Neela vanna Kanna vaada | நீல வண்ண கண்ணா வாடா

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2020
  • Mangaiyar thilagam
    பாடல் வரிகள்:
    நீல வண்ண கண்ணா வாடா
    நீ ஒரு முத்தம் தாடா
    நீல வண்ண கண்ணா வாடா
    நீ ஒரு முத்தம் தாடா
    நிலையான இன்பம் தந்து
    விளையாடும் செல்வா வாடா
    நீல வண்ண கண்ணா வாடா
    பிள்ளையில்லா கலியும் தீர
    வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    பிள்ளையில்லா கலியும் தீர
    வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்
    எல்லை இல்லா கருணை தன்னை
    என்னவென்று சொல்வேனப்பா
    என்னவென்று சொல்வேனப்பா
    நீல வண்ண கண்ணா வாடா
    வானம்பாடி கானம் கேட்டு
    வசந்த கால தென்றல் காற்றில்
    வானம்ப்பாடி கானம் கேட்டு
    வசந்த கால தென்றல் காற்றில்
    தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
    செல்வன் துயில் நீங்கும் காட்சி
    செல்வன் துயில் நீங்கும் காட்சி
    நீல வண்ண கண்ணா வாடா
    தங்க நிறம் உந்தன் அங்கம்
    அன்பு முகம் சந்திர பிம்பம்
    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    தங்க நிறம் உந்தன் அங்கம்
    அன்பு முகம் சந்திர பிம்பம்
    கண்ணால் உன்னை கண்டால் போதும்
    கவலை எல்லாம் பறந்தே போகும்
    கண்ணால் உன்னை கண்டால் போதும்
    கவலை எல்லாம் பறந்தே போகும்
    சின்னஞ்சிறு திலகம் வைத்து
    சிங்காரமாய் புருவம் தீட்டி
    சின்னஞ்சிறு திலகம் வைத்து
    சிங்காரமாய் புருவம் தீட்டி
    பொன்னாலான நகையும் பூட்ட
    கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
    நீல வண்ண கண்ணா வாட
    நடுங்க செய்யும் வாடை காற்றே
    ஞாயமில்லை உந்தன் செய்கை
    தடை செய்வேன் தாளை போட்டு
    முடிந்தால் உன் திறமை காட்டு
    விண்ணில் நான் இருக்கும் போது
    மண்ணில் ஒரு சந்திரன் ஏது
    அம்மா என்ன புதுமை என்றே
    கேட்கும் மதியை பாரு
    இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
    இணையில்லா செல்வம் நீயே
    பொங்கும் அன்பின் ஜோதி நீயே
    புகழ் மேவி வாழ்வாய் நீயே
    நீல வண்ண கண்ணா வாடா

Komentáře •