69 வகை யந்திரங்கள் கிடைக்கும் # wholesale and retail

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2022
  • dwaraka devotional
    மந்திரம்-எந்திரம்-தந்திரம்:
    மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள் ...
    மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும்.
    இத்தகைய மந்திரமானது பலவகை-
    1 மூல மந்திரம்,
    2. பீச மந்திரம்
    3. பஞ்ச மந்திரம்
    4. சடங்க மந்திரம்,
    5. சங்கிதா மந்திரம்,
    6. பத மந்திரம்
    7. மாலா மந்திரம்,
    8. சம்மேளன மந்திரம்,
    9. காயத்திரி மந்திரம்
    10. அசபா மந்திரம்,
    11. பிரணாப்பிரதிட்டா மந்திரம்
    12. மாதிருகா மந்திரம்,
    13. மோன மந்திரம்,
    14. சாத்திய மந்திரம்,
    15. நாம மந்திரம்
    16. பிரயோக மந்திரம்,
    17. அத்திர மந்திரம்,
    18. விஞ்சை மந்திரம்
    19. பசிநீக்கு மந்திரம்,
    20. விண்ணியக்க மந்திரம்,
    21. வேற்றுரு மந்திரம்
    22. துயில் மந்திரம்,
    23. திரஸ்கரிணீ மந்திரம்,
    24. சட்கர்ம மந்திரம்,
    25. அஷ்ட கர்ம மந்திரம்,
    26. பஞ்சகிருத்திய மந்திரம்,
    27. அகமருடண மந்திரம்,
    28.எகாஷர மந்திரம்,
    29. திரயஷரி மந்திரம்,
    30. பட்சாஷார மந்திரம்,
    31. சடஷர மந்திரம்,
    32. அஷ்டாஷர மந்திரம்,
    33. நவாக்கரி மந்திரம்,
    34. தசாஷர மந்திரம்,
    35. துவாதசநாம மந்திரம்,
    36. பஞ்சதசாக்கரி மந்திரம்
    37. சோடஷாஷரி மந்திரம்,
    38. தடை மந்திரம்,
    39. விடை மந்திரம்,
    40. பிரசாத மந்திரம்,
    41. உருத்திர மந்திரம்,
    42. சூக்த மந்திரம்
    43. ஆயுள் மந்திரம்,
    44. இருதய மந்திரம்,
    45. கவச மந்திரம்,
    46. நியாச மந்திரம்,
    47. துதி மந்திரம்,
    48. உபதேச மந்திரம்,
    49. தாரக மந்திரம்,
    50. ஜெபசமர்பண மந்திரம்,
    51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
    இவையன்றி
    52. நீலகண்ட மந்திரம் ,
    53. மிருத்யுஞ்சய மந்திரம் ,
    54. தஷிணாமூர்த்தி மந்திரம் ,
    55. சரப மந்திரம் ,
    56. வீரபத்ர மந்திரம் ,
    57. பைரவ மந்திரம் ,
    58. விநாயக மந்திரம் ,
    59. சண்முக மந்திரம் ,
    60. நரசிங்க மந்திரம் ,
    61. நவகிரக மந்திரம் ,
    62. வாலை மந்திரம் ,
    63. புவனை மந்திரம் ,
    64. திரிபுரை மந்திரம் ,
    65. துர்க்கை மந்திரம்,
    66. அசுவாரூடி மந்திரம்,
    67. சப்தமாதர் மந்திரம்,
    68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம்,
    69. பதினெண் கண மந்திரம்,
    70. யோகினியர் மந்திரம்,
    காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
    இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.
    அவையாவன
    1. நம,
    2. சுவதா,
    3. சுவாகா,
    4. வௌஷடு,
    5. வஷடு,
    6. உம்,
    7. படு என்பனவாம்.
    இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.
    +++++++++++++++++++
    மனோவசிய மந்திரம்
    மனம் ஒரு குதிரை அதில் எப்பொழுதும் எதாவது எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
    அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை ஒரு நிலையில் நிறுத்தினால்
    எண்ணற்ற காரியங்களை சாதிக்க முடியம்.அதற்கான மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.
    எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும்.
    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற
    அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும்.
    மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
    சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
    முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.
    தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
    தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.
    ஓம் மருமலர் வாசினி
    சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
    மனோவசியம் குரு குரு சுவாகா.
    இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும்.
    மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.
    எந்த மந்திரம் செபிக்கும் முன்பும் இம்மந்திரத்தை 16 உரு செபிக்க
    மன ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் விரைவில் சித்தியாகும்.
    மனம் ஓர் நிலைப்படாமல் எக்காரியம் செய்தாலும் அது பலிக்காமல்
    போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்
    +++++++++++++++++++++++
    மந்திரம்-எந்திரம்-தந்திரம்:
    ‘மனனம் செய்பவனை திராயதே’ - அதாவது உயர் நிலைக்கு அழைத்து
    செல்வது மந்திரமாகும். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு மந்திரம் உள்ளது.
    அது ஜபம் செய்யச்செய்ய சப்த அலைகளின் வலிமையால் ஆன்மிக
    முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் அந்த தெய்வத்தின் தரிசனமும்
    கிடைக்கிறது.
    இதேபோல ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சக்கரம் உண்டு. அந்த
    தெய்வத்தின் அடிப்படையில் சதுரம், முக்கோணம், வட்டம், பத்மம் முதலிய
    வடிவங்களால் ஆன வரைபடங்கள் யந்திரம் எனப்படும். யோக முறைப்படி
    மனித உடலில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களை குறிப்பன இந்த
    எந்திரங்கள்.
    ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிற்கும் சில குறிப்பிட்ட முத்திரைகள்
    அடையாளச் செய்கைகள் பூஜை முறைகளால் வகுக்கப்பட்டுள்ளன. இவை
    முழு மன ஒருமைப்பாட்டிற்கு உதவும். இவையே தந்திரங்கள் எனப்படும்.
    மந்திரம் - எந்திரம் - தந்திரம் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
    கோபுரம் ‘ஸ்தூல லிங்கம்’ என்று சொல்லப்படும். அதாவது அனைவரும்
    தரிசிக்குமாறு வெளிப்படையாக அமைந்த இறைவனின் அடையாளம்.
    அதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என கூறப்படுகிறது.
    புத்திக்கோளாறு, மனக்கலக்கம் உடையவர்கள், சோளிங்கபுரம் -
    யோகநரசிம்மர், குணசீலம் - பெருமாள், சோட்டாணிக்கரை - பகவதி
    அம்மனை தரிசித்தால் குணமடையலாம்

Komentáře • 52