டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்குகள் -பூ.கொ.சரவணன்

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2022
  • நான் ஏன் நீதிபதியாகவில்லை?
    #பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    அவர்களே கூறுகிறார்:
    நான் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்று இங்கிலாந்திலிருந்து திரும்பினேன். அப்போது இந்தியாவில் யாருமே அந்தக் கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. நான் பம்பாய் சென்று ஒரு குக்கிராமத்தில் தங்கியிருந்த போது யாருக்குமே நான் இருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பம்பாய் அரசு கடும் முயற்சிக்குப் பிறகு என்னுடைய இடத்தைக் கண்டுபிடித்து அரசியல் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என என்னை அணுகியது.
    நான் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன்.
    நான் அந்த வேலையை ஏற்றிருந்தால், குறைந்தது இயக்குநராகவாவது (Director of Education) ஆகியிருப்பேன். ஒரு மாதத்திற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆயிரம் ரூபாய்களாவது எனக்கு ஊதியம் கிடைத்திருக்கும்.
    என்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற மாபெரும் உணர்வுதான் நான் அந்தப் பணியை ஏற்காததற்குக் காரணம். நான் இந்தப் பணியில் இருந்திருந்தால் சமூகப் பணியாற்றியிருக்க முடியாது. ஓர் அரசுப் பணியாளர் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து அதன் கொள்கைகளைப் பின்பற்ற முடியுமே தவிர தன்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்றிவிட முடியாது.
    இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிறிது பணத்தைச் சம்பாதித்துவிட்டு, நான் மீண்டும் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று "பாரிஸ்டர்" ஆகத் திரும்பினேன்.
    நான் பம்பாய்க்குத் திரும்பியதும், மீண்டும் பம்பாய் அரசு மாவட்ட நீதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. எனக்கு மாத ஊதியமாக 2000 ரூபாய் அளித்து, சில காலங்கள் கழித்து என்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால் நான் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற வருமானங்கள் மூலம் என்னுடைய வருவாய் அப்போது 200 ரூபாயாக இருப்பினும் நான் இப்பணியை ஏற்கவில்லை.
    1942 இல் என் முன்பு
    இரண்டு கேள்விகள் எழுந்தன.
    ஒன்று,
    நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது
    மற்றொன்று,
    இந்திய அரசின் வைசிராய் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவது.
    நான் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்திருந்தால், ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் ஊதியமாகவும், ஓய்வு பெற்ற பிறகு 1000 ரூபாய் ஓய்வூதியமாகவும் பெற்றிருப்பேன். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அதற்கு மாறாக அரசியலில் நுழைந்தேன். நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன்.
    என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும்.
    #புரட்சியாளர் அவர்கள்
    சலந்தரில் ஆற்றிய உரை.

Komentáře • 3