சிவ புராணம் படிக்கும் முறையும் அதன் பலன்களும் | தினமும் சிவபுராணம் கேளுங்கள் | Siva Puranam
Vložit
- čas přidán 8. 09. 2024
- அப்பர் - திருநாவுக்கரசர் - தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு (முழுவதும்) | Appar - Thirunavukarasar
• தொண்டில் பக்தி மேடை சொ...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
• "இறவாத பக்தி" முழு சொற...
சிவச் சின்னங்களை அணிந்தால் மட்டும் போதுமா? வேறு என்ன தேவை? இந்தப் பதிவைப் பார்க்கவும்|Mangayarkarasi
• சிவச் சின்னங்களை அணிந்...
சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.....
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
- ஆத்ம ஞான மையம்
எனக்கு பல தடவை ஆச்சரியமான நிகழ்வுகள் நடந்துள்ளது சிவபுராணம் எனக்கு தாலாட்டு தினமும் தூங்கும் போது கேட்டுக் கொண்டே தூங்கி விடுவேன் காலையி எழுந்ததும் கேட்டுக்கொண்டே வேலையை ஆரம்பிப்பேன்.... என் ஆன்மாவிலும் இரத்த நாளங்களில் கலந்திருப்பவர் என் அப்பன் சிவன்
Mm.enutiya.puthium.sariya.ninaikum.en.appan.sivane❤❤❤
Yeno theriya villai aduthavar yen appan emdru sollum bothu kovam thannai meeri varugirathu ... Avan anaivarukkum appan enbathai maranthu yen appan endru karvam kollum intha paavi manitha manathu.... 😢
உண்மை தான் அம்மா.நீங்கள் எங்களுக்கு கொடுத்த விளக்கத்தின்படி நான் தினமும் வீட்டில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்கிறேன்.அவ்வாறு படிக்கையில் 'உன்னைத் துதிக்க உன் திருநாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே 'என்று படிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வழிந்தோடுகிறது.
திருச்சிற்றம்பலம். அருமையான பதிவு இந்த பதிவு காகத்தான் காத்திருந்தேன். நன்றி அம்மா🙏🙏🙏
வாழ்க்கையில் இம்மாதிரியான சொற்பொழிவுகளை கேட்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
சகோதரி அவர்களுக்கு கோடி,கோடி நன்றிகள் .
வணக்கம் அம்மா நான் இதுவரையில் சிவபுராணம் கேட்டதும் இல்லை படித்ததும் இல்லை இப்பொழுது தான் முதல் முறையாக உங்கள் குரலின் மூலமாக சிவபுராணம் கேட்டிருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா நானும் இதை பாராயணம் செய்து கொள்கின்றேன் உங்களின் ஆசியோடு
000pp0p00😊
இலங்கையில் அனைத்து பாடசாலைகளில் நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவபுராணம் ஓதுவோம்.. 💞💞🌹
ஓம் நமசிவாய வாழ்க
நாங்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் இனம் இல்லாத தமிழர்கள் நான் தமிழ் பற்றாலன் என் உயிர் தமிழ் உலகிலேயே கடவுள் வாழ்ந்த உலகம் தமிழ் நாடு
வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தமிழ் தொண்டு
அம்மா நீங்க சிவபுராணம் 95 நாள் விளக்கம் சொன்னா மட்டும் இல்லை 950 நாள் விளக்கம் சொன்னால் கூட யாம் கேட்கத் தயாராக உள்ளோம்
நாங்களும்...
ஆமாங்க அம்மா....
Amma solluga amma nagalum porul puridhu padipom amma
95 வரிகளுக்கும் விளக்கம் கொடுங்கள் சிவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙌🏻🙌🏻🙌🏻
அம்மா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொன்னால் மிக நன்றாக இருக்கும் திருச்சிற்றம்பலம்
Enakkum
Yes
Ama Amma
czcams.com/play/PLVubyx81snJLLoIIZVdJVGbR8uAURg5tA.html
Yes
நன்றி என் குருவே,🙏🙏🙏🙏🙏 ஒவ்வொரு வரிக்கும் எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் அம்மா அப்போதுதான் நாங்கள் புரிஞ்சி படிக்கமுடியும் தயவுசெய்து விளக்கம் கொடுங்கள் அம்மா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
czcams.com/play/PLVubyx81snJLLoIIZVdJVGbR8uAURg5tA.html
🙏🙏🙏🙏ஓம் நம சிவாய🙏
@@user-iw1uz3pr8h k
@@user-iw1uz3pr8hவோம்
🙏🙏🙏Om NamaSivaya namah, vazhgavalamudan amma
சிவபுராணம் my favourite நான் இதை 10 வருடங்களாக படிக்கிறேன் ஓம் சிவாய நம
I am a Muslim women. Mam I follow Yr every videos. . I love Yr speech mam. The way u read tamil is very clear.
Good to hear
Amma, unless u r an arab settlers, your ancestors are saiva thamilar 🙏🙏🙏.
ஒன்றே குலம் அம்மா
நாயிற் கடையாய் கிடந்த அடியார்க்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே..இந்த வரிகளை வாசிக்கும் போது என் கண்கள் நீர் வடிக்காமல் இருந்ததில்லை
ரொம்ப நன்றி அம்மா நீங்கள் மட்டும்தான் தமிழ் கடவுளுக்கு உடைய தமிழ் உள்ள கவசம் புராணங்களை எங்களுக்கு எடுத்து சொல்லுறீங்க ரொம்ப நன்றி.
நான் என் வாழ்வில் நம்பிக்கை துரோகத்தினால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அம்மாவின் ஒரு காணொலியில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் பாடல்களின் மகிமையை அழகாக விளக்கி இருந்தீர்கள். அன்றைய மறுதினம் முதலே தினமும் படித்து வருகிறேன். அந்த முருகனின் திருவருளினால் நான் தினம் உயிரோடு இருக்கின்றேன்.
நாங்க ஶ்ரீலங்கா எப்பவும் நாங்க படுறது தான் ஆனாலும் நீங்க சொல்லுறது கேட்கும் போது நெஞ்சமெல்லாம் சிவமயம்...
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.. திருச்சிற்றம்பலம்..
நீங்கள் கூறிய வரிகளை கண்கலங்க நானும் உண்ர்ந்து இருக்கிறேன் ""நாயின் கடையாய் கிடந்த அடியேர்க்கு
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே ""
நன்றி அம்மா
Me too🙏
Me too
அன்பு தோழி அவர்களுக்கு வணக்கம் உங்கள் குரலில் சிவ புராணம் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நான் இது வரைக்கும் தனியாக படித்து வந்தேன் இனிமேல் நான் உங்களுடன் சேர்ந்து தினமும் படிப்பேன் தோழி உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நான் மிகவும் மன அழுத்தம்உள்ளதால் என்னால் எந்த ஒருபராயணத்தையும்சொல்லமுடிவதற்குஇல்லை இப்போது உங்கள் குரலில் கேட்ட சிவபுரணத்தை நானும் உங்களுடன் சேர்ந்து படிக்கமுடியும் என்ற நம்பிக்கை வைத்து இருக்கிறேன்
Please teach it in detail for 95 days mam please 🙏🥺
அம்மா நாங்கள் சிவபுராணம் கேட்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தயவு செய்து விளக்கத்துடன் கூடிய தொடர் பதிவு தாருங்கள்
அக்கா நான் உங்களை நேரில் சந்திக்க நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவீர்களா உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கினாள் அது வள்ளல் வாரியார் இடமும் முருகப்பெருமான் இடமும் ஆசீர்வாதம் வாங்கியதற்கு சமமாக கருதுகின்றேன் அடியேனுக்கு அருள் செய்யுங்கள் அக்கா வாழ்க வளமுடன்
சிவபுராணம் தங்கள் படிக்க கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் சகோதரி மிக்க நன்றி தாயே🙏🏻🙏🏻🙏🏻
இறைவன் கருணை உள்ளம் உருகி கண்களில் நீர் சுரந்தது அம்மா. சிவபுராணம் சிவத்தோடு சேர்க்கும் என்பது உண்மை. ஓம் நமசிவாய. அம்மா உங்கள் தொண்டு மேலும் மேலும் சிறப்பாக உள்ளது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அன்பே சிவம்...
Iam going to live with my husband after two years of separation from next month.i pray to God shiva that my future life should be without any misunderstanding and lead life without any problems with my husband till my last breath.i will recite this Siva puranam as you said everyday.i firmly believe God shiva will fulfill my wish.
Vaalga valamudan sis 🙏
All the very best Sister... 🙏👍
God bless u sister
All the very best, hope you are well
உண்மை தான் *தாயிற் சிறந்த தயாவான தத்துவனே* இந்த வரி நான் எப்போ பாடும் போதும் கண்களில் கண்ணீர் வரும் உண்மை அவர் இன்றி எதுவும் இல்லை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்க முழு விளக்கம் வரிக்கு வரி விளக்கம் தாருங்கள்... புரிந்து சொல்லும் போது அதன் சுவையே தேனினும் இனிமை... என் தாழ்மையான வேண்டுதலை ஏற்று மற்றோரு காணொளி போடுங்கள் அம்மா 🙏 ஓம் நமசிவாய வாழ்க
czcams.com/play/PLVubyx81snJLLoIIZVdJVGbR8uAURg5tA.html
Fzv
திருச்சிற்றம்பலம்
பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார்
சிவபுராணம் தொண்ணுற்றுயைந்து பாடல் வரிகளுக்கு நீங்கள் கண்டிப்பாக பொருள் சொல்லி காணொளி வெளியிட வேண்டும் என்பதே அடியேன் மட்டுமல்ல பலரது எண்ணமாகயிருக்கும்.
நன்றியும் வணக்கமும் தங்களுக்கு
திருச்சிற்றம்பலம் 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை, வணங்குகிறேன் அம்மா 🙏 ஊன் உருகி உயிர் உருக வைக்கிறது தங்களின் சொல் மற்றும் பொருள் வளத்தை செவிமடுக்கும் போது 🙏 "இறைவனை உள்ளன்போடு பிரார்த்தனை செய்யுங்கள்" என்று நீங்கள் சொல்லும் அந்த நொடிப்பொழுது, எங்கள் பாவங்கள் அனைத்தும் தீர்ந்து இறைருளை பரிபூரணமாக பெற்று வாழ அருள் கிடைக்க பெருகிறோம் அம்மா 🙏
🙏ஓம் நமசிவாய 🙏
அருமை.சிவபுராணம் முழுவதும் வரி வரியாக விளக்கம் வேண்டும் அக்கா பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
அம்மா உங்களின் இந்த பதிவைக்கேட்டு இன்று 9.1.2024 பிரதோசம் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் நானும் உங்களோடு மனவேதனையுடன் சிவபுராணம் படிக்கும்போது என்கண்களில் கண்ணீர் பெருகி பாராயணம் பண்ண இயலாது நா தடுமாரியது இறைவா எம்பெருமானே இப்போதே எம்மை ஆட்கொண்டு அருள்புரியவேண்டுகிறேன் ஓம் நமசிவாய
இந்த பாடலுக்கு உண்டான விளக்கம் முழுவதும் உங்கள் மூலமாக தெறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் அக்கா....
தங்களிடம் இருந்து மட்டுமே தெளிவான சரியான விளக்கம் கிடைக்கும் என முழுமையாக மனம் நம்புகிறது. தாங்கள் கூறியது மிகவும் உண்மையே நாயிற் கிடையாய் கிடந்த அடியேனுக்கு நல்கி தாயிற் சிறந்த தயாவான, கண்களில் நீர் உணருகிறோம். முழுமையாக அறிய மனம் விளைகிறது.
நீங்கள் எவ்வளவு நாள் என் அப்பன் சிவபெருமானின் பெருமையை சொன்னாலும் நாங்கள் கேட்போம் அம்மா
czcams.com/video/u5V0TzbhSBo/video.html
Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏
Ggh
ஆனால் இந்த திருவாயால் ஒரு அரசியல் கட்சி தலைவரை( திமுக தலைவர் ) புகழ்ந்து பேசியது ...வண்மையாக கண்டிக்க தக்கது...வருத்தப்பவேண்டிடய விசயம்.ஏனென்றால் உங்கள் மீது உள்ள ஆன்மீக பற்றால் இதை பதிவிடுகிறேன்.
நன்றி அம்மா தாங்கள் சொன்ன சிவபுராணம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி அம்மா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்🙏
அம்மா அடியேன் பாக்கியம் தான் செய்திருக்க வேண்டும்..95 நாட்கள் சிவபுராணம் என்னும் தேனினும் அமுதினை தங்களது தேன் அமுத குரலால் விளக்கம் கேட்டு இன்புற காத்திருக்கின்றேன் அம்மா....🙏🙏🙏
ஓம் சிவாய நம. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி போற்றி. திருச்சிற்றம்பலம்.
பேச வார்த்தைகள் ஏது🙏🙏🙏என்னை ஆட்கொண்ட எந்தன் பெருமாளை என் பக்தி எனும் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்வேன்🙏🙏🙏🙏ஈசன் அடிமை
czcams.com/video/u5V0TzbhSBo/video.html
Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏
Om Namachivaya 🌹
தயவு செய்து யாரும் like போடாவிட்டடாலும் dislike போடாதீர்கள்🌹
Yes ma
Whenever I read this sivapuranam... I get tears in my eyes... I don’t know why...
Yes I agree with you and tears coming without reasons
I am proud to have a young lady like this .She is an exception . Long live to Mangayarkkarasi .
🌹சிவ புராணத்தை உச்சரிக்கும் முறையையும். சிவ புராணத்தின் மகத்துவத்தையும் மிக அருமையாக போதித்தமைக்கு நன்றி அம்மா🌹
மனம் தித்திக்கும் தேன் அமுதம் அம்மா உங்கள் உரை.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்... வாழ்க வளமுடன்..
அம்மா இதுவரைக்கும் சிவபுராணத்திதை தினமும் கேட்டு வருகிறேன் சிவபுராணத்தில் உள்ள கருத்துக்களை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல இயலாது இறைவன் ஆசியோடு பல்லாண்டு வாழ்க வளமுடன்
மிகச்சிறப்பு, இறைவனே தங்கள் குரலில் திருவாசகம் ஒதியதாக உணர்ந்தோம். சிவாய நமஹ
சிலர் விளக்கம் கேட்கிறார்கள் அவர்களுடைய வாழ்வில் முன்னேற அவர்களுக்காக விளக்கம் தாருங்கள் அம்மா....பலர் சொல்லுவதை எடுத்து கொள்ளாதீர்கள் அம்மா... நானும் வாழ்வில் முன்னேற விளக்கம் மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்...நான் தினமும் படிக்கிறேன் அம்மா ஆனால் சில வார்த்தைகள் அர்த்தம் தெரியவில்லை
🤔🤔🤔
ஓம் நமசிவாய
பாடலாக பாட எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
பூஜையில் பாட எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்போம். உங்களின் புகழும் செயலும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஈசன் உங்களுக்கு அருள்வார்.
கேட்க, கேட்க இனிமை சகோதரி வளர்க உம் இறைத்தொண்டு🙏🙏🙏
கரும்பு தின்ன கூலியா அம்மா.. ? தங்கள் திருகுரலால் சிவபுராணம் விளக்கம் யாருக்கும் ஆசை இருக்கும் அம்மா.. தயவு செய்து விளக்கத்துடன் சிவபுராணம் தாருங்கள் அம்மா🙏🙏💐💐🌸🌸🌸🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏சிவாய நம.
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... அக்கா நீண்ட நாட்களாக உங்களிடம் எதிர்ப்பார்த்த பதிவு... நன்றி
அம்மா 95 வரைக்கும் நீங்க விளக்கம் சொல்லுங்க நாங்க கேட்கவே தயாரா
மிக்க நன்றிகள் பல அம்மா. நிறைய விளக்கங்கள் தாங்கள் வழங்க வேண்டும். நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஞானக்கண் திறக்க வேண்டும் அம்மா. என்றும் இறைவன் உங்களோடு இருந்து வழிநடத்துபவராக இருக்க வேண்டும்.
சிவபுராணம் பற்றிய விளக்கம் கூறினால் எல்லோரும்படிக்க ஆசைபடுவார்கள் விளக்கம் கூறுங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
படிப்பவர்க்கும் கேட்பவர்களுக்கும் சிவபெருமானே உன் அருளால் எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
என்ன தவம் செய்தேன் சிவபுராணம் தன்னை கேட்பதற்கு சிவ சிவ திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா ,உங்களுடைய குரலில் கேட்பதற்கு ❤
தெண்ணாதடுடை சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் 🙏🌹
🙏 ஓம் சிவ சக்தி நமஹ 🙏அம்மா தங்களின் அனைத்து காணொலிகளும் மிக அருமையாக உள்ளது 🙏🙏🙏
95 நாள் ஆனாலும் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
12:22 shivapuranam chant start.hope it will be useful to chant from here daily by hearing n see this video.excellent video.my pranam to all adiyargal
G
நீங்கள் கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை அம்மா நான் உணர்ந்துள்ளேன்.
மிக சிறந்த விளக்கம் அம்மா
நீங்கள் சொல்லும்போது தானாக பக்தி வருகிறது அருமையாக சொன்னாங்க மிக்க நன்றி
அம்மா நீங்க அணிந்துள்ள ருத்ராஜம் பற்றி சொல்லுங்க நானும் அதுபோல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கு நன்றி
மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
அம்மா தயவு கூர்ந்து சிவபுராணம் விளக்கம் தாருங்கள் மொத்தமாக இல்லாவிடினும் தினமும் ஒன்றாவது தயவுசெய்து அம்மா
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
ஆஹா அற்புதமான வரிகளை அருமையாக சொல்லித் தந்தீங்க...நன்றி...உள்ளம் உருக படிக்கிறோம்..நன்றி🙏🙏🙏🙏
சிவபுராணம் சொற் பொழிவு மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா.நன்றிஅம்மா.
சிவபுராணம் முழு விளக்கமும் தாருங்கள் அம்மா
வணக்கம். சிவபுராணம் திரும்ப திரும்ப கேட்க வேண்டும். தங்கள் சேவை தொடர வேண்டும்.
czcams.com/play/PLVubyx81snJLLoIIZVdJVGbR8uAURg5tA.html
@@sittaramannatesan6309 ஜஜ
Siva puranam full explanation thainga amma
அம்மா எனது சொப்பனத்தில் எம்பெருமான் இரு முறை தோன்றினார்கள்.. ஒரு முறை எரியும் அக்னியின் உருவில் கைகளில் திறுநீறு ஏந்தி தினமும் இந்த திறுநீறை நெற்றியில் பூசி வா என ஆசி வழங்கி மறைந்தார்......மற்றொறு முறை திருவண்ணாமலை வாழ் அண்ணாமலையார் அவர்களுக்கு தீபாராதனை செய்வது போல் சொப்பனம் கண்டேன் அம்மா ...... மனக் குழப்பத்தில் சிவன் அடிகளார்களின் அடிமை
you are blessed by God
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் . நன்றி
திருச்சிற்றம்பலம் தென்னான் உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இதைப் படிப்பவர்களும் கேட்பவர்களுக்கும் எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க அருள வேண்டுகிறேன் சிவபெருமானே ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் அற்புதமானமிக மிக மிக புண்ணியம் வாய்ந்த பதிவு தங்களின் செந்தமிழ் சொற்களால் பார்ப்பதும் கேட்பதும் இணிது இணிது தேனினும் இணிதானதும் புண்ணியம் வாய்ந்ததுவமாய் உள்ளது அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
ஓம் நமசிவாய ஓம்!
திருச்சிற்றம்பலம்!
வணக்கம் அம்மா! வணக்கம்!
வாரியார் சுவாமிகளுக்கும் வணக்கம் அம்மா வணக்கம்!
அருமை அம்மா அருமை!
உங்கள் ஆசிவேண்டி இறைவன் அருள் வேண்டி இதனை அடியேன் இன்று முதல் படிக்க தொடங்குகின்றேன் !
" நமசிவாய நமசிவாய நமசிவாயவே!
நாவினுக் குகந்த நாமம் நமசிவாயவே!
கண்களில் காண்பதெல்லாம் நமசிவாயவே!
காதுகளில் கேட்பதெல்லாம் நமசிவாயவே!
நாக்கினில் இருப்பதெல்லாம் நமசிவாயவே!
வாக்கினில் பிறப்ப தெல்லாம் நமசிவாயவே!
ஆத்மாவில் ஒளிர்வ தெல்லாம் நமசிவாயவே!
அனுதினமும் வணக்கும் நாமம் நமசிவாயவே! "
ஓம் நமசிவாய!
திருச்சிற்றம்பலம்!
ஓம் நமச்சிவாய
வணக்கம் அம்மா
நீங்க எங்களுக்காக நிறைய சைவ நற்சிந்தனைகள சொல்லிருக்கிங்க
ஒரு தடவ எனக்காக உங்க இனிமையான குரலில் சிவபுராணம் பாடுங்க
அம்மா உங்களுக்குமிக்க நன்றி. சிவபுராணம் பற்றி இவ்வளவு அழகாசொன்னீர் மிக்க நன்றி அம்மா
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
எனக்கு சிவபுராணத்திற்கு 95 வரிகளுக்கும் பொருள் கூறினால் பொறுமையுடன் கேட்க தயார்
😊
Porul vilakkam ungal varthaigalal keka romba aasaiya iruku ma🙏🙏🙏
95 நாள் தினசரி பதிவை தாருங்கள் அம்மா
czcams.com/video/u5V0TzbhSBo/video.html
Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏
அம்மா சிவபுராணம் ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் செல்லுங்கள் அம்மா ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் அம்மா
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய போற்றி எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அய்யனே 😭😭😭🙏🙏🙏
Om NamaSivaya
Kadipa kidaikum kavala padathiga
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஓம் நமசிவாய 🙏
அருமையான விளக்கம் 🙏
அருமை அருமை ❤️
Thanks for wonderful video everyday ma. I would like to request to post one video everyday for each line on Suvapuram if it is possible.
Also please give us an explanation video why Shivapuranam and other Thevaram songs become poet to be sand and worship during death and karumathi season. It’s very sad to see some people mentality that only sand Shivapuranam and Thevaram on death and not using it on daily prayers. Please help us give us an explanation so that it’s cud help people who living here.
Hara Hara Maha Theva
அம்மா இதை கேட்க நான் தவம் செய்து இருக்க வேண்டும் . நன்றி நன்றி அம்மா
நன்றி சகோதரி திருவாசகத்தை படிக்கும் போது தேனாக இனிப்பது போல் அதை நீங்கள் விளக்கம் தரும்போது அந்த தேன் இரட்டிப்பாகிறது
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அற்புதம் நீங்கதா எங்களுக்கு குரு நன்றிகள் பல
தாயே உங்களின் விளக்கம் இந்தப்பாமர ஜென்மத்துக்கும் விளங்குவதாக உள்ளது தாயே
சிவனைநினை.அது வேனும் இது வேனும் கேட்காதே.சிவனறிவார்..உனக்கு தகுதி வரும் போது தானே வரும்..நீ அப்போது தடுக்க முடியாது
Thank u
I have song SHIVAPURANAM by SPB sir and explaination also... We get tears by hearing it..... Even though we all need ur explaination ma plsssssssssss ma🙏🙏🙏🙏🙏
பூ நிறைய சூடுவதற்கு காரணம் என்னவென்று கூறுங்கள் அம்மா please 🙏🙏🙏
இன்று தான் சிவபுராணம் கேட்க ௭னக்கு வாய்ப்பு கிடைத்தது.. நன்றி
நீங்க பேசுறத கேட்டுட்டே இருப்பேன் அம்மா ❤❤ நான் கண்டிப்பாக கேட்பேன் எவ்வளவு சொன்னாலும்❤❤
நானும் தினமும் படிக்க போகிறேன் சகோதரியே
வணக்கம் அம்மையீர் தயை கூர்ந்து விளக்கி சிவ புராணத்தின் பொருளை பதிவு இடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.நமசிவாய
மனநிறைவுடன் உள்ளது ❤️ திருச்சிற்றம்பலம்❤️
czcams.com/video/u5V0TzbhSBo/video.html
Chidambaram Nataraja temple water logging in rains.🙏🙏
அருமையான முறையில் சிவபுராணம் எங்களுக்கு படிக்க கற்றுக் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றிங்க அம்மா
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் மனநிறைவு தருகிறது அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அதனால் என்ன பலன்
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்திருச்சிற்றம்பலம் திருவாரூர் சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அக்கா உங்க சொற்பொழிவு சிறுவயதில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய இறப்பணி எல்லா மக்களுக்கும் சென்றடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏
அம்மா நீங்கள் அளித்த விளக்கம் எனக்கு மிகவும் மனதில் சந்தோஷமாக இருக்கிறது என் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் நீங்கியது மன நிம்மதியுடன் இருக்கிறேன் நன்றி அம்மா எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் சிவனை தான் நினைத்துக் கொள்வேன் அம்மா என் சிவன் எனக்கு கஷ்டம் தருகிறார் என்று நான் மனதில் நினைப்பதில்லை ஆனால் கஷ்டம் வரும்போது எல்லாம் சிவனை நினைத்துக் கொள்கிறேன்
மிக்க நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு.. உங்கள் குழந்தைகளுக்காக சிவபுராணம் விளக்கமும் பதிவு செய்யுங்கள் நீங்களும் உங்கள் குடுபத்தினரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ....