"எங்க பிள்ளைகளுக்காக உழைத்த ஆசிரியர் அவரின் மகளுக்கு நாங்களும் சொந்தம்தான்" நெகிழவைத்த ஊர் மக்கள்
Vložit
- čas přidán 7. 06. 2024
- #pudukkottai | #govtschool | #schoolHM
"எங்க பிள்ளைகளுக்காக உழைத்த ஆசிரியர்
அவரின் மகளுக்கு நாங்களும் சொந்தம்தான்"
சீர் வரிசையோடு படையெடுத்த ஊர் மக்கள்
ஆனந்த கண்ணீர் விட்ட அரசு பள்ளி ஆசிரியர்
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் இல்ல விழாவுக்கு ஊரே சேர்ந்து சீர் வரிசை கொண்டு வந்து அசத்தியுள்ளது... யார் அந்த பாசக்கார ஊர் மக்கள்?... இவ்வளவு பாசம் வைக்குமளவு அந்தத் தலைமை ஆசிரியர் என்ன செய்தார்?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி...
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் இவரை அறியாதவர்கள் மிகக் குறைவு...
பெயருக்கேற்றார்போல் சுற்றுப்புற கிராமக் குழந்தைகளின் வாழ்வில் ஜோதி ஏற்றியவர்...
கொளுத்தும் வெயிலோ...கொட்டும் மழையோ...தவறாமல் ஆஜராவார் பள்ளிக்கு...
அரசுப் பள்ளி என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் தான் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி...
அவல நிலையில் அரசுப் பள்ளிகளைப் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு இப்பள்ளி ஆச்சரியத்தைத் தான் தந்தது...
ஊர் மக்கள், தன்னார்வலர்கள் உதவியோடு பள்ளி வளாகத்தில் அழகழகான செடிகள்... ஏ.சி வகுப்பறைகள்... ஸ்மார்ட் போர்டு... கண்காணிப்பு கேமரா... தூய குடிநீர் குழாய்... குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள்... தபால் பெட்டி... குறைகள் இருந்தால் தெரிவிக்க புகார் பெட்டி... புத்தக அலமாரி... பொதி சுமக்கும் கழுதைகள் இல்லை குழந்தைகள் என்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் எனும் முறை... சுவையான உணவு... என அடுக்கிக் கொண்டே போகலாம் ஜோதிமணி செய்து கொடுத்த வசதிகளை...
இவ்வளவு வசதிகளை செய்து கொடுத்த ஜோதிமணியைக் கல்வி தரும் கடவுளாய்ப் பார்க்கின்றனர் கிராம மக்கள்... தங்கள் பிள்ளைகளுக்காக காலமெல்லாம் உழைத்த இவரது மகள் சன்மதிக்குத் திருமணம் என்றதும் தங்கள் வீட்டுத் திருமணமாகவே கருதினர் ஊர் மக்கள்...
நிச்சயதார்த்த விழா வழக்கத்தை விட உற்சாகம் பூண்டது... வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதி மக்களும், பள்ளிக் குழந்தைகளும் புத்தாடை உடுத்தி... சீர் வரிசையுடன் நிச்சயதார்த்தத்திற்குப் புறப்பட்டனர்...
வாண வேடிக்கை விண்ணதிர... முக்கனிகள்...தாம்பூலத் தட்டுடன் மண்டபத்திற்குள் நுழைந்தனர்...
மணப்பெண்ணுக்கு சொந்தக்காரர்களாக இருக்குமோ என அதிசயித்துப் பார்த்தவர்களிடம், தாய் மாமன் சீர் கொண்டு செல்கிறோம் என இவர்கள் கூறிய பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது... சீர் கொண்டுவர ரத்த சொந்தமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்தி விட்டனர் இந்த கிராம மக்கள்...
உறவினர்கள் தானே இப்படி சீர் கொண்டு வர வேண்டும் என்று கேட்டவர்களை, ஜோதிமணியும் எங்களுக்கு உறவினர் தான் என்று ஊர் மக்கள் கூறியது அதீத அன்பிற்கு சாட்சி...
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஏணியைப் போல் தாங்கி நின்று ஏற்றி விட்ட ஜோதிமணி ஊர் மக்கள் பாசத்தால் திக்குமுக்காடிப் போனார்...
பெறாத தந்தையாய்...உடன் பிறவாத சகோதரராய் ஜோதிமணியை கிராம மக்கள் தங்கத் தட்டில் தாங்குவது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது...
Uploaded On 08.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
ஆயிரம் நல்லாசிரியர் விருதுக்கும் ஈடாகாது இத்தகைய அன்பு... வாழ்த்துக்கள், வந்தனங்கள்...
Intha mathri sir llam viruthu kudukkamaytingale nallavangalum nattula irrukkathan seiranga athan appappa malai peithu antha ponnu nalla irrukkanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌🥰🥰🥰
Excellent people and Head Master
0
இந்த மாதிரி ஆசிரியர் இன்னும் இருக்கிறார்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
சரியாக சொன்னீர்கள் இப்படிப்பட்ட நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னும் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது
ஒரு ஊரே உங்களை நோக்கி படையெடுத்தால் அதில் மதமும் இருக்காது ஜாதியும் இருக்காது வாழ்த்துக்கள் ஐயா👏
சரியாக சொன்னீர்கள்
கண்கள் கலங்கி விட்டது. தலை வணங்குகிறேன் உங்கள் அன்பிறகு🙇🙇🙇🙇🙇🙏🙏🙏
காண கேட்க கண்கள் காதுகள் கோடி வேண்டும்
Super words 🙏
இதே போல் அனைத்து ஆசிரியர்களும் உழைத்தால் நல்லா இருக்கும். மிகவும் நன்றி ஐயா
உங்களுக்கு எல்லா விருதை விட இந்த அன்பு தான் பெரிய விருது இதை விட வேறு என்ன வேண்டும்
இது தேசிய நல்லாசிரியர் விருதுக்கும் மேலானது.வாழ்த்துக்கள்.
இவர் உலகுக்கே எடுத்துக்காட்டு. வாழ்க🌷
நல்ல மனிதர் தலைமை ஆசிரியர் . அவர் நற்பணி தொடர வாழ்த்துக்கள்
இவ்வளவு தான் வாழ்க்கை.... அன்பைத் தவிர எதுவுமே தேவை இல்லை ❤❤
உழைக்கும் மக்களின் உன்னத அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. கடமையை செவ்வனே செய்து வரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்🎉🎉❤
இப்படியும் ஆசிரியரும் இருக்கிறார்கள் ஊர் மக்களும் இருக்கிறார்கள் வாழ்த்துகள்
கோடான கோடி வாழ்த்துக்கள் ஐயா.
ஐயா உங்கள் அன்பும் பண்பும் உண்மையாக இருந்ததே இந்த அன்புக்கு காரணம்.வாழ்க உங்கள் தொண்டு
தலைமையாசிரியருக்கு. தலைமை வணக்கம். ஊர் மக்களுக்கு. மகத்தான வணக்கம
அவருடைய பெயருக்கு ஏற்றவாறு ஜோதி தான் இவர் மனசு 🙏🔥 பார்க்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியை தருகிறது 🥰 ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த மக்களும் இன்று போல் என்றும் தொடர்ந்து இருங்கள் ♥️💙
பல ஆசிரியர்களுக்கு முன்
உதாரணமாக வழி காட்டுவதால்,உங்கள் பாதங்களை தொட்டு அனைவரும் வணங்குகிறோம்,,,,,!உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,!உங்களை போல் ஊருக்கு. ஒருவர் இருந்தால் போதும்,,,,!கட்சியும் வேண்டாம்,,,,,,,,!
கொடியும் வேண்டாம்,,,,! ஆசிரியர்கள் மூன்றாவது கடவுள் என்பதை இவர் நிரூபித்து விட்டார்,,,,,! ❤
Thanks thanks thanks thanks thanks sir
ஏழைகளின் கல்விக்கண் திறக்கும் கடவுள் உங்கள் குலம்வாழ வாழ்த்துக்கள் ஐயா
இந்த ஆசிரியர் ஒரு புண்ணிய வான். நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி பொங்குதையா.பாராட்டுக்கள் ஐயா
நல்ல மனிதர் ❤❤
இப்படி இருப்பது ஆசிரியர் இனத்துக்குப் பெருமை
உங்களின் பணி மேலும் சிறக்க
வாழ்த்துக்கள்🙏💕. வாழ்க வளமுடன் அய்யா. வணக்கம்🎉
எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த தகவல் சேர வேண்டும் என்பது நம் விருப்பம் 🙏!
ஜோதிமணி
நீர்-மாணவர்கள்
அனைவருக்கும்
அருள் கூறிய
ஆலயமணி!
அன்பை
விதையாய்
விதைத்தால்
அரவணைப்பு
ஆலவிழுந்தாய்
சூழும்!
திருமணம் உம்வீட்டில்
ஊரே உம் பிள்ளைக்கு
சீர் சுமக்கும்
சொந்தமாச்சே!
உனதன்பில்
ஊரே சொர்க்கமாச்சே!
வாழ்த்துகள் ஐயா!
விருதுகள்
உனை சேராது
ஏங்குவது இயல்பு ஐயா!
நல்லாசிரியருக்கு
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ஆசிரியரின் திருமகளுக்கு
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!
வாழ்க மணமக்கள்!
இது போன்று ஒவ்வொரு ஊரிலும் நடந்தால் எவ்வளவு சந்தோசமாக நன்றாக இருக்கும்.
ஊர் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும் பலமொழிக்கு எடுத்துகாட்டு மாணவ செல்வங்களை நல்ல நிலைமைக்கு ஏற்றி விட்ட ஏணி படி ஆசிரியர் கோடான கோடி நன்றி நன்றி நன்றி அய்யா
Ellorum nallavargal. Oorum antha teacherum.❤
இதுபோல் நல்ல ஆரோக்கியமான ,நம்பிக்கை வளர்க்கும் செய்திகளை அடிக்கடி போடுங்க.
2024 இல் பொன் தகட்டில் பொறிக்க்கபட வேண்டிய சம்பவம் & நாள். வித்தியாசமாக கொண்டாடிய ஊர் மக்களுக்கு என்.🫀.🥭. ந்த வாழ்த்துக்கள்..
Your daughter is very lucky. Good person's best wishes will light her beautiful marriage life. Best wishes to couple.
இந்த தலைமை ஆசிரியரும் அவர்தம் குடும்பத்தாரும் அனைத்து வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ்க என வாழ்த்தி அதற்காக இறைவனிடம் கையேந்துகிறேன்
கிராம மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி தந்தையாக மாறி ஜோதிமணி அம்மாவிற்கு வாழ்த்துக்கள். கிராம மக்களின் அவரின் மீது வைத்து உள்ள பாசம் நெகிழ்ச்சியாக உள்ளது.
அய்யா உங்களை vazhtha vayadhillai vanaguginrom. 🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐
Salute Jothi mani sir and villages peoples.
இந்த தலைமை ஆசிரியருக்கும் கிராம மக்களுக்கும் என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள். இப்படி ஒரு பாசம் நம் அனைவருக்கும் பரிமாறுவதற்கு இவர்கள் நல்ல முன்னோடிகள்.
ஐயா வாழ்த்துக்கள் 🙏 எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரும் கூட இப்படி தான் இருந்தாரு🎉🎉
Great salute sir 🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா. வணங்குகிறேன்.
தமிழ்ப் போல் தலைமைப் பேராசிரியர் உழைப்பு தேனீக்கள் போல் இனிக்கும் தேனாய் நடந்து கொண்டது சந்தோஷம் மிகவும் சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
They are real heros
Salute to that people
ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் பள்ளிக்கு சென்றாலும் மொபைல் போனில் படம் பார்த்துக்கொண்டு பொழுதைப் போக்கும் அரசு ஆசிரியர்கள் அளவுக்கு மிக மிக அதிகமாக ஊதியம் வாங்கி நிறைய கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட்டு வட்டிக்கு விட்டு பணத்தை பலகோடி பெருக்கி சுகபோகமாக வாழ்கிறார்கள்.. கொரோனா காலத்தில் கூட சாமானிய மக்கள் சோத்துக்காக போராடிக் கொண்டிருக்கும்போது இவர்கள் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டிருந்தார்கள்.. அதுபோக வருடம் முக்கால்வாசி விடுமுறை வேறு வருகிறது.. தங்களுக்கு அரசாங்கம் வாரி இறைக்கும் அதிகமான ஊதியத்தின் இழப்பினை சரிகட்ட சாமானிய ஏழை மக்களுக்கு விலைவாசிகள் உயர்த்தி வரிகளை உயர்த்தி அதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்தும் இன்னும் போதவில்லை என்று வெட்கமே இல்லாமல் அரசாங்கத்திடம் அதிக ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தும் மனசாட்சி இல்லாதவர்கள்.. அப்படி இருக்கும்போது இவர் மட்டும் எப்படி இப்படி நல்லவராக இருக்கிறார்.. லட்சத்தில் ஒருவர் இப்படி இருக்கிறார்கள் போல
நன் இன்னும் வட்டிக்கதான் பணம் வாங்கூகிறேன்
நல்ல மனம்!
ஊடகத்தில் இதுபோன்ற நல்ல செய்திகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்க வேண்டும்.
நன்றி🎉
Very happy to hear and see this news
அந்தப் பள்ளிக்கு நல்ல தலைமை ஆசிரியர் நீங்கள் கொடுத்து வைத்த ஊர் அதே போல் இந்த நாட்டுக்கு உங்களைப் போல் நல்ல தலைமை வேண்டும் மீண்டும் ஒரு காமராஜர் ஐயா நீங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Pakkavee azhagu eruku nala utharana manushar ❤❤😊😊🙇♀️🙇♀️
வாழ்க வளமுடன் இதுபோல் ஊருக்கு ஒரு ஆசிரியர் இருந்து விட்டால் ஏது மக்களுக்கு கஷ்டம் அநேக தோன்றிட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம் வாழ்க வளமுடன்
ஐயா உங்களைப் போன்ற ஆசிரியர்கள் இன்றும் உள்ளதால் தான் எங்களுக்கெல்லாம் சேர்த்து மழை பொழிகிறது.இதில் கிட்டத்தட்ட உங்களது முப்பது ஆண்டுகள் உழைப்பு இருக்கும்.உங்கள் பிறப்பு இந்த மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்திருக்கிறது.வணக்கங்கள் ஐயா.
வாழும் கடவுள்!
கல்வி கண் கொடுத்தவர் கடவுளுக்கு நிகர்!
Govt should take his effort as model for all Gvt schools including Pvt Schools.
Super hm sir🎉 makkalum super
எல்லோரும் இப்படி வாழ்ந்தால் தமிழகம், ஏன்இந்தியாவே சொா்க்கம்தான்!
Ivar than nalla aasiriyar❤❤❤❤
Nandri unarvodu vandha oor makkalukku oru salute andha Headmasterikku Kudos.. Both of you are very lucky to have such a great relationship
ஜோதிமணி த ஆ அய்யா அவர்களுக்கு. வாழ்துக்கள். வாழ்க வளமுடன் தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்துகள் அய்யா
நல்ல செய்தி போட்டதற்கு வாழ்த்துகள். கண்களை ஈரமாக்கிய செய்தி.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் வாழ்க வளமுடன் ஊர் மக்கள் அனைவரும் ❤❤❤❤❤
Good teacher & great village people
கண்கள் கலங்கி விட்டது.... இவர்தான் வாழ்க்கையை வெற்றி கண்டவர்.... அனைவர் மனதிலும் இடம் பிடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல....
ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.ஆசிரியர் ஐயா அவர்கள் பணி சிறப்பானது.அதான் இந்த மரியாதை
குருமார்கள் கடவுளாய் மாறுவதை இன்றும் காணமுடியுமா ? வாழ்த்துக்கள் ஐயா. தாங்களும், தாங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க. Oor மக்களும் வாழ்க. நெஞ்சம் நெகிழ்ந்தது இன்று.
அருமை அந்த ஆசிரியர் வாழ்க பல்லாண்டு 👏👏👍👍
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ், நாம் கொஞ்சம் செய்தால் அதை உணர்ந்து செய்தால் நம் மக்கள் ஆயிரம் செய்வார்கள் இது தான் உண்மை, வாங்கும் சம்பளத்திற்கு யாரும் வேலை செய்ய தயாராக இல்லை - உண்மை -உயர்வு அதுவே தெய்வம் 🎉❤❤
அன்பு உள்ளங்கள்.அரசியல் வாதிகள் இது மாதிரி சேவை செய்யவேண்டும்.
உங்களின் கல்வி பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.
Sri. Jothi mani, HM of Govt. H. S. School, puthukottai, No words to express your commendable and dedicated service to the School children..
I bow my head. Hearty Congratulations to you.
இதே போன்று இதேபோன்ற ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் தமிழ்நாட்டில் மேலும் மேலும் உருவாக வேண்டும் உருவாக வேண்டும் எல்லா ஆசிரியர்களும் உணர வேண்டும் உருவாக வேண்டும்
இந்த ஆசிரியர் போல பலர் உருவாக வாழ்த்துக்கள் இவரே கடவுளின் சாட்சியாக உள்ளார் கோடி கோடி நன்றி நன்றி பாதங்களை வணங்கின்றேன்.....
Etha pathu kanne kalangiduchu❤❤
அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்
Super super sir ungalukku thalai vanangukirom
Really great sir
Hon.Teacher, you are a great soul. God bless you.
Head master won the People’s heart ! This is the real service to the God’s sons and daughters,
❤❤ அருமை அருமை
எல்லோருடைய இதயத்திலேயும் இருக்கிறீர்கள் வாழ்க உங்களின் தொண்டு உங்களை பாராட்டுவதர்கு வார்த்தைகள் இல்லை உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
தலைசிறந்த ஆசிரியருக்கு நான் தலைவணங்குகிறேன்
Gramma makkalin anbukkum nandri unarvukkum thalai vanangugiren
Vaazhga Valamudan
அய்யா தங்களை மாதிரி ஆசிரியர்களால் தான் இன்னும் தனி மனித ஒழுக்கம் இருக்கிறது.
ஜோதிமணி தலைமை ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் என் வாழ்த்துக்கள்
Super sir.vazhga pallantu .ungal sevai innum vendum
இவர் போல் பல தலைமை ஆசிரியர்கள் உருவாக வேண்டும் நெஞ்சார வாழ்த்துகிறேன் ❤❤❤
Valthukkal சகோதரி ஹம்
இது மாதிரியான நல்ல செய்திகளை போட்டால் நாடு திருந்தும் வாழ்க அந்த தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியர் குடும்பம் அந்த ஊர் பொதுமக்கள் நன்றி தொலைக்காட்சிகள் சினிமா நடிகன் சினிமா நடிகை கிரிக்கெட் நாடு நாசமாகிவிடும் ஒரு விவசாயி ஒரு நெல்லை உற்பத்தி பண்ணா குறைந்தது மூன்று நான்கு மாதங்கள் ஆகும் இந்த வருமானமும் கிடையாது ஆனால் ஆனால் ஒரு நடிகனோ ஒரு கிரிக்கெட் வீரனோ ஒரே நாளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் எல்லோரும் விவசாயத்தை விட்டுவிட்டு நடிகனாகவோ கிரிக்கெட் வீரனாகவோ செல்ல நினைத்தால் இந்த நாட்டுக்கு யார் சோறு போடுவது இந்த நாட்டை யாரு காப்பாற்றுவது??????
மிகவும் அருமை
என் மகன் படிக்கும் அரசு பள்ளியில் பாட்டிலில் எடுத்து போன தண்ணீர் காலியாகிவிட்டால் ஒரு சில ஈவு இரக்கமற்ற ஆசிரியர்கள் அவங்க தண்ணீர் பிடிக்க கூட விடமாட்டார்கள்.என்மகள் படித்த அரசு பள்ளியில் ஒரு படி மேல் பிரேக் விடும் நேரத்தில் மட்டுமே ரெஸ்ட் ரூம் போகனும்.நடுவில் வந்தால் ஆசிரியர் போ என்று அனுப்பினால் கூட தலைமை ஆசிரியர் ஏன் இந்த நேரத்தில் கிரவுண்டில் போயிட்டு இருக்க என்று காரணம் கூட கேட்காமல் அந்த அம்மா 10 நிமிடம் கீழே உட்கார வைத்து விட்டு வகுப்பறைக்கு போ என்று அனுப்பிடும் அந்த சைக்கோ.இத்தனைக்கும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து நன்றாக படிக்கும் குழந்தை என் மகள்.நன்றாகவே என் மகளை பள்ளியில் நிறைய ஆசிரியர்களுக்கு தெரியும்.
தக்க நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்!
Very nice Teacher and good people
இது தான் எங்கள் தாய் தமிழ் நாடு வணங்குகிறேன். ஆசிரியர் பெரு மக்களே வாழ்த்துக்கள்🎉
நமஸ்காரம். இவர் போன்றவர்களால் தான் இந்த மழையாவது பெய்கிறது நாட்டில். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
இந்த மாதிரி ஆசிரியர் கிடைக்க அந்த ஊர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
Vazhga valamudan
Hats off sir and all people 😊
wish u god bless u
இது போன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படிப்பு மற்றும் ஒழுங்கு கற்றுதருவது மட்டுமன்றி ஊர்காரர்களுக்கே சொந்தமாவது தமிழ்நாட்டு கிராமங்களில்தான் காணமுடியும். ஆசிரியருக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் நன்றியை பாசத்துடன் காட்டும் கிராமத்துமக்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க தமழகம்
congrats sir.not only God bless you.people also blessed you.hats off you sir
ஒருவரின் நடத்தையில் தான் எல்லாம் அடங்கியுள்ளது. எங்கள் ஊரில் தலைமை ஆசிரியர் பனி மாறுதல் பெற்று செல்லும் போது நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் அவரை கட்டி பிடித்து போக வேண்டாம் அய்யா என அழுதது என்றைக்கும் நெஞ்சை விட்டு நீங்காது.
நன்றிகள்பல
அருமையான பதிவு. 🌻🌻🌻
வாழ்த்துகள் ஐயா
வாழ்ந்தால் இவரைப் போல் ஆசிரியராக வாழ வேண்டும்.பணி தொடர
வாழ்த்துக்கள்.🎉🎉