Saint Ramalingar’s Philosophy ll வள்ளலார் காட்டிய மரணமில்லா வாழ்வு ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2021
  • #இராமலிங்கர்,#ramalinga
    வள்ளலார் இராமலிங்கரின் வாழ்க்கை மற்றும் அவரது சமரச சுத்த சன்மார்க்க நெறி பற்றிய விளக்கம்

Komentáře • 610

  • @rajganesh11381
    @rajganesh11381 Před 2 lety +24

    வள்ளலாரின் போதனைகள் குறித்து ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் கேட்டு இருக்கிறேன். ஒரு தத்துவவியல் ஆசிரியராக உங்கள் பார்வை எப்படி இருக்கும் என்று கேட்க ஆர்வமாக இருந்தேன் இவ்வளவு நீண்ட நேரம் அருமையாக உங்கள் கோணத்தில் விளக்கியது அருமை. கடைசியாக நீங்கள் கூறியது போல் வரப்போகும் உலகெல்லாம் ஏற்றுக்கொள்ள படும் இறைவனின் விருப்பமான ஒரு வாழ்வியல் முறையின் prototype தான் அதற்காக இறைவன் அனுப்பிய தூதுவனாக நான் வள்ளல் பெருமானாரை பார்க்கிறேன். அது நீங்கள் கூறியது போல் வெற்றி பெறாத தத்துவம் அல்ல உயிர்ப்புடன் இருக்கும் ஒரு தத்துவம் தக்க சமயம் வரும் பொழுது இந்த உலகெல்லாம் பற்றி கொள்ளும் இதில் இன்னொரு நன்மை என்னவென்றால் வெளி கலப்புகள் இல்லாமல் அவரின் கருத்துகள் பதிவு செய்ய பட்டு விட்டது இதுவே அதி வேகமாக பரவியிருந்தால் பலரின் லாபத்துக்காக சொந்த கருத்துகள் புகுத்தப்பட்டு வேறு வடிவம் பெற்றிருக்கும்.
    Once Again I appreciate your effort for this video..

    • @dhudhith
      @dhudhith Před rokem +2

      @ Raj செம்மையான கருத்து சகோ (வேற லெவல்னு சொல்லுவாங்க இல்ல) என்ன ஒரு கருத்தாக்கம்.
      இவர்களெல்லாம் அது முடிந்து விட்டதாக கருதி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த புயல் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இன்னும் 50-லிருந்து நூற்றாண்டுகளுக்குள் இவர்கள் அதை காண்பார்கள்.

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Před 2 lety +10

    தெளிந்த ஞான உறை.வள்ளலாரின் மார்க்கம் எதிர்கால உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.சத்திய ஞானம் அசத்தியத்தை வெல்லும்.நீவிர் நீடூழி வாழ்க.

  • @balathilaga1
    @balathilaga1 Před 2 lety +24

    இராமலிங்க அடியார் இறந்தவரை எழுப்பிய வரலாறு உள்ளார் அய்யா...தங்களின் இரத்தின சுருக்கமான உரை அருமை அருமை...அனைவருக்கும் அய்யாவின் உரைநடை மற்றும் 6ஆம் அருட்பா ஞான பொக்கிஷம் சேர்த்து உண்மை தன்மையை உணர்ந்து நிபந்தனையற்ற அன்புடனும், கருணை மற்றும் தயவுடனும் வாழ வேண்டும். நன்றி

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy Před 2 lety +12

    வணக்கம் சார், வள்ளலார் அவர்களை பற்றி யாரிடமும் கேட் க முடியாத பல உண்மைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🙏

  • @RamKumar72538
    @RamKumar72538 Před 2 lety +11

    தங்களின் காணொளிகள், இயற்கை தேடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கும், சாக்ரடிஸ் ஸ்டூடீயோ குழுவிற்க்கும் நன்றி! நன்றி!நன்றி!

  • @kannant8188
    @kannant8188 Před 2 lety +17

    ஐயா மிகவும் நன்றி!!!💐
    உங்களது எல்லா காணொளிகளையும் பார்ப்பேன், உங்களின் சேவையால் மனசுத்தமும் மனவளர்ச்சியும் அடைந்து வருகிறேன், வருகிறோம்.
    மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @subugi3195
    @subugi3195 Před 10 měsíci +3

    இந்த காணொளிக்கு ரொம்ப நன்றி ஐயா ரொம்ப சூப்பராகவும் சித்தர்களை பற்றி புரியிற மாதிரி பிரபஞ்சம் என்ன நமக்கு சொல்ல வருது என்றதையும் நல்ல ஆழமாகவும் சூப்பரா பேசியிருந்தார் ஐயா இந்த காணொளிக்கு கோடான கோடி நன்றி ஆத்ம வணக்கம்

  • @yessevencommunityvisharam1491

    நீ தேடும் அளவிற்கு இறைவன் எங்கோ தொலைந்து விடவில்லை உன் ஆன்ம திருச்சபை யில் திருப் பதியாக அவரே அமர்ந்து இருக்கிறார்

  • @Durai131
    @Durai131 Před 2 lety +12

    மிகுந்த ஆர்வமும் அறிவும் ஊட்டும் உரை .. நன்றிகள் அய்யா

  • @kalyanig405
    @kalyanig405 Před 2 lety +9

    தாங்கள் வள்ளலார் பற்றி பேசியது மிக அருமை. என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. நன்றி. 🙏🙏🙏

    • @neelagandankabilan8853
      @neelagandankabilan8853 Před 2 lety

      வணக்கம் ஐயா வள்ளலார் வாழ்ந்தது 51 ஆண்டுகள் தாங்கள் ஐம்பது என்று கூறி இருக்கிறீர்கள்

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 Před 2 lety +9

    மிகச்சிறந்த காணொளி.தமிழர்கள் வாழ்வியலுக்கு நம் மூதையார்கள் வாழ்வியலையும் தத்துவங்களையும் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 Před 2 lety +10

    அற்புதமான பதிவு. வழக்கமான பேச்சாளர் வள்ளல் பெருமான் பற்றி பேசியது வேறு. ஆசிரியரின் பிரசங்கம் வித்யாசமானது அற்புதமான அனுகுமுறை .

  • @santhikumari6117
    @santhikumari6117 Před 2 lety +7

    பேராசிரியர் ஐயா அவர்கள் மிகவிளக்கமாகவும் நுணுக்கமாகவும் அருட்பெருஞ்சோதியரை பற்றி கூறியிருக்கின்றீர்கள் மிகவும் பாராட்டுக்குரியது.மிக்கநன்றி

  • @rathamanalan
    @rathamanalan Před 2 lety +6

    அறிவுத்தாகம் கொண்டு அலையும் எங்களுக்கு அருமையான காணொளிகள். நன்றி நன்றி மிக்க நன்றி பேராசானே!

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Před 2 lety +16

    அருடபெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
    நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்.

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 Před 2 lety +26

    வணக்கம். உலகத்தில் உள்ள பலதரப்பட்ட ஆன்மீகத்தைப் பற்றியும் ஆன்மீகவாதிகள்,அவர்தம் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை தொகுத்து அருமையாக தந்துள்ளீர்கள். பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. உங்கள் காணொளிகளை கண்ட பிறகு ஒரு சிந்தனை தெளிவு கிடைக்கிறது. நன்றிகள்.

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 Před rokem +4

    அவர் மறைந்து விட்டார் என்று குறிப்பிடலாம்.இறந்துவிட்டார் என்று கூற முடியாது.
    ஆனால்,மிக அருமையாக உண்மையாக விளக்க muyarchithirukkireergal

  • @vetrivelt9312
    @vetrivelt9312 Před 2 lety +128

    மேற்கத்திய மெய்யியல் மேதைகளை பற்றி பேசி வந்திருந்த தாங்கள் தென்னாட்டு வள்ளலாரை பற்றி பேசியதற்கு மிக்க நன்றிகள்.

  • @user-lx5dd4no6m
    @user-lx5dd4no6m Před 2 lety +9

    நன்றி ஐயா.வள்ளலாரை யாருடனும் ஒப்பீடு செய்யாதீர்கள்.புத்தர்..கிருஷ்து..சித்தர்கள்..எந்த ஞானிகளுடனும் ஒப்பிடாதீர்கள்.
    முதல் சாகா கடவுள் மனிதன் வள்ளலார் தான்.உடலுடன் உயிருடன் இயங்கிக்கொண்டு தற்போதும் இருக்கிறார்.நன்றியுடன்.

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Před 2 lety +2

      தயவு
      தங்களின் கருத்திற்க்கு
      என்ன ஆதாரம் ஐயா?
      வள்ளலாருக்கு பிறகு யார் மரணமிலாப் பெருவாழ்வை பெற்று இருக்கிறார்கள் ஐயா?

    • @user-lx5dd4no6m
      @user-lx5dd4no6m Před 2 lety +3

      @@ravikumars.n.3538 பல பேர் அந்த வாழ்வைப் பெற வள்ளலார் தயார் செய்து வருகிறார்.இனிப் பெறுவார்கள்..

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Před 2 lety +1

      @@user-lx5dd4no6m
      தயவு
      தயாநிதி சுவாமிகள் பற்றி தங்களின் கருத்து?

  • @shanthymahalingasivam5904

    அருமை 👍 சிறப்பு 👌
    என்னை அறியாமல் கண்ணீர் கசிந்தது ஏன் என்று தெரியவில்லை
    மிகவும் அனுபவித்துக் கேட்டேன்.
    நன்றி.
    வாழ்க நீங்கள் பல்லாண்டு

  • @vedhathriyareserchcenterra5738

    வல்லாளார் குறித்து தங்கள்
    விளக்கம் எந்த அறிஞர் கூற
    வில்லை வல்லாளார் முழுமையாக.உணர்வு பெற்று
    விஞ்ஞான பார்வையை
    விளக்கம் வல்லாளார் குறித்து
    விளக்கம் பெருமையாக உள்ளது பாராட்டுக்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன்

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Před 2 lety

      தயவு
      வள்ளலார் என்று குறிப்பிடவும்.

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 Před 5 měsíci

      வள்ளலார் என்ற எழுத்துக்கள் தான் சரியானது

  • @ramum9599
    @ramum9599 Před 2 lety +15

    ஆதிசங்கரர் வள்ளலார் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு !!ஆண்டவன் கட்டளை !!!!நம் பாக்யம் !!!!!ஓம் நமச்சிவாய !!!!🙏🙏🙏🙏

    • @leelakrishnanc4576
      @leelakrishnanc4576 Před 2 lety +1

      பசியற்ற உலகம் கல்வி கற்றலுக்கு முக்கிய த்துவம் சாதி மத பேதமின்றி சமத்துவம் கருணை உலகம் மலர்ந்திட வேண்டும் என்ற வள்ளலாரின் நோக்கங்கள் இன்று பல வழிகளில் பல அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது என்பது உண்மை என்பதை மறுப்பதற்கு இல்லை வள்ளலார் பற்றி எளிமையாக உரை நிகழ்த்தியவர் கு நன்றி

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 Před 2 lety +32

    " உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை ...........
    நான் இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் . "
    - வள்ளலார்.

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 Před 2 lety +1

      Nee. Enna. Aaliyah??

    • @meenabalasubramanian5407
      @meenabalasubramanian5407 Před 2 lety +1

      Vallalar anbu ullangalin ullle vallzhu kinda Nallathenai seithu varugiraar enbathu Martha mudiyatha marakka mudiyatha oar unmaiyana arul Jyothi and Thani perum karunai ahhum

    • @govind9249
      @govind9249 Před 2 lety

      @@shiyamaladevi1109 ஷ்யமாளா தேவி

  • @MKT2696
    @MKT2696 Před 2 lety +5

    ஐயா வள்ளலார் பற்றிய தகவல்கள் அருமை . வள்ளலார் பாட சாலையில் திருக்குறள் . திருமந்திரம் . போன்றவற்றை பாடலும் விளக்கமும் போதிக்க பட்டது . அருட்பெருஞ்ஜோதி அகவல் இந்த உலக மக்களுக்காக கருணையுடன் படைத்தார் . உடலை முற்றிலும் ஒளி உடல் ஆக்கி பூமியில் ‌விழாமல் வான் கலந்து விட்டார் என்பதை புரிந்து கொண்டேன்.நன்றி

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Před 2 lety

      தயவு
      வள்ளலார் வானில் கலக்கவில்லை. மாறாக ஆண்டவர் அவர் உடலில் கலந்து அவரது உடம்பை அழியாமல் ஆக்கிவிட்டார்.
      நன்றி.

  • @muralikumar3086
    @muralikumar3086 Před 10 měsíci +2

    வள்ளலார் பிறந்தநாள் இல் இந்த காணொளி காண்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏

    • @manivannanpadma1852
      @manivannanpadma1852 Před 9 měsíci

      அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குறித்த மிக அற்புத உரை! கண்டோம்!களித்தோம்! நன்றி!

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Před 2 lety +14

    Beautifully presented. Thank you very much, Thanks for your time, you brought வள்ளலார் alive. Thank you.

  • @storytime3735
    @storytime3735 Před 2 lety +3

    அருமையான பதிவு நன்றி வள்ளலார் கருத்துக்களை உங்களால் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🌷💐🌺🌹

    • @sv.muruganseetharaman6530
      @sv.muruganseetharaman6530 Před 2 lety +1

      திருச்சிற்றம்பலம் நல்ல அருமையான பதிவு கருத்துக்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @ravichandrankumaraswamy7579

    தேடிக் கொண்டிருந்த வள்ளலார் கருத்துக்கள் கிடைத்தன. வாழ்த்துக்கள் பேராசிரியர்.

    • @kamalaa538
      @kamalaa538 Před 2 lety

      Very nicely narrated in a simple lucid manner. Thank you

    • @selvakumarm8701
      @selvakumarm8701 Před 2 lety +1

      வள்ளல் பெருமான் பற்றி அறிய ஆறாம் திருமுறை படியுங்கள்.
      மேலோட்டமாக படித்து விமர்சிக்காதீர்கள்.
      பேராசிரியர் மேல் எனக்கு மரியாதை உண்டு.
      மேலும் என்ன சொல்ல

    • @ravibanu9949
      @ravibanu9949 Před 2 lety

      Amazing explanation about Thiru Arut Prakasa Vallalar His teachings and his nature and structure of Almighty the way of self-samathi while living and his narration of the Jothi represents Lord Siva is the beginning of understanding the life in itself

    • @saravanakumara3515
      @saravanakumara3515 Před rokem

      ​@@selvakumarm8701 😂

  • @user-fx9zd9jt3y
    @user-fx9zd9jt3y Před 2 lety +10

    வள்ளற் பெருமானார் "சாகாவரம்"
    பெற்றவர். தமது "அருட்பா" வில் இதை
    பல இடங்களிள் உறுதிபட கூறியுள்ளார். பட்டுப்புழு பட்டாம்பூச்சியாக (read" homo dues" -by yuval noah harari) மாறி
    பறந்ததை இன்னும் புழுவாக
    இருந்த மற்ற புழுக்கள் புறிந்துக்
    கொள்ள இயலாது.இதுதான் நம்நிலை!

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Před 2 lety +1

      தயவு
      அருமை, நன்றி.
      பட்டாம்பூச்சி பறந்து எங்கே சென்றது என கேட்பார்கள்.

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 Před 2 lety +3

      @@ravikumars.n.3538 பறப்பது சாத்தியம் என்று நம்பும் எல்லா உயிரிலும் அது சத்தியமாய் பறந்து கொண்டிருக்கிறது.

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Před 2 lety

      @@s.sathiyamoorthi6634
      தயவு
      இன்னும் தெளிவான விளக்கம்/பதில் தேவை.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Před rokem

      @@ravikumars.n.3538 அகக்கண் விழிப்பு கொண்டு அந்த பட்டாம் பூச்சி பறப்பதை காணுங்கள் என்பேன்.
      மற்ற ஊனக்கண்களால் இதை பார்க்க முடியாது.

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Před 2 měsíci

    ஆஹா அருமையான பதிவு. பசியொழித்தல் கூடுதல் செயல். இதைத் தவிர்த்து மற்ற செயல் அனைத்தும் எனது இருதய ஆசான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை ஒத்திருப்பது அதிசயமான உண்மை‌
    .

  • @muthucumarasamyparamsothy4747

    நன்றி ஐயா, இராமலிங்க வள்ளலாரின் தத்துவம் உலகம் முழுமைக்கும் நன்மையை கொடுக்கும் காலம் மிக விரைவில் வரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். சில கருத்துக்களை பதிய விரும்புகின்றேன்.அண்மைய விஞ்ஞான ஆய்வுகள் வள்ளலாரின் கருத்துக்களுக்கு சான்றுபகர்வனவாக அமைகின்றன. முதலாவதாக முருகனின் திரு உருவம் எதிரே உள்ள கண்ணாடியில் தோன்றியது சாத்தியமே!!!. உள்வெளியில் ( உடம்பில் உள் ) தோன்றிய வடிவத்தை, பூரண பிரஞையோடு உற்றுநோக்கும்போது, வெளியில் ( கண்ணாடியில் )பிரதிபலிப்பது சாத்தியமே. (Erwin Schrodinger's Experiment Proved ) . அடுத்ததாக தமிழ் ஒரு தெய்வீக மொழி ,ஏனெனில் பேரறிவு ( Consciousness ) எழுத்து வடிவங்களை ஆகாய வெளியில் உருவாக்குவதும் சாத்தியமே Quantum Physics proves, waves can be converted into particles. Double Slit Experiment .நவம்பர் மாத 2021 விஞ்ஞான கண்டுபிடிப்பில் வெளியிலிருந்து ( Space ) சடப்பொருளை ( Matter ) உருவாக்குதல் வெற்றிகண்டுள்ளதே !!!. ( ) உள் வெளியிலிருந்து முருகனின் வடிவம் வெளியில் ( mirror )தோற்றியதுபோல், வெளியிலுள்ள சட வள்ளலாரின் உடம்பை ஆகாய வெளியில் இணைப்பதும் சாத்தியமே. This can be de- materialization. சட பொருள்கள் சூக்சுமமான சக்தியால் தோற்றுவிக்கப்படுகின்றன. நமது உடம்பிலிருப்பது சூக்சுமமான சக்தியே .வள்ளலார் ஆகாய வெளியில் சேர்ந்தது நூறுவீதம் உண்மையே!!!. Youths in Thamil Nadu has the greater responsibility to follow Eramalinka Vallalar's philosophy and help to bring new, young political leaders to the State Assembly that could promote Justice ,Equality and Peace to the people in Thamil Nadu , Bharatham and the World at large. Arul Perum Jothi, thanipperum Karunai .

  • @thangaveluappasamy3320

    சகோதரர சகோதரிகளே ! வள்ளலார் அவர்கள் மாபெரும் அறிவியல் ரீதியான புரட்சிகரமான சிந்தனையாளர்.
    அன்பர்களே இந்த உலகில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து
    உயிர்களும் பொருட்களும் வெற்றிடங்களுடன் இந்த உலகத்தில் பரிணாம வளர்ச்சிக்காக உருவாக்கப்படுகின்றன.அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் அனைத்திலும் மனித உயிர்களே மிக சிறந்த சிந்தனை ஆற்றல் உள்ள உயிர்கள் ஆகும்.மனித தேகமே அதற்கானதாக படைக்கபட்டுள்ளது.
    மனிதர்களின் சிந்தனைகளும் செயல்களும் பலவாறாக வெவ்வேறாக இருக்கின்றன.
    ஆனால் ஒவ்வோரு உயிர்களிடமும் உயிர் என்ற ஒரு சக்தி இருப்பதாக யாவரும் கூறுகிறார்கள். அவ்வுயிர் மரணத்தில் உடலில் இருந்து பிரிந்து செல்வதாக அனைவருமே கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா? என்று அறிவியல் ரீதியாக சிந்தித்தால் அது தவறாக மாமூலான பரம்பரை பொய்யாகவே தெரிகிறது.
    அப்படி என்றால் ஒவ்வொரு உயிர்களையும் இயக்கும் சக்தி எது? அந்த மாபெரும் சூட்சுமமான சக்தி
    வேறொன்றுமில்லை நாம்
    அனைவரும் அறிந்த சக்தியான ஒவ்வொரு உயிர்களின் மிக மிக சூட்சமம் நிறைந்த மூளை என்ற உறுப்பாகும்.
    எனவே ஒவ்வொரு உயிரின் மூளையின் இயக்கம் நின்று போதே இறப்பாகும். எனவே எந்த இயக்கமுள்ள படைப்புகளுக்கும் உயிர் என்று தனியாக எதுவுமில்லை. என்பதை எவர் ஒருவருமே ஆழ்ந்த தரமான அறிவோடு சிந்தித்தால்
    புரியும். வாழ்த்துக்கள்.

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 Před 2 lety +16

    My guru is Ramalingaswamy
    I heard many times from many people
    Still i am very pleasant
    To hear from u

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 Před 2 lety +14

    வள்ளல் பெருமானின் வாழ்க்கையை அருமையாக
    தொகுத்து வழங்கியது.
    மிகச் சிறப்பு.
    வாழ்க வளமுடன் அய்யா.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 2 lety +5

    ஐயா, தங்களின் இந்தப் பதிவிற்கு மிக மிக மிக நன்றி. நன்றி. நன்றி.

  • @palanibarathi4285
    @palanibarathi4285 Před 2 lety +4

    ஐயா பல தத்துவங்களை எங்களுக்கு புரிய வைத்து விட்டார்கள் கோடன கோடி நன்றி ஐயா🙏💕🙏💕

  • @muruganandamgangadaran6071

    அற்புதமான உரை.
    வள்ளலாரைப் பற்றி துண்டு துண்டான செய்திகளை மட்டுமே கேட்டிருந்த எனக்கு, அவருடைய வாழ்க்கை , தத்துவம் எல்லாம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் வண்ணம் இருந்தது உங்கள் உரை.
    ஒவ்வொரு பதிவுக்கும் நீங்களும் உங்கள் குழுவும் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்றும் உணர முடிகிறது.
    நீங்கள் செய்வது அருந்தொண்டு.
    தொடர்க உங்கள் அறிவுப் பரப்புப் பணி.

    • @govind9249
      @govind9249 Před 2 lety

      புலால் மறுத்தல்

  • @ganeshank5266
    @ganeshank5266 Před 2 lety +28

    Sir, though we have been learning on Vallalar philosophy through various books,literary and spiritual experts lectures, your explanation of his philosophy is unique with your philosophical perspectives referring various ancient, modern philosopher views such as Sankara, Vivekananta, Thirumoolar, Kant, Descartes, Spinoza, Leibniz are valuable ( For me it recollects Socrates,Valluvan also) .Your critical analysis on his philosophy of "pure knowledge is God, his idea of our mind reflection through mirror,sivan vs sivam, hell vs heaven, matter vs mind and his ethical exploration are useful to understand his thoghts for further studyies and you said correctly that he is a social scientist. Thank you sir

  • @yessevencommunityvisharam1491

    நம்மில் ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக நம் ஆன்ம திருச்சபையின் உள் இருகின்ற கடவுள் விளக்கமாகிய அருளனுபவம் வெளிபட்டு பூரணமாகும்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Před 2 lety

      கடவுளுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம் என்று முதலில் அறிந்துகொள்ளுங்கள் பிறகு ஒளிதேகத்தைப்பற்றி கனவு காணலாம்

    • @user-bz4ms7xq5l
      @user-bz4ms7xq5l Před 2 lety

      😁

  • @rathakrishnannandagopal6713

    மிக்க நன்றி. வள்ளலாரின் ஆன்மீக பரிணாம வளர்ச்சியை நன்கு விளக்கி இருக்கிறீர்கள். பேராசியர் அரசு அவர்கள் வள்ளலார் பற்றி ஆற்றிய உறையையும் கேட்டேன். இருவர் உறையும் ஒரேநோக்கில் இருக்கின்றன.

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 Před 2 lety +3

    இராமலிங்க வள்ளலார் அவர்களின் ஆன்மீக அனுகுமுறையை விவரித்த தங்ளுக்கு நன்றி

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs Před 2 lety +8

    ஐயா, அருட்பிரகாச வள்ளலார் "இறக்கவில்லை" இது உங்களுக்குத் தெரியாதா ?, அப்படியிருக்க அவர் இறப்பிற்கு பிறகு என்று எப்படி தாங்கள் கூறலாம், பதிவிடும் பொழுது மிகவும் கவனம் தேவை, இச்செயல் மிகுந்த வருத்தத்தையே தருகிறது.

    • @natarajgreen
      @natarajgreen Před 2 lety +1

      The respectable professor should have told that Adigal has become one with the space or Jyothi.

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 Před 2 lety +6

    அவரின் விருப்பம் தான் இப்போது உணவு தட்டுபாடு செளிப்படைந்தது எல்லோரும் இலவசமாக எல்லா இடங்களிலும் உணவு கிடைக்கிறது விவசாய புரட்சி அதுவும் அவர் நினைத்தது போல் நடந்ததிருக்கலாம்

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 Před 2 lety

      நானும் தங்கள் கருத்தை மனதில் நினைத்து இருந்தேன். தங்களின் பதிவைப் பார்த்ததும் மகிழ்ச்சி

  • @ganapathidasanravichandran8546

    ஞானிகள் மறைவதில்லை.வள்ளலாரைதமழகம் ஏற்றிபோற்றவேண்டும்.அவர்நம்மோடுதான்இருக்கிறார்என்றபக்திஉணர்வோடுநாம்அவரைவணங்கவேண்டும்.மிகநுட்பமாகதமிழிலேபாடியவர்.சமரசசுத்தசன்மார்கம்எங்கும்மலரட்டும்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 2 lety +3

    பல அன்பர்கள் எதிர்பார்த்த பதிவு.
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!!

  • @sureshdalton5754
    @sureshdalton5754 Před 2 lety +4

    மிக அருமையான விளக்கம். காணொளியின் நேரத்தை குறைத்து சுருக்கமாக வெளியிட்டால் மேலும் பலனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 Před 2 lety +11

    அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை ❤

  • @scorpius2814
    @scorpius2814 Před rokem +20

    As I take the early steps in spirituality, I have been listening to your videos recently and enjoying them. So far this has been my most favorite video as I always wanted to know more about Ramalinga adigal and no one spoke to me as much as this lecture. I now realize that I align with his philosophies a lot. My spiritual journey is enriched by your talks. Nanrigal.

    • @karupasamykarupasamy822
      @karupasamykarupasamy822 Před rokem

      Lpa

    • @nandhakumar8878
      @nandhakumar8878 Před 8 měsíci

      Ramalinga Adigal is not just lived his life on spiritual, he just showed the ultimate reality of this human body to connect completely with universe,
      To be clear , u may refer movie lucy

  • @gurusamya3608
    @gurusamya3608 Před rokem +1

    ஆத்ம வணக்கம் ஒரு புதுமையாக எல்லோரும் ஒரீனம் ஓர் குலம் என்ற அருமையான புதுமையான கோட்பாடை உருவாக்க வழிகொண்டார் என்பது தெளிவாகிறது அவர் கண்டது செயலாக பல எதிர்ப்புககள் வர்ததால் அவர் தன்னை மறைத்து கொண்டதாக அறிய முடிகிறது நன்றி இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் இப்படி ஒரு சித்தபெருமானார் கிடைத்து தமிழருக்கு பெருமையே நன்றி

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj Před 2 lety +15

    இவ்வளவு எளிமையாக வள்ளல் பெருமானின் தத்துவங்களை யாரும் விளக்கியதில்லை ஐயா🙏.. மனம் நெகிழ்ந்தேன்.. நன்றிகள் பல 🙏🙏🙏 தங்கள் பணி மேன் மேலும் வளரட்டும்👍🏾

  • @arasimedia4207
    @arasimedia4207 Před 2 lety +5

    நன்றி🙏 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி🙏💕🙏💕🙏

  • @alagappanmadhavan1278
    @alagappanmadhavan1278 Před 2 lety +3

    நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.வள்ளலார் ஒரு சமுக விஞ்ஞானி

  • @balamurugan-tb2oy
    @balamurugan-tb2oy Před 2 lety +24

    அற்புதமான உரை கோடான கோடி நன்றிகள்...

    • @michaelantony5213
      @michaelantony5213 Před 2 lety +1

      Wonderful presentation. Vallalar is revolutionary SPIRITUAL giant.
      Lots of love and thanks.

  • @Shribalak
    @Shribalak Před 2 lety +3

    அவர் வேத மார்க்கத்தின் கூறுகளை தெரிந்தவராகத்தான் இருந்திருக்கிறார்.
    "கர்பூரகௌரம் கருணாவதாரம்
    சம்சாரசாரம் புஜஹேந்திரஹாரம்
    சதாவஸந்தம் ஹிருதயாரவிந்தே
    பவம் பவாமி ஸகிதம் நமாமி||
    இது யஜீர்வேத பாடம்.
    இதன் மொழிபெயர்பே:
    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி ||
    இது மாதிரியான பாடங்கள் அந்த காலக்கட்டத்தில், பிராமணர்கள் மட்டுமல்ல, வைசியர்களாலும் சர்வ சாதாரணமாக சொல்லப்பட்டவைதான்.
    எனவே, இவருடைய சன்மார்க்க நெறி என்பது, வேதங்களின் கூறுகளோடு ஒத்தே இருந்தது.
    இப்போதைய இந்த " திராவிட விடம்" என்பது வேத நாகரீகத்திலிருந்து, அதன் அறிவியல் அடிப்படையிலிருந்து, மக்களை போலி பகுத்தறிவு வாதத்திற்குள்ளாக்கி, மயக்கி, வாழ்க்கையை, பிறவியை வீணடிக்கிறது!
    என் பெயர் ஸ்ரீபாலா.( shribalaonline@gmail. com)

  • @thangaraju6736
    @thangaraju6736 Před 8 měsíci +2

    மிக்க நன்றி. வள்ளலார் பற்றி விரிவாக விளக்கியுள்ளீர். வாழ்க வளமுடன்

  • @amudham06
    @amudham06 Před 2 lety +6

    எனக்கு சொல்ல ஒரே ஒரு அற்ப வார்த்தை தான் உள்ளது. நன்றி 🙏

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 Před 2 lety +2

      நன்றி என்பது அற்புதமான வார்த்தை. அற்ப வார்த்தை அல்ல.

  • @manivannangodhandam2497
    @manivannangodhandam2497 Před 2 lety +1

    இந்த காணொலியில் சங்கம் உருவாக்கியதன் நோக்கம் இறைவனை அறியவும் கற்பித்தலுக்காவும் என்று அறியவும்.ஒரு பதார்த்ததை ருசிக்காதவன் அதன் சுவை அறியான் ,அதைத்தான் உண்மை சொல்ல வந்தேன் கேட்பார் இல்லை என்றார்.ஆங்கில புத்தகம் புரியாத எனக்கு உங்களின் காணொலி ஒரு உலக அறிவின் அட்சய பாத்திரம் நன்றி......

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 Před 2 lety +27

    " If there is no psychological time , we become free with fresh mind where unconditional love will emerge. " - JK
    " If we emerged with unconditional love and compassion, we will become immortal. " - Vallalar.

    • @s.sathiyamoorthi7396
      @s.sathiyamoorthi7396 Před 2 lety +2

      "The first is freedom from psychological slavery , past thoughts and future expectations.
      Love and Compassion are flowering of your freedom in living moment to moment .
      The moment we know we are not seperate from the Whole , there is nobody to die ." - OSHO

    • @sugapriyav614
      @sugapriyav614 Před 2 lety

      Nice quote

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 Před 2 lety +3

      " துளியாய் சமுத்திரத்தைப் பிரிவதும் , மீண்டும் அதில் கலப்பதும் என் விதியில் எழுதப்பட்டுள்ளது."
      - கவிக்கோ
      czcams.com/video/YnV00RD4sMI/video.html
      ' கஸ்தூரியைத் தேடி அலையும் மான் '

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 Před 2 lety +2

      47:14
      "அன்பை இறைவன் மேல் வைக்க வேண்டும்.
      கருணையை சக உயிர்கள் மேல் வைக்க வேண்டும்."
      -வள்ளலார்.
      துளியாய் சமுத்திரத்தைப் பிரிவது அன்பில் மலர்வதற்காக !
      கருணையில் கனிவது மீண்டும் சமுத்திரத்தில் கலப்பதற்காக !!

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před 2 lety +3

    மனம் வருந்தி உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி உணவு உற்பத்தி செய்யும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před 2 lety +2

    எல்லாம் வல்ல இறைவன் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @MohanKumarPasupathy
    @MohanKumarPasupathy Před 2 lety +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி!
    நன்றி ஐயா🙏

  • @user-jk1qr5ph3j
    @user-jk1qr5ph3j Před 2 lety +6

    Remarkable oration, spell bound. Vallalar"s principles are being followed in Vethathiri maharishi அறிவு திருக்கோயில் ஆழியார்

    • @marzzz1680
      @marzzz1680 Před 2 lety

      Kundalini Yoga Vallalar virumbavillai..

    • @subramaniarumugam5528
      @subramaniarumugam5528 Před 2 lety

      அறிவு திருக்கோயில்களில் பெரும்பாலும் ஜீவகாருண்யத்தை வலியுருத்தவதில்லை.

  • @user-ub5qh3rs4k
    @user-ub5qh3rs4k Před 2 lety +3

    மிக பயனுள்ள ஒரு வீடியோ.. இப்படியொரு saint & reformer பற்றி தெரிந்துகொண்டேன். நன்றி மிக்க நன்றி

  • @sivakumarm6506
    @sivakumarm6506 Před 2 lety +2

    அருமையான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வள்ளலார் புகழ்.

  • @shakthikalai595
    @shakthikalai595 Před 2 lety +3

    அருமை அய்யா. தங்கள் விளக்கம். நன்றி. நன்றி நன்றி.

  • @karthikparamasivam3239
    @karthikparamasivam3239 Před 2 lety +2

    மிக்க நன்றி ஐயா,மரணம் என்ற சொல்லுக்கு பதில் திருஉரு மாற்றம் என்றே சங்கம் சார்ந்தவர் கூறுவர்... வான் கலந்த மாணிக்கவாசகர்... உயிர் வளர்க்கும் கரிசாலை,தூதுவளை போன்ற மூலிகைகள் எதற்கு உட்கொள்ள வேண்டும்...4ஒழுக்கங்கள் என்ன உடல் மாற்றத்தை உண்டு பண்ணும்.. திருக்குறளை அவர் போற்றியது...திருஉரு. மாற்றத்திற்கு முன்பு அவர் அளித்த பேருபதேசம்...ஆழ்ந்து அவர் வழி நடந்தால்... அவர் அடைந்த பெரும் பேறு மூவரும் தேவரும் முக்தரும் சித்தரும் அடையாத ஒன்று என்றும்...மருட்பா வை ஏற்றுக்கொண்ட திருவிக .. பின்னாளில் தன் குரு ஆறுமுக நாவலர் கூறிய கருத்தில் மாற்றம் கண்டது.. சன்மார்க்க நெறி நின்றாள் அவரை யாரும் கடத்தினரா...என்ற பேச்சுக்கே இடமில்லை....

  • @kesavankesav6177
    @kesavankesav6177 Před 2 lety +1

    அருமையான காணொளி.பல்வேறு விதமாக ஆராய்ந்து அறிவு சார்ந்து வெளிட்டமைக்கு நன்றி ஆனால் இடையில் உங்கள் கருத்துக்களை திணிப்பது வருத்தம் அளிக்கின்றது. மரணமில்லா பெருவாழ்வை சத்தியம் செய்து அதன்படி பெரும் நிலையை அடைந்த மகானின் முடிவை நமது சிற்றறிவு கொண்டு எவ்வாறு முடிவு செய்ய முடியும்..?. நீங்கள் பேசும்பொழுது அய்யாவின் திருஅருட்பா(5,6) அவரது இறப்பிறக்கு பிறகு வந்தது என்ற வார்த்தை உங்கள் நம்பிக்கையை முன்னமே காட்டுகின்றது. இந்த வார்த்தையை தவிர்த்து பதிவிட்டிருந்தால் நன்றாக இருந்துருக்கும்.
    நன்றிகள்🙏🙏🙏

  • @amala8583
    @amala8583 Před 2 lety +3

    நீங்க சொல்லும் விதம் அருமையாக உள்ளது ஐயா...உங்க பணி தொடரட்டும்..

  • @sachinm1231
    @sachinm1231 Před 2 lety +5

    வணக்கம் sir 🙏🙏🙏மிக்க நன்றி sir வள்ளலார் history க்கு மிகவும் நன்றி sir🙏🙏🙏🙏

    • @kavinhumanservices5356
      @kavinhumanservices5356 Před 2 lety

      மிக்க நன்றி ஐயா , வள்ளல் பெருமானைப் பற்றிய ஆய்வுநோக்கான சிறந்த கருத்துக்கள்,பல முறை படித்து இருந்தாலும் உங்கள் பானியில் ஆற்றிய உரை மிகவும் சிறப்பு.
      அடுத்து திருவள்ளுவர் பற்றியும் ஒரு பதிவை வழங்கவும் ஐயா.

  • @jayamohanss7889
    @jayamohanss7889 Před 2 lety +2

    வள்ளலார் தத்துவங்கள் குறித்த மிகத் தெளிவாக, விளக்கமாக உரை. அருமை !
    சிறிய வேண்டுகோள்,
    ரத்தினைச் சுருக்கமாக உங்களின் காணொளி அரைமணி நேரத்திற்குள் இருந்தால்
    இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. நன்றி.
    அன்புடன், எஸ். எஸ் ஜெயமோகன்

    • @raviperumal5586
      @raviperumal5586 Před 11 měsíci

      ஐயாவின் சிறப்பே குறைந்தது ஒரு மணி நேரப் பேச்சுத்தான்.

  • @veejeigovin9348
    @veejeigovin9348 Před 2 lety +5

    Very very useful and informative Sir, salute for your contribution towards humanity.. in very neutral acceptable way, Bravo Dr.

  • @agnibuddhan6882
    @agnibuddhan6882 Před rokem

    வணக்கம் sir,
    பரபரப்பான இன்றைய இந்த உலக சூழல்களுக்கு மத்தியில்
    உலகெங்கும் நாலாந்தர அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் கோலோச்சும் வேளையில்
    மேற்கத்திய கிழக்கத்திய தத்துவங்களை
    பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் அளவில்
    எளிமைப் படுத்தி
    தொடர்ச்சியாக தாங்கள் வழங்கி வருவது போற்றத் தக்கது.
    தங்களின் மகத்தான அரிய சேவைக்கு நன்றி.
    - ஒண்டிவீரன்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před 2 lety +2

    இறைவன் உண்மை மனித தெய்வம் தாய்யும் மொழியும் இயற்கை தெய்வம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க கல்வி வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @rameshsubramaniam1097
    @rameshsubramaniam1097 Před 2 lety +2

    வள்ளலார் பற்றி அனைவரும் பேச வேண்டிய காலம் ஆன்மிக உண்மை உடைத்து வெளிச்சம் போட்டு காட்டியவர் ஆன்மிகத்தை வியாபாரம் செய்யும் மத பிடித்த மதவாதிகள் பொய் புரட்டுகளை புரட்டி போட்டு புரட்சியாளர் வள்ளலார் அவர் காட்டிய வழியில் உலக மக்கள் பயணித்து இருந்தால் அன்பும் கருணையும் அமைதியும் எங்கும் நிலை பெற்று மக்கள் மகிழ்வாக வாழ்ந்து இருந்திருக்க முடியும் இனியாவது அவர் கருத்து பரவட்டும் மக்கள் நலங்கள் பலவும் பெறட்டும்

  • @MohanRaj-uk3pz
    @MohanRaj-uk3pz Před 2 lety +2

    Great important message.
    Pover of light (True powerful way)
    The great way of peaceful life. Thank you. 🙏

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před 2 lety +1

    1988பின் கல்லூரி வகுப்பு அறை கேடட குரல் இப்போது செல் போன் ழுலம்... நன்றி ஜயா

  • @yessevencommunityvisharam1491

    ஐயா இன்னும் தாங்கள் வள்ளலாரை பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டி உள்ளது
    அப்படி முழுமையாக தெரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த சேனலை வள்ளலார் ஸ்டியோ என்று தாங்கள் பெயர் மாற்றினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை அவ்வளவு தகவல்கள் வள்ளலாரிடம் இருந்து பெறலாம்

  • @loganathanloganathanmeenak371
    @loganathanloganathanmeenak371 Před 10 měsíci

    போற்றுதலுற்க்குரிய பேராசிரிய பெருந்தகை க்கு வணக்கம்
    சங்க காலதீதிற்க்குிபின்னுள்ள தமிழ் ஆளுமைகளை வெளிக்கொணரவேண்டுகிறேன் மபோசி.திகசி திருவீக போன்றோரை வெளிக்கொணர வேண்டுகிறேன்

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 Před rokem +1

    Today is Vallalar's birthday.
    Happy to rehear in this day.
    Still his life is surprising me.
    Thirumular, Thaiyumanavar vazhi vandhavar Vallalar.
    Onere Kulam Oruvane Devan.

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 Před 2 lety +7

    few years back in Kandakottam, Chennai
    I feel, realize, Vallalar, pradaksham (making round the temple along with me) so Vallalar still alive.

  • @alexpandian599
    @alexpandian599 Před 2 lety +2

    நல்ல தண்ணீரைப் பருகியதும் தாகம் தணியும். பசிக்கு உதவாத அன்னமாகவும், தாகத்திற்கு உதவாத செய்தியாகாகவும் ஊரைச் சுற்றி, உலகைச் சுற்றி பேசுவது யாரைப் திருப்திப் படுத்தும். நீரில் விழுந்து நீச்சல் அறியாது உயிருக்கு போராடும் ஒருவனுக்கு நீச்சல் கற்றுத்தருகிறேன் என்பது போல செய்தி.

  • @saibalaji4403
    @saibalaji4403 Před rokem +1

    🙏வள்ளல் பெருமானார் ஆசிவகத்தை அதன்உண்மை நிலையை நிலை நிறுத்த கடைசியாக போராடிய தமிழ் மகான்🙏

  • @natarajank3938
    @natarajank3938 Před rokem +1

    Heartfullness & Heart touching, really Inspirational explanation. I bow & grateful to you Professor Murali Sir.

  • @MariMuthu-wv1yc
    @MariMuthu-wv1yc Před měsícem

    சில விஷயங்கள் தானே உணர்ந்தால் தான் புரியும். அந்த வகையில் நான் அறிந்துகொண்டது. குண்டலினி பயிற்சியை சுயமாக நான் சில வாரங்கள் முயற்சித்து ஓரளவு கை கூடியும் வந்தது. அதன்பிறகு விக்கிரக வழிபாட்டின் மீது நாட்டம் குறைந்தது. எப்போதும் என்னுள்ளேயே தியானத்தில் உறையவே மனம் அலை பாய்ந்தது.

  • @sridharnagaraj5508
    @sridharnagaraj5508 Před 2 lety +2

    ஒவ்வொரு காணொளி வழங்குவதற்கு முன்னர் தாங்கள் எடுக்கும் முயற்சி அளவிடற்கரியது. வள்ளலார் பற்றி அறியாதவர்களுக்கு இந்த பதிவு ஒரு பொக்கிஷம்.அவர் கண்ட மாற்றம் ஏற்பட அவரே திரும்ப பிறந்தால்தான் உண்டு. நம்புவோம் அப்படி ஒரு மாற்றம் நடக்கும் என்று
    தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @hemachandrababu
    @hemachandrababu Před 2 lety +2

    Amazing sir.... Beautifully presented. Thank you very much

  • @loganathank774
    @loganathank774 Před 2 lety

    Sir I am very happy for hearing your great explanation all are TRUTH. Hence please continue like this and also various Scientist investigation and life of evolution. Thank you Murali sir.

  • @pn8744
    @pn8744 Před 11 měsíci

    வேகமாக பரவவில்லை எனினும் இது ஒரு சிறந்த வெற்றி தத்துவமே என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
    நடுநிலையான உரைக்கு மிகுந்த நன்றி.
    'கடை விரித்தேன் கொள்வாறில்லை'
    என்பதுபற்றி தங்கள் கருத்து என்ன என்றறிய ஆவலாக உள்ளேன்.

  • @Ashaarumugam
    @Ashaarumugam Před rokem +1

    Sir, thankyou very much for all your detailed wonderful speeches

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 2 lety +11

    Nice intro professor. Thanks.
    Im very much impressed with his hunger quenching movement.
    Even Patanjali warns don't inclined towards yogic power that will divert from the liberation.

  • @vipbio
    @vipbio Před 2 lety +2

    Beautiful flow is like a river. Thanks

  • @senthilsenthil8803
    @senthilsenthil8803 Před 2 lety +3

    அருமையான பதிவு ஐயா.நன்றி...

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 Před 2 lety +2

    அருமையான பதிவிற்கு நன்றி.

  • @joyjoseph8003
    @joyjoseph8003 Před rokem

    Superb Lecture Sir.... 😄.Ramalinga vallar's philosophy is reflected by many modern spritual leaders Ramakrishna,Vivekananda,Sai baba,Vedantri Maharishi, etc.,. He needs to be viewed as for of concpt not as body.So,his sudden disapperance need not be supected.He has inspired and enlighted so many people and lives through hem

  • @ramasamychinnachamy3708

    Great interpretation of Vallalar's thoughts. You are a gift to us.

  • @rvpandian4606
    @rvpandian4606 Před 2 lety +5

    தயவுடன் அனந்தகோடி நன்றிகள்

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 Před 2 lety +1

    Sir, Thank you for your great and clean presentation..

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 Před 2 lety +2

    Good day. Thank you sir. 🙏

  • @BNainar
    @BNainar Před 2 lety +7

    Sir one of the best videos on Vallalar. Very comprehensive and yet not boring presentation sir 🙏

  • @nagarajan6364
    @nagarajan6364 Před 9 měsíci

    வாழையடி வாழை என வந்த திரு கூட்ட மரபில் உச்சத்தில், இந்த தலைமுறைக்கு மிகவும் அருகில் இருப்பவர் வள்ளலார்!!