சிவாஜியைப்பாராட்டணும்? ஜானகிமாவும் நல்லாப்பாடிருப்பாங்க! சிவாஜி எண்டர்ஆகுறசீன் பிரமாதமாஇருக்கும்! உடம்பேசிலித்திடும்! கேவீஎம் ஐயா உண்மைலேயே காவிய இசைஞனே! சிவாஜியின் அட்ஷரசுத்தமான வாயசைப்புக்கு இந்தப்பாடல்தான் 💎 ! எனக்குரவம்பவும் புடிச்சப்பாட்டு! அண்ணா நன்றீகள் கோடி ! நலமுடன் வீழ வாழ்த்திடும் அன்புத்தங்கை ! 👸 🙏

    • @VILARI
      @VILARI  Před rokem +1

      மகிழ்ச்சி

    • @paulrajv7957
      @paulrajv7957 Před rokem +3

      Good comments. TMS voice suits Sivaji. No doubt in it.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +1

      டி.எம்.எஸ் சிவாஜிய பிரிச்சேஆகனும். அவர் எம்.ஜி.ஆர் அப்பாவுக்கு குரல்தந்தாகனுமே!

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 Před rokem

      டிஎம்எஸ் அவ்வளவு கஷ்டப்பட்டு பாடியும் அந்த புகழ் படத்தில் அவருக்கு போய் சேரவில்லை காரணம் சிவாஜி. தான் பாடுவது போலவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி டிஎம்எஸ் உழைப்பை ஹைஜாக் பண்ணி விட்டார்

    • @veerappans7669
      @veerappans7669 Před rokem

      .

  • @iqbalmd1929
    @iqbalmd1929 Před 2 měsíci

    படமும் அற்புதமான படம்

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 7 měsíci

    Evergreen song❤❤❤❤❤❤

  • @lrnarayananphotography9169

    இப்போது பொன்னிநதி சொதப்பல் எல்லாம் அப்போது இருக்காது.பாடல் வெற்றிபெறுதுதான் நோக்கம் .

  • @user-ry1tq2ys6g
    @user-ry1tq2ys6g Před 20 dny

    தம்பியின் வர்ணனை மிகவும் சிறப்பானது. எனக்கு இசையில் நாட்டம் அதிகம். கர்நாடக இசை தெரியாவிட்டாலூம் சில பாடல்களை மிக மிக ரசிப்பேன். எனது17 வயது முதல் ( இன்று 70) பல முறை இந்தப்பாலை கேட்டுள்ளேன. இந்த பாடலை பஸ் நிறுத்தத்தில் நின்று வானொலியில் கேட்டு பஸ்சை தவற விட்டு அலுவலகம் பெறமுடியவில்லை.
    அய்யா பாடும்போது high pich ஆகவும் ஜானகி அம்மா lpw pich ஆகவும் பாடுவதை குழப்பத்துடன்( ஏன் ஏன்) ரசிப்பேன். இந்த உங்களது விளக்கம், அந்தம்மாவின் வயது காரணமென்று. தகவலுக்கு நன்றி

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 Před rokem +26

    சீர்காழி கர்நாடக இசைப் பேரரசர் தான்.ஆனால் சிவாஜியின் சிம்மக்குரலுக்கு டிஎம்எஸ்தான் பொருத்தம் என்பது உலகறிந்த உண்மை. சீர்காழியாரின் கணீரென்ற வெண்கலக் குரல் சிவாஜியின் முக பாவனையை பின்னுக்குத்தள்ளிவிடும். டிஎம்எஸ் சிவாஜி இருவரும் அடிவயிற்றிலி ருந்து குரலொலி எழுப்புபவர்கள்.ஆனால் எம்ஜி.ராமச்சந்திரனுக்கு பாடும்போது நுனிமூக்கால் டிஎம்எஸ் மென்மையாகப் பாடுவார்.அப்படியிருந்தும் ராமச்சந்திரன் பாடும்காட்சியில் டிஎம்எஸ் நம்கண்முன் வந்து விடுவார்.ஏனெனில் ராமச்சந்திரன் முழுமையாக வாயசவை காட்டாமல் மென்மையாக உதடசைப்பார். சிவாஜி பாடும்போது யாருக்குமே டிஎம்எஸ் ஞாபகம் வராது. சிவாஜி பாடும்காட்சியில் மானசீக உணர்வை வாயசைப்பில், தாடை அசைவில், தொண்டைக் குழி உருள , பாவனையை காட்டி விடுவதால் டிஎம்எஸ் சை நாம் மறக்கும்படி செய்வதே சிவாஜியின் தனித்திறமை என்பது டிஎம்எஸ்சே தெரிவித்த உண்மை.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +4

      நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை. இங்கு அதுவல்ல பேச்சு .பாடலை சீர்காழியார் பாடிய பின் அதை நிராகரிக்கும்பட்சத்தில் சிவாஜிகணேசன்அவராகசீர்காழியாரிடம்காரணத்தைவிளக்கியிருக் கும்பட்சத்தில்உயர்ந்தமனிதனாகியிருப்பார். நன்றி!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +4

      Sethuraman chinnaiah !அழகாச்சொன்னீங்க! டிஎம்எஸ் ஒரு அபூர்வப்பாடகர்! சிவாஜிக்காக ரொம்பக்கஷ்டப்பட்டுப்பாடுவார்! சீர்காழி ஐயாக்கொரல் சிவாஜிக்கெப்பொருந்தாதுஎன்பது குழந்தைகூட அறியும் !இதிலே அவரை இதை விளக்கணுமாக்கும் !,👸

    • @ravivenki
      @ravivenki Před rokem +4

      இந்தப் படம் சிவாஜியின் சொந்தப்படம் என்பதால் இந்தப் பாடலை யாரைப் பாடவைக்கலாம் என Kvm சிவாஜியிடம் கேட்டு முடிவு செய்திருக்கலாமே?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      சிவாஜி என்று நமக்கெல்லாம் பழகிய பாணியில் சொன்னதுபோல MGR என்று சொல்லாமல் ராமச்சந்திரன் என்று சொன்னது, அந்நியப்பட்டதுபோல் தோன்றியது.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      ​@@ravivenkiYes you have a good point

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před rokem +9

    பழைய இசை ஜாம்பவான்கள் கவிஞர் பெருமக்கள் பாடல்களை எந்த பாடகர்கள் பாடினால் நன்றாக சிறப்பாக இருக்கும் என்ற நுணுக்கங்களை தெரிந்திருப்பதினால் பழைய பாடல்கள் இன்றும் ரசிக்கத்தக்க வகையில் போற்றி கொண்டாடப் படுகின்றன.

  • @jperiyar750
    @jperiyar750 Před rokem +2

    இதுஎன்னபிரமாதம்
    பாசமலர் படத்தில் பாட்டோன்றுகேட்டேன் பரவசம்ஆனோன் என்றபாடலில்உமிரைகொடுத்து எம் எஸ் வி இசையமைத்த இருப்பர்
    நடிகர்திலகம்தானேஇசைமைத்தமாதிரி முகபாவனை கைவிரல்இசைப்பது என்று இருக்கும் நான்கூடா சின்னவயதில் பாசமலருக்குசிவாஜி தான்இசைஅமைப்பாளர் என்றுகூறுவேன் இந்த அளவிற்க்கு நடிப்புதிலகம்சிவாஜி அப்பா

  • @srinivasagamrajasankar5820

    SUPER

  • @saravanan782
    @saravanan782 Před rokem

    Miga arumai yana vimarsanam... Anne ungalai santhikka virumbugiren... Intha paadal enakku migavim pidikkum...

  • @krshnakumar688
    @krshnakumar688 Před rokem +1

    விளக்கங்கள் அருமை

  • @nadodi67
    @nadodi67 Před rokem +4

    இதுபற்றி அய்யா TMS அவர்களே பேசிய காணொலியைக் கேட்டிருக்கிறேன். அவர் சொன்னது: "பாடல் வகையைச் சொன்னார்கள்; இதைப் பாடுவதற்கு சீர்காழியவிட்டா ஆளே கிடையாது; அவரைப் பாடவையுங்கள் என்றேன்". அப்படி சீர்காழி அய்யா பாடிய பாடலைக் கேட்டபிறகு சிவாஜி...

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +1

      பாடவும் வைத்தாயிற்று.இசையமைப்பாளர் தன்பக்க நியாயத்தையும் அதற்கும்மேலாக பாடியபின்வேறொருவரைபாட. வைப்பதில் உள்ள தன் வருத்தத்தை தெரிவித்த பின்பும் நடந்துகொண்டவிதம்? கதாநாயகன்தோரணை!! வேறென்ன!?

    • @ravivenki
      @ravivenki Před rokem +4

      ஆக தனக்கு பொருத்தமான குரல் Tms ஐயாவின் குரலே என சிவாஜியே ஒத்துக் கொண்டதையே இந்த நிகழ்வு உணர்த்துகிறது. இது மாமனிதர் தெய்வீகப் பாடகர் Tms க்கு கிடைத்த வெற்றி.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      ​@@ravivenkiமிகவும் சரி

  • @Annadurai-ot4iu
    @Annadurai-ot4iu Před rokem +4

    வணங்காமுடி திரைபடம் மலையே உன் நிலை பாராய் என்ற பாடல் யார் பாடியது சிர்காழி. அவர்கள் பாடியதுதான்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      ஆஹா! அற்புத ஒப்பீடு. சீர்காழியின் குரல் அற்புதமாக கணீரென்று ஒலித்து நெஞ்சத்தை நிறைத்தது அந்த பாடலில். ஆனால் அதையே TMS ஐயா பாடியிருந்தால் நடிகர் திலகத்துக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

  • @srinivasanjayasankar9911

    என் உறவினர், வாகினி ஸ்டூடியோவில் வேலை பார்த்தவர், சொலியிருக்கிறார். இந்த பாடல் சீர்காழி பாடியது ஆனால் பதிவு செய்ததை கேவிஎம் கேட்டு வாங்கி போய் விட்டார், ஏன் என்று தெரியவில்லை என்று.

  • @sivasubramanianp3906
    @sivasubramanianp3906 Před rokem +2

    ...alangudi vellaichamy MGR rasigar enpathaal Sivaji ganesanai kuraithu pesuvathai thavirka vendum

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +2

    திசை மாறினாலும் பறவை கனி பறித்தது!சீர்காழி வசை பாடினாலும் பாடல் புகழ் சூட்டியது!

  • @anbuoils186
    @anbuoils186 Před rokem

    இசையுலகின் நுண்ணொக்கி தாங்கள் வாழ்க வளர்க.

  • @BalaMurugan-oe2ko
    @BalaMurugan-oe2ko Před 11 měsíci

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் எங்குமே கிடைக்கவில்லையா? கிடைத்தால் பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 Před rokem +5

    சிவாஜிக்கு TMSதான் சரி.
    அந்தமான் காதலி படத்தில்('அந்த மானை பாருங்கள் அழகு' என்ற பாடல்) சிவாஜிக்கு ஜேசுதாஸ் குரல்
    பொருத்தமாக இல்லை.
    அதேபோல் Dr.சிவாவில் 'மலரே... குறிஞ்சி மலரே'
    (ஜேசுதாஸ் பாடியது) பாடலும்
    சிவாஜிக்கு பொருந்தவில்லை.

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před rokem +1

      நான் வாழவைப்பேன்' படத்தில் Tms.பாடிய. என்னொடுபாடுங்கள் " என்றபாடலை நீக்கிவிட்டு Spb யை வைத்து மீண்டும் ரிக்கார்டிங் செய்து படத்தில் இடம்பெற செய்தார் இளையராஜா.

    • @ssundramoorthi3718
      @ssundramoorthi3718 Před rokem +1

      @@g.panneerselvam9794 spbயும் பொருத்தமில்லை. ஜேசுதாஸும் பொருத்தமில்லை TMS மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று
      சொல்ல வந்தேன்.
      நன்றி.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      மிக மிக அருமையாக சொன்னீர்கள். 100% உண்மை. ஜேசுதாஸ் குரல் சிவாஜிக்கும் பொருந்தவில்லை; MGRக்கும் பொருந்தவில்லை. MSV ஏன்தான் அவரை விழலுக்கு இறைத்த நீராக பயன்படுத்தினாரோ!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      ​@@g.panneerselvam9794அது அத்து மீறிய அராஜகச் செயல்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      ​@@ssundramoorthi3718இது இன்னும் அருமையாக இருக்கிறது. MGR, சிவாஜி இருவருக்கும் TMSன் குரல் ஒன்று மட்டும்தான் பொருந்தியது. மற்றதெல்லாம் waste.

  • @ramakrishnanramki729
    @ramakrishnanramki729 Před rokem

    கடல் மீன்கள் பாடல் தாலட்டுதேவானம் அதை போடுங்கள் சார்

  • @apalaniappanchettiyar6454

    பஞ்சு அருணாசலம் கண்ணதாசன் அண்ணனின் மகன் பலகாலம் உதவியாளராக இருந்தார்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +1

    Nadigar thilagm 🙏

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +1

    Naduvil Janaki aththanai pirabalamagavillai yenrulleergal.
    1963 il June vakkil vore NT yin failure padam.Aanaal 1962il Pongal Vellivizhappaadam KONJUM SALANGAI.SINGARAVELANE deva ulaga pugazh petra paadal yenbathai maranthuvitteergal pola.
    Irandum famous songsthan.aanaal SINGARA VELANE DEVA Idhuvarai vantha Thamizhppaadalgalileye mudhal 10 paadalgalil VONRU!

  • @muralimohang6040
    @muralimohang6040 Před rokem

    வெளியான படம்

  • @ggfg8570
    @ggfg8570 Před rokem

    யாரை வச்சு பாடினாலும் பாட்டு நன்றாக இருக்கும். ஆனால் படம் ஊத்திக்கிட்டதுதான் உண்மை.

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 Před rokem +6

    வணக்கம் ஐயா..... இன்ரு இந்த பாடலை முகெஷ் என்ர பின்னனி பாடகர் பாடுவதொடு சரி.வேரு யாராலும் எளிதில் புரிந்து கொண்டு பாடமுடியாது.TMS நடிகர் திலகம்கூட்டனியில் இது ஒரு சிகரம் தொட்ட புகல் பெட்ர பாடல்......வால்ட்துக்கல்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem +1

      முகேஷ் தவிர யாரும் இந்த பாடலை பாடி கேட்டதில்லை.

    • @subramaniankk7427
      @subramaniankk7427 Před rokem

      டி எம் எஸ் ஐயாவின்
      புதல்வர்கள் எத்தனையோ இன்னிசை நிகழ்ச்சியில் இந்த பாடலை வெகு அருமையாக பாடியிருக்கிறார்கள்
      அவனியாபுரம்
      சுப்பிரமணியன்

  • @anandram4422
    @anandram4422 Před rokem

    இந்திய இசைக்கு நிகர் இவ்வுலகில் வேறு எந்த ஒரு இசையுமில்லை

  • @vedajalamr9843
    @vedajalamr9843 Před rokem +2

    வணக்கம் எது எப்படி இருந்தாலும் சீர்காழி பாடி முடித்த ஒரு பாடலை டி எம் சௌந்தரராஜன் வைத்து பாடிய தவறுதான் சீர்காழி சிவாஜியை கேட்டது சரிதான் சரிதான்

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      இது திரைப்படத்துறையில் நடக்காத விஷயம் அல்ல. நான் வாழ வைப்பேன் படத்தில் என்னோடு பாடுங்கள் பாடலை முதலில் Tms பாடி ஒலிப்பதிவு செய்து பின்னர் Spb யை பாடச் சொல்லி விட்டார் இ.ராஜா. ஏன் அப்படிச் செய்தீர்கள் என யாரேனும் கேட்டார்களா?

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      ​​@@ravivenkiதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு கண்டிக்காமல் இருந்த பாவம்தான் இன்று தமிழ் திரையை இன்று அவல நிலைக்கு தள்ளி உள்ளது. பல்லாயிரக்கணக்கான படங்களும் பாடல்களும் அறவே மறக்கப்பட்டு பெட்டியில் தூங்குகின்றன. வந்த சுவடும் தெரியவில்லை; போன சுவடும் தெரியவில்லை.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před rokem +5

    இது போல வேறொரு சம்பவம். சிவந்த மண்
    படத்தில் ஒரு நாளிலே
    உறவானதே பாடல் முதலில் பாலமுரளிகிருஷ்ணா
    சுசீலாவை வைத்து பாடலை பதிவு செய்தார் MSV. பாடலை கேட்ட சிவாஜி MSVயிடம் " விசு பாடல்
    ரொம்ப நல்லாதான் இருக்கு.ஆனால் நான்
    பாடற மாதிரி இல்லியே. TMS ஐ பாட
    வை " என்றார்.படத்திலும் இசைத்தட்டிலும் நாம் கேட்டு ரசித்தது TMS குரல்தான். ஆக KVM MSV இருவருமே Sivaji
    அவர்களுக்கு தெரியாமல் Experiment
    செய்தனர். இதில் நாம்
    சிவாஜி அவர்களை குறை சொல்ல முடியாது. குங்குமம் படத்திற்கு பின்னர்
    வெளிவந்த என் தம்பி
    மற்றும் பாபு ஆகிய சில
    படங்களில் தெருக்கூத்து பாடல்களை சிவாஜிக்காக சீர்காழி
    பாடியுள்ளார்.எனவே
    சீர்காழியை சிவாஜி மதித்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
    TMS ற்காக Fight செய்யவும் தயங்கவில்லை. தனது
    பாடல் காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்பதில் சமரசம் செய்யவில்லை. அதே
    சமயம் பெரிய தலையீடு எதுவும் அவர்
    செய்யாவிட்டாலும்
    தனது ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதிலும் அவர் அங்கே நிற்கிறார்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +1

    T m s ayah & s g ayah 🙏

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +6

    சீர்காழிக்கு நடிக்கத்தெரியுமா? வணங்காமுடி படத்தில் ஏ.எம்.இராஜா, டி.எம்.எசு, சீர்காழி ஆகிய மூவருக்கும் வாய்அசைத்தவர் சிவாஜி. . நரம்பு புடைக்க சீர்காழி பாட்டிற்கு வணங்காமுடி படத்தில் சிவாஜி வாய் அசைத்ததை பார்க்காதவர்கள் சிவாஜியை குறை செல்வார்கள். சந்திரபாபு பாடலுக்கு வாய்அசைத்தவர் சிவாஜி. பாடகர் பாடலுக்கு தகுந்தார் போல் வாய்அசைப்பவர் சிவாஜி மட்டுமே. குங்குமம் சிவாஜியின் சொந்தப்படம். பாடகரை முடிவு செய்யும் சிவாஜிக்கு மட்டுமே உண்டு. இதை அறியாதவர்கள் சிவாஜியை குறை சொல்வார்கள்.

    • @swaminathank2727
      @swaminathank2727 Před rokem +1

      Sirgazhi nalla padagar yhan. Aanal Sivajievan padinalum vayasaikkum thiran petravar. SPB yidam nee un vasathi pol paduppa,enakkaga entha matramum vendam enrar. Pottu vaitha mugamo pattukku Sivaji vayasaithathum Jayavodu antha pattai enrum nilaikka seithathum varalaru.Sivaji patri pesa evanukkum arugathai kidayathu.

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      சீர்காழிக்கு ஏன் நடிக்கத் தெரியாது? அகத்தியர் ஒன்று போதாதா? மற்றவர்களிடம் உள்ள திறமையை மதிக்கும் பண்பு சிவாஜி ரசிகர்களிடம் என்றைக்கும் இருந்ததில்லை. சிவாஜி மட்டுமே ஒசத்தி என்ற எண்ணம் மடத்தனம்.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +1

      @@swaminathank2727 தலைவரின் நடிப்பை ரசிக்க தனி ரசனை வேண்டும் தலைவனின் ஆளுமை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před rokem

      Good reply for fools Who are under estimating NT

    • @ravivenki
      @ravivenki Před rokem +1

      சிவாஜியை யாரும் Under estimate செய்யவில்லை. மற்றவர்களின் திறமையை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் சிவாஜி மட்டுமே உயர்வு என்று பித்து பிடித்து கருத்து பதிவிடும் பிரகஸ்பதிகள் Distilled idiots.

  • @alwinsingarayer5852
    @alwinsingarayer5852 Před rokem +7

    Tms பாடியதனால்தான் இப் பாடல் காலத்தால் அழிக்க முடியாத, மறக்க முடியாத நிலை பெற்றது. அதற்கு நடிக மன்னன் உயிர் கொடுத்தார்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem

    Natarajan ayya sirkazhivoice high pitch never match for sivaji like t ms ganeer enru it is for only sivaji

  • @vageesans5484
    @vageesans5484 Před rokem

    This song is written by the one and only Kaviyarasar Kannadasan...not by Panchu...please correct yourself

  • @nandakumar6037
    @nandakumar6037 Před rokem +2

    Illyaraja a nalla vaalthi video podunga...

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před rokem +1

    Mr. Velusamy why are you post controversial It is not good for you.

    • @apalaniappanchettiyar6454
      @apalaniappanchettiyar6454 Před rokem

      உண்மை எதுவானாலும் சொல்லித்தான் தீர வேண்டும்.
      இந்த படத்தை தயாரித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எதுவானாலும் இறுதி முடிவு தயாரிப்பாளர் சிவாஜி கணேசன் தான் செய்யவேண்டும். அந்த வகையில் சீர்காழி கோவிந்தராஜன் தயாரிப்பாளர் சிவாஜி கணேசனிடம் பேசியது தவறு. கண்டிக்க தக்கது.

  • @sel_va8703
    @sel_va8703 Před rokem

    நீங்க இதுபோல பதிவே பண்ணுங்க

  • @karuppasamy9856
    @karuppasamy9856 Před rokem

    Helen poornima comment யை எல்லோரும் பாருங்கள் எப்படி வாழ்த்தியிருக்கிறார்கள் என்று.. ஆனால் இந்த சொம்பு தூக்கிக்கு இது தேவை தான்..

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      குற்றம் கண்டுபிடித்தேபேர்வாங்கு. பவரப்பாநீங்கள்!😋

  • @kssps2009
    @kssps2009 Před rokem

    Bolda and not bolta

  • @manoharselvaraj5001
    @manoharselvaraj5001 Před rokem

    இந்த பிழைப்பை ஒழுங்கா
    ஓட்ட முடியுமா பாருங்கள்
    ஏற்கனவே புஷ்பா திரைப்படத்தை
    தாறுமாறாக விமர்சித்தீர்கள்
    படம் சக்கை போடு போட்டது
    நினைவிருக்கலாம்
    இப்போது பாடலில் வெட்டி முறித்து
    கிழித்து கட்டிவிட்டதால்
    அரசியலுக்கு வந்தவிட்டீர்கள்
    உங்கள் விமர்சனகளுக்கு
    எதிர் விமர்சனம் நிச்சயம்
    இல்லாமல் போகுமா
    யூடியூபர்கள் எவரும்
    பெரிதாய் உயர்ந்ததில்லை
    அடக்கி வாசிக்க பழகு தம்பி

  • @mehalingamms2496
    @mehalingamms2496 Před rokem

    இப்படி பழைய பாடல்கள் அதன் பிண்ணனி பற்றி பதிவு செய்வது உங்கள் பாணி
    ஆனால் இளைய ராஜா அவர்கள் பற்றி உங்கள் விமர்சனம் மிக தவறு
    அவர் ஒரு நிலை எடுத்து உள்ளார்
    யாரையும் விமர்சனம் செய்ய வில்லை
    அப்போது திரு. எம் ஜி. ஆர் அவர்கள் இருந்த போதே மனசாட்சி படி நடந்தவர்
    ராஜா ரஜினி இவர்களை விமர்சனம் செய்ய யாரும் தகுதி இல்லாதவர்கள்.

  • @natarajansomasundaram9956

    சீர்காழியை விஞ்சிய கர்நாடகத் தமிழ்இசைப் பாடகர்
    எவரும் இல்லை.
    தன்னால் பாட வக்கில்லாத சிவாஜி கணேசன்
    வெறும் வாயைத்தான் திறந்து பாவடுது போன்று
    நடிக்கத்தான் முடியும்.
    அப்படி இருக்க, இசை நுணுக்கத்துடன்
    சீர்காழியாரால் பாடப்படட்ட
    பாடலுக்கு வாயசைக்க மறுத்தது மகா
    கேவலமான செயல்.
    இவர் வாயசைக்க முடியாத அளவுக்கு சீர்ழியாரின்
    பாடும் திறமை விஞ்சி நின்றது.
    அதனால்தான், சீர்காழியாரின் பாட்டுக்கு வாயசைக்கும்
    திறமையற்று , மறுப்புத் தெரிவித்து
    தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்திய
    பேர்வழி சிவாஜி.
    சீர்காழியார் அவருக்கு "நீ தின்றது எச்சில் இலைச்சோறு"
    என்பதை உணர்த்தி தனது ஆண்மையை நிரூபித்திருக்கிறார்.
    இந்த ஒரு நபர் மறுத்ததால் சீர்காழியாருக்கு எந்த
    இழப்பும் இல்லை.அவரின் புகழ் அகில உலகத்திலும்
    பரவிற்று. அவர் புகழ் மணக்க வாழ்ந்தார்.
    ஆனால், சிவாஜி கணேசன் என்கிற "மேதாவியின்"
    சின்ன புத்தி காலங்காலத்திற்கும் அழியாத கறையாகவே
    அந்த நபரின் வாழ்கை வரலாற்றில் இருக்கும் -
    இந்தச் செய்தியை உலகறியச்செய்து
    அம்பலப்படுத்திய உங்களுக்கு
    நன்றி, பாராட்டு, வாழ்த்து !

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před rokem +4

      What you told is not correct.sirkali sir already singing for sivaji sir in various movies.example vanangamudi,chitoor rani padmini, manithanum deiva magalam en thambi,sri valli etc. Sivaji sir acted nicely for his songs.please hear those movies songs.then reply. Particularly 1) silaiye un nilaye song in vananga mudi movie 2) paathu kondirunthale pothum song in chitoor rani padmini movie .His acting in above songs were praised by sir kazhi sir. Only Sivaji sir can act for songs of all singers

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 Před rokem +2

      BEHAVE DECENTLY, NO ONE CAN TOUCH SIVAJI SIR'S SHADOW.

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 Před rokem +1

      This not the way to criticise NT Sivaji. TMS voice fits his perfectly well that's the reason he would have asked the change otherwise what grudge the great sivaji had against Sirkazhi Sir. In fact, sivaji never criticised Or interferred in playback singers domain from what we hear. He had full confidence in his work not dependent on others to boost him. Hence, we should not using filthy language to criticise the great artist . One can praise Sirkazh sir to any extent nothing wrong he is definitely a great singer. But sivaji sir is always class apart.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      @@jayaseelannarayanaperumal1517 No its wrong !T MS was the only singer to. Sivaji!why are you covers the truth ! Sergali was the asareeri singer in mist of the movies ! The real truth was sivaji and tms were like twins ! M G R appa was the only man in suitable to all singers ! From sithambaram jayaraaman to jesudas !perfect match ! Appa was a wonder !👸

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      👌👌👌🙏🙏🙏

  • @raaji_lk
    @raaji_lk Před rokem +4

    படத்தில் 'வரக்கூடிய' இல்லை, படத்தில் வந்த பாடல் என்று சரியாக சொல்ல பழகுங்கள். தாய்மொழியை கூட சரியாக பேச தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      தமிழை சரியாக பேச வேண்டும்

  • @shanmuga9745
    @shanmuga9745 Před rokem

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி